முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஆந்திராவில் தேர்தலுக்குப் பிந்தைய வன்முறை குறித்து தேர்தல் ஆணையம் கடும் உத்தரவு

ஆந்திராவில் தேர்தலுக்குப் பிந்தைய வன்முறை தொடர்பாக தேர்தல் ஆணையம் கடும் உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது


ஆந்திரப் பிரதேசத்தில் தேர்தலுக்குப் பிந்தைய வன்முறைகள் தொடர்பாக அந்த மாநில தலைமைச் செயலாளர் மற்றும் காவல்துறைத் தலைவர் பங்கேற்ற கூட்டம் தில்லியில் தேர்தல் ஆணைய அலுவலகத்தில் நடைபெற்றது.  இதில் தலைமைத் தேர்தல் ஆணையர் திரு ராஜீவ் குமார், தேர்தல் ஆணையர்கள் திரு ஞானேஷ் குமார், திரு சுக்பீர் சிங் சாந்து ஆகியோர் பங்கேற்று, ஆந்திரப் பிரதேசத்தில் தேர்தலுக்குப் பிந்தைய வன்முறை குறித்த தனது அதிருப்தியைத் தெரிவித்தது.  இதுபோன்ற வன்முறைகள் மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதி செய்யுமாறும், எதிர்காலத்தில் இதுபோன்ற சூழ்நிலையைத் தவிர்க்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம், ஆந்திர தலைமைச் செயலாளர் மற்றும் காவல்துறைத் தலைவருக்கு உத்தரவிட்டது.



குற்றவாளிகளுக்கு எதிராக விரைந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியது.

வன்முறையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள நிலை மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆந்திர தலைமைச் செயலாளரும் மற்றும் காவல்துறைத் தலைவரும் இந்தக் கூட்டத்தில் எடுத்துரைத்தனர். இதையடுத்து மாநில அரசின் கீழ்க்காணும் முன்மொழிவுகளுக்குத் தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது:

1) பல்நாடு மாவட்ட ஆட்சியரைப் பணியிட மாற்றம் செய்தல் மற்றும் துறை ரீதியான விசாரணை நடத்துதல்.

2) பால்நாடு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மற்றும் அனந்தபுரமு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆகியோரைத் தற்காலிகப் பணி நீக்கம் செய்வது மற்றும் துறை ரீதியான விசாரணை மேற்கொள்வது.

3) திருப்பதி காவல்துறை கண்காணிப்பாளரைப் பணியிட மாற்றம் செய்து துறை ரீதியான விசாரணை நடத்துவது.




4) மூன்று மாவட்டங்களில் (பல்நாடு, அனந்தபுரமு மற்றும் திருப்பதி) 12 சார்நிலை காவல் அதிகாரிகளை இடைநீக்கம் செய்து துறை ரீதியான விசாரணையைத் தொடங்குவது.

5) ஒவ்வொரு வழக்கிலும் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி நடவடிக்கை அறிக்கையை சமர்ப்பித்தல்.

6) தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு வன்முறையை கட்டுப்படுத்த 25 மத்திய ஆயுதப் படை கம்பெனிகளை 15 நாட்களுக்கு வைத்திருப்பது.

இதையடுத்து, தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு வன்முறையை கட்டுப்படுத்த ஆந்திராவில் உள்ள மத்திய ஆயுதப் படைக் கம்பெனிகளை 15 நாட்களுக்கு வைத்திருக்க மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு உத்தரவிட தேர்தல் ஆணையம் முடிவு செய்தது.





தேர்தலுக்குப் பிந்தைய வன்முறைகளைக் கட்டுப்படுத்த மாநில நிர்வாகம் தவறியதற்கான காரணங்களை விளக்குமாறு ஆந்திரப் பிரதேச தலைமைச் செயலாளரையும், டி.ஜி.பி.யையும் தேர்தல் ஆணையம் புதுதில்லிக்கு வரவழைத்தது. அனந்தபுரமு, பல்நாடு, திருப்பதி மாவட்டங்களில் வாக்குப்பதிவு நாளன்றும், வாக்குப்பதிவுக்கு பிந்தைய நாளிலும் பல வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. தாக்குதல், சொத்துகளை சேதப்படுத்துதல், வாகனங்களை சேதப்படுத்துதல், கல்வீச்சு போன்ற சம்பவங்கள் தேர்தலுக்கு முன்பும் நடந்துள்ளன. இந்த சம்பவங்களில் பெரும்பாலானவை அன்னமாயா, சித்தூர் மற்றும் பல்நாடு மாவட்டங்களில் நடந்துள்ளன. குண்டூர், அனந்தபூர், நந்தியால் போன்ற மாவட்டங்களில் சில சம்பவங்கள் நடந்துள்ளன.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்