முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கார்ப்பரேட் நிறுவன ஊழியர்களின் செயல்திறனை மேம்படுத்த ‘கலை சிகிச்சை’ முறைகள்

கார்ப்பரேட் நிறுவன ஊழியர்களின் செயல்திறனை மேம்படுத்த ‘கலை சிகிச்சை’ முறைகள்


சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி மெட்ராஸ்) மேற்கொண்ட ஆய்வில், ஊழியர்களின் ஆக்கப்பூர்வமான, உணர்வுப்பூர்வமான செயல்பாடுகளை வளர்ப்பதே, நிலையற்ற வணிகத்தை வெற்றிகரமாக நடத்துவற்கான அணுகுமுறையாக இருக்கும் என கண்டறியப்பட்டுள்ளது.


பாஸ்டன் கன்சல்டிங் குரூப், ஜெராக்ஸ் பார்க், சீமென்ஸ், ஐபிஎம் போன்ற மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் மேலாண் இலக்குகளை அடையும் நோக்கில் கலைசார்ந்த சிகிச்சைகளை ஏற்கனவே செயல்படுத்தி வருகின்றன. பணியிடங்களில் எவ்வாறு கலைநுட்பங்களைப் பயன்படுத்துவது என இந்த ஆராய்ச்சி பரிந்துரைக்கிறது. இதனால் ஒட்டுமொத்த பெரு நிறுவன கலாச்சாரமும் செழுமையடைகிறது.

சென்னை ஐஐடி மேலாண்மைக் கல்வித் துறையைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களான பேராசிரியை வி.விஜயலட்சுமி, அவரின் முனைவர் பட்ட மாணவி செல்வி. எம்.ஜனனி ஆகியோர், பணியாளர்களின் சுறுசுறுப்பை அதிகரிக்க பல்வேறு முறைகளை இந்த ஆய்வில் சுட்டிக் காட்டியுள்ளனர்.

அவர்களின் ஆய்வுக் கட்டுரை ஜர்னல் ஆஃப் ஆர்கனைசேஷனல் சேஞ்சு மேனேஜ்மெண்ட் (DOI: 10.1108/JOCM-03-2023-0092) என்பதில் வெளியிடப்பட்டுள்ளது,

இந்த ஆராய்ச்சியின் முக்கிய கண்டுபிடிப்புகளை விவரித்த இணைக் கட்டுரையாளரான சென்னை ஐஐடி மேலாண்மைக் கல்வித் துறையின் பேராசிரியை வி.விஜயலட்சுமி, “கலைகளுக்கென குறிப்பிடத்தக்க வரலாறும், எண்ணங்கள், உணர்வுகள், நடத்தைகளை வடிவமைக்கும் திறன்களும் உண்டு. பாரம்பரியப் பயிற்சி முறைகளுடன் ஒப்பிடும்போது, ​​அனுபவரீதியான கலை முறைகள் நேர்மறையான மனநிலையைத் தூண்டுவதுடன் படைப்பாற்றலையும் புதுமைகளையும் ஊக்குவிக்கின்றன. பணியிடத்தில் ஒருவரின் சிந்தனையையும் நடத்தையையும் விரிவுபடுத்த ஏதுவாக மேம்பட்ட நன்மைகளை வழங்குகின்றன” என்றார்.

மன அழுத்தம் நிறைந்த பணிச்சூழலில் அவர்களின் ஆற்றலையும் ஊக்கத்தையும் நிலைநிறுத்த, நெருக்கடியான சமயங்களில் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்.

தலைமுறை மாற்றங்கள், தொழில்நுட்ப முன்னேற்றங்கள், வளர்ந்து வரும் உலகை மாற்றியமைக்க நிலையான தேவைப்பாடு ஆகியவை பணியாளர்களின் திறனை அதிகரிக்கச் செய்யும் வழிகளாகும்.

‘பணியாளர் சுறுசுறுப்பு’ (Workforce Agility) என்ற கருத்தை சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் விவாதத்துக்கு எடுத்துக் கொண்டுள்ளனர். நிறுவன சவால்களை எதிர்கொள்ளாமல் ஆக்கப்பூர்வமான அணுகுமுறைகளை மேற்கொள்ள இது உதவுகிறது. போட்டிகள் நிறைந்த வணிகச் சூழலில் செயல்படும்போது வாய்ப்புகளையும், அபாயங்களையும் எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பதற்கும் இது உதவியாக இருக்கிறது.

பணியாளர்களின் சுறுசுறுப்பை அதிகரிப்பதற்கான வழக்கமான முயற்சிகளில் தனிப்பட்ட பணியாளர் ஒருவருக்கு மிக அரிதாகத்தான் முன்னுரிமை வழங்கப்படுகிறது. தனிநபர்களின் சுறுசுறுப்பை மேம்படுத்தும் விதத்தில் அவர்களின் குணநலன்கள் இதுவரை மிகக் குறைந்த அளவே கவனம் பெற்றுள்ளன. எனினும், பணிக் கலாச்சாரத்தைப் பொறுத்தவரை ஊழியர்களின் ஆக்கபூர்வமான தேவைகளைப் பாதுகாப்பதில் பின்தங்கியிருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

ஊழியர்களின் எண்ணங்களை- நடத்தைகளை வெளிப்படுத்தவும், அவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தவும், பணியில் உள்ள நெறிமுறைச் சங்கடங்கள் போன்ற சிக்கல்களைப் பற்றி சிந்திக்கவும் புரிந்துகொள்ளவும் இது உதவிகரமாக இருக்கும். கலை அடிப்படையிலான முறைகளில் பயிற்சி பெற்ற செயல்பாட்டாளர் ஒருவரால்தான், எதிர்ப்பு நிலைப்பாட்டில் இருந்து ஏற்கும் நிலைப்பாட்டிற்கு ஊழியர்களை மெதுவாக வழிநடத்த முடியும்.

சென்னை ஐஐடி மேலாண்மை கல்வித் துறையின் முனைவர் பட்ட ஆராய்ச்சியாளரும், கட்டுரையாளருமான செல்வி  எம்.ஜனனி தமது முனைவர் பட்ட ஆய்வறிக்கை குறித்து விவரிக்கையில், “இந்த ஆய்வு தொடர்புடைய பலருக்கு சாதகமான அம்சங்களைக் கொண்டிருக்கின்றன. ஏனெனில், பாரம்பரியமான பயிற்சி அடிப்படையிலான அமைப்பிலிருந்து அனுபவமிக்க முறைக்கு மாற்றுவதுடன் நிறுவனங்களை அடுத்தகட்டத்திற்கு நகர்த்திச் செல்ல இது உதவிகரமாக இருக்கும். ஊழியர்களிடையே உள் மற்றும் வெளிப்புற உரையாடல்கள், புதிய உறவுகள்- சிந்தனை முறைகளை உருவாக்கலாம். இது ஒரு நல்ல, அக்கறை மிகுந்த கூட்டுப் பணிக் கலாச்சாரத்தை உருவாக்க பயன்படுத்தப்படக் கூடும்” என்றார்.

நிறுவனங்களுக்கிடையே இருந்துவரும் நவீன வாழ்க்கைமுறை, உறுதியான கட்டமைப்புகளைக் கொண்டிருப்பதால் ஊழியர்களிடமிருந்து இலக்குகளையும், எட்டவேண்டிய நிலையையும் நிர்ணயிக்கக் கோரலாம். இது வேலைச் சூழலில் சலிப்பையோ ஆக்கப்பூர்வமான வெற்றிடத்தையோ ஏற்படுத்தும். காலப்போக்கில், பணியாளரின் உற்பத்தித்திறனில் குறிப்பிட்ட அளவு சலிப்பை ஏற்படுத்தக்கூடும், பணியாளர்கள் குறைந்தபட்சக் கடமைகளை செய்வதில் கவனம் செலுத்துவதில்லை. தங்களுடைய வேலைகளுக்குத் தொடர்பில்லாத ஓய்வு நேர நடவடிக்கைகளுக்கு அதிக நேரம் செலவிட ஆர்வம் கொள்கின்றனர்.

பணியாளர் ஒருவரின் உளம்சார்ந்த அம்சங்களைப் பிரிப்பதன் மூலம், தங்கள் வேலைகளில் அவர்கள் சிறப்பாகச் செயல்படுவதற்கு ஏதுவாக மகிழ்ச்சியான மனநிலையோடு முக்கிய பங்களிப்பை வழங்குவதை இந்த ஆராய்ச்சி சுட்டிக் காட்டுகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...