முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தலைமறைவான ஜாபர் சாதிக் ஜெய்பூரில் கைது

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தேடப்பட்ட திமுக பிரமுகர் ஜாபர் சாதிக்கை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு காவல்துறை ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் கைது செய்தது.


தலைமறைவாக இருந்த ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டுள்ளதாக போதைப்பொருள் தடுப்புப் பிரிவு காவல்துறை அறிவித்துள்ளது. ரூபாய்.2000 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்களை கடத்திய வழக்கில் மூளையாகச்  செயல்பட்டதாகக் கூறப்படும்

ஜாபர் சாதிக் இன்று கைது செய்யப்பட்டுள்ளார், போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சரியான நடவடிக்கை

ரூபாய் .2000 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள் கடத்தல் வழக்கில் மூளையாகச் செயல்பட்டதாகக் கூறப்படும்


ஜாபர் சாதிக் கைது இதன் முழு பின்புலம் இனி வெளிவரலாம் 

போதைப் பொருள் தயாரிக்க பயன்படுத்தப்படும் முக்கிய வேதிப் பொருட்களை (சூடோபெட்ரின்), தேங்காய் பவுடர் மற்றும் ஹெல்த் மிக்ஸ் (சத்து மாவு) பாக்கெட்களில் மறைத்து வைத்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட அயல்  நாடுகளுக்குக் கடத்தப்படுவதாக டெல்லியிலுள்ள மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு  காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது தொடர்பாக, டெல்லி போதைப் பொருள் தடுப்பு பிரிவு காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட நிலையில், கடத்தல் கும்பல், மேற்கு டெல்லி கைலாஷ் பார்க் பகுதியிலுள்ள கிடங்கில் பதுங்கியிருந்தது தெரியவந்தது. பிப்ரவரி மாதம் 15-ஆம் தேதி அங்கு நுழைந்த காவல்துறையினர், அங்கிருந்த சென்னை முகேஷ், முஜிபுர், விழுப்புரம் அசோக்குமார் ஆகிய முவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து போதைப் பொருட்கள் தயாரிக்கப் பயன்படும் 50 கிலோ வேதிப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் சர்வதேச மதிப்பு ரூபாய். 2,000 கோடியாகும்.  கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டது தமிழ்  திரைப்படத் தயாரிப்பாளரும், திமுக சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளருமான



ஜாபர் சாதிக் என்று குற்றம் சாட்டப்பட்டததையடுத்து, திமுகவிலிருந்து அவர் நிரந்தமாக நீக்கப்பட்ட நிலையில், போதைப் பொருட்கள் கடத்தல் வழக்குத் தொடர்பாக, NCB அலுவலகத்தில் பிப்ரவரி மாதம் 26-ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு டெல்லி போதைப் பொருட்கள் தடுப்புப் பிரிவு , பிப்ரவரி மாதம்  23-ஆம் தேதி ஜாபர் சாதிக் வீட்டில் சம்மன் (அழைப்பாணை) ஒட்டினர். ஆனால் அவர் ஆஜராகவில்லை.இதையடுத்து, அவரையும், அவரது கூட்டாளிகளையும் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டு தேடப்பட்டு வந்த நிலையில் ஜாபர் சாதிக் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில்  கைது செய்யப்பட்டுள்ளார்.


மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் ஜாபர் சாதிக் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் 

திமுகவில்  NRI அணியில் பொறுப்பாளர் ஆக்கிய மாநிலங்களவை நாடாளுமன்ற உறுப்பினரும், புதுக்கோட்டை பிரமுகருமான அப்துல்லா வெளியிட்ட தகவலில் 

கடந்த சில நாட்களாக ஒரு போதை மருந்து கயவனோடு என்னை சம்மந்தப்படுத்தி சிறிதும் அடிப்படையற்ற.. 100 சதவீதம் பொய்யான தகவல்களைப் பரப்பி வந்த சவுக்கு சங்கர் உள்ளிட்ட மூவர் மீது கிர்மினல் அவதூறு வழக்கு தொடுத்துள்ளேன். ஆதாரங்களுடன் கோர்ட்டிற்கு வரவும். காலமும் கோர்ட்டும் உண்மையை தீர்மானிக்கட்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.  ஆனால் இதில் சம்பந்தப்பட்ட குறதறவாளிகள் முழுமையாக சிக்குவது  விரைவில் உறுதி எனப் பேசப்படுகிறது.  போதைப் பொருள் கடத்தல் மன்னன் என அறியப்படும் ஜாபர் சாதிக், NCB யால் கைது செய்யப்பட்டிருக்கிறார். ஜெய்ப்பூரில் ஒரு ஹோட்டலில் பதுங்கியிருந்த ஜாபர் சாதிக் முன்னதாக திமுகவில் அயலாக அணியில் நிர்வாகியாக இருந்ததால் திமுகவிற்கு இந்த விஷயம் மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது. அதனால் நாடு முழுவதும் திமுகவின் மீது எக்கச்சக்கமான விமர்சனங்களும் குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்படுகிறது.அந்த வகையில் செய்தியாளர்களைச்  சந்தித்து இது குறித்த விவரங்களை எடுத்து கூறி இருக்கிறார் சட்டம் நீதி சார்ந்த மாநில அமைச்சர் இரகுபதி. இது குறித்து அவர் பேசியபோது, போதை பொருள் விவகாரத்தில் திமுகவை கொச்சைப்படுத்தி அசிங்கப்படுத்தி அதிலிருந்து அரசியல் லாபம் அடையமுடியும் என பாஜக தப்புக் கணக்கு போடுவதாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும் இந்த விவகாரம் குறித்து பத்திரிகையாளர்களிடம் பேசிய அமைச்சர் ரகுபதி, திமுகவை களங்கப்படுத்த பாஜக செய்யும் அரசியல், தமிழ்நாட்டிலும் இந்தியாவிலும் எடுபடாது. 'INDIA' கூட்டணி உருவாவதில் திமுகவிற்கு முக்கிய பங்கிருக்கிறது. அதனால் தேர்தல் களத்தில் திமுகவை களங்கப்படுத்தி அதன் மூலம் அரசியல் ஆதாயம் பெற்றுவிடலாம் என பாஜக தப்பு கணக்குப் போடுவதாகவும் அதற்கு அதிமுக துணை போவதாகவும் அமைச்சர் இரகுபதி கூறியுள்ளார். வருமான வரித்துறை, சிபிஐ, அமலாக்கத்துறை உள்ளிட்ட விசாரணை அமைப்புகளை களமிறக்கிய பாஜக, திமுகவை களங்கப்படுத்த போதை பொருள் தடுப்பு பிரிவை (NCB) களமிறக்கியுள்ளது. திமுகவை என்சிபிஐ வைத்து மிரட்டி பார்க்கலாம் என பாஜக எண்ணுகிறது. தமிழக அரசியலை புரட்டிப் பார்த்தால், அதிமுக ஆட்சியில் குட்கா வியாபாரிகளுக்கு அமைச்சர்கள் துணையாக இருந்தது தெரியவரும். முன்னாள் அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் வீட்டில், எந்தெந்த அமைச்சருக்கு எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டுள்ளது என்கிற விவரம் அடங்கிய பேப்பர் எடுக்கப்பட்டது. ஆனால் இந்த விஷயத்தில் வருமான வரித்துறையோ, அமலாக்கத்துறையோ எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஜாபர் சாதிக் விவகாரத்தைப் பொறுத்தவரையில், கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி ஜாஃபர் சாதிக்கைக் காணவில்லை என 'லுக் அவுட்' நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. அவர் தேடப்படும் குற்றவாளியாகவும் அறிவிக்கப்பட்டார். ஆனால் மங்கை படத்தின் விழாவில் பிப்ரவரி மாதம் 21ஆம் தேதி அவர் கலந்து கொண்டார். அப்போது என்சிபி எங்கே போனது ? எனவும்  வினா எழுப்பியுள்ளார் மாநில சட்டம், நீதித்துறை பொறுப்பு வகிக்கும்  அமைச்சர்   இது போக மறலும் பாஜக சார்பில் "ஜாஃபர் சாதிக் அப்துல் ரகுமான் என்ற தி மு கவின் சென்னை மேற்கு அயலகப்பிரிவின் தலைவர், இந்தியா, நியூஸிலாந்து,ஆஸ்திரேலியா, மலேசியா போன்ற நாடுகள் உட்பட சர்வேதச அளவில் போதை பொருள் தடுப்பில் ஈடுபட்ட காரணத்தால் போதை பொருள் தடுப்பு பிரிவு கைது செய்துள்ளது. இந்த நபர் போதை ப் பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த பணத்தை திரைப்படம், கட்டுமானம், விருந்தோம்பல் போன்ற பல்வேறு துறைகளில் முதலீடு செய்துள்ளதாக ஜாஃபர் சாதிக் கூறியிருப்பது  அனைத்து நாடுகளின் காவல்துறையின் துணையோடு இந்த நபரின் முழுமையான குற்றங்களையும் கண்டுபிடிப்போம். இந்தப் போதைப் பொருள் கடத்தலின் மூலம் சம்பாதித்த பணத்தில் தான் 'மங்கை' என்ற திரைப்படத்தைத் தயாரித்ததாக ஒப்புக் கொண்டுள்ளார். ரியல் எஸ்டேட் வியாபாரத்திலும் முதலீடு செய்ததாகவும், தமிழ் திரைப்படத் துறையில் பல்வேறு பிரமுகர்கள் இந்த முதலீடுகளில் தொடர்புடையவர்கள் என்றும், சில ஹோட்டல்களை சென்னையில் இந்த போதைப் பொருள் வருமானம் மூலம் அமைத்துள்ளதாவும் கூறியுள்ளார்" :- போதை பொருள் தடுப்புப் பிரிவு துணை இயக்குனர். 

இதை விட கேவலம் தி மு க விற்கு தேவையா? மத்திய புலனாய்வு  நிறுவனங்கள் நடவடிக்கை எடுப்பதற்கு முன்னர், தமிழக அரசு ஜாஃபர் சாதிக் அப்துல் ரகுமானுடன் தொடர்பில் இருந்த, இருக்கிற சமூக விரோதிகளை அடையாளம் கண்டு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். திரைத் துறையைச் சேர்ந்தவர்கள் யாராக இருந்தாலும், அரசியல்வாதிகள்  யாராக இருந்தாலும் உடன் கைது செய்து விசாரிக்க வேண்டும். இல்லையேல், தி மு க அரசு  இந்த கேவலமான, கேடுகெட்ட இழி செயலுக்கு உடந்தையாக உள்ளதாகவே கருதப்படும். இனி நாடகம் தேவையில்லை. குற்றவாளிகளைத் தண்டிக்க  தி மு க அரசு தவறினால், மத்திய புலனாய்வு நிறுவனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக தொடர்புடைய நபர்களின் மீது நடவடிக்கை எடுக்கும் என்பதை உணர்ந்து செய்லபட வேண்டும். போதைப் பொருள் சமூகத்தை, அடுத்த தலைமுறையை நாசாமக்கும் என்பதை புரிந்து கொண்டு மத்திய நிறுவனங்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இல்லையேல், தமிழக மக்களின் கடும் வெறுப்பை, விரோதத்தை தி மு க சந்திக்கும் என எச்சரிக்கிறேன்! என பாஜக செய்தித்தொடர்பாளர் 

நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்