மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தருமை ஆதீனத்தின் ஸ்ரீ சட்டைநாதர் கோவிலுக்கு
கும்பாபிஷேகம் தற்போது 32 ஆண்டுகள் நிறைவாவதால், கும்பாபிஷேகம் செய்ய முடிவுசெய்ததன் படி திருப்பணிகள் நிறைவு பெற்று, மே மாதம் 24 ஆம் தேதி கும்பாபிஷேக நிகழ்வில் கலந்துகொள்ள தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் சார்பில் பல்வேறு அரசு அதிகாரிகள், அரசியல் தலைவர்கள், ஆளுநர் உள்ளிட்ட பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததை முன்னிட்டு எட்டுக்கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று வரும் நிலையில், இன்று மாலை ஏழாம் காலை யாகசாலை பூஜை சிறப்பாக நடந்தது,
கும்பாபிஷேகத்துக்குச் சென்ற ஆளுநர் ரவிக்கு கறுப்புக்கொடி காட்டிய பலர் கைது
சிதம்பரம் - மயிலாடுதுறை பிரதான சாலையில், அரசூர் பகுதியில் ஆளுநர் ரவியின் காரை வழிமறிக்க முயன்ற இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கறுப்புக்கொடி காண்பித்தும், கண்டன முழக்கங்களிட்டும் எதிர்ப்பைக் காட்டியதால் அந்தப் பகுதியில் பரபரப்பானது
முன்னதாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கும்பாபிஷேக நிகழ்வில் கலந்துகொள்ளவிருப்பதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு, மயிலாடுதுறை மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் என்.எஸ்.நிஷா தலைமையில் 500-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர
கும்பாபிஷேகத்துக்குச் சென்ற ஆளுநர் ரவிக்கு கறுப்புக்கொடி காட்டி சீர்காழியில் பலர் கைது!
அதையடுத்து, உடனடியாக ஆளுநரைத் திரும்பிச் செல்லுமாறு வலியுறுத்தி கண்டன முழக்கமிட்டு பரபரப்பை ஏற்படுத்திய இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் அறிவழகன், மாவட்ட துணைச் செயலாளர் குமரேசன், மயிலாடுதுறை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளர் விஜய், ஒன்றியச் செயலாளர் ரவிச்சந்திரன், சீர்காழி ஒன்றியச் செயலாளர் அசோகன், கொள்ளிடம் ஒன்றியச் செயலாளர் கேசவன் ஆகியோரைப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் கைதுசெய்தனர். மேலும், அவர்கள் வந்த இரு சக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்து காவல் நிலையத்துக்கு எடுத்துச் சென்றனர்.
கருத்துகள்