முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அரசு பேருந்தில் கூடுதல் கட்டணம் வசூல் செய்த நடத்துனரருக்கு ரூபாய்.பத்தாயிரம் அபராதம்

அரசு பேருந்தில் கூடுதல் கட்டணம் வசூல் செய்த  நடத்துனரருக்கு ரூபாய்.பத்தாயிரம் அபராதம் நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு




அரசு பேருந்தில்  கூடுதல் கட்டணம் வசூல் செய்த கண்டக்டர் மற்றும் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனருக்கு ரூபாய்.பத்தாயிரம் அபராதம் விதித்து நுகர்வோர் நீதிமன்றம்  உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.-



நாமக்கல் சுப்பராயன் (வயது 70). கடந்தாண்டு பரமத்திவேலூரிலிருந்து நாமக்கல்லுக்கு அரசு பேருந்தில் பயணம் செய்தார். அந்தப் பேருந்து  எல்.எஸ்.எஸ். எனக் கூறி நடத்துனர் செங்கோடன் ரூபாய்.17 க்கு பயணச்சீட்டுக் கட்டணம் வசூல் செய்தார். அது மற்ற பேருந்துக்கும் இந்தப் பேருந்துக்கும் ரூபாய் ஒன்று வித்தியாசம் இருந்தது ஆனால் அனைத்து பேருந்து நிறுத்தங்களிலும் பேருந்தை நிறுத்தி பயணிகளை இறக்கிவிட்டபடி பேருந்து சென்றதையடுத்து சுப்பராயன் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் படி வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் நாமக்கல்  மற்றும் அரசு போக்குவரத்துக் கழக அலுவலகம் சேலம் ஆகியவற்றில் கேள்வி எழுப்பியதில் அந்தப்பேருந்துக்கு எல்.எஸ்.எஸ். உரிமம் வழங்கப்படவில்லை என்பது தெரியவந்தது அதனால் கூடுத்து கூடுதல் கட்டணம் வசூல் செய்தது தொடர்பாக சுப்பராயன், நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.



இந்த வழக்கை விசாரித்த நீதிபதி செங்கோட்டையன் மற்றும் உறுப்பினர்கள் செல்வி, செல்வநாதன் ஆகியோர் கூடுதல் கட்டணம் வசூல் செய்த  நடத்துனர் செங்கோடன், சேலம் போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் ஆகியோர் கூடுதலாக வசூல் செய்த தொகை ரூபாய்.1-ஐ பயணிக்குத் திருப்பி வழங்கவும், சேவைக் குறைபாட்டிற்கு அபராதமாக ரூபாய்.பத்தாயிரம் நுகர்வோர் சேமநல நிதிக்கு வழங்கவும், வழக்கு செலவாக ரூபாய்.3 ஆயிரம் வழங்கவும் உத்தரவிட்டனர்.

இதேபோல நாமக்கல் கொண்டிசெட்டிப்பட்டியை சேர்ந்தவர் நடராஜன் (வயது 45). ஓட்டுனராகப் பணியாற்றி வருகிறார். இவர் தனது மகன் சுதர்சன் பெயரில் தனியார் வங்கியில் மறு முதலீட்டுத் திட்டத்தில் ரூ.ஐந்தாயிரம் முதலீடு செய்து, முதிர்வு தொகையாக ரூபாய்.45 ஆயிரத்து 833 பெறும் வகையில் வங்கிச் சான்றிதழ்  சீட்டுப் பெற்றிருந்தார்.

இதற்கிடையே இந்த வங்கி மற்றொரு வங்கியுடன் இணைக்கப்பட்டதனால் கடந்த 2016-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 8-ஆம் தேதி முதிர்வு தொகையை திருப்பி தர நடராஜன் கோரியபோது, வங்கி சார்பில் சீட்டிலுள்ள தொகையில் பாதியை மட்டுமே தர முடியும் என கூறப்பட்டது.

இது குறித்து நடராஜன் தமிழ்நாடு பயனீட்டாளர் சங்கத்தில் புகார் செய்தார். சங்கம் சார்பில் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில் வங்கி அதிகாரிகள் முதிர்வு தொகையான ரூபாய்.45 ஆயிரத்து 833 மற்றும் இழப்பீடாக ரூ.20 ஆயிரம், வழக்கு செலவு தொகையாக ரூ.3 ஆயிரம் வழங்கவும்  உத்தரவிடப்பட்டது. இதில் பொது நீதி யாதெனில் தற்போது அரசுப் பேருந்தில் 1டூ1 மற்றும் 123 ஆகிய பேருந்துகள் இதேபோல. பயணிக்கும் மக்களை ஏமாற்றித்தான் கட்டணம் வசூல் செய்யும் நிலையில் பாதிக்கப்படும் ஒவ்வொரு பயனரும் சுப்புராயன் போல வழக்குக்குச் சென்றால் பேருந்துக் கட்டண ஊழலை ஒழிக்க முடியும் என்பதே இதில் பொதுநீதி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...