முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் மாற்றத்தை ஏற்படுத்தும்: மத்திய சட்டத்துறை இணையமைச்சர் தகவல்

மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள், சட்ட நடைமுறைகளில் சிறந்த மாற்றத்தை ஏற்படுத்தும்: மத்திய சட்டத்துறை இணையமைச்சர் திரு அர்ஜுன் ராம் மெக்வால்

காலனித்துவ கால சட்டங்களை மாற்றி அமைக்கும் நோக்கில் 3 புதிய குற்றவியல் சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன: மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் டாக்டர் எல். முருகன்

மத்திய சட்டம் மற்றும் நீதித் துறை அமைச்சகத்தின் சட்ட விவகாரங்கள் துறை, இன்று (2024 ஜூன் 23) சென்னையின் வேலூர் தொழில்நுட்ப நிறுவன வளாகத்தில் 'குற்றவியல் நீதி அமைப்பின் நிர்வாகத்தில் இந்தியாவின் முற்போக்கான பாதை' என்ற கருப்பொருளில் ஒரு நாள் மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தது. புதுதில்லி, குவஹாத்தி மற்றும் கொல்கத்தாவைத் தொடர்ந்து நான்காவது நகரமாக சென்னையில் நடைபெற்ற இந்த மாநாட்டில், தென் மாநிலங்களைச் சேர்ந்த ஐந்து உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகள், கீழமை நீதிமன்றங்களின் நீதிபதிகள், வழக்கறிஞர்கள், கல்வியாளர்கள், சட்ட அமலாக்க முகமைகளின் பிரதிநிதிகள், காவல்துறை அதிகாரிகள், அரசு வழக்கறிஞர்கள், சட்டப் பல்கலைக்கழகங்கள் மற்றும் பல்வேறு சட்டக் கல்லூரிகளைச் சேர்ந்த சட்ட மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



மாநாட்டின் தொடக்க அமர்வில் சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு அர்ஜுன் ராம் மேக்வால், தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் டாக்டர் எல். முருகன் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர். கேரள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி  திரு ஆசிஷ் ஜிதேந்திர தேசாய், தெலங்கானா தலைமை நீதிபதி திரு அலோக் ஆரதே, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி (தற்காலிகப் பொறுப்பு) திரு ஆர்.மகாதேவன் ஆகியோர் கௌரவ விருந்தினர்களாக இதில் கலந்து கொண்டனர்.

மாநாட்டின் நோக்கங்களை எடுத்துரைத்த மத்திய சட்டம் மற்றும் நீதித் துறைச் செயலாளர் டாக்டர் ராஜீவ் மணி, மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்துக் கூறினார். பழங்கால காலனித்துவ குற்றவியல் சட்டங்களுக்கு மாற்றாக புதிய சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன என்று அவர் தெரிவித்தார்.


அதாவது இந்திய தண்டனைச் சட்டம்- 1860, இந்திய சாட்சியச் சட்டம்- 1872, குற்றவியல் நடைமுறைச் சட்டம் - 1983 ஆகியவற்றை ரத்து செய்து, 2023 டிசம்பர் 25 அன்று குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன், பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா -2023 (இந்திய சிவில் பாதுகாப்புச் சட்டம்), பாரதிய நியாய சன்ஹிதா - 2023 (இந்திய நியாயச் சட்டம்) மற்றும் பாரதிய சாக்ஷிய அதினியம் (இந்திய சாட்சியச் சட்டம்) ஆகிய மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் இயற்றப்பட்டதாக அவர் கூறினார். சட்டத்துறையில் காலனித்துவ தடயங்களை அகற்றுவதற்கும், இந்திய மதிப்புகள் மற்றும் தற்கால நடைமுறைகளுக்கு ஏற்பவும் இந்த சட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்று அவர் தெரிவித்தார். இந்திய சட்டத்துறை வரலாற்றில் சென்னை உயர்நீதிமன்றத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் உள்ள முக்கியத்துவத்தை அவர் எடுத்துரைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு அர்ஜுன் ராம் மெக்வால், நமது சட்ட அமைப்பு காலனிய ஆட்சியாளர்களின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்டதாக கூறினார். தற்போது நாட்டின் சரியான சட்ட முறைகளை உருவாக்க வேண்டிய அவசியம் உள்ளது என்று கூறினார். பிரிட்டிஷாரின் குற்றவியல் நீதி பரிணாம வளர்ச்சியின் வரலாற்றுப் பின்னணியை அவர் விவரித்தார்.  காலனித்துவ காலத்தில் இந்தியாவில் இயற்றப்பட்ட சட்டங்கள் இந்தியாவின் நெறிமுறைகள் மற்றும் சமூக யதார்த்தங்களை புறக்கணித்தன என்று அவர் கூறினார். அந்தச் சட்டங்கள் காலனித்துவ ஆட்சியாளர்களின் தேவைகளை முன்னெடுத்துச் செல்வதை அடிப்படையாகக் கொண்டவை என்று அவர் கூறினார்.

மூன்று புதிய குற்றவியல் சட்டங்களும் நான்கு ஆண்டு ஆய்வுகள், விரிவான ஆலோசனைகள் மற்றும் விவாதங்களுக்குப் பிறகு உருவாக்கப்பட்டுள்ளன என்று அமைச்சர் கூறினார். காலனித்துவ பாரம்பரியத்தின் அனைத்து தடயங்களும் அகற்றப்பட்டு, நவீன குற்றவியல் நீதி அமைப்பு நடைமுறைப்படுத்தப்பட வேண்டியது அவசியம் என்று அவர் மேலும் கூறினார்.  அடுத்த 5 ஆண்டுகளுக்குள், இந்த மூன்று சட்டங்களும் நவீன குற்றவியல் நீதி அமைப்பை வழங்குவதில் முக்கியப் பங்கு வகிக்கும் என்று திரு அர்ஜுன் ராம் மெக்வால் தெரிவித்தார்.

தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் டாக்டர் எல். முருகன் தமது உரையில், இந்த மூன்று புதிய சட்டங்களும் சரியான திசையில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்று பாராட்டினார். சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளுக்குப் பிறகு, நாடு அதன் சொந்த நீதி முறைமைக்கு மாறியுள்ளது என்றும், காலனித்துவ கால சட்டங்களை மாற்றி அமைக்கும் முக்கிய முன்முயற்சி இது என்றும் அவர் கூறினார்.

கேரள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி  நீதிபதி திரு ஆசிஷ் ஜிதேந்திர தேசாய், இந்த புதிய சட்டங்களும் குற்றவியல் நீதி அமைப்பின் நிர்வாகத்தில் மட்டுமல்லாமல், நாட்டின் முழு சட்ட அமைப்பிலும் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும் என்றார்.

தெலங்கானா தலைமை நீதிபதி திரு அலோக் ஆரதே, நவீன கால குற்றங்கள் மற்றும் சமூகத்தின் மாறிவரும் தேவைகளை பூர்த்தி செய்ய இந்த சட்டங்கள் பங்களிக்கும் என்று கூறினார்.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி (தற்காலிகப் பொறுப்பு) திரு ஆர்.மகாதேவன் பேசுகையில், மூன்று புதிய சட்டங்களும் முற்போக்கானவை என்று கூறினார். இந்தச் சட்டங்களில் தற்போதைய தேவைகளுக்கு ஏற்ப பல புதிய நடைமுறைகள் உள்ளன என்று அவர் கூறினார்.


மாநாட்டின் தொடக்க அமர்வைத் தொடர்ந்து மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து மூன்று தொழில்நுட்ப அமர்வுகள் நடைபெற்றன. இந்த அமர்வுகளில், நவீன காலத்தில் புதிய குற்றங்களில் சட்டத்தின் தாக்கம், நீதித்துறை மற்றும் சட்ட அமலாக்க நிறுவனங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் நடைமுறை மாற்றங்கள் மற்றும் சட்டச் செயல்பாட்டில் ஆதாரங்களை ஏற்றுக்கொள்வதன் முக்கிய பங்கு ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான விழாவாக தமிழ் சம

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு