ஆந்திராவைப் பூர்வீகமாகக் கொண்டநடிகை கௌதமி தடிமல்லா
பாரதிய ஜனதா கட்சியிலிருந்து விலகினார். திருமணம் செய்யாமல் நடிகர் கமலஹாசனுடன் பதிமூன்றாண்டுகள் வாழ்ந்து ஒரு சீரழிவை சாதனை என சமுதாயப்புரட்சி செய்தவர் நடிகை கௌதமி இவர் மத்திய அரசின் திரைப்படத் தணிக்கை வாரியத்திலும் நியமிக்கப்பட்டவர், சட்டமன்றத் தேர்தலில் இராஜபாளையம் தொகுதியில் தெலுங்கு மக்கள் அதிகம் உள்ளதால் பாஜக சார்பில் வேட்பாளராகும் ஆசையில் பணிசெய்து முயன்ற நிலையில் இவர் அரசியல் பயிலாமல் வந்த காரணத்தால் முன்னால் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி அதை தட்டிப்பறித்த நிலையில் தென்காசி ஆலயத்தில் முறையிட்டு சொந்தப்பணி மட்டுமே தற்போது செய்தார்.
பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகியான சினிமா புரோக்கரான கோட்டையூர் அழகப்பனிடம் அறிமுகமாகி திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கௌதமியின் 8.ஏக்கர் 16 சென்ட் பரப்பளவுள்ள நிலத்தை நல்ல விலைக்கு விற்றுத் தருமாறு கௌதமி கேட்டிருந்தார் மேற்கண்ட பணத்தை தனது மகளின் எதிர்காலத்திற்குப் பயன்படுத்திக் கொள்ள நினைத்தார்
ஆனால் இதிலொரு மோசடி நடந்துள்ளது. நிலத்தில் பிரச்சினையிருப்பதாகக் கூறி ரூபாய் 4.10 கோடிக்கு விற்பனை செய்ததாக இரண்டு தவணையில் பணத்தைக் கொடுத்துவிட்டு தனது குடும்பத்தினர் பெயரில் மாற்றிக்கொண்டுள்ளார் நடிகை கவுதமியிடமும் கையெழுத்துப் பெற்றுள்ளனர் .இந்த நிலையில்தான் கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 24 ஆம் தேதி வருமான வரித் துறை அலுவலகத்திலிருந்து கௌதமிக்கு கடிதம் வந்தததில் கோட்டையூரில் உள்ள சொத்துகள் ரூ. 11,17,38,907 க்கு விற்பனை செய்ததில் கேபிட்டல் கெய்ன்ஸ் டேக்ஸ் ரூ 2.61 கோடி செலுத்தவில்லை என தெரிவிக்கப்பட்டது.அதைத் தொடர்ந்து அனைத்து வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டதால் மன உளைச்சலுக்கு ஆளானார். அது குறித்து உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த போது,
நிலம் விற்பனைத் தொகையில் 25 சதவீதம் ரூபாய்.2,61,25,637 ஐக் கட்டவேண்டுமென உத்தரவிட்டதன்படி ரூபாய் 4.10 கோடிக்கு விற்பனையானதாக பலராமனும் ரகுநாதனும் சொன்னதன் படி கௌதமி ரூபாய்.65,31,500 வரி கட்டியுள்ளாராம். இந்த வழக்கு தற்போது நிலுவையிலிருக்கிறது.
வருமான வரித் துறையின் கடிதத்தால் சந்தேகமடைந்த கௌதமி சொத்து விற்பனை தொடர்பான ஆவணங்களை சுங்குவார்சத்திரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் நகலெடுத்த போது 8.16 ஏக்கர் நிலத்தை 2016 ஆம் ஆண்டு பலராமனும் ரகுநாதனும் ரூபாய் 11,17,38,907 க்கு விற்பனை செய்தது தெரியவந்ததில் ரூபாய் 4.10 கோடியை மட்டும் எனக்குக் கொடுத்துவிட்டு மீதமுள்ள ரூபாய் 7,07,38,908 பணத்தை மூவரும் பிரித்துக் கொண்டுள்ளனர் என்பதும் தெரியவந்தது.
கௌதமி தடிமல்லா 1969 ஆண்டு பிறந்தவர், மலையாளம் , ஹிந்தி மற்றும் கன்னடம், தமிழ், தெலுங்கு மொழிப் படங்களில் பணியாற்றி 1987 ஆம் ஆண்டு முதல் 1998 ஆம் ஆண்டு வரை முன்னணித் தென்னிந்திய நடிகைகளில் ஒருவராவார் தொலைக்காட்சியிலும் நடித்து, தொகுப்பாளராகவும் உள்ளார், லைஃப் அகெய்ன் அறக்கட்டளையின் நிறுவனராகவும், திரைப்பட ஆடை வடிவமைப்பாளராகவும் உள்ளார். தற்போது நடிகை கௌதமியளித்த புகாரில், பாரதிய ஜனதா கட்சியின் பிரமுகர் கோட்டையூர் அழகப்பன், அவரது மனைவி நாச்சாள் அழகப்பன், மகன் சிவா உள்பட ஆறு நபர்கள் மீது சென்னை மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அவர்து அறிக்கை வருமாறு. “ மிகவும் கனத்த இதயத்துடனும், ஆழந்த ஏமாற்றத்துடனும் நான் பாஜக உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்கிறேன்.
தேசத்தைக் கட்டியெழுப்பும் பணியில் பங்களிப்பதற்காக 25 ஆண்டுகளுக்கு முன்பு நான் கட்சியில் சேர்ந்தேன். என் வாழக்கையில் நான் எதிர்கொண்ட அனைத்து சவால்களிலும் கூட நான் அந்த உறுதிப்பாட்டை மதிக்கிறேன்.இன்று நான் என் வாழ்க்கையில் நினைத்துப் பார்க்க முடியாத ஒரு நெருக்கடியான கட்டத்தில் நிற்கிறேன். கட்சி மற்றும் தலைவர்களிடமிருந்து எனக்கு எந்த ஆதரவும் இல்லை என்பது மட்டுமல்லாமல் அவர்களில் பலர் அந்த நபரை தீவிரமாக ஆதரிக்கிறார்கள் என்பது எனக்கு தெரியும்.இப்போது நானும் எனது மகளும் பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டிய கட்டத்தில் இருக்கிறேன். ஆனால் பாஜகவை சேர்ந்த கி.அழகப்பன் என்பவர் எனது பணம், சொத்து மற்றும் ஆவணங்களை கொண்டு பெரிய அளவில் மோசடி செய்திருப்பது என்னை அச்சத்தில் தள்ளி உள்ளது.
சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு, என் வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனை மற்றும் தனிமையைக் கண்டு அழகப்பன் என்னை அணுகினார். ஏனெனில் நான் அப்போது என் பெற்றோர் இருவரையும் இழந்து தனியாக மட்டுமல்லாமல், கைக்குழந்தையுடன் இருந்தேன்.
அவரது குடும்பத்தில் ஒரு அங்கமாக எங்களை வரவேற்பது போல், நடித்து, என் வாழக்கையில் நுழைந்தார். இந்த சூழ்நிலையில், 20 ஆண்டுகளுக்கு முன்பு எனது பல நிலங்களின் பத்திர ஆவணங்களை அவரிடம் ஒப்படைத்தேன்.நீதி கிடைக்கும் என்ற முழு நம்பிக்கையுடன் தமிழ முதல்வர் மீது, காவல்துறை மீதும், நீதித்துறை மீது நம்பிக்கை வைத்து அழகப்பன் மீது புகார்களை அளித்துள்ளேன்.
2021 தமிழக சட்டமன்றத் தேர்தலின்போது, தலைமை கேட்டுக்கொண்டபடி, ராஜபாளையம், தொகுதியின் வளர்ச்சிக்காக பாஜக சார்பில் போட்டியிட உறுதியளித்தேன். ராஜபாளையம் மக்களுக்காகவும், அடிமட்ட அளவில் பாஜகவை வலுப்படுத்தவும் என்னை அர்ப்பணித்தேன். ஆனால் கடைசி நிமிடத்தில் எனக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதி மீறப்பட்டது.
கடந்த 25 வருடங்கள் கட்சிக்கு விசுவாசமாக இருந்தும், தற்போது வரை முழுமையான ஆதரவு இல்லை. மேலும் பாஜகவின் பல மூத்த உறுப்பினர்கள் கடந்த 40 நாட்களாக நீதியை ஏமாற்றி, தலைமறைவாகி உள்ள அழகப்பனுக்கு ஆதரவாக உள்ளதை நினைக்கும்போது மனம் உடைந்துவிட்டது.
நான் இந்த ராஜினாமா கடிதத்தை மிகுந்த வேதனையிலும் வருத்ததிலும் எழுதுகிறேன். அதேநேரத்தில் இதில் உறுதியாக உள்ளேன்” என்று அறிக்கையில் தெரிவித்துள்ளார்.கௌதமி
கருத்துகள்