முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஜார்க்கண்டில் ஹேமந்த் சோரன் ராஜினாமாவும் கைதும் தொடர்ந்து சம்பாய் சோரன் முதல்வராகிறார்

ஜார்க்கண்ட் மாநில ஆளுநர்  சி.பி. ராதாகிருஷ்ணனைச் சந்தித்து ஹேமந்த் சோரன் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கிய பின்னர் .ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சர் பதவி விலகிய நிலையில் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டுள்ளார்.


முன்னதாக ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனிடம் தனது ராஜினாமா கடிதத்தை அவர் வழங்கினார். ஆளுநரும் அதை ஏற்றுக்கொண்ட நிலையில் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டுள்ளார்.ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவரானவர் காங்கிரஸ் கட்சியின் இந்தியா கூட்டணியில் உள்ளார்.  ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு புதிய முதலமைச்சர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். புதிய முதல்வராக ஹேமந்த் சோரனின் மனைவி தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சம்பாய் சோரன் தேர்வாகியுள்ளார்சம்பாய் சோரனுக்கு 41 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவும் உள்ளது.

81 சட்டமன்றத்  தொகுதிகளைக் கொண்ட ஜார்கண்ட் மாநில சட்டசபையில் சம்பாய் சோரனுக்கு 41 உறுப்பினர்களின் ஆதரவு . ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி துவங்கப்பட்ட காலத்திலிருந்து, ஹேமந்த் சோரனின் தந்தை ஷிபு சோரனுடன் கட்சியிலிருந்து வருபவர் சம்பாய் சோரன்.





தற்போது ஜார்கண்ட் மாநில அமைச்சரவையில் போக்குவரத்து மற்றும் பழங்குடியினர், பட்டியலின, பிற்படுத்தப்பட்டோர், நலத்துறை அமைச்சராக உள்ளார். சம்பாய் சோரனின் தந்தை சிமல் சோரன் விவசாயி. இவர் சரைகேளா கார்சவான் மாவட்டத்தில் வசிக்கிறார்.

"எது நடந்தாலும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். பாரதிய ஜனதா கட்சியின் அரசு மத்திய அமைப்புகளைக் கொண்டு ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை கலைக்க நினைக்கிறது. ஆனால், நாங்கள் அதற்கு இடம் கொடுக்க மாட்டோம்," என சம்பாய் சோரன் தெரிவித்துள்ளார்.சோரன் பழங்குடி வகுப்பைச் சேர்ந்தவர். ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் செயல் தலைவராவார்  ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதலமைச்சராக 2013 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு முடிய பதவி வகித்தவர். இவரது தந்தை சிபு சோரன் ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சராக மூன்று முறை  பதவி வகித்தவர். இவரது மனைவி  கல்பனா சோரன்.


ஹேமந்த் சோரன்  2010 முதல் 2013 வரை முதலமைச்சராகவும்; சட்டமன்ற எதிர்கட்சித் தலைவராகவும் பதவி வகித்தவர். மேலும் 2015 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரையும் மற்றும் 2009 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரையும் ஜார்க்கண்டிலிருந்து நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்தார் .நிலம் மற்றும் பண மோசடி வழக்கில் ஹேமந்த் சோரனை விசாரிக்க அமலாக்க இயக்குநரகம்  ஏழு முறை அழைப்பாணை விடுத்தது ,  தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிராக, முதலமைச்சர் ஹேமந்த் சோரன், அரசு நிலக்கரிச் சுரங்கங்களை தனது பெயருக்கு குத்தகைக்கு ஒதுக்கிய காரணத்தினால், இந்தியத் தேர்தல் ஆணையம் ஹேமந்த் சோரனை சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்ய கடந்த 26 ஆகஸ்டு 2022 ம் தேதியன்று ஜார்கண்ட் மாநில ஆளுநருக்குப் பரிந்துரை செய்தது.  கடந்த வாரம் முதல் முறையாக வீட்டிலேயே வைத்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. ஜனவரி மாதம் 28, 29-ஆம் தேதிகளில் அவரிடம் மீண்டும் விசாரணை நடத்தப்படும் என்றும் அறிவித்திருந்த நிலையில், கடந்த 27-ஆம் தேதி டெல்லிக்கு தனி விமானத்தில் சென்ற முதல்வர் ஹேமந்த் சோரன், அங்கிருந்து ராஞ்சிக்கு ரகசியமாகவே திரும்பினார். அவர் விமானத்தில் வராமல், தனிக் காரில் ரகசிய வழியில் வந்துள்ளார்.



டெல்லியில் உள்ள ஹேமந்த் சோரனின் வீட்டில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட சோதனையில் ரூபாய்.36 லட்சம் ரொக்கம், சொகுசுக் கார், ஆவணங்கள் சிலவற்றையும் அமலாக்கத் துறையினர் கைப்பற்றியதைத் தொடர்ந்து, ராஞ்சியில் விசாரணை நடத்துவதற்காக நேற்று முன்தினம் பிற்பகலில் அமலாக்கத் துறை யினர் முதல்வர் ஹேமந்த் சோரனின் வீட்டில் குவிக்கப்பட்டனர். ஆனால், முதல்வரிடம் விசாரணை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா  கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

ஏற்கெனவே, ராஞ்சியில் உள்ள ஹேமந்த் சோரனின் வீடு, ஆளுநர் மாளிகை மற்றும் அமலாக்கத் துறை அலுவலகத்தை சுற்றி 100 மீட்டர் தொலைவு வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு துணை ராணுவப் படையினர், காவல்துறையினர் குவிக்கப்பட்டதனால் ராஞ்சியில் பதற்றம் நிலவுகிற நிலையில், நேற்று பிற்பகல் 2 மணிக்கு  முதல்வர் ஹேமந்த் சோரனிடம், அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். 7 மணி நேர விசாரணைக்கு பிறகு, இரவு 8.30 மணி அளவில் அவரை அமலாக்கத் துறை அதிகாரிகள் கைது செய்து, தங்கள் அலுவலகத்துக்கு கூட்டிச் சென்றனர். இதைக் கண்டித்து ஜேஎம்எம் கட்சியினர் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.




 முன்னதாக, முதல்வர் ஹேமந்த் சோரன் தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனிடம் வழங்கினார். தொடர்ந்து, மாநிலத்தின் புதிய முதல்வராக ஹேமந்த் சோரனின் நெருங்கிய ஆதரவாளரும், போக்குவரத்து துறை அமைச்சருமான சம்பய் சோரன் முதல்வராக  பதவியேற்பதற்கான ஆதரவுக் கடிதங்களை ஆளுநரிடம் ஜேஎம்எம் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் வழங்கினர். 


கடிதத்தை ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனிடம் வழங்கினார். இதைத் தொடர்ந்து, மாநிலத்தின் புதிய முதல்வராக ஹேமந்த் சோரனின் நெருங்கிய ஆதரவாளரும், போக்குவரத்து துறை அமைச்சருமான சம்பய் சோரன் பதவியேற்க உள்ளார்.

முன்னதாக, அமலாக்கத் துறை மீது முதல்வர் ஹேமந்த் சோரன் ஜார்க்கண்ட் காவல் நிலையத்தில் நேற்று ஒரு புகார் கொடுத்தார். அதில் டெல்லியிலுள்ள தனது வீட்டில் அமலாக்கத் துறை சட்ட விரோதமாக சோதனை நடத்தி பொருட்களை எடுத்துச் சென்றதாக புகாரில் அவர் தெரிவித்துள்ளார்.

அது குறித்து ராஞ்சியிலுள்ள மூத்த காவல்துறை அதிகாரி சந்தன் குமார் சின்ஹா தெரிவித்ததாவது: அமலாக்கத் துறை அதிகாரிகள் மீது எஸ்சி/ எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டப்படி முதல்வர் ஹேமந்த் சோரன் புகார் கொடுத்துள்ளார். தனது பெயருக்கும், தங்கள் சமூகத்துக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் அமலாக்கத் துறை அதிகாரிகள் செயல்பட்டதாகவும், எந்த விதமான முன்னறிவிப்புமின்றி டெல்லியில் உள்ள முதல்வர் இல்லத்துக்கு வந்ததாகவும், தன்னைப் பற்றி பொய்யான தகவலை பரப்பியதாகவும் புகாரில் அவர் தெரிவித்துள்ளார்.




அதையடுத்து, அமலாக்கத் துறை மூத்த அதிகாரிகள் கபில் ராஜ், தேவ்விரத் ஜா, அனுபம் குமார், அமன் படேல் ஆகியோர் மீது முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்யப்பட்டுள்ளதெனக்  கூறினார். முதல்வர் ஹேமந்த் சோரன் எஸ்.டி. பிரிவை சேர்ந்தவர் என்பதால், எஸ்சி, எஸ்டி வன்கொடுமை சட்டத்தின்கீழ் அவர் புகார் கொடுத்துள்ளது தெரியவந்துள்ளது



மேலும் தான் கைது செய்யப்பட்டால் தனது மனைவி கல்பனா சோரனை முதல்வராக்க, ஹேமந்த் சோரன் முடிவு செய்துள்ளதாகக் கூறப்பட்ட நிலையில் அந்தத் தகவலை ஹேமந்த் சோரன் மறுத்தார். இந்நிலையில்தான் தனது கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுடன் ரகசியமாக ஆலோசனைக் கூட்டம் நடத்தி சம்பய் சோரனை, ஹேமந்த் சோரன் தேர்வு செய்ததாகக் கூறப்படுகிறது. இந்த ரகசியக் கூட்டத்தில் ஜேஎம்எம்  சட்டமன்ற உறுப்பினர்களிடமிருந்து முதல்வர் பெயரை குறிப்பிடாமல் ஆதரவுக் கடிதங்களையும் ஹேமந்த் சோரன் பெற்றுள்ளார்.





ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா சோரனை முதல்வராக ஏற்பதற்கு ஜேஎம்எம் கட்சியைச் சேர்ந்த நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்திருந்ததனால் தான், மனைவியை முதல்வராக்காமல், தனது நண்பர் சம்பய் சோரனை முதல்வராக, ஹேமந்த் சோரன்  தேர்வு செய்துள்ளாரென ஜேஎம்எம் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.


 ஜார்க்கண்ட் மாநில போக்குவரத்துத் துறை அமைச்சரான சம்பய் சோரன். செராய் கெல்லா தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள சம்பய் சோரனுக்கு 67 வயதாகிறது. இதுவரை 5 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். .திருத்தப்பட்ட சட்டம் ஊழல் தடுப்பு (திருத்தம்) சட்டம், 2018 ஊழலுக்கு எதிரான இந்தப் போரில் 1988 ஊழல் தடுப்புச் சட்டம் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்துள்ளது. வலுவான சட்டக் கட்டமைப்பை வழங்குவதன் மூலமும், குற்றங்களை வரையறுப்பதன் மூலமும், கடுமையான தண்டனைகளை நிறுவுவதன் மூலமும், ஊழல் நபர்களை பொறுப்புக்கூற வைக்க இந்த சட்டம் உதவியுள்ளது. ஊழலைத் தடுப்பதில் இந்தச் சட்டம் கருவியாக இருந்தாலும், சவால்கள் நீடிக்கின்றன. புலனாய்வு அமைப்புகளுக்கு இடையே சிறந்த ஒருங்கிணைப்பு, விசாரணைகளில் தாமதத்தை குறைத்தல் மற்றும் ஊழல் வழக்குகளில் அரசியல் தலையீடு பிரச்சினைக்கு தீர்வு காண்பது ஆகியவை இந்த சவால்களில் அடங்கும்.       

சரி பழங்குடியினர் மேலிருந்து மூன்றாவதாக உள்ளனர். அவர்கள் மதமே அது தானா என்பது எழு வினா?


சரி கூட்டமாக இருக்கும் ஹிந்துக்கள் நாட்டிற்கும் கீழிருந்து நான்காவது இருக்கும் கிறுத்துவ நாடுகளுக்கும் எது பலமும் அதிகாரமும் பொருளாதாரமும் உடையதாக உள்ளது?    என்பதே உலக அரசியலை தாங்கிப் பிடிக்கும்                சர்னா என்பது இயற்கை வழிபாட்டையொட்டிய ஒரு மதத்தை ஜார்கண்ட் உட்பட பல மாநிலங்களில் உள்ள பழங்குடியினர் பின்பற்றுகின்றனர்.ஜார்கண்ட் விகாஸ் மோர்ச்சா தனது தேர்தல் அறிக்கையில் சர்னாவை மதமாக அங்கீகரிப்பதாக வாக்குறுதி அளித்தனர்.  ஜார்கண்டில் மொத்தம் 32 பழங்குடியினப்  பிரிவுகள் உள்ளதில் 8 பழங்குடியினர் பலவீனமான பழங்குடிப் பிரிவுகள் ஹிந்துக்கள் ஆவார்கள், சிலர் மட்டுமே கிறித்துவ மதத்துக்கு மாறினர்” என ஹஜாரிபாக் பல்கலைக் கழக மானிடவியல் பேராசிரியர் ஜி.என்.ஜா கூறுகிறார்.         ரஜி பாதா சர்னா பிரதான சபாவின் தர்ம குருவான பந்தன் திக்கா என்பவர் ஜார்கண்டில் 62 லட்சம் சர்னா பழங்குடியினர் இருப்பதாகவும், ஜார்கண்டில், 2011 ஆம் ஆண்டில் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் மக்கள் தொகை 8.6 மில்லியனாகவும், இது மாநிலத்தின் மொத்த மக்கள்தொகையில் 26.2 சதவீதமாகும்.

எண் அடிப்படையில், ஜார்கண்ட் மாநிலம் நாட்டிலேயே 12 ஆவது பெரிய பழங்குடி மக்கள்தொகையைக் கொண்டது, இது இந்தியாவின் மொத்த பட்டியல் பழங்குடி மக்கள்தொகையில் 8.3 சதவீதமாகும்.             


இதில் பொதுநீதி யாதெனில் :-                        ஊழல் செய்த ஒரு மாநில முதல்வர் தன்மீது நடவடிக்கை எடுக்கும் அமலாக்கத் துறையினர் மீது ஜாதிய ரீதியான வழக்கை பதிவு செய்வதால் தப்பிவிடலாம் என மாநில காவல்துறையை நாடியது தவறான நிகழ்வாகவே எதிர் கால வரலாறு கூறும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த