முத்தூட் நிதி நிறுவனம் மோசடி. உண்மையாநால் அதன் உரிமத்தை இரத்து செய்ய வேண்டுமென நீதிமன்றம் உத்தரவு.
முத்தூட் பின்கார்ப் நிறுவனத்தின் பெயரில் பொதுமக்களிடம் நகை மோசடி செய்ததாக எழுந்த புகார் குறித்து விசாரணை நடத்தி முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தால் அந்நிறுவனத்தின் உரிமத்தை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் வி.கே.புதூர் ஊத்துமலை பகுதி மக்களிடம் 10 சவரன் நகைகளை அடகு வைத்தால் கூடுதல் வட்டி மற்றும் ரூ.10 ஆயிரம் போனஸ் கிடைக்கும் எனவும் சேமிப்பு திட்டத்தில் நகைகளை அடகு வைத்தால் பல மடங்கு லாபம் கிடைக்கும் எனவும் ஆசை வார்த்தை கூறி முத்தூட் பின்கார்ப் நிதி நிறுவன பெயரில் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் நிறுவனத்தின் மேலாளர்கள் இளவரசன், இமானுவேல், ஆடிட்டர் கண்ணன், வர்ஷா, கலைச்செல்வி, முத்தமிழ்ச் செல்வி, அந்தோணியம்மாள், வெள்ளைதுரை, காளீஸ்வரி ஆகியோர் மீது காவல்துறையில் வழக்குப் பதிவு செய்ததையடுத்து முன்ஜாமீன் கோரி முத்தமிழ்ச் செல்வி, அந்தோணியம்மாள், வெள்ளத்துரை, காளீஸ்வரி ஆகிய நால்வரும் சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, நகை மோசடி புகார் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு தென்மண்டல ஐ.ஜி-க்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு நேற்று முன்தினம் மார்ச் மாதம் 15 ஆம் தேதி நீதிபதி தண்டபாணி முன்னிலையில் விசாரணைக்கு வந்த போது, தென்மண்டல காவல்துறை ஐஜி அறிக்கையை தாக்கல் செய்தார். அந்த அறிக்கையில் "மதுரை, திருநெலஹவேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், சிவகங்கை, இராமநாதபுரம், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பத்து மாவட்டங்களில் முத்தூட் நிதி நிறுவனத்தின் பெயரில் நகைகளைப் பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளனர். மொத்தம் ரூ.3.64 கோடி மதிப்பிலான 9 கிலோ தங்க நகைகள் மோசடி செய்யப்பட்டுள்ளன. அது தொடர்பான புகார்களின் அடிப்படையில் தேனி மாவட்டத்தில் இரண்டு வழக்குகளும், தூத்துக்குடியில் இரண்டு வழக்குகளும், தென்காசியில் மூன்று வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் நம்பிசெல்வன், தூத்துக்குடி மாவட்டத்தில் நகைகளை மோசடி செய்த வழக்கின் அடிப்படையில் அந்த நிறுவனத்தின் உரிமத்தை ரத்து செய்யுமாறு மாவட்டக் குற்றப்பிரிவுக் காவல்துறை சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த மோசடிக்கு ஓய்வு பெற்ற காவல்துறையினரும் உறுதுணையாக இருந்துள்ளனர். எனவே இவர்கள் கோரும் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிட்டதையடுத்து முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி தண்டபாணி உத்தரவிட்டார். தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை வரம்பிற்குக் கீழ் வரும் மாவட்டங்களில் நிதி நிறுவன மோசடி குறித்து மாவட்ட காவல்துறையினர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் விசாரணை நடத்தி, முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தால் அந்த நிறுவனத்தின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என உத்தரவிட்டார். மேலும், அவர்கள் செய்த மோசடியால் எவ்வளவு நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்?. அவர்களின் புகார்கள் மீது காவல்துறை எடுத்த நடவடிக்கைகள் என்ன?, மோசடி செய்தவர்கள் யார்? யார்? என்பது குறித்த விபரம் ஜூன் மாதம் காவல்துறை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.மொத்தம் ரூ.3.64 கோடி மதிப்பிலான 9 கிலோ தங்க நகைகள் மோசடி செய்யப்பட்டுள்ளன - தென்மண்ட ஐ.ஜி தகவல் உள்ள நிலையில் மோசடி காரணமாக அவர்கள் நடத்தும் முத்தூட் நிதி நிறுவணத்தின் உரிமங்கள் இரத்தாகும், தமிழகத்து மக்களின் நகைகளை கூட்டு வட்டி முறையில் கொள்ளை அடித்த இந்த கும்பல் மீது இப்போதாவது நடவடிக்கை வந்ததே என மக்கள் நிம்மதி அடைகிற நிலை உள்ளது....இதில் பொது நீதி யாதெனில் " உரை அடித்து உலையில் போடும் கூட்டமே எப்படா அப்பா ஓயும் உங்க ஆட்டமே ..விரைவில் மூட்டைகட்டி ஓடப்போகும் முத்தூட் கூட்டமே..
கருத்துகள்