முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஆன்மீகச் சுற்றுலா ரயில்பெட்டி மதுரையில் நடந்த தீ விபத்தில் பத்து நபர்கள் பலி பலர் படுகாயம்

செய்தியாளர்:- ஆர்.சரத்பவார்         இன்றையதினம்  அதிகாலை நேரம் 5.30 மணியளவில் ரயில் பெட்டியில் தீ விபத்து


மதுரை இரயில் நிலையம் அருகில் , கொல்லம் - புனலூர் விரைவு ரயிலிலிருந்து கழட்டி ரயில்வே டிராக்கில் விடப்பட்டிருந்த IRCTC சுற்றுலா ரயிலின் மூன்று  பெட்டிகளில் ஒரு பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்து பத்துப் பேர் பலி, பலர் படுகாயம்  ஆகஸ்ட் மாதம் 17 ஆம் தேதி லட்சுமணபுரி எனும் இலக்னோவிலிருந்து  IRCTC ஆன்மீகச்  சுற்றுலா ரயிலில் புறப்பட்ட, 180 பயணிகள் பல்வேறு ஆன்மீக ஸ்தலங்களுக்குச் சென்று விட்டு, இறுதியாக திருவனந்தபுரம் ஸ்ரீபத்மநாப சுவாமி கோவில் தரிசனத்தை முடித்து விட்டு, மதுரைக்கு இன்று அதிகாலை 5.15 மணியளவில் வந்தடைந்த இரயில் பெட்டியிலிருந்து 40 க்கும் மேற்பட்ட வட மாநில  பயணிகள் கீழே நடைபாதையில் இறங்கி அமர்ந்திருந்தனர்.


அதில் ஒரு பயணி, பம்ப் ஸ்டவ்வைப் பற்ற வைத்துத் தேனீர்  தயாரிக்க, அதனால் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயைக் கண்ட வெளியிலிருந்த பயணிகள் சப்தமிட, அவசர கதியில் தீயை அணைக்க முயற்சிக்காமல் பயணிகள் கீழே இறங்க முயன்ற நிலையில் அந்தப் பெட்டி முழுவதும் கொளுந்து விட்டு எரியத் தொடங்கியதில் அந்தப் பெட்டியில் தூங்கிக் கொண்டிருந்த வயதானவர்கள் கீழே இறங்க முடியாத அல்லது இயலாத நிலையில்  பலியாகினர்.



இதுவரை பத்து சடலங்களை மீட்ட மதுரை  மாநகரத் தீயணைப்புத் துறையினரும்,  பொது மக்களும் தீயை அணைத்து, எரிந்த நிலையில் பத்து  சடலங்களை மீட்டுள்ளனர்.

 ஐவர் ஆண்கள், மூவர் பெண்கள், அடையாளம் தெரியாத சடலம் இரு நபர் என்ற நிலை

சம்பவ இடத்தில்  ரயில்வே காவல்துறையின்  & உயர் அதிகாரிகள், மாவட்ட ஆட்சித் தலைவர் & மாவட்ட வருவாய்த் துறையினர், காவல்துறை ஆணையர் மற்றும்  காவல்  துறையினர்  காயமடைந்தவர்களை மீட்டு மதுரை அரசினர் ராஜாஜி பொது மருத்துவமனைக்கு அனுப்பினர்.


அங்கு மாநில அமைச்சர் பி. மூர்த்தி  வந்து விபரங்களைக் கேட்டறிந்தார்.  அதன் பின் அமைச்சர் பி டி ஆர்  பழனி வேல் தியாகராஜன் வந்து பாதிக்கப்பட்டவர்களிடம் 'அழாதீங்க அவங்களுக்கு ஏதும் ஆகாது .என கண்ணீர் விட்டழுத பயணிகளை ஆரத்தழுவி அமைதிப்படுத்தினார்'  இதில் பொதுவாக வட இந்திய மக்கள்  பாவம் தான் ; போதிய கல்வியறிவோ, விழிப்புணர்வோ,பொருளாதாரமேம்பாடோ  பெறாத மக்கள்.ஆகவே தான்  தொடர்ந்து சில கட்சிகள் மட்டுமே அங்கு வெற்றி கொள்ள முடிகிறது.           


                    MADURAI JUNCTION FIRE INCIDENT : HELP LINE NUMBERS The following two help line numbers are provided at the site to share the information related to the fire incident and causalities   9360552608, 8015681915.                                  மதுரை ரயில் நிலையத்தில் தீ விபத்து!

அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு துறையினர் உடனடி நடவடிக்கை!

விபத்தினால் மதுரை சந்திப்பு வழியாக இயக்கப்படும் ரயில் சேவைகளில் எந்த மாற்றமும் இல்லை எனவும் 

மதுரை ரயில் தீ விபத்து குறித்து தெற்கு ரயில்வே பாதுகாப்புதுறை ஆணையர் செளத்ரி விசாரணை மேற்கொள்வார் - எனவும் தெற்கு ரயில்வே அறிவிப்பு மதுரை ரயில் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து ரயில்வே பாதுகாப்பு ஆணையர் விசாரணை நடத்த உத்தரவு



மதுரை ரயில் நிலைய யார்டில் நிறுத்தப்பட்டிருந்த, ஐஆர்சிடிசி டூரிஸ்ட் கோச் இன்று காலை 5.15 மணியளவில் தீவிபத்துக்குள்ளானது குறித்து, பெங்களூரு தெற்கு வட்டம் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் திரு ஏ.எம்.சவுத்ரி விசாரணை நடத்துவார்.

நாளை காலை 9.30 மணியளவில், மதுரை ரயில்வே மேலாளர் அலுவலக வளாகத்தில் உள்ள டிஆர்எம் மாநாட்டு அரங்கில் விசாரணை தொடங்கும். சம்பவம் மற்றும் விஷயம் தொடர்பாக  அறிந்தவர்கள் ஆதாரங்களை வழங்க விரும்பினால் டிஆர்எம் அரங்கில் அவற்றை வழங்கலாம். எழுத்துபூர்வமாக தெரிவிக்க விரும்புவர்கள், ரயில்வே பாதுகாப்பு ஆணையர், தெற்கு வட்டம்,  ரயில் சன்ரக்ஷா பவன், பெங்களூரு - 560 023 என்ற முகவரிக்கு எழுதலாம் என தெற்கு ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி ஆர்.குகனேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.


இதில் பொது நீதி யாதெனில் இரயில் பெட்டிக்குள் பரவும்படி தீ பம்ப் ஸ்ட்வ் அடுப்பைப்  பயன் படுத்தி சமையல் செய்து பத்துப் பேர் மாண்டு போயிருக்கின்றனர். பலருக்கும் காயம். கொள்ளையர்கள் வரக் கூடுமென்று இரயில் பெட்டியை பூட்டி வேறு வைத்திருக்கின்றனர்.இப்படி ஒரு சூழல் தமிழர்கள் வாழ்வில் எப்போதும் நடக்காது.



 தென்னர் தம் வாழ்வும், கலாச்சாரமும் பன்பாடும்  வேறு வேறு என்பதே

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த