முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

காணாமல் போன.திருநெல்வேலி காங்கிரஸ் மாவட்ட தலைவர் சடலமாக மீட்பு

திருநெல்வேலி காங்கிரஸ் மாவட்ட தலைவர் சடலமாக மீட்பு: 


திருநெல்வேலி மாவட்டக் காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் சடலமாக மீட்கப்பட்டது மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாக, தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். காவல்துறை விசாரிக்க வேண்டும். அரசியல் கட்சியினர் பலரும் பலவிதமாகக் கூறுவார்கள். இந்த விவகாரத்தில் பின்புலத்தில் யாரோ இருக்கிறார்கள் . யார் எனக் காவல்துறையினர் கண்டுபிடிக்க வேண்டும். ஜெயக்குமார் தனசிங் எழுதிய கடிதத்தில் தெரிவித்தபடி, ஆனால் ஜெயக்குமார் தனசிங் அவரது மருமகனுக்கு கைப்பட கடந்த 27 ஆம் தேதி எழுதிய கடிதம் ஒன்றும் மற்றொரு கடிதமும் வெளியாகி பரப்பப்பாகியுள்ளது. மருமகனுக்கு எழுதிய கடிதத்தில் ‘அன்புள்ள மருமகனுக்கு’ எனக் குறிப்பிட்டு, “நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியனிடம் ரூபாய்.5 லட்சம் கொடுத்துவிட்டு. அதற்கு ஈடாக கொடுக்கப்பட்ட காசோலையை திரும்பப் பெற வேண்டும். இடிந்தக்கரையை சேர்ந்தவருக்கு ரூபாய்.10 லட்சம் திரும்பக் கொடுக்க வேண்டும். தனது பிரச்சனையை மனதில் வைத்து கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நபர்களை யாரும் பழிவாங்க வேண்டாம். சட்டம் தன் கடமையைச் செய்யும் ”எனக் குறிப்பிட்டுள்ளார்.
அதோடு தனக்கு வர வேண்டிய லட்சக்கணக்கான பணம் தொடர்பாக 14 பேர் கொண்ட பட்டியலை கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். அதே சமயம் தான் திருப்பி அளிக்க வேண்டிய பண விவரங்களையும் ஜெயக்குமார் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மகள் கத்ரீன் திருமணத்தை சிறப்பாக நடத்திய அனைவருக்கும் நன்றி எனவும் கடிதத்தில் உருக்கத்துடன் தெரிவித்துள்ளார். சொத்து ஆவணங்கள் குறித்தும் அந்தக் கடிதத்தில் ஜெயக்குமார் குறிப்பிட்டுள்ளார்.முன்னதாக கடந்த ஏப்ரல் மாதம் 30 ஆம் தேதி ஜெயக்குமார் அவரது கைப்பட திருநெல்வேலி மாவட்டக் காவல் துறை கண்காணிப்பாளருக்கு எழுதிய கடிதம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது அந்தக் கடிதத்தில், ‘திருநெல்வேலி மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து தனக்கு கொலை மிரட்டல் வருகிறது. அவர்களால் தனது உயிருக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. நாங்குநேரி எம்எல்ஏ ரூபி மனோகரன் தனக்குத் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருகிறார். தனது உயிருக்கு பாதுகாப்பு இல்லை’ என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் 

"என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டில் உண்மை இருப்பதாக் கருதவில்லை.

என் மீது வேண்டுமென்றே பழிசுமத்த வேண்டும்

என்று யாரோ பின்புலமாக இருந்து வேலை செய்வதாக எனக்குத் தோன்றுகிறது. உண்மை என்ன என்பதை

காவல்துறை கண்டுபிடித்து விடுவார்கள்.நிச்சயமாக

காவல்துறை விசாரணைக்கு நான் முழு ஒத்துழைப்பு கொடுப்பேன். நாங்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள்.

எங்களுக்கிடையில் எந்தவித கருத்து வேறுபாடும் கிடையாது.


என்மீது சுமத்தப்படுவது அபாண்டமான குற்றசாட்டு . நான் நிச்சயம் காவல்துறை விசாரணைக்கு ஒத்துழைப்பேன். அவருடைய இறுதிச் சடங்கில் நானும் கலந்து கொள்வேன் என காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் கூறிய நிலையில் காவல்துறை தனியாக விசாரித்தால் உண்மை நிலவரங்கள் வெளியாகும் அரசியல் உள்நோக்கத்தின் காரணமாக நடைபெற்ற கொலை உடனடியாக காவல்துறை கைது செய்ய வேண்டும் இல்லாவிட்டால் நாடு தழுவிய போராட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வம் என்ற செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார்.   காலையில் காணமல் போன


காங்கிரஸ் மாவட்டத் தலைவர் அனுப்பிய மரண வாக்குமூலம் ! திருநெல்வேலியில் என்ன நடக்கிறது? என்ற உண்மையை செய்தி வெளியிட காத்திருக்கும் நிலையில், ஜெயக்குமார் தனசிங் மரண விவகாரத்தில் ரூபி மனோகரன், தங்கபாலு உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் தெரிவித்துள்ளார்.          திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகில் கரைச்சுத்துபுதூர் கருத்தையா கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் தனசிங். கான்ட்ராக்டராகத் தொழில் செய்து வந்தவருக்கு மனைவி, 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். பாரம்பரிய காங்கிரஸைச் சேர்ந்தவர், கடந்த மூன்றாண்டுகளாக திருநெல்வேலி கிழக்கு மாவட்டக் காங்கிரஸ் தலைவராக பதவி வகித்தார்.


கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வீட்டிலிருந்து வெளியே செல்வதாகக் கூறிவிட்டு சென்றவர் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. அதையடுத்து அவரது மகன் கருத்தையா ஜெப்ரின் (வயது 28) தனது தந்தையைக் காணவில்லை என்றும், அவரைக் கண்டுபிடித்துத் தருமாறும் உவரி காவல் நிலையத்தில் புகார் செய்ததன் பேரில் காவல் நிலையத்தில் வழக்குப் பதிந்து ஜெயக்குமாரை காவல்துறையினர் தேடி வந்தனர்.  அவரது வீட்டுக்குச் சென்று விசாரணை மேற்கொண்ட நிலையில் ஜெயக்குமாரின் உடல் எரிந்த நிலையில் கரைச்சுத்து புதூர் கிராமத்திலுள்ள அவரது தோட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. காவல்துறை சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர். உடல் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் தடய அறிவியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டு தடயங்களைச் சேகரித்தனர்.


சம்பவ இடத்துக்குச் சென்ற திருநெல்வேலி மாவட்டக் காவல் துறை கண்காணிப்பாளர் சிலம்பரசன், அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் ஜெயக்குமாரின் உறவினர்களிடம் விசாரணை மேற்கொண்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், பிரேதப் பரிசோதனைக்குப்பிறகு முழு விபரங்கள் வெளி வரும் எனவும் தெரிவித்தார். மேலும், ஜெயக்குமார் எழுதிய மரண வாக்குமூலக் கடிதம் தனக்கு அனுப்பப்படவில்லை என்றும் அவர் மறுத்துள்ளார்.


இதனிடையே, திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஜெயக்குமாரின் பிரேதப் பரிசோதனை இன்று மாலை நடைபெற்றது.  பரிசோதனை முழுக்க வீடியோ பதிவு செய்யப்பட்டது. பிரேத பரிசோதனைக்குப் பின் அவரது உடலுக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராமசுப்பு உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். அதையடுத்து பிரேதப் பரிசோதனை கூடத்தில் ஜெயக்குமார் உடல் வைக்கப்பட்டுள்ளது.



ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு அவரது உடலை திருநெல்வேலியிலிருந்து ஊர்வலமாக எடுத்து சென்று சொந்த ஊரில் அடக்கம் செய்யவுள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இந்த இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை பங்கேற்க உள்ளார் 

இதனிடையே, இந்த விவகாரத்தில் காவல்துறையின் மெத்தனப் போக்கைக் கண்டித்து திசையன்விளை, உவரி, கரைச்சுத்துபுதூர் உள்ளிட்ட இடங்களில் காங்கிரஸார் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த