முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஆன்லைன் செயலி வாயிலாக கடன் வழங்கி, கந்து வட்டி வசூலித்த சீன நபர்கள் கைது

திருச்சிராப்பள்ளி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, சீனா ஆகிய வெளிநாடுகளைச் சார்ந்தவர்கள் பல்வேறு வழக்குகளில் விசாரணைக் கைதிகளாக அடைக்கப்பட்டுள்ளனர்.



சென்னையில் இணையதளம் வாயிலாக ஆபாசமான படங்களை அனுப்பியது, பல்வேறு யுத்திகளை கையாண்டு இணையதளம் வாயிலாக மிரட்டி பணம் பறித்ததாக சீனாவை சேர்ந்த யுவான்லூன் (வயது 25), ஷியோ யமாவ் (வயது 40) ஆகியோரை சென்னை சைபர் க்ரைம் காவல்துறையினர் கைது செய்து திருச்சிராப்பள்ளி சிறப்பு முகாமில் அடைத்தனர். 



இந்த நிலையில், திருச்சிராப்பள்ளி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருந்த சீன வாலிபர்களிடம், டெல்லி அமலாக்கத்துறை அலுவலர்கள் தேவேந்திர குமார், கவுரவ் சிங் இருவரும், திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் அனுமதியுடன் விசாரணையை மேற்கொண்டனர். சீனாவைச் சேர்ந்த அந்த இருவரையும் தனியாக ஒரு அறையில் வைத்து துருவித் துருவி விசாரணை நடத்தினர். இந்த விசாரணை இறுதியில் அவர்களைகா கைது செய்து  அழைத்துச் சென்றனர். திருச்சிராப்பள்ளி சிறப்பு முகாமுக்கு  நவம்பர் மாதம் 13 ஆம் தேதி நான்கு பேர் கொண்ட அமலாக்கத்துறை அலுவலர்கள் குழுவாக வந்தனர். பின்னர் சிறப்பு முகாமில் இருந்த சீன நாட்டை சேர்ந்த 2 பேரை தனியாக ஒரு அறைக்கு அழைத்து வந்து, அவர்களிடம்  நடத்திய விசாரணையில். தொடர்ந்து இருவர் மீதும் 294-B, 384, 506(I) உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.



பின்னர் இருவரையும் திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் அனுமதியுடன், திருச்சிராப்பள்ளி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கைது செய்து, சென்னை அழைத்துச் சென்றனர். பின்னர் சென்னை நீதிமன்றம் அனுமதியுடன் 3 நாள் காவல்துறை கஸ்டடியில் அலுவலர்கள் விசாரணை நடத்தி மீண்டும் சென்னை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களை நவம்பர் மாதம் 29 ஆம் தேதி வரை காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. மேற்கண்ட குற்றவாளிகள் திருச்சிராப்பள்ளியில் தங்கி, ஆன்லைன் செயலி வாயிலாக கடன் வழங்கி, கந்து வட்டி வசூலித்தவர்களை மூன்று நாள் காவலில் விசாரித்த பின், சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன் நேற்று ஆஜர்படுத்தினர்.


இருவரையும், நவம்பர் மாதம் 29ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். செயலியை பதிவிறக்கம் செய்யும் போதே, கடன் வாங்குவோரின், ஆதார், பான் கார்டு, வீட்டு முகவரி, வங்கி கணக்கு எண் உள்ளிட்ட விபரங்களை பெற்றுள்ளனர். அவர்களின் மொபைல் போனில் உள்ள தொடர்பு எண்கள், உறவினர் விபரங்கள், படங்களையும் வாங்கி உள்ளனர்.

கடன் கொடுக்கும் போதே, அதற்கான செயலாக்கக் கட்டணம் என, பிடித்தம் செய்யப்பட்ட, 20 - 30 சதவீதத் தொகை போக, மீதி பணத்தை அவர்களின் வங்கிக் கணக்கிற்கு செலுத்தியுள்ளனர்.


கடன் காலம் முடிந்த உடனேயே, 5000 ரூபாய்க்கு, 10,000 ரூபாய் வசூலித்துள்ளனர். கடனை திருப்பி செலுத்த, அதிகபட்சம் ஏழு நாட்கள் மட்டுமே அவகாசம் வழங்கியுள்ளனர். உரிய தேதிக்குள் கடனைச் செலுத்தாவிட்டால், மொபைல் போன் வழியாக மிரட்டி உள்ளனர். அவர்களின் மொபைல் போனில் இருந்து திரட்டப்பட்ட எண்களை இணைத்து, 'வாட்ஸாப்' குழு துவக்கி, கடன் வாங்கிய நபர் மோசடி பேர்வழி என, அவதுாறு பரப்பியுள்ளனர்.

கடன் வாங்கியவரின் படங்களை ஆபாசமாக சித்தரித்து, சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.    கடன் வாங்கியவர்களை துன்புறுத்தியும், மன உளைச்சல் ஏற்படுத்தியும், 49.2 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளனர்.


மேலும், தங்கள் நிறுவனத்தில் இயக்குனர்களாக பணி அமர்த்தப்பட்டவர்களின் பெயரில், ரூபாய் நோட்டுகளை கிரிப்டோ கரன்சிகளாக மாற்ற, 'ஆன்லைன்' தளம் ஒன்றில் கணக்கு துவங்கி உள்ளனர். அதன் வாயிலாக, 2020 ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரை, வெளிநாட்டில் இருந்து கிரிப்டோ கரன்சியாக, 3.54 கோடி ரூபாயை, தமிழகத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.அந்த தொகையை கடன் கொடுத்து, 5.20 கோடி ரூபாய் வசூலித்து, கிரிப்டோ கரன்சியாக, ஹாங்காங்கிற்கு அனுப்பி உள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  சீன நாட்டினரால் இயக்கப்படும் டிஜிட்டல் லோன் ஆப்களுக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் PMLA, 2002 ன் விதிகளின் கீழ் 13.11.2024 அன்று தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளியிலிருந்து 02 சீன பிரஜைகளான Xiao Ya Mao மற்றும் Wu Yuanlun ஆகியோரை அமலாக்கத்துறை அலுவலகம் கைது செய்துள்ளது.  முதன்மை அமர்வு நீதிபதி, சென்னை அவர்களை 03 நாட்கள் ED காவலில் வைக்க உத்தரவிட்டார். மேலும், 18.11.2024 அன்று, முதன்மை முதன்மை அமர்வு நீதிபதி, சென்னை அவர்கள் 29.11.2024 வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...