முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கரு.பழனியப்பனுடன் டி.டி.வி.தினகரன் மோதவுள்ள சிவகங்கை நாடாளுமன்றத் தேர்தல் களம்

இந்தியாவின் பதினெட்டாவது நாடாளுமன்ற  மக்களவைத் தேர்தல் 2024 ஆம் வருடம் எந்த தேதிகளில் நடைபெறும் என தேர்தல் ஆணையம் மூலம் அறிவிக்கப்படும் முன்பாகவே


சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில் அரசியல் சூடு பிடித்துள்ளது.                தொகுதிகளின்  மறுசீரமைப்பில் சிவகங்கை நாடாளுமன்றத்தொகுதி மாற்றத்திற்குள்ளானதற்கு முன் திருமயம், திருப்புத்தூர், காரைக்குடி, திருவாடானை, இளையான்குடி, சிவகங்கை ஆகிய சட்டமன்றத் தொகுதிகளிருந்த நிலையில்

திருமயம், ஆலங்குடி ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் புதுக்கோட்டை மாவட்டத்திலும் மற்றவை சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்ததில், இதுவரை நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராக இருந்தவர்கள் விபரம் வருமாறு:- 1967 ஆம் ஆண்டு முதல் 1977 ஆம் ஆண்டு வரை  இரண்டு முறை காலம்சென்ற தா. கிருட்டிணன் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பிலும் 

1977 ஆம் ஆண்டு முதல் 1980 ஆம் ஆண்டு வரை பெ.தியாகராஜன் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பிலும் 

1980 ஆம் ஆண்டு முதல் 1984 ஆம் ஆண்டு வரை ஆர். வி. சுவாமிநாதன் இந்திய தேசிய காங்கிரஸ் சார்பிலும் 

1984 ஆம் ஆண்டு முதல் 1991 ஆம் ஆண்டு வரை ப. சிதம்பரம் இந்திய தேசிய காங்கிரஸ் சார்பிலும்

1991 ஆம் ஆண்டு முதல் 1999ஆம் ஆண்டு வரை ப. சிதம்பரம் இந்திய தேசிய காங்கிரஸ், மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பிலும்,

1999 ஆம் ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்டு வரை இ.எம். சுதர்சன நாச்சியப்பன் இந்திய தேசிய காங்கிரஸ் சார்பிலும் 

2004 ஆம் ஆண்டு முதல்  2014 ஆம் ஆண்டு வரை ப. சிதம்பரம் இந்திய தேசிய காங்கிரஸ் சார்பிலும் 

2014 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை பி.ஆர்.செந்தில்நாதன் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பிலும் 

2019 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை கார்த்தி ப.சிதம்பரம் இந்திய தேசிய காங்கிரஸ் சார்பிலும் வெற்றி பெற்ற நிலையில் தற்போது 18 வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தொடர்பான பணிகள் ,மற்றும் கூட்டணி சார்பில் பேச்சு வார்த்தைகள் துவங்கியுள்ளது, பாஜக சார்பில்  கூட்டணிக்கு வரவிருக்கும் அமமுகவுக்கு  சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதி வழங்கப்படலாம்  அதனடிப்படையில்  அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன்  பாஜக கூட்டணியில் வேட்பாளராகப்  போட்டியிடலாம்.



அல்லது  தனித்துக் கூடப்  போட்டியிடலாம். அது குறித்து இனி  அறிவிப்புகள் .வரலாம் ” என டிடிவி தினகரன் சமீபத்தில் தெரிவித்துள்ளார்.டி. டி. வி. தினகரன் 1999 ஆம் ஆண்டில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், மக்களவைக்கு (1999 ஆம் ஆணடு முதல் 2004 ஆம் ஆண்டு வரை) பெரியகுளம் மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பின்  2004 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரை  இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு பின் அன்னியச் செலாவணி வழக்கில் தான் சிங்கப்பூர் நாட்டின் குடிமகனென டி.டி.வி.தினகரன் அறிவித்தார்.இந்த நிலையில் முன்னால் முதல்வர் ஜெ.

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் இடைக்காலப் பொதுச்செயலாளாராகப் பதவி ஏற்றுக் கொண்ட வி. கே. சசிகலா, டி. டி. வி. தினகரனை, பிப்ரவரி மாதம்  2017- ஆம் ஆண்டில் துணைப் பொதுச் செயலாளராக நியமித்தார்.



ஜெ.ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் தமிழ்நாட்டில் அதிமுகவின் எடப்பாடி க. பழனிசாமி தலைமையிலான அரசை 18 பிப்ரவரி 2017-ஆம் நாளில் சட்டமன்றத்தில் வெற்றி பெறச் செய்ததில் டி. டி. வி. தினகரன் பெரும்பங்காற்றியவர். இராதா கிருட்டிணன் நகர் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக (அம்மா) அணியின் வேட்பாளராக போட்டியிட்டு தொகுதி வாக்காளர்களுக்கு பணம் பட்டுவடா செய்ததாக எழுந்த புகாரில், இந்தியத் தேர்தல் ஆணையம் இத்தொகுதியின் இடைத்தேர்தலை ரத்து செய்தது.

23.11.2017 ஆம் நாளன்று தேர்தல் ஆணையம் வெளியிட்ட தீர்ப்பின் அடிப்படையில் அஇஅதிமுக கட்சி மற்றும் இரட்டை இலை சின்னம் இவரிடமிருந்தது பரிக்கப்பட்டது சின்னமில்லாத கட்சித் தலைவராக இருக்கிறார்.

21 டிசம்பர், 2017 ஆம் நாளன்று நடைபெற்ற டாக்டர் இராதாகிருஷ்ணன் நகர் தொகுதி இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு 89,063 வாக்குகளைப்  பெற்று வெற்றி பெற்றார்.

பின் 15 மார்ச்சு மாதம்  2018 ஆம் நாளன்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகமென்னும் புதிய அரசியல் கட்சியைத் தொடங்கினார். அதிமுக மற்றும் இரட்டை இலைச் சின்னம் மீட்கப்படும் வரை தங்கள் பிரிவினருக்கென ஒரு அடையாளம் தேவை என்பதால் இக்கட்சியைத் தொடங்கினார் திருத்துறைப்பூண்டி திருவேங்கடம் விவேகானந்தர் தினகரன் 13 டிசம்பர் 1963 ஆம் நாளில் பிறந்தவர் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனப் பொதுச் செயலாளராவார் . கடந்த காலத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொருளாளராகவும், மாநிலங்களவை மற்றும் மக்களவை உறுப்பினராகவும் பணியாற்றினார்.  வி.கே.சசிகலாவின் அக்காளின் மகளாவார் . 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அவர் வெற்றி பெற்றார். 15 மார்ச் 2018 ஆம் நாளன்று டி.டி.வி.தினகரன் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற தனது அரசியல் கட்சியைத் தொடங்கினார்  இவர் சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில் பாஜக கூட்டணி  சார்பில் வேட்பாளராக அதிகம் வாய்ப்புகள் உறுவாகியுள்ளது, இவரை எதிர்த்து போட்டியிடப்போகும் திமுக கூட்டணி வேட்பாளர்  காரைக்குடியைச் சேர்ந்தவர் கரு.பழனியப்பன் போட்டியிடும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளது, இவர் முன்னால் சட்டமன்ற உறுப்பினர் பழ.கருப்பையாவின் சகோதரர் மகனாவார் சின்ன கருப்பையா மற்றும் நாகம்மை பெறறோராவர், இவர்களது மூன்று பிள்ளைகளில் கரு.பழனியப்பன் மூத்தவர்.பழனியப்பன்  மனைவி பியா, ஆவார் இனியா என்ற மகளும் தயா என்ற மகனும் உள்ளனர்,               இவர் ஜீ தமிழ் தொலைகாட்சியில் தமிழா தமிழா  விவாத  நிகழ்ச்சியில் நடுவராக நடத்தி வந்தார் நடிகர் இயக்குநர் கரு பழனியப்பன். இவர் பார்த்திபன் கனவு திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சதுரங்கம், சிவப்பதிகாரம், பிரிவோம் சந்திப்போம், மந்திரப் புன்னகை ஆகிய படங்களை இயக்கியும். சில படங்களில்  நடித்தும் உள்ளார். இந்த நிலையில்  திராவிட இயக்கச் சிந்தனையாளர். கரு பழனியப்பன் தனது நிகழ்ச்சியிலும் திராவிட சிந்தனைகளையும் கருத்துகளையும் தொடர்ந்து பேசி வந்த நிலையில் அவர் அந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியேறுவதாக தகவல்கள் வெளியாகின. அதை உறுதிப்படுத்தும் வகையில் கரு பழனியப்பன் தனது ட்விட்டரில் 'எங்கெங்கோ இருந்து பிறந்தநாள் வாழ்த்துச்சொன்ன அனைவருக்கும் நன்றி! அன்பு!! முத்தங்கள் !இப்படி முகம் அறியா தோழமைகளின் அன்பும், ஆசிரியர்களின் அறிவுமே என்னை துணிவுடன் முடிவெடுக்க, வழிகாட்டி இருக்கிறது. தமிழ் பரப்பில் தளம் அமைத்துக் கொடுத்த ஜீ தமிழ் உடனான நான்கு வருட 'தமிழா தமிழா' பயணம் இனிதே முடிவுக்கு வந்தது...!          சமூக நீதி, சுயமரியாதை, திராவிடம் என்ற சொல்லாடல்கள் கசப்பாய் இருக்கும் எனில், அந்தப் பயணத்தை முடிவுக்கு கொண்டு வருவதே இனிதானது. எளியோரின் குரலாய் ஒலிக்க, இன்னும் பரந்துபட்ட தளத்தில் விரைவில் சந்திப்போம்' என்று அவர் பதிவிட்டுள்ளார்.    சிறந்த பேச்சாளராக அறியப்படும் கரு பழனியப்பன் திராவிட கருத்துகளை மேடைகளில் பேசி வருகிறார். அவ்வப்போது பட்டிமன்றங்களிலும் பேசுவார். சில நேரங்களில் நடுவராகவும் கலந்து கொண்டு தனது ஏற்ற கருத்துகளை இடித்துரைப்பார். இவர் மந்திரப் புன்னகையில் கதாநாயகனாக அறிமுகமானார்.  காரைக்குடியைச் சேர்ந்தவர் சிறு வயது முதலே தனது தந்தையின் மூலம் புத்தகம் படிக்கும் ஆவலை வளர்த்து கொண்டவர் இயக்குநர் பார்த்திபனுடன் பணியாற்றியுள்ளார். பார்த்திபன் கனவு திரைப்படத்திற்கு சிறந்த இயக்குநருக்கான தமிழ்நாடு அரசின் விருதைப் பெற்றார். அது போல் சதுரங்கம் படத்திற்காக சிறந்த எழுத்தாளருக்கான விருதையும் பெற்றுள்ளார். இவர் இப்போதே திமுகவின் வேட்பாளராக அதிகம் வாய்ப்புள்ளதாக அறியப்படும் நிலையில் சிவகங்கையில் போட்டி இப்போதே கலைகட்டுகிறது பல அரசியல் பார்வையாளர்களின் எதிர்பார்ப்பும் கூடியுள்ளது,

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...