முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நிலமோசடிக்கு உதவாத நிலையில் நடிகை கௌதமி பாஜகவிலிருந்து விலகியதாக அறிவிப்பு

ஆந்திராவைப் பூர்வீகமாகக் கொண்டநடிகை  கௌதமி தடிமல்லா


பாரதிய ஜனதா கட்சியிலிருந்து விலகினார். திருமணம் செய்யாமல் நடிகர் கமலஹாசனுடன் பதிமூன்றாண்டுகள் வாழ்ந்து ஒரு சீரழிவை சாதனை என  சமுதாயப்புரட்சி செய்தவர் நடிகை கௌதமி இவர் மத்திய அரசின் திரைப்படத் தணிக்கை வாரியத்திலும் நியமிக்கப்பட்டவர்,  சட்டமன்றத் தேர்தலில் இராஜபாளையம் தொகுதியில் தெலுங்கு மக்கள் அதிகம் உள்ளதால் பாஜக சார்பில் வேட்பாளராகும் ஆசையில் பணிசெய்து முயன்ற நிலையில் இவர் அரசியல் பயிலாமல் வந்த காரணத்தால் முன்னால் அமைச்சர்  ராஜேந்திரபாலாஜி அதை தட்டிப்பறித்த நிலையில் தென்காசி ஆலயத்தில் முறையிட்டு சொந்தப்பணி மட்டுமே தற்போது செய்தார்.

பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகியான சினிமா புரோக்கரான கோட்டையூர் அழகப்பனிடம் அறிமுகமாகி திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கௌதமியின் 8.ஏக்கர் 16 சென்ட் பரப்பளவுள்ள நிலத்தை நல்ல விலைக்கு விற்றுத் தருமாறு கௌதமி கேட்டிருந்தார் மேற்கண்ட  பணத்தை தனது மகளின் எதிர்காலத்திற்குப் பயன்படுத்திக் கொள்ள நினைத்தார்



ஆனால் இதிலொரு மோசடி நடந்துள்ளது. நிலத்தில் பிரச்சினையிருப்பதாகக் கூறி ரூபாய் 4.10 கோடிக்கு விற்பனை செய்ததாக இரண்டு தவணையில் பணத்தைக் கொடுத்துவிட்டு தனது குடும்பத்தினர் பெயரில் மாற்றிக்கொண்டுள்ளார் நடிகை  கவுதமியிடமும் கையெழுத்துப் பெற்றுள்ளனர்    .இந்த நிலையில்தான் கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம்  24 ஆம் தேதி வருமான வரித் துறை அலுவலகத்திலிருந்து கௌதமிக்கு  கடிதம் வந்தததில் கோட்டையூரில் உள்ள சொத்துகள் ரூ. 11,17,38,907 க்கு விற்பனை செய்ததில் கேபிட்டல் கெய்ன்ஸ் டேக்ஸ் ரூ 2.61 கோடி செலுத்தவில்லை என தெரிவிக்கப்பட்டது.அதைத் தொடர்ந்து அனைத்து வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டதால் மன உளைச்சலுக்கு ஆளானார். அது குறித்து உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த போது,





நிலம் விற்பனைத் தொகையில் 25 சதவீதம்  ரூபாய்.2,61,25,637 ஐக்  கட்டவேண்டுமென உத்தரவிட்டதன்படி ரூபாய் 4.10 கோடிக்கு விற்பனையானதாக பலராமனும் ரகுநாதனும் சொன்னதன் படி கௌதமி ரூபாய்.65,31,500 வரி கட்டியுள்ளாராம். இந்த வழக்கு தற்போது நிலுவையிலிருக்கிறது.

வருமான வரித் துறையின் கடிதத்தால் சந்தேகமடைந்த கௌதமி சொத்து விற்பனை  தொடர்பான ஆவணங்களை சுங்குவார்சத்திரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் நகலெடுத்த போது 8.16 ஏக்கர் நிலத்தை 2016 ஆம் ஆண்டு பலராமனும் ரகுநாதனும் ரூபாய் 11,17,38,907 க்கு விற்பனை செய்தது தெரியவந்ததில் ரூபாய் 4.10 கோடியை மட்டும் எனக்குக் கொடுத்துவிட்டு மீதமுள்ள ரூபாய் 7,07,38,908 பணத்தை மூவரும் பிரித்துக் கொண்டுள்ளனர் என்பதும் தெரியவந்தது.



கௌதமி தடிமல்லா 1969 ஆண்டு பிறந்தவர், மலையாளம் , ஹிந்தி மற்றும் கன்னடம், தமிழ், தெலுங்கு மொழிப் படங்களில்  பணியாற்றி 1987 ஆம் ஆண்டு முதல் 1998 ஆம் ஆண்டு வரை முன்னணித் தென்னிந்திய நடிகைகளில் ஒருவராவார்  தொலைக்காட்சியிலும்  நடித்து, தொகுப்பாளராகவும் உள்ளார், லைஃப் அகெய்ன் அறக்கட்டளையின் நிறுவனராகவும், திரைப்பட ஆடை வடிவமைப்பாளராகவும் உள்ளார். தற்போது நடிகை கௌதமியளித்த புகாரில், பாரதிய ஜனதா கட்சியின் பிரமுகர் கோட்டையூர் அழகப்பன், அவரது மனைவி நாச்சாள் அழகப்பன், மகன் சிவா உள்பட ஆறு  நபர்கள் மீது சென்னை மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.  இந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.  அவர்து அறிக்கை வருமாறு. “ மிகவும் கனத்த இதயத்துடனும், ஆழந்த ஏமாற்றத்துடனும் நான் பாஜக உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்கிறேன்.



தேசத்தைக் கட்டியெழுப்பும் பணியில் பங்களிப்பதற்காக 25 ஆண்டுகளுக்கு முன்பு நான் கட்சியில் சேர்ந்தேன். என் வாழக்கையில் நான் எதிர்கொண்ட அனைத்து சவால்களிலும் கூட  நான் அந்த உறுதிப்பாட்டை மதிக்கிறேன்.இன்று நான் என் வாழ்க்கையில் நினைத்துப் பார்க்க முடியாத ஒரு நெருக்கடியான கட்டத்தில் நிற்கிறேன். கட்சி மற்றும் தலைவர்களிடமிருந்து  எனக்கு எந்த ஆதரவும் இல்லை என்பது மட்டுமல்லாமல் அவர்களில் பலர் அந்த நபரை தீவிரமாக ஆதரிக்கிறார்கள் என்பது எனக்கு தெரியும்.இப்போது நானும் எனது மகளும் பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டிய கட்டத்தில் இருக்கிறேன். ஆனால் பாஜகவை சேர்ந்த கி.அழகப்பன் என்பவர் எனது பணம், சொத்து மற்றும் ஆவணங்களை கொண்டு பெரிய அளவில் மோசடி செய்திருப்பது என்னை அச்சத்தில் தள்ளி உள்ளது.



சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு, என் வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனை மற்றும் தனிமையைக் கண்டு  அழகப்பன் என்னை அணுகினார்.  ஏனெனில் நான் அப்போது என் பெற்றோர் இருவரையும் இழந்து தனியாக மட்டுமல்லாமல், கைக்குழந்தையுடன் இருந்தேன்.

அவரது குடும்பத்தில் ஒரு அங்கமாக எங்களை வரவேற்பது போல், நடித்து, என் வாழக்கையில் நுழைந்தார். இந்த சூழ்நிலையில், 20 ஆண்டுகளுக்கு முன்பு எனது பல நிலங்களின்  பத்திர ஆவணங்களை அவரிடம் ஒப்படைத்தேன்.நீதி கிடைக்கும் என்ற முழு நம்பிக்கையுடன் தமிழ முதல்வர் மீது, காவல்துறை மீதும், நீதித்துறை மீது நம்பிக்கை வைத்து அழகப்பன் மீது புகார்களை அளித்துள்ளேன்.

2021 தமிழக சட்டமன்றத் தேர்தலின்போது, தலைமை கேட்டுக்கொண்டபடி, ராஜபாளையம், தொகுதியின் வளர்ச்சிக்காக பாஜக சார்பில் போட்டியிட உறுதியளித்தேன். ராஜபாளையம் மக்களுக்காகவும், அடிமட்ட அளவில் பாஜகவை வலுப்படுத்தவும் என்னை அர்ப்பணித்தேன். ஆனால் கடைசி நிமிடத்தில்  எனக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதி மீறப்பட்டது.

கடந்த 25 வருடங்கள் கட்சிக்கு விசுவாசமாக இருந்தும், தற்போது வரை முழுமையான ஆதரவு இல்லை. மேலும் பாஜகவின் பல மூத்த உறுப்பினர்கள் கடந்த 40 நாட்களாக நீதியை ஏமாற்றி, தலைமறைவாகி உள்ள அழகப்பனுக்கு ஆதரவாக உள்ளதை நினைக்கும்போது மனம் உடைந்துவிட்டது.

நான் இந்த ராஜினாமா கடிதத்தை மிகுந்த வேதனையிலும் வருத்ததிலும் எழுதுகிறேன். அதேநேரத்தில் இதில் உறுதியாக உள்ளேன்” என்று அறிக்கையில் தெரிவித்துள்ளார்.கௌதமி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த