முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பல்லாயிரக்கணக்கான மக்களுடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்த காங்கிரஸ் பிரியங்கா காந்தி

கேரளா மாநிலம் வயநாடு நாடாளுமன்ற மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.


முன்னதாக பேரணியாகச் சென்றவர், 35 ஆண்டுகளில் முதல் முறையாக எனக்காகப் பிரச்சாரம் செய்கிறேன் என்றார். நவம்பர் 13-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி போட்டியிடும் நிலையில், கேரளா சென்ற பிரியங்கா காந்தி நேற்று வயநாடு மாவட்டமா கல்பெட்டாவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி திறந்த வாகனத்தில் பேரணியாகச் சென்றார்.

அப்போது அவரது சகோதரர் ராகுல், மாநில காங்கிரஸ் தலைவர் கே.சுதாகரன் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில தலைவர் பனக்காட் சய்யித் சாதிக் அலி ஷிஹாப் தங்கல் உடன் இருந்தனர். இந்தப் பேரணியில், வயநாடு மட்டுமல்லாது கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களும் பங்கேற்றனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்றடைந்த பிரியங்கா, மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அலுவலருமான டி.ஆர்.மேகா ஸ்ரீ யிடம் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.

அப்போது, காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தாயார் சோனியா காந்தி, சகோதரர் ராகுல் காந்தி உடனிருந்தனர். முன்னதாக வாகனப் பேரணியின் போது பிரியங்கா காந்தி தெரிவித்ததாவது: எனது சகோதரர் வெற்றி பெற்ற இந்த வயநாடு தொகுதியில் நான் போட்டியிடுவதை கௌரவமாகக் கருதுகிறேன். 1989-ஆம் ஆண்டு எனது தந்தை ராஜீவ் காந்திக்காக வந்து வாக்குகள் சேகரித்தேன். அப்போது எனக்கு வயது 17. அதன் பிறகு என்து தாய், சகோதரர் மற்றும் கட்சிப் பிரமுகர்களுக்காக பல முறை தேர்தல் பிரச்சாரம் செய்திருக்கிறேன்.இந்த முறை 35 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக எனக்காகப் பிரச்சாரம் செய்கிறேன்.

உங்கள் ஆதரவை எனக்காக கோருகிறேன். இது எனக்கு மிகவும் வித்தியாசமான உணர்வைத் தருகிறது. சகோதரர் பணியைத் தொடர்வேன். இந்த உலகமே எனது சகோதரருக்கு எதிராக இருந்த போது அவருக்கு நீங்கள் ஆதரவளித்தீர்கள். துணிச்சலுடன் போராட நீங்கள் அவருக்கு வலிமையைக் கொடுத்தீர்கள். இந்த தொகுதி மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து எனது சகோதரர் என்னிடம் விளக்கினார். அவர் விட்டுச் சென்ற பணிகளைத் தொடர விரும்பும் எனக்கு நீங்கள் ஆதரவு தர வேண்டும். எனத் தெரிவித்தார்.  2019-ஆம் ஆண்டு  காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிட்டு அபார வெற்றி பெற்றார்.


உத்தரப்பிரதேசத்தின் அமேதி தொகுதியில் தோல்வி அடைந்த ராகுல் காந்தி, வயநாடு தொகுதியில் 7,06,367 வாக்குகள் பெற்றிருந்தார். இந்தத் தொகுதியில் பதிவான வாக்குகளில் மொத்தம் 64.94 சதவீதம் வாக்குகளை ராகுல் காந்தி பெற்றார். தம்மை எதிர்த்துப் போட்டியிட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சுனீரை 4,31,770 வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தி தோற்கடித்தார். 

 அதனையடுத்து 2024-ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலிலும் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிட்டார். உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியிலும் ராகுல் காந்தி இம்முறை போட்டியிட்டு இரு தொகுதிகளிலுமே வென்றார். வயநாடு லோக்சபா தொகுதியில் இந்த முறை 6,47,445 வாக்குகளை ராகுல் காந்தி பெற்றார். இந்தத் தொகுதியில் பதிவான வாக்குகளில் 59.69 சதவீதம் வாக்குகளை ராகுல் காந்தி பெற்றிருந்தார். அவரை எதிர்த்து மூத்த இடதுசாரித் தலைவரான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஆனி ராஜா போட்டியிட்டார். ஆனி ராஜாவை 3,64,422 வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தி தோற்கடித்தார். நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் இரண்டு தொகுதிகளில் வென்ற ராகுல் காந்தி, ரேபரேலி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை தக்க வைத்துக் கொண்டு வயநாடு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். ஆனால் அதே நாளில் வயநாடு நாடாளுமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக தமது தங்கை பிரியங்கா காந்தி போட்டியிடுவார் எனவும் ராகுல் காந்தி அறிவித்தார்.


காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரான பிரியங்கா காந்தி முதல் முறையாக தேர்தல் களத்தை சந்திக்கிறார். இதனிடையே வயநாடு லோக்சபா தொகுதியில் வரலாறு காணாத நிலச்சரிவால் பெருந்துயரம் சமீபத்தில் நிகழ்ந்தது. இதனால் வயநாடு நாடாளுமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படாமலிருந்தது. தற்போது வயநாடு நாடாளுமன்றத் தொகுதியில் இயல்பு நிலைமை திரும்பியுள்ளதையடுத்து வயநாடு மக்களவைத் தொகுதியில் நவம்பர் மாதம் 13- ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறும் என இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. வயநாடு லோக்சபா தொகுதியில் 18- ஆம் தேதி வேட்பு மனுத் தாக்கல் தொடங்கியது. அக்டோபர் மாதம் 25- ஆம் தேதி வேட்பு மனுத் தாக்கல் செய்ய கடைசி நாளாகும் வேட்பு மனுக்களை திரும்பப் பெற அக்டோபர் 30-ஆம் தேதி கடைசி நாள் வயநாடு  நாடாளுமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வாக்குகள் எண்ணிக்கை நவம்பர் 13-ஆம் தேதி நடைபெறும்.. இந்த நிலையில் ஜார்கண்ட், மகாராஷ்ட்டிரா மாநிலங்களில் சட்டசபைதா தேர்தலுடன் சேர்ந்து நவம்பர் மாதம் 13-ஆம் தேதி வயநாட்டில் இடைத்தேர்தல் நடக்க உள்ளது. நவம்பர் 23-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன. பிரியங்கா காந்தி  நேற்று  வேட்புமனுவுடன் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரம் மூலம் பிரியங்கா காந்தியை விட அவரது கணவருக்கு பல மடங்கு சொத்துக்கள் இருப்பது தெரிந்துள்ளது. பிரியங்கா காந்தியின் கையில் பணமாக 52,000 ரூபாய் உள்ளதாகவும், 4.24 கோடி ரூபாய்க்கான முதலீடு  உள்ளதாகவும், வங்கிக் கணக்கில் 3.67 லட்சம் ரூபாய் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ராபர்ட் வதேரா பரிசாக வழங்கிய 2004 ஆம் ஆண்டு மாடல் ஹோண்டா சி.ஆர்.பி கார் தனது பெயரில் உள்ளதாகவும், அதன் மதிப்பு 8 லட்சம் ரூபாய் எனவும் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். 1.15 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம், 29.55 லட்சம் ரூபாய் மதிப்பிலான வெள்ளிப் பொருட்களும் பிரியங்கா காந்தி பெயரில் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேராவின் கையில் 2,18,084 ரூபாய் உள்ளதாகவும், 37.91 கோடி ரூபாய்க்கான முதலீடு உள்ளதாகவும், 65.55 கோடி ரூபாய்க்கான அசையாச் சொத்துக்கள் உள்ளதாகவும், வங்கிக் கணக்கில் 37.61 லட்சம் ரூபாய் உள்ளதாகவும், 53 லட்சம் ரூபாய் மதிப்பிலான டொயோட்டா லேண்ட் க்ரூசர் கார், மினி கூப்பர், 4.22 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சுசுகி பைக் ஆகியவையும் ராபர்ட் வதேராவிடம் உள்ளதாகவும் பிரமாணபத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. , பிரியங்காவுக்கும், அவரது சகோதரர் ராகுல் காந்திக்கும் சம உரிமை உள்ள 2.10 கோடி ரூபாயிலான சொத்து உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரியங்கா 15.75 லட்சம் ரூபாய் வங்கிக் கடனும், ராபர்ட் வதேராவுக்கு 10 கோடி ரூபாய்க்கான வங்கிக்கடனும் பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பிரியங்கா காந்திக்கு 11.98 கோடி ரூபாய்க்கான அசையாச் சொத்துகள் உள்பட மொத்தம் சுமார் 12 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களும், ராபர்ட் வதேராவிடம் 65.55 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் உள்ளதாகவும் தெரியவருகிற நிலையில் பிரியங்கா காந்தி மீது 3 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் வேட்புமனுத்தாக்கல் பிரமாணபத்திரம் மூலம் ஹத்ராஸில் போராட்டம் நடத்தியது சம்பந்தமான வழக்கு, எக்ஸ் வலைத்தளத்தில் தவறான தகவல் ட்வீட் செய்ததாக ஒரு வழக்கு, பாம்புபிடிக்காரர்களை சந்தித்தது என மூன்று வழக்குகள் அவர் மீது உள்ளன. 52 வயதான பிரியங்கா காந்தி டெல்லி யுனிவர்சிட்டியில் சைக்காலஜி பட்டப்படிப்பை முடித்துள்ளார். இங்கிலாந்தின் யுனிவர்சிட்டி ஆஃப் ஸண்டர்லாண்ட்-ல் (sunderland) பெளத்தம் சம்பந்தமான பி.ஜி டிப்ளமோவும் படித்துள்ளார். இதுவரை தேர்தலில் போட்டியிடாத பிரியங்கா காந்தி முதன் முதலாக தேர்தலில் போட்டியிடுவதால் காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் உற்சாகம் நிறைந்துள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...