முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

காணாமல் போன.திருநெல்வேலி காங்கிரஸ் மாவட்ட தலைவர் சடலமாக மீட்பு

திருநெல்வேலி காங்கிரஸ் மாவட்ட தலைவர் சடலமாக மீட்பு: 


திருநெல்வேலி மாவட்டக் காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் சடலமாக மீட்கப்பட்டது மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாக, தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். காவல்துறை விசாரிக்க வேண்டும். அரசியல் கட்சியினர் பலரும் பலவிதமாகக் கூறுவார்கள். இந்த விவகாரத்தில் பின்புலத்தில் யாரோ இருக்கிறார்கள் . யார் எனக் காவல்துறையினர் கண்டுபிடிக்க வேண்டும். ஜெயக்குமார் தனசிங் எழுதிய கடிதத்தில் தெரிவித்தபடி, ஆனால் ஜெயக்குமார் தனசிங் அவரது மருமகனுக்கு கைப்பட கடந்த 27 ஆம் தேதி எழுதிய கடிதம் ஒன்றும் மற்றொரு கடிதமும் வெளியாகி பரப்பப்பாகியுள்ளது. மருமகனுக்கு எழுதிய கடிதத்தில் ‘அன்புள்ள மருமகனுக்கு’ எனக் குறிப்பிட்டு, “நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியனிடம் ரூபாய்.5 லட்சம் கொடுத்துவிட்டு. அதற்கு ஈடாக கொடுக்கப்பட்ட காசோலையை திரும்பப் பெற வேண்டும். இடிந்தக்கரையை சேர்ந்தவருக்கு ரூபாய்.10 லட்சம் திரும்பக் கொடுக்க வேண்டும். தனது பிரச்சனையை மனதில் வைத்து கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நபர்களை யாரும் பழிவாங்க வேண்டாம். சட்டம் தன் கடமையைச் செய்யும் ”எனக் குறிப்பிட்டுள்ளார்.
அதோடு தனக்கு வர வேண்டிய லட்சக்கணக்கான பணம் தொடர்பாக 14 பேர் கொண்ட பட்டியலை கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். அதே சமயம் தான் திருப்பி அளிக்க வேண்டிய பண விவரங்களையும் ஜெயக்குமார் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மகள் கத்ரீன் திருமணத்தை சிறப்பாக நடத்திய அனைவருக்கும் நன்றி எனவும் கடிதத்தில் உருக்கத்துடன் தெரிவித்துள்ளார். சொத்து ஆவணங்கள் குறித்தும் அந்தக் கடிதத்தில் ஜெயக்குமார் குறிப்பிட்டுள்ளார்.முன்னதாக கடந்த ஏப்ரல் மாதம் 30 ஆம் தேதி ஜெயக்குமார் அவரது கைப்பட திருநெல்வேலி மாவட்டக் காவல் துறை கண்காணிப்பாளருக்கு எழுதிய கடிதம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது அந்தக் கடிதத்தில், ‘திருநெல்வேலி மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து தனக்கு கொலை மிரட்டல் வருகிறது. அவர்களால் தனது உயிருக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. நாங்குநேரி எம்எல்ஏ ரூபி மனோகரன் தனக்குத் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருகிறார். தனது உயிருக்கு பாதுகாப்பு இல்லை’ என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் 

"என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டில் உண்மை இருப்பதாக் கருதவில்லை.

என் மீது வேண்டுமென்றே பழிசுமத்த வேண்டும்

என்று யாரோ பின்புலமாக இருந்து வேலை செய்வதாக எனக்குத் தோன்றுகிறது. உண்மை என்ன என்பதை

காவல்துறை கண்டுபிடித்து விடுவார்கள்.நிச்சயமாக

காவல்துறை விசாரணைக்கு நான் முழு ஒத்துழைப்பு கொடுப்பேன். நாங்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள்.

எங்களுக்கிடையில் எந்தவித கருத்து வேறுபாடும் கிடையாது.


என்மீது சுமத்தப்படுவது அபாண்டமான குற்றசாட்டு . நான் நிச்சயம் காவல்துறை விசாரணைக்கு ஒத்துழைப்பேன். அவருடைய இறுதிச் சடங்கில் நானும் கலந்து கொள்வேன் என காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் கூறிய நிலையில் காவல்துறை தனியாக விசாரித்தால் உண்மை நிலவரங்கள் வெளியாகும் அரசியல் உள்நோக்கத்தின் காரணமாக நடைபெற்ற கொலை உடனடியாக காவல்துறை கைது செய்ய வேண்டும் இல்லாவிட்டால் நாடு தழுவிய போராட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வம் என்ற செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார்.   காலையில் காணமல் போன


காங்கிரஸ் மாவட்டத் தலைவர் அனுப்பிய மரண வாக்குமூலம் ! திருநெல்வேலியில் என்ன நடக்கிறது? என்ற உண்மையை செய்தி வெளியிட காத்திருக்கும் நிலையில், ஜெயக்குமார் தனசிங் மரண விவகாரத்தில் ரூபி மனோகரன், தங்கபாலு உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் தெரிவித்துள்ளார்.          திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகில் கரைச்சுத்துபுதூர் கருத்தையா கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் தனசிங். கான்ட்ராக்டராகத் தொழில் செய்து வந்தவருக்கு மனைவி, 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். பாரம்பரிய காங்கிரஸைச் சேர்ந்தவர், கடந்த மூன்றாண்டுகளாக திருநெல்வேலி கிழக்கு மாவட்டக் காங்கிரஸ் தலைவராக பதவி வகித்தார்.


கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வீட்டிலிருந்து வெளியே செல்வதாகக் கூறிவிட்டு சென்றவர் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. அதையடுத்து அவரது மகன் கருத்தையா ஜெப்ரின் (வயது 28) தனது தந்தையைக் காணவில்லை என்றும், அவரைக் கண்டுபிடித்துத் தருமாறும் உவரி காவல் நிலையத்தில் புகார் செய்ததன் பேரில் காவல் நிலையத்தில் வழக்குப் பதிந்து ஜெயக்குமாரை காவல்துறையினர் தேடி வந்தனர்.  அவரது வீட்டுக்குச் சென்று விசாரணை மேற்கொண்ட நிலையில் ஜெயக்குமாரின் உடல் எரிந்த நிலையில் கரைச்சுத்து புதூர் கிராமத்திலுள்ள அவரது தோட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. காவல்துறை சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர். உடல் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் தடய அறிவியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டு தடயங்களைச் சேகரித்தனர்.


சம்பவ இடத்துக்குச் சென்ற திருநெல்வேலி மாவட்டக் காவல் துறை கண்காணிப்பாளர் சிலம்பரசன், அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் ஜெயக்குமாரின் உறவினர்களிடம் விசாரணை மேற்கொண்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், பிரேதப் பரிசோதனைக்குப்பிறகு முழு விபரங்கள் வெளி வரும் எனவும் தெரிவித்தார். மேலும், ஜெயக்குமார் எழுதிய மரண வாக்குமூலக் கடிதம் தனக்கு அனுப்பப்படவில்லை என்றும் அவர் மறுத்துள்ளார்.


இதனிடையே, திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஜெயக்குமாரின் பிரேதப் பரிசோதனை இன்று மாலை நடைபெற்றது.  பரிசோதனை முழுக்க வீடியோ பதிவு செய்யப்பட்டது. பிரேத பரிசோதனைக்குப் பின் அவரது உடலுக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராமசுப்பு உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். அதையடுத்து பிரேதப் பரிசோதனை கூடத்தில் ஜெயக்குமார் உடல் வைக்கப்பட்டுள்ளது.



ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு அவரது உடலை திருநெல்வேலியிலிருந்து ஊர்வலமாக எடுத்து சென்று சொந்த ஊரில் அடக்கம் செய்யவுள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இந்த இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை பங்கேற்க உள்ளார் 

இதனிடையே, இந்த விவகாரத்தில் காவல்துறையின் மெத்தனப் போக்கைக் கண்டித்து திசையன்விளை, உவரி, கரைச்சுத்துபுதூர் உள்ளிட்ட இடங்களில் காங்கிரஸார் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் பிடித்த தெரு நாய்கள் டிரஸ்டில் ஒப்படைக்கப்பட்டது

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தெரு நாய்களைப் பிடித்த பின் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட்டுக்குச் சொந்தமான பாதுகாப்புக் கூடத்தில் ஒப்படைப்பு புதுக்கோட்டையில் தெருக்களில் சுற்றித் திரித்த தெரு நாய்கள் நகராட்சி நிர்வாகம் மூலம் பிடிக்கப்பட்டு இலுப்பூர் பைரவர் சாரிடபிள் டிரஸ்ட் நாய்கள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை பூங்கா நகர், சாந்தநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை. அதிகமானதாக நகராட்சிக்கு புகார்கள் வந்ததையடுத்து நாய்களைப் பிடித்து என்ன செய்வதென்று தெரியாமல் நகராட்சி நிர்வாகத்தினர் இருந்த நிலையில்  நகராட்சி ஆணையாளர்  இலுப்பூரில் செயல்படும் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற நிறுவனம் தெருநாய்களை பராமரிப்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்படுவதாக அறிந்து பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் யக்குனர் ஆர்.வீர சரத்பவாரை அழைத்துப் பேசியதையடுத்து நாய்களை பராமரிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மூலம் தெருக்களில் சுற்றி திரிந்த 42 தெரு நாய்களை பத்திரமாகற பிடிக்கப் பட்டு இலுப்பூர் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட் டதைத் தொடர்ந்து அவர்...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...