ஒடிசாவில் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல்
ஒடிசாவில் நடந்த ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
பிரதமர் தனது ட்விட்டர் பதிவில்,
"ஒடிசாவில் நடந்த ரயில் விபத்தினால் மிகுந்த வேதனை அடைந்துள்ளேன். துயரமான இந்த தருணத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருடன் எனது எண்ணங்கள் இருக்கின்றன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். ரயில்வே துறை அமைச்சர் திரு அஷ்வினி வைஷ்ணவ் அவர்களிடம் பேசி நிலைமையை கேட்டறிந்தேன். சம்பவ இடத்தில் மீட்புப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்பட்டு வருகின்றன என்று பதிவிட்டுள்ளார்ஒடிசா ரயில் விபத்து குறித்து நிலைமையை ஆய்வு செய்ய உயர்மட்டக் கூட்டம் பிரதமர் தலைமையில் நடைபெற்றது. நிலைமையை ஆய்வு செய்ய பிரதமர் ஒடிசா சென்றார்
ஒடிசாவில் ரயில் விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து நிலைமையை ஆய்வு செய்ய நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்திற்கு பிரதமர் தலைமை தாங்கினார். நிலைமையை ஆய்வு செய்ய திரு மோடி ஒடிசா சென்றார்.
இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு வருமாறு;
“ஒடிசாவில் ரயில் விபத்து ஏற்பட்டதை அடுத்து நிலைமையை ஆய்வு செய்ய நடைபெற்ற கூட்டத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமை தாங்கினார். மீட்பு, நிவாரணம் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவிகள் தொடர்பான அம்சங்கள் ஆய்வுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன.’’
"பிரதமர் நரேந்திர மோடி ஒடிசா சென்றார், அங்கு அவர் ரயில் விபத்துக்குப் பிந்தைய நிலைமையை ஆய்வு செய்கிறார்."ஒடிசாவுக்குச் சென்ற பிரதமர், ரயில் விபத்துக்குப் பிந்தைய மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை ஆய்வு செய்தார்
அன்புக்குரியவர்களை இழந்த குடும்பத்தினருடன் அரசு துணை நிற்கிறது: பிரதமர்
காயமடைந்தவர்களுக்கு சாத்தியமான அனைத்து மருத்துவ உதவிகளும் வழங்கப்படும்: பிரதமர்
இந்த பெரும் சோகத்தைத் தணிக்க அரசு முழுமையான அணுகுமுறையை பின்பற்ற வேண்டும் என பிரதமர் வலியுறுத்தல்
விரைவான விசாரணை மேற்கொண்டு தவறு இழைத்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க பிரதமர் அறிவுறுத்தல்
நிவாரணம் மற்றும் மீட்புடன், தண்டவாளங்களை விரைவாக மீட்டெடுப்பதை உறுதி செய்வதில் ரயில்வே மும்முரமாக செயல்பட்டு வருவதாக பிரதமர் கூறுகிறார்
நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளை உடனடியாக மேற்கொண்டதற்காக ஒடிசா அரசு, உள்ளூர் நிர்வாகம் மற்றும் உள்ளூர் மக்கள், குறிப்பாக இளைஞர்களை பிரதமர் பாராட்டினார்
பிரதமர் திரு நரேந்திர மோடி, ஒடிசாவுக்குச் சென்று பாலசோர் ரயில் விபத்துக்குப் பிறகு நடைபெற்று வரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை ஆய்வு செய்தார். ரயில் விபத்து நடந்த இடத்தைப் பார்வையிட்ட பிரதமர் , காயமடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைக்குச் சென்று ஆறுதல் கூறினார்.
ரயில்களில் பயணம் செய்த பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் இந்த மாபெரும் சோகத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று பிரதமர் கூறினார். துரதிர்ஷ்டவசமான உயிர் இழப்புகள் குறித்துப் பேசுகையில், காயமடைந்தவர்களுக்கு அனைத்து மருத்துவ உதவிகளையும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் கூறினார். அன்புக்குரியவர்களை இழந்து வாடும் குடும்ப உறுப்பினர்களுடன் அரசு துணை நிற்கிறது என்றார் அவர்.
இந்த துயரச் சம்பவம் குறித்து முறையான மற்றும் விரைவான விசாரணையை உறுதி செய்யவும், தவறு இழைத்ததாக கண்டறியப்பட்டவர்கள் மீது உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் கூறினார். ஒடிசா அரசு, உள்ளூர் நிர்வாகம் மற்றும் உள்ளூர் மக்கள், குறிப்பாக இளைஞர்கள், இரவு முழுவதும் தொடர்ந்து மீட்பு பணிகளில் உதவுவதற்காக உழைத்ததை அவர் பாராட்டினார். மேலும், காயமடைந்தவர்களுக்கு உதவுவதற்காக ரத்ததானம் செய்ய வந்த ஏராளமான உள்ளூர் மக்களையும் அவர் பாராட்டினார். மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை தொடரவும், ரயில் பாதைகளை விரைவாக மீட்டெடுப்பதை உறுதி செய்யவும் ரயில்வே செயல்பட்டு வருகிறது என்றார் அவர். உள்ளூர் அதிகாரிகள், பேரிடர் மீட்புப் படைகளின் பணியாளர்கள் மற்றும் ரயில்வே அதிகாரிகளுடன் உரையாடிய பிரதமர், சோகத்தைத் தணிக்க அரசு முழுமையான அணுகுமுறையை பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.இரயில் விபத்தால் வசூல் வேட்டை. ரூ.4,000 டிக்கெட் .. ரூ.80,000க்கு விற்பனை.. மனசாற்றி இல்லா தனியார் விமான சேவை!!ஒடிசாவிற்கு உறவினர்களை மீட்க செல்லும் பயணிகளிடம் தனியார் விமான சேவை அதிக கட்டணம் வசூலிக்கும் நிகழ்வு அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. அரசு விமான நிறுவனமான ஏர் இந்தியாவை டாடாவுக்கு விற்றதால் கொடூரமான ரயில் விபத்தை கூட லாப நோக்கில் பயன்படுத்தும் தனியார் விமான நிறுவன கொள்ளை ஒடிசாவுக்கு டிக்கெட் விலை 6 மடங்கு முதல் 20 மடங்கு வரை 4000 ரூபா டிக்கெட் 24000 முதல் 80000 ரூபாய் வரை.
அரசு விமானம் இருந்தால் உறவினர் பயணக் கட்டணத்தை மத்திய அரசே ஏற்றுக் கொள்ளலாம் இழப்பதற்கு எதுவுமில்லாதவர்களாக பதிவு செய்யபடாத பெட்டியில் பெரும் கனவுகளோடு இறந்தது யார் என தெரியாமல் இறந்த புலம் பெயர் தொழிலாளிகளின் உடமைகள் இவை.
அடுத்தவேளை உணவுடன் அவர்களது குடும்பம் பற்றிய கனவுகளைச் சுமந்த பைகள் இவை.உயிருடன் இருந்தாலே யாரும் இவர்களை மணிதர்களாக மதிக்க மாட்டார்கள்.கொரோனோ வந்தபோது கால்நடையாய் நடந்தார்கள்.இன்று இவர்கள் இறந்ததற்கு யாருமே பொறுப்பேற்கவில்லை!
கருத்துகள்