முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கிரேக்கத்தில் ஏதென்ஸ் கன்சர்வேட்டரியில் இந்திய சமூகத்தினரிடையே பிரதமர் உரை

கிரீஸ் பிரதமர் ஏற்பாடு செய்திருந்த வர்த்தகப் பிரதிநிதிகளுடனான மதிய விருந்துக் கூட்டத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி 


கிரீஸ் பிரதமர் ஏற்பாடு செய்திருந்த வர்த்தகப் பிரதிநிதிகளுடனான மதிய விருந்துக் கூட்டத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்று கலந்துரையாடினார் புதுதில்லி, ஆகஸ்ட் 25, 2023 ஏதென்ஸில் கிரீஸ் பிரதமர் திரு கிரியாகோஸ் மிட்சோடாகிஸ் நேற்று (25-08-2023) ஏற்பாடு செய்திருந்த வணிக மதிய விருந்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் கப்பல் போக்குவரத்து, உள்கட்டமைப்பு, எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த முன்னணி இந்திய மற்றும் கிரேக்க தலைமை நிர்வாக அதிகாரிகள் பங்கேற்றனர். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, ஸ்டார்ட் அப், பார்மா, தகவல் தொழில்நுட்பம், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை மற்றும் உள்கட்டமைப்பு போன்ற துறைகளில் இந்தியாவின் முன்னேற்றம் குறித்தும் வணிகத்தை மேம்படுத்த மேற்கொள்ளப்பட்ட பல்வேறு முன்முயற்ச

ஏதென்ஸில் கிரீஸ் பிரதமர் திரு கிரியாகோஸ் மிட்சோடாகிஸ் நேற்று (25-08-2023) ஏற்பாடு செய்திருந்த வணிக மதிய விருந்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் கப்பல் போக்குவரத்து, உள்கட்டமைப்பு, எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த முன்னணி இந்திய மற்றும் கிரேக்க தலைமை நிர்வாக அதிகாரிகள் பங்கேற்றனர்.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, ஸ்டார்ட் அப், பார்மா, தகவல் தொழில்நுட்பம், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை மற்றும் உள்கட்டமைப்பு போன்ற துறைகளில் இந்தியாவின் முன்னேற்றம் குறித்தும் வணிகத்தை மேம்படுத்த மேற்கொள்ளப்பட்ட பல்வேறு முன்முயற்சிகள் குறித்தும் பிரதமர் திரு நரேந்திர மோடி தமது உரையின் போது எடுத்துரைத்தார். இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதிலும், இந்தியாவுக்கும் கிரீஸுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவதிலும் இந்த தொழில்துறையினரின் பங்கை அவர் பாராட்டினார்.



இந்தியாவில் உள்ள முதலீட்டு வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளுமாறும், இந்தியாவின் வளர்ச்சியில் ஒரு பகுதியாக இருக்குமாறும் கிரீஸ் தொழில் மற்றும் வர்த்தகத் துறையினரைப் பிரதமர் திரு நரேந்திர மோடி கேட்டுக் கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் பின்வரும் நிறுவனங்களின் சார்பில் பின்வரும்  அதிகாரிகள் பங்கேற்றனர்.

1.         எல்பென்     நிறுவனம் - திரு தியோடர் ஈ. ட்ரைபோன் – தலைமைச் செயல் அதிகாரி

2.         கெக் டெர்னா குழுமம் -            திரு.ஜார்ஜியோஸ் பெரிஸ்டிரிஸ் -இயக்குநர்கள் வாரியத் தலைவர்

3.         நெப்டியூன்ஸ் லைன்ஸ் ஷிப்பிங் மற்றும் மேனேஜிங் எண்டர்பிரைசஸ் எஸ்.ஏ.            நிறுவனம் - திருமதி மெலினா ட்ராவ்லூ, இயக்குநர்கள் வாரியத் தலைவர்

4.         சிப்பிட்டா எஸ்.ஏ. நிறுவனம் -           திரு.ஸ்பைரோஸ் தியோடோரோ பௌலோஸ் - நிறுவனர்

5.         யூரோபேங்க் எஸ்.ஏ. நிறுவனம்-      திரு ஃபோக்கியன் கராவியாஸ், தலைமைச் செயல் அதிகாரி

6.         டெம்ஸ் எஸ்.ஏ.     நிறுவனம் - திரு. அகில்லெஸ் கான்ஸ்டாகோபௌலோஸ், தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி

7.         மைட்டிலினோஸ் குழுமம்      - திரு. எவாஞ்சலோஸ் மைடிலினோஸ் - தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி

8.         டைட்டன் சிமெண்ட் குழுமம்            - திரு. டிமிட்ரி பாபலெக்ஸோபௌலோஸ் – இயக்குநர்கள் வாரியத் தலைவர்

9.         இன்டாஸ் பார்மாசூட்டிகல்ஸ் -        திரு.பினிஷ் சுட்கர் - துணைத் தலைவர்

10.       இஇபிசி நிறுவனம் -      திரு.அருண் கரோடியா -  தலைவர்

11.       எம்குரே ஃபார்மசுட்டிக்கல்ஸ் -         திரு சமித் மேத்தா, மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி

12.       ஜிஎம்ஆர் குழுமம்           - ஸ்ரீநிவாஸ் பொம்மிடாலா - குழும இயக்குநர்

13.       ஐடிசி            நிறுவனம் - சஞ்சீவ் பூரி - தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர்

14.       யுபிஎல்         - திரு விக்ரம் ஷெராஃப்-  இயக்குநர்

15.       ஷாஹி எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனம் -           ஹரிஷ் அஹுஜா – மேலாண்மை இயக்குநர் மேலும் ஏதென்ஸில் இந்திய சமூகத்தினருடன் பிரதமர் கலந்துரையாடல்




பிரதமர் திரு. நரேந்திர மோடி 25.082023 அன்று ஏதென்ஸில் உள்ள ஏதென்ஸ் கன்சர்வேட்டரியில் இந்திய சமூகத்தினரிடையே உரையாற்றினார்.

பிரதமர் தமது உரையில், இந்தியா தற்போது அடைந்து வரும் முன்னெப்போதும் இல்லாத மாற்றங்களையும், பல்வேறு துறைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களையும் எடுத்துரைத்தார். சந்திரயான் திட்டத்தின் வெற்றியை அவர் பாராட்டினார்.

இந்தியா-கிரீஸ் இடையிலான பன்முக உறவுகளை மேம்படுத்துவதில் கிரேக்கத்தில் உள்ள இந்திய சமூகத்தினரின் பங்களிப்பை எடுத்துரைத்த பிரதமர், இந்தியாவின் வளர்ச்சியில் ஒரு பகுதியாக இருக்குமாறு அவர்களைக் கேட்டுக் கொண்டார்.கிரேக்க கல்வியாளர்களுடன் பிரதமர் சந்திப்பு



பிரதமர் திரு. நரேந்திர மோடி 25.08.2023 அன்று ஏதென்ஸ் பல்கலைக்கழகத்தின் இந்திய கல்வியியல், சமஸ்கிருதம் மற்றும் இந்தி பேராசிரியரான திரு டிமிட்ரியோஸ் வசிலியாடிஸ் மற்றும் ஏதென்ஸ் பல்கலைக்கழகத்தின் சமூக இறையியல் துறையின் உதவிப் பேராசிரியர் டாக்டர் அப்போஸ்தலோஸ் மிகைலிடிஸ் ஆகியோரை சந்தித்தார்.

இந்திய மதங்கள், தத்துவம் மற்றும் கலாச்சாரம் குறித்த தங்கள் பணிகள் குறித்து அவர்கள் பிரதமரிடம் விளக்கினர்.

இந்திய மற்றும் கிரேக்க பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான கல்வி ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் இந்திய-கிரேக்க கலாச்சார உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து விவாதங்களில் கவனம் செலுத்தப்பட்டதுபுகழ்பெற்ற கிரேக்க ஆராய்ச்சியாளரும் இசைக்கலைஞருமான கான்ஸ்டான்டினோஸ் கலைட்ஸிஸுடன் பிரதமர் சந்திப்பு

கிரேக்க ஆராய்ச்சியாளரும், இசைக்கலைஞரும், இந்தியாவின் சிறந்த நண்பருமான திரு. கான்ஸ்டான்டினோஸ் கலைட்ஸிஸை பிரதமர் திரு. நரேந்திர மோடி 25.08.2023 அன்று ஏதென்ஸில் சந்தித்தார்.

திரு. கான்ஸ்டான்டினோஸ் கலைட்ஸிஸ் இந்தியா மீது கொண்டுள்ள அன்பையும், இந்திய இசை மற்றும் நடனத்தின் மீதான அவரது ஆர்வத்தையும் பிரதமர் பாராட்டினார். 27.11. 2022 அன்று தமது மனதின் குரல் வானொலி உரையின் 95-வது நிகழ்ச்சியின் போது பிரதமர் அவரைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தார்.

கிரேக்கத்தில் இந்தியக் கலாச்சாரத்தை மேலும் பிரபலப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து இந்தச் சந்திப்பின்போது அவர்கள் விவாதித்தனர்.கிரீஸ் பிரதமருடன் இணைந்து கூட்டு செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் திரு நரேந்திர மோடி பேசியதன் தமிழாக்கம்

மரியாதைக்குரிய கிரீஸ் பிரதமர் மித்சோடாக்கிஸ் அவர்களே,

இரு நாட்டு பிரதிநிதிகளே,

ஊடக நண்பர்களே,

வணக்கம்!

கிரீஸிஸ் (கிரேக்கம்) ஏற்பட்ட காட்டுத் தீ தொடர்பான துயரச் சம்பவங்களில் உயிர் இழந்தவர்களுக்கு முதலில் எனது இரங்கலை, இந்திய மக்கள் அனைவரின் சார்பிலும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.

நண்பர்களே,

கிரீஸ் மற்றும் இந்தியாவுக்கு இடையில் இது ஒரு இயற்கையான பிணைப்பு ஆகும். உலகின் இரண்டு பண்டைய நாகரிகங்களுக்கு இடையில், உலகின் இரண்டு பண்டைய ஜனநாயக சித்தாந்தங்களுக்கு இடையில், மற்றும் உலகின் இரண்டு பண்டைய வர்த்தக மற்றும் கலாச்சார உறவுகளுக்கு இடையிலான சந்திப்பு இது.

நண்பர்களே,

நமது உறவின் அடித்தளம் எவ்வளவு பழமையானதோ, அதே அளவுக்கு அது வலுவானது. அறிவியல், கலை மற்றும் கலாச்சாரம் என அனைத்து துறைகளிலும் நாம் ஒருவருக்கொருவர் பல விஷயங்களைக் கற்றுக் கொண்டுள்ளோம். இந்தோ-பசிபிக் அல்லது மத்திய தரைக்கடல் பகுதியில் புவிசார் அரசியல், சர்வதேச மற்றும் பிராந்திய விஷயங்களில் இன்று நாம் சிறந்த ஒருங்கிணைப்பைக் கொண்டுள்ளோம். இரண்டு பழைய நண்பர்களைப் போலவே, நாம் ஒருவருக்கொருவர் உணர்வுகளைப் புரிந்துகொண்டு மதிக்கிறோம். 40 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியப் பிரதமர் ஒருவர் கிரீஸ் வருவது இதுவே முதல் முறையாகும். இருப்பினும், நமது உறவுகளின் ஆழம் குறையவில்லை. உறவுகளின் அரவணைப்பும் குறையவில்லை. எனவே, இன்று கிரேக்க பிரதமரும் நானும் இந்திய-கிரீஸ் கூட்டு செயல்பாட்டை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல முடிவு செய்துள்ளோம்.

பாதுகாப்பு, உள்கட்டமைப்பு, விவசாயம், கல்வி, புதிய மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள்,  திறன் மேம்பாடு ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதன் மூலம் கூட்டு செயல்பாட்டை வலுப்படுத்த முடிவு செய்துள்ளோம்.

நண்பர்கள்,

பாதுகாப்புத் துறையில், ராணுவ உறவுகளுடன், பல்வேறு ஒத்துழைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் ஒப்புக்கொண்டுள்ளோம். பயங்கரவாதம் மற்றும் இணையதளப் பாதுகாப்பு ஆகியவை குறித்தும் இன்று விவாதித்தோம். தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் மட்டத்திலும், பேச்சுவார்த்தை இருக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளோம். கிரேக்கப் பிரதமரும் நானும், நமது இருதரப்பு வர்த்தகம் வேகமாக வளர்ந்து வருவது குறித்துப் பேசினோம். மேலும் இதன் வளர்ச்சிக்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க ஒப்புக் கொண்டுள்ளோம். 2030-ம் ஆண்டுக்குள் இருதரப்பு வர்த்தகத்தை இரட்டிப்பாக்க இலக்கு நிர்ணயித்துள்ளோம்.

இன்று, இன்னும் சில நிமிடங்களில், கிரேக்கப் பிரதமர் ஒரு வணிகக் கூட்டத்தை நடத்துகிறார். அதில், இரு நாட்டு வர்த்தக பிரதிநிதிகளுடன், சில குறிப்பிட்ட துறைகள் குறித்து விவாதிக்க உள்ளோம். இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் முதலீட்டை ஊக்குவிப்பதன் மூலம் நமது தொழில்துறை மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை ஒரு புதிய உயரத்திற்கு கொண்டு செல்ல முடியும் என்று நம்புகிறோம்.

வேளாண் துறையில் ஒத்துழைப்புக்கான ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் விவசாயம், விதை உற்பத்தி மட்டுமின்றி ஆராய்ச்சி, கால்நடை வளர்ப்பு ஆகிய துறைகளிலும் நாம் ஒத்துழைப்புடன் செயல்பட முடியும்.

நண்பர்களே,

இரு நாடுகளுக்கும் இடையே திறன் வாய்ந்த முறையில் குடியேற்றத்தை எளிதாக்குவதற்காக, விரைவில் இடப்பெயர்வு மற்றும் போக்குவரத்துக் கூட்டுச் செயல்பாட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட முடிவு செய்துள்ளோம். நமது மக்களுக்கு இடையிலான உறவுகளுக்கு ஒரு புதிய வடிவம் கொடுக்க, நாம் ஒத்துழைப்பை அதிகரிக்க வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம். கல்வி நிறுவனங்களுக்கு இடையில் கலாச்சார மற்றும் கல்வி பரிமாற்றங்களை ஊக்குவிக்க முடிவு செய்துள்ளோம்.

நண்பர்களே,

தேசிய மற்றும் சர்வதேச பிரச்சினைகள் குறித்தும் நாங்கள் விவாதித்தோம். இந்தியா-ஐரோப்பிய யூனியன் வர்த்தக மற்றும் முதலீட்டு ஒப்பந்தத்திற்கு கிரீஸ் தமது ஆதரவை தெரிவித்துள்ளது. உக்ரைன் விவகாரத்தில் இரு நாடுகளும் ராஜதந்திர ரீதியான தீர்வு மற்றும் பேச்சுவார்த்தையை ஆதரிக்கின்றன. ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பிற சர்வதேச அமைப்புகளில் இந்தியாவுக்கு கிரீஸ் வழங்கி வரும் ஒத்துழைப்புக்கு நான் நன்றி தெரிவித்தேன். இந்தியாவின் ஜி-20 தலைமைப் பதவி குறித்து கிரீஸ் பிரதமர் அளித்த வாழ்த்துக்களுக்கும் ஊக்கத்திற்கும் நான் நன்றி தெரிவிக்கிறேன்.

நண்பர்களே,

கிராண்ட் கிராஸ் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் ஹானர் என்ற விருதை இன்று எனக்கு வழங்கியதற்காக, ஹெலனிக் (கிரீஸ்) குடியரசின் மக்களுக்கும் அதிபருக்கும் நான் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விருதை 140 கோடி இந்தியர்களின் சார்பில் பெற்றுக்கொண்டு நன்றி தெரிவித்தேன். இந்தியா மற்றும் கிரேக்கத்தின் பகிரப்பட்ட மதிப்புகள், நீண்ட மற்றும் நம்பகமான கூட்டுச் செயல்பாட்டின் அடித்தளமாகும்.

ஜனநாயகத்தின் விழுமியங்கள் மற்றும் லட்சியங்களை நிறுவி வெற்றிகரமாக அவற்றைச் செயல்படுத்தியதில் இரு நாடுகளுக்கும் ஒரு வரலாற்று பங்களிப்பு உள்ளது. இந்திய மற்றும் கிரேக்க-ரோமானியக் கலைகளின் அழகிய கலவையான காந்தாரக் கலைப் பள்ளியைப் போலவே, இந்தியாவுக்கும் கிரேக்கத்திற்கும் இடையிலான நட்பும் காலத்தால் அழியாத முத்திரையைப் பதிக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

கிரேக்கத்தின் இந்த அழகான மற்றும் வரலாற்று நகரத்தில் இன்று எனக்கும் எனது தூதுக்குழுவினருக்கும் வழங்கப்பட்ட விருந்தோம்பலுக்கு கிரீஸ் பிரதமர் மற்றும் கிரீஸ் மக்களுக்கு மீண்டும் ஒரு முறை எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மிக்க நன்றி.

பொறுப்பு துறப்பு - இது பிரதமரின் ஊடக சந்திப்பு உரையின் தோராயமான மொழிபெயர்ப்பு ஆகும். பிரதமர் தமது ஊடக சந்திப்பு உரையை இந்தியில் வழங்கி இருந்தார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த