முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வக்கீல், ஆடிட்டர் கும்பல் செய்த முகமூடிக் கொள்ளை

மூகமூடிக் கொள்ளையர்கள் விருதுநகரில் மில் வாங்கி தொழில் அதிபர்களாக மாறிய பெண் வழக்குரைஞர் கும்பல் குவிந்த பல கோடி சொத்துக்கள்.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் பகுதியில் நடந்த முகமூடிக் கொள்ளை சம்பவமும் , அதன்பிறகு கொள்ளையடித்த பெண்கள் தொழில் அதிபர்களாக மாறியது குறித்தும் திரைப்படமாகவே எடுக்கலாம்.

வக்கீல், ஆடிட்டர் உள்பட படித்து முடித்து திரைப்படங்களில் காட்டப்படும் காட்சியை போல நடந்த சம்பவம் தான் இந்த செய்தி:-


கொள்ளையடித்த நகைகளை விற்று நூற்பாலை வாங்கியருக்கிறது இந்தக்  கொள்ளையர் கும்பல். அது தொடர்பாக 2 பெண் வழக்குரைஞர்கள் உள்ளிட்ட மேலும் 6 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் உள்பட பல்வேறு இடங்களில் அடிக்கடி கொள்ளை சம்பவங்கள் நடந்தன. அப்படி சில மாதங்களுக்கு முன்பு இராஜபாளையத்தில் ஒரு வீட்டில் நடந்த கொள்ளையில் தொடர்புடைய ஒருவர் அங்குள்ள சிசிடிவி  கேமராவின் காட்சியில் சிக்கினார். ஆனாலும், அந்த நபர் முகமூடி அணிந்திருந்ததால் காவல்துறையினரால் அவரை அடையாளம் காண முடியாத நிலையிலிருந்தது.


அதே நேரத்தில் விருதுநகர், மதுரை, தேனி உள்ளிட்ட பல மாவட்டங்களில் நடந்த முகமூக்டி கொள்ளை தொடர்பான பல வழக்குகள் பதிவான நிலையில் கண்காணிப்புக் கேமரா பதிவு காட்சிகளில் பார்த்த ஒருவரைப் போல் உருவம் பதிவாகி இருந்ததை காவல் துறையினர் கண்டு பிடித்ததையடுத்து முக அமைப்பு ஒற்றுமையைக் கவனித்த காவல்துறையினர், முகமூடிக் கொள்ளையர்கள் தனி நெட்வொர்க்காக செயல்படுவது தெரியவந்த நிலையைக் கண்டனர். அவர்களைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

தனிப்படைக் காவல்துறையினர் விசாரணையில், இந்தக் கொள்ளைகளுக்கு மதுரையை சேர்ந்த மூர்த்தி என்பவன் தான் மூளையாகச் செயல்பட்டதை  அறிந்தனர். இந்த நிலையில், இராஜபாளையம் பகுதியில் சந்தேகத்துக்கு இடமான முறையில் சுற்றித்திரிந்த தேனி மாவட்டம் தென்கரை பகுதியை சேர்ந்த ஆடிட்டர் அருண்குமார் (வயது 23), வழக்குரைஞர் சுரேஷ்குமார் (வயது 26) ஆகியோர் காவல் துறையினரிடம் சிக்கினார்கள்.

விசாரணையில், இருவரும் மூர்த்தியின் கூட்டாளிகள் என்பதும் விசாரணை மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. இராஜபாளையத்தில் தம்பதியிளரைக் கட்டிப்போட்டு நடந்த கொள்ளையில் அவர்கள் தொடர்புடையவர்கள் எனத் தெரியவந்ததால் இருவரையும் உடனே கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய தீவிர விசாரணையில் அவர்கள் சொன்னது தான் முக்கியத் திருப்பம். இந்த தொடர் கொள்ளையில் பெண்கள் முக்கிய பங்கு வகித்ததும் விசாரணையில் தெரியவந்தது.

அவர்கள் கும்பலின் சில பெண்கள் டிப்-டாப்பாக மார்டனாக உடை அணிந்து தெருத்தெருவாக் சென்று நோட்டமிடுவதில் ஆட்கள் இல்லாத வீடு அல்லது, தனியாக ஒன்றிரண்டு பேர் வசிக்கும் வீடுகளைக் கண்டறிந்து அந்த பெண்கள் துப்புக் கூலி போல கூறுவார்களாம். அவர்கள் கொடுக்கும் தகவலின் படி, ஆடிட்டர் சுரேஷ்குமார், வழக்குரைஞர் அருண்குமார் உள்ளிட்டோர் சேர்ந்து பல இடங்களில் முகமூடிக் கொள்ளையை அரங்கேற்றுவார்களாம்.

இந்த விவகாரத்தில் மூர்த்தியின் உறவினர்களான இராஜபாளையம் அருகில் ஆவாரந்தை கிராமத்தைச் சேர்ந்த சீனியம்மாள் (வயது 53), மோகன் (வயது 40), அவருடைய மனைவி லட்சுமி (வயது 38), அவரது உறவினர் மகாலட்சுமி (வயது 33). மற்றும் மதுரையைச் சேர்ந்த பெண் வழக்குரைஞர்கள்பிரியா (வயது 29), நாகஜோதி (வயது 26) ஆகிய 6 நபர்களை தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில்  கொள்ளையடித்த பணம், நகைகளை விற்று கோடீஸ்வரர்களாக இந்த கும்பல் மாறியுள்ளது. அதன் மூலம் ராஜபாளையத்தில், மதுரை செல்லும் சாலையில் ரூபாய் . நான்கு கோடி மதிப்பிலான ஒரு நூற்பாலை மையும் விலைக்கு வாங்கியது தெரியவந்துள்ளது. அதுதொடர்பான பதிவுத்துறை ஆவணங்களை காவல்துறையினர் கைப்பற்றினார்கள்.                        இந்தக் கொள்ளைக் கும்பலிடம் இதுவரை 150 பவுன் நகைகள், ரூபாய்.2½ லட்சம் ரொக்கம் மற்றும் மடிக்கணினி, செல்போன்கள் என ரூபாய் .84 லட்சம் மதிப்பிலான பொருட்களை இதுவரை கைப்பற்றியுள்ளனர்.

கொள்ளையடித்த நகைகளை விற்று இராஜபாளையத்தில் வாங்கிய ரூபாய். நான்கு கோடி மதிப்பிலான பழைய நூற்பாலை மட்டுமல்லாமல், மதுரையில் பல கோடியில் ஆடம்பரமான பங்களாவும், வேறு சில சொத்துக்களும் வாங்கியிருப்பதாகவும் விசாரணையின் முடிவில் தகவல் வந்துள்ளது.     அதில் மதுரை மாவட்டம் கருப்பாயூரணியில் பல கோடி மதிப்பிலான அப்பார்ட்மெண்ட், மற்றும் இராஜபாளையத்தில் பழைய காட்டன் மில், புதிய பேருந்து நிலையமருகே பல ஏக்கர் பரப்பிலான காலி மனையிடங்கள் உள்ளிட்டவைகளை வாங்கியிருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.                                இந்தக் கொள்ளை சம்பவங்கள் தொடர்பாக மூர்த்தி உள்ளிட்ட ஐந்து நபர்களை தனிப்படை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர். அதன் பிறகு தான் இன்னும் பல தகவல்கள் தெரியவரும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான விழாவாக தமிழ் சம

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு