முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஆன்லைன் செயலி வாயிலாக கடன் வழங்கி, கந்து வட்டி வசூலித்த சீன நபர்கள் கைது

திருச்சிராப்பள்ளி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, சீனா ஆகிய வெளிநாடுகளைச் சார்ந்தவர்கள் பல்வேறு வழக்குகளில் விசாரணைக் கைதிகளாக அடைக்கப்பட்டுள்ளனர்.



சென்னையில் இணையதளம் வாயிலாக ஆபாசமான படங்களை அனுப்பியது, பல்வேறு யுத்திகளை கையாண்டு இணையதளம் வாயிலாக மிரட்டி பணம் பறித்ததாக சீனாவை சேர்ந்த யுவான்லூன் (வயது 25), ஷியோ யமாவ் (வயது 40) ஆகியோரை சென்னை சைபர் க்ரைம் காவல்துறையினர் கைது செய்து திருச்சிராப்பள்ளி சிறப்பு முகாமில் அடைத்தனர். 



இந்த நிலையில், திருச்சிராப்பள்ளி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருந்த சீன வாலிபர்களிடம், டெல்லி அமலாக்கத்துறை அலுவலர்கள் தேவேந்திர குமார், கவுரவ் சிங் இருவரும், திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் அனுமதியுடன் விசாரணையை மேற்கொண்டனர். சீனாவைச் சேர்ந்த அந்த இருவரையும் தனியாக ஒரு அறையில் வைத்து துருவித் துருவி விசாரணை நடத்தினர். இந்த விசாரணை இறுதியில் அவர்களைகா கைது செய்து  அழைத்துச் சென்றனர். திருச்சிராப்பள்ளி சிறப்பு முகாமுக்கு  நவம்பர் மாதம் 13 ஆம் தேதி நான்கு பேர் கொண்ட அமலாக்கத்துறை அலுவலர்கள் குழுவாக வந்தனர். பின்னர் சிறப்பு முகாமில் இருந்த சீன நாட்டை சேர்ந்த 2 பேரை தனியாக ஒரு அறைக்கு அழைத்து வந்து, அவர்களிடம்  நடத்திய விசாரணையில். தொடர்ந்து இருவர் மீதும் 294-B, 384, 506(I) உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.



பின்னர் இருவரையும் திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் அனுமதியுடன், திருச்சிராப்பள்ளி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கைது செய்து, சென்னை அழைத்துச் சென்றனர். பின்னர் சென்னை நீதிமன்றம் அனுமதியுடன் 3 நாள் காவல்துறை கஸ்டடியில் அலுவலர்கள் விசாரணை நடத்தி மீண்டும் சென்னை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களை நவம்பர் மாதம் 29 ஆம் தேதி வரை காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. மேற்கண்ட குற்றவாளிகள் திருச்சிராப்பள்ளியில் தங்கி, ஆன்லைன் செயலி வாயிலாக கடன் வழங்கி, கந்து வட்டி வசூலித்தவர்களை மூன்று நாள் காவலில் விசாரித்த பின், சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன் நேற்று ஆஜர்படுத்தினர்.


இருவரையும், நவம்பர் மாதம் 29ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். செயலியை பதிவிறக்கம் செய்யும் போதே, கடன் வாங்குவோரின், ஆதார், பான் கார்டு, வீட்டு முகவரி, வங்கி கணக்கு எண் உள்ளிட்ட விபரங்களை பெற்றுள்ளனர். அவர்களின் மொபைல் போனில் உள்ள தொடர்பு எண்கள், உறவினர் விபரங்கள், படங்களையும் வாங்கி உள்ளனர்.

கடன் கொடுக்கும் போதே, அதற்கான செயலாக்கக் கட்டணம் என, பிடித்தம் செய்யப்பட்ட, 20 - 30 சதவீதத் தொகை போக, மீதி பணத்தை அவர்களின் வங்கிக் கணக்கிற்கு செலுத்தியுள்ளனர்.


கடன் காலம் முடிந்த உடனேயே, 5000 ரூபாய்க்கு, 10,000 ரூபாய் வசூலித்துள்ளனர். கடனை திருப்பி செலுத்த, அதிகபட்சம் ஏழு நாட்கள் மட்டுமே அவகாசம் வழங்கியுள்ளனர். உரிய தேதிக்குள் கடனைச் செலுத்தாவிட்டால், மொபைல் போன் வழியாக மிரட்டி உள்ளனர். அவர்களின் மொபைல் போனில் இருந்து திரட்டப்பட்ட எண்களை இணைத்து, 'வாட்ஸாப்' குழு துவக்கி, கடன் வாங்கிய நபர் மோசடி பேர்வழி என, அவதுாறு பரப்பியுள்ளனர்.

கடன் வாங்கியவரின் படங்களை ஆபாசமாக சித்தரித்து, சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.    கடன் வாங்கியவர்களை துன்புறுத்தியும், மன உளைச்சல் ஏற்படுத்தியும், 49.2 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளனர்.


மேலும், தங்கள் நிறுவனத்தில் இயக்குனர்களாக பணி அமர்த்தப்பட்டவர்களின் பெயரில், ரூபாய் நோட்டுகளை கிரிப்டோ கரன்சிகளாக மாற்ற, 'ஆன்லைன்' தளம் ஒன்றில் கணக்கு துவங்கி உள்ளனர். அதன் வாயிலாக, 2020 ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரை, வெளிநாட்டில் இருந்து கிரிப்டோ கரன்சியாக, 3.54 கோடி ரூபாயை, தமிழகத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.அந்த தொகையை கடன் கொடுத்து, 5.20 கோடி ரூபாய் வசூலித்து, கிரிப்டோ கரன்சியாக, ஹாங்காங்கிற்கு அனுப்பி உள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  சீன நாட்டினரால் இயக்கப்படும் டிஜிட்டல் லோன் ஆப்களுக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் PMLA, 2002 ன் விதிகளின் கீழ் 13.11.2024 அன்று தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளியிலிருந்து 02 சீன பிரஜைகளான Xiao Ya Mao மற்றும் Wu Yuanlun ஆகியோரை அமலாக்கத்துறை அலுவலகம் கைது செய்துள்ளது.  முதன்மை அமர்வு நீதிபதி, சென்னை அவர்களை 03 நாட்கள் ED காவலில் வைக்க உத்தரவிட்டார். மேலும், 18.11.2024 அன்று, முதன்மை முதன்மை அமர்வு நீதிபதி, சென்னை அவர்கள் 29.11.2024 வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் பிடித்த தெரு நாய்கள் டிரஸ்டில் ஒப்படைக்கப்பட்டது

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தெரு நாய்களைப் பிடித்த பின் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட்டுக்குச் சொந்தமான பாதுகாப்புக் கூடத்தில் ஒப்படைப்பு புதுக்கோட்டையில் தெருக்களில் சுற்றித் திரித்த தெரு நாய்கள் நகராட்சி நிர்வாகம் மூலம் பிடிக்கப்பட்டு இலுப்பூர் பைரவர் சாரிடபிள் டிரஸ்ட் நாய்கள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை பூங்கா நகர், சாந்தநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை. அதிகமானதாக நகராட்சிக்கு புகார்கள் வந்ததையடுத்து நாய்களைப் பிடித்து என்ன செய்வதென்று தெரியாமல் நகராட்சி நிர்வாகத்தினர் இருந்த நிலையில்  நகராட்சி ஆணையாளர்  இலுப்பூரில் செயல்படும் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற நிறுவனம் தெருநாய்களை பராமரிப்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்படுவதாக அறிந்து பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் யக்குனர் ஆர்.வீர சரத்பவாரை அழைத்துப் பேசியதையடுத்து நாய்களை பராமரிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மூலம் தெருக்களில் சுற்றி திரிந்த 42 தெரு நாய்களை பத்திரமாகற பிடிக்கப் பட்டு இலுப்பூர் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட் டதைத் தொடர்ந்து அவர்...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...