முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பெண் ஊழியர் வாரிசு ஓய்வூதியத்திற்காக பரிந்துரைக்கும் உரிமை- மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தகவல்

பெண் ஊழியர் தனது மகன் அல்லது மகளை குடும்ப ஓய்வூதியத்திற்காக பரிந்துரைக்கும் உரிமையை வழங்கியுள்ளது - மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்

நீண்டகால சமூக-பொருளாதார தாக்கத்துடன் கூடிய ஒரு முன்னோடி முடிவில், பெண்களுக்கு சமமான உரிமைகளை வழங்குவதற்கான பிரதமர் மோடியின் கொள்கைக்கு இணங்க, நீண்டகாலமாக நிறுவப்பட்ட விதியை அரசு திருத்தியுள்ளது

மத்திய குடிமை சேவை (ஓய்வூதியம்) விதிகள், 2021-ல் மத்திய அரசு திருத்தம் செய்துள்ளது. பெண் ஊழியர்கள் அல்லது ஓய்வூதியதாரர்கள் தங்கள் மனைவிக்கு பதிலாக தங்கள் மறைவுக்குப் பிறகு தகுதியான குழந்தை / குழந்தைகளுக்கு குடும்ப ஓய்வூதியத்தை வழங்க அனுமதிக்கிறது

மகளிருக்கு சமமான உரிமைகளை வழங்க வேண்டும் என்ற பிரதமர் திரு நரேந்திர மோடியின் கொள்கைக்கு இணங்க, நீண்டகாலமாக நடைமுறையில் உள்ள விதியை அரசு திருத்தம் செய்துள்ளது. இதன்மூலம், பெண் பணியாளர் குடும்ப ஓய்வூதியத்திற்கு அவரது கணவருக்கு பதிலாக அவரது மகன் அல்லது மகளை குடும்ப ஓய்வூதியத்திற்கு பரிந்துரைக்கும் உரிமையை வழங்கியுள்ளது.


இது குறித்து செய்தியாளர்களிடம்  பேசிய மத்திய இணையமைச்சர் (தனி பொறுப்பு) அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியங்கள், அணுசக்தி மற்றும் விண்வெளித் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், "ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத் துறை, மத்திய குடிமை சேவை (ஓய்வூதியம்) விதிகள், 2021-ல் ஒரு திருத்தத்தை அறிமுகப்படுத்தியுள்ளது, இது பெண் அரசு ஊழியர்கள் அல்லது ஓய்வூதியதாரர்கள் தங்கள் கணவருக்கு பதிலாக தங்கள் மறைவுக்குப் பிறகு தகுதியான குழந்தை / குழந்தைகளுக்கு குடும்ப ஓய்வூதியத்தை  வழங்க அனுமதிக்கிறது.

விவாகரத்து நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும் சூழ்நிலைகள் அல்லது குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டம், வரதட்சணை தடுப்புச் சட்டம் அல்லது இந்திய தண்டனைச் சட்டம் போன்ற சட்டங்களின் கீழ் தாக்கல் செய்யப்படும் வழக்குகளுக்கு இந்த திருத்தம் தீர்வு காணும் என்று அமைச்சர் கூறினார்.

முன்னதாக, இறந்த அரசு ஊழியர் அல்லது ஓய்வூதியதாரரின் கணவருக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்கப்பட்டது, அதே நேரத்தில் மற்ற குடும்ப உறுப்பினர்கள் மனைவியின் தகுதியின்மையைப் பொறுத்து  அல்லது அவரது மறைவுக்குப் பிறகு மட்டுமே தகுதி பெற்றனர். இருப்பினும், புதிய திருத்தம் பெண் அரசு ஊழியர்கள் அல்லது ஓய்வூதியதாரர்கள் தங்கள் கணவருக்குப் பதிலாக தங்கள் மறைவுக்குப் பிறகு தகுதியான குழந்தை / குழந்தைகளுக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்கக் கோர அனுமதிக்கிறது.

இந்த நடவடிக்கையைப் பாராட்டிய டாக்டர் ஜிதேந்திர சிங், ஆயுதப் படைகளில் பெண்களுக்கான நிரந்தர ஆணையம் அல்லது நாடாளுமன்றத்தில் பெண்கள் இட ஒதுக்கீடு திருத்தம் என ஒவ்வொரு துறையிலும் பெண் செயல்பாட்டாளர்களுக்கு சமமான, நியாயமான மற்றும் முறையான உரிமைகளை வழங்கும் பிரதமர் மோடியின் கொள்கைக்கு ஏற்ப இந்த திருத்தம் உள்ளது என்றார்.

அலுவலக குறிப்பாணையில், பெண் அரசு ஊழியர் அல்லது ஓய்வூதியதாரர் சம்பந்தப்பட்ட அலுவலகத் தலைவருக்கு எழுத்துப்பூர்வ கோரிக்கை வைக்க வேண்டும், அந்த கோரிக்கையின் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் போது அவர் இறந்தால், அவரது தகுதிவாய்ந்த குழந்தை / குழந்தைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பெண் அரசு ஊழியர் அல்லது ஓய்வூதியதாரர் வழக்கு விசாரணையின் போது இறந்துவிட்டால், அதற்கேற்ப குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும்.

ஒரு பெண் ஊழியர் தகுதியான குழந்தை இல்லாத விதவையாக உயிருடன் இருந்தால், குடும்ப ஓய்வூதியம் மனைவியை இழந்தவருக்கு வழங்கப்படும் என்று அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இருப்பினும், மனைவியை இழந்தவர் சிறாரின் பாதுகாவலராக இருந்தால் அல்லது மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தையின் பாதுகாவலராக இருந்தால், மனைவியை இழந்தவர் பாதுகாவலராக இருக்கும் வரை குடும்ப ஓய்வூதியம் அவருக்கு வழங்கப்படும். குழந்தை உரிய வயதை அடைந்து, குடும்ப ஓய்வூதியம் பெறத் தகுதி பெற்றவுடன், அது அக்குழந்தைக்கு நேரடியாக வழங்கப்படும்.

பெண் அரசு ஊழியர் அல்லது ஓய்வூதியதாரர் மறைந்த நிலையில் அவருக்கு கணவரும், வயது வந்த அதே நேரத்தில் ஓய்வூதியம் பெறத் தகுதியுள்ள குழந்தைகளும் இருந்தால், அத்தகைய குழந்தைகளுக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும். அந்தக்  குழந்தைகள் குடும்ப ஓய்வூதியம் பெறத் தகுதியற்றவர்களாக மாறும் பட்சத்தில், மனைவியை இழந்தவருக்கு அவர் இறக்கும் வரையிலோ அல்லது மறுமணம் செய்து கொள்ளும் வரையிலோ இவற்றில் எது முதலில் நிகழ்கிறதோ அதுவரை குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும்.

பணிபுரியும் பெண்களுக்கு உகந்த சூழலை வழங்குவதற்காக பிரதமர் மோடியின் கீழ் தொடர்ச்சியான நிர்வாக சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன என்று பணியாளர் மற்றும் பயிற்சித் துறையின் பொறுப்பாளரான டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த