ஜி.கே.மணி மற்றும் இசக்கிப் படையாட்சியை சந்தித்து பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் நலம் விசாரித்தார்
பாட்டாளி மக்கள் கட்சித் தலைமை நிலையச் செயலாளர் இசக்கி படையாட்சி உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னையில் ஓய்வெடுத்து வருகிறார். சென்னை மாடம்பாக்கத்திலுள்ள அவரது மகன் இல்லத்தில் தங்கி மருத்துவச் சிகிச்சை பெற்று வருபவரை நேற்று மாலை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
இசக்கிப் படையாட்சிக்கு இப்போது வயது 76 நாமறிந்த வரை 46 ஆண்டுகளாக பாமகவில் உள்ளவர் 1977-ஆம் ஆண்டில் சென்னை எழும்பூரில் நடைபெற்ற (SSS) எனும் சமூக சேவை சங்கக் கூட்டத்தில் அப்போது அவர் ஒரு ஏழை மில் தொழிலாளியாக வந்து சேர்ந்தவர் . அதன்பின் வன்னியர் சங்கம், பாட்டாளி மக்கள் கட்சியில் பணியாற்றி வரும் இவர் திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தைச் சேர்ந்தவராவார். பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்ட பின் தென் மாவட்டங்களில் கட்சியை வளர்ப்பதற்காக உழைத்தவர். 1989, 1991, 1996 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் வேட்பாளர்களை தேர்வு செய்வது உள்ளிட்ட பணிகளில் மருத்துவர் இராமதாசுடன் இணைந்து முக்கியப் பங்காற்றியவர். தைலாபுரம் தோட்டத்திலுள்ள அரசியல் பயிலரங்கத்தில் தங்கி கட்சிப் பணிகளை ஒருங்கிணைப்பவர். தமிழ்நாட்டில் ஏராளமான கிராமங்களுக்குச் சென்று கட்சிப் பணியாற்றியவர்.
அவர் விரைவில் முழுமையான உடல் நலம் பெற வேண்டும் என நேரில் சந்தித்துத் தெரிவித்தார், மேலும்
பா.ம.க. வில் தற்போது கௌரவத் தலைவரான ஜி.கே.மணிக்கு
தொண்டையில் அறுவை சிகிச்சை மருத்துவம் செய்த நிலையில் பா.ம.க. நிறுவனர்
மருத்துவர் இராமதாஸ் நலம் விசாரித்தார்
பாட்டாளி மக்கள் கட்சியின் தற்போதய கௌரவத் தலைவர் ஜி.கே.மணிக்கு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் இன்று தொண்டை அறுவை மருத்துவம் செய்யப்பட்டது. அதற்கு முன்பாக அவரை பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் இன்று காலை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அவருக்கு அறுவை மருத்துவம் செய்யவிருக்கும் காது, மூக்கு, தொண்டை மருத்துவர் பாபு மனோகரிடமும் ஜி.கே.மணிக்கு மேற்கொள்ளப்படவிருக்கும் மருத்துவம் குறித்து கேட்டறிந்தார்.
தொண்டை அறுவை மருத்துவம் செய்து கொண்ட
பா.ம.க. கௌரவத் தலைவர் ஜி.கே.மணியை பா.ம.க. நிறுவனர்
மருத்துவர் அய்யா அவர்கள் சந்தித்து நலம் விசாரித்தார்!
சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் இன்று தொண்டை அறுவை மருத்துவம் செய்யப்பட்டது. அறுவை மருத்துவத்திற்கு பிறகு ஓய்வெடுத்து வரும் அவரை இன்று மாலை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது அவரது மகன் ஜி.கே.எம். தமிழ்க்குமரன் உள்ளிட்ட குடும்பத்தினர் உடன் உள்ளனர். ஜி.கே.மணி பாமக விற்கு வரும் முன்பாக ஒரு துவக்கப்பள்ளி ஆசிரியராக இருந்தவர் பேராசிரியர் தீரன் சென்ற பின் அந்த இடத்தை பிடித்தவர் கட்சியிலிருந்து பல முக்கிய நபர்கள் வெளியே செல்லக் காரணமானவர் என்பது பலமுறை அக்கட்சியினர் மத்தியில் இப்போதும் பேசப்படுகிறது தற்போது அவர் பல கோடிகளுக்கு சொந்தக் காரராக மாறிப்போனது தனிக்கதை
கருத்துகள்