மே மாதம் 7 மற்றும் 8 ஆம் தேதிகளில் சூறாவளி்க் காற்றுடன் தாக்கும் மோக்கா புயல்!
வங்காள விரிகுடாக் கடலில் உருவாகும் புயலுக்கு மோக்கா என ஏமன் நாடு புயலுக்கான பெயரை வழங்க அதைச் சூட்டியுள்ளது.
அரபி மொழியில் மோக்கா என்றால் வானிலை மாற்றம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் தென் கிழக்குப் பகுதியில் நாளையும் நாளை மறுதினமும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகிறது. இது வலுவிழந்து புயலாக வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் புயலானது மத்திய வங்காளவிரிகுடாக் கடல் வழியாக ஏமன் நாட்டில் கரையை கடக்குமென்றும் எதிர்பார்க்கப்படுகிறது. வங்காள விரிகுடாக்கடல் பகுதியில் உருவாகும் இந்த ஆண்டின் முதல் புயலால் தென் கிழக்கு வங்காளவிரிகுடாக் கடல் பகுதியில் நாளை மற்றும் நாளை மறுதினம் முதல் 70 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக் காற்று வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மீனவர்கள் நாளை மறுதினம் முதல் 48 மணி நேரத்திற்கு கடலுக்குச் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் கேட்டுக் கொண்டது.
கருத்துகள்