முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கந்தசாமி கோவில் உண்டியலில் விழுந்த செல்போனை ரூபாய்.10,000 கட்டி உரியவர் ஏலத்தில் எடுத்தார்

திருப்போரூா் கந்தசுவாமி கோவில் செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர்  முருகன் கோயிலாகும்.


பேரூரின் மையத்தில்  பழைய மகாபலிபுரம் சாலையில் அமைந்துள்ள. திருப்போரூா் ஸ்ரீ கந்தசாமி கோவில் சுப்பிரமணிய சுவாமி கோவில் என அழைக்கப்படுகிறது.


அங்கு அக்டோபர் மாதம் தரிசனம் செய்த சென்னை அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த தினேஷ் என்ற நபரின் செல்போன் தவறி உண்டியலில் விழுந்ததையடுத்து செல்போனை இன்று அவர் ரூபாய்.10,000 கட்டி ஏலத்தில் எடுத்தார்.


கோயிலில் தவறி விழுந்த பொருட்களை உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தொடர்ந்து பலரும் குரல் எழுப்பிய நிலையில், மொபைல் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் ரூபாய்.10,000 கட்டிய பின்னர் செல்போன் கொடுக்கப்பட்டிருக்கிறது.

தினேஷ் தரிசனத்திற்கு பிறகு உண்டியலில் காணிக்கை செலுத்த முயன்றபோது அவர் வைத்திருந்த ஐபோன் தவறி உண்டியலில் விழுந்திருக்கிறது. உடனடியாக அவர், ஹிந்து சமய அறநிலையத் துறை  நிர்வாகத்திடம் செல்போனை திரும்பக் கேட்டிருக்கிறார். ஆனால், "உண்டியலில் விழுந்தது அனைத்தும் முருகனுக்கே" என்று கோவில் நிர்வாகம்  கூறிவிட்டது. மட்டுமல்லாது உண்டியலை எங்களால் திறக்க முடியாது. எனக் கூறி, ஹிந்து சமய அறநிலையத்துறை தலைமை அலுவலகத்தில் அணுக வழிகாட்டியது.       

சென்னையில் உள்ள ஹிந்து சமய அறநிலையத்துறை தலைமை அலுவலகத்தில் இது குறித்து எழுத்துப்பூர்வமாக தினேஷ் கோரிக்கை வைத்தார். ஆனால், அங்கும் அலுவலர்கள் அது குறித்து பதிலில்லை வில்லை. கோவில் நிர்வாகம் சொன்னதையே ஹிந்து சமய அறநிலையத்துறையும் கூறியது. இருப்பினும் தினேஷ் தொடர் கோரிக்கையையடுத்து அறநிலையத்துறை உண்டியல் திறக்கப்படும் நாளில் செல்போனிலிருந்து டேட்டாக்களை  மாற்றிக்கொள்ளலாம் என்றும், மற்றபடி செல்போன் முருகனுக்கே என்று கூறியது. இந்த விவகாரம் குறித்து ஹிந்து சமய அறநிலையத் துறையின் அமைச்சர் பி.கே.சேகர்பாபுவிடம் பத்திரிகையாளர்கள் மூலம் கேள்விகள் கேட்கப்பட்டன.  பதிலளித்த அமைச்சர், என்ன வாய்ப்பு இருக்கிறது என்பதை ஆய்வு செய்து பிறகு முடிவெடுத்துத் தெரிவிப்போம் எனக் கூறினார். அதையடுத்து அவர் செல்லும் இடமெல்லாம் இந்தக் கேள்விகள் எதிரொலித்தன. ஜனவரி மாதம் 5 ஆம் தேதி, "இந்த ஆட்சி மக்களுக்கு கொடுக்கிற ஆட்சி. எடுக்கிற ஆட்சி கிடையாது. எனவே பக்தரின் செல்போன் திரும்ப ஒப்படைக்கப்படும்" என சேகர்பாபு உறுதியளித்தார்.அதையடுத்து இன்று உண்டியல் திறக்கப்பட்டு, உள்ளிருந்த செல்போன், ஹிந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் முன்னிலையில் எடுத்து ஏலத்தில் விடப்பட்டதிதில் ரூபாய்.10,000 கட்டி அதன் உரிமையாளர் தினேஷ் என்பவர் ஏலத்தில் எடுத்திருக்கிறார். எப்படியோ செல்போன் கிடைத்தால் போதும் என்றிருந்த தினேஷ்,  மகிழ்ச்சியடைந்தார் தினேஷ் ஒரு பக்தர், தவறுதலாகதான் செல்போன் விழுந்திருக்கிறது. அதை முருகன் ஒன்றும் எடுத்து பயன்படுத்தப்போவதில்லை. அவர் பெயரைச் சொல்லி ஆலயத்தில் வருவாய் ஈட்டும் அறநிலையத்துறை செல்போனை கொடுக்க மறுத்ததுடன், நீண்ட இழுத்தடிப்புக்கு பின்னர் தான் கொடுத்திருக்கிறீர்கள். தவறி விழுந்த பொருளை அப்போதே உரியவரை அழைத்து கொடுப்பது தானே அறம்? என்று கேள்விகள் எழுந்திருக்கின்றன. 

இதில் பொது நீதி யாதெனில் அறநிலையத் துறையில் நடக்கும் ஊழலுக்கு அறமுண்டா என்பதே இங்கு எழுவினா?.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் பிடித்த தெரு நாய்கள் டிரஸ்டில் ஒப்படைக்கப்பட்டது

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தெரு நாய்களைப் பிடித்த பின் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட்டுக்குச் சொந்தமான பாதுகாப்புக் கூடத்தில் ஒப்படைப்பு புதுக்கோட்டையில் தெருக்களில் சுற்றித் திரித்த தெரு நாய்கள் நகராட்சி நிர்வாகம் மூலம் பிடிக்கப்பட்டு இலுப்பூர் பைரவர் சாரிடபிள் டிரஸ்ட் நாய்கள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை பூங்கா நகர், சாந்தநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை. அதிகமானதாக நகராட்சிக்கு புகார்கள் வந்ததையடுத்து நாய்களைப் பிடித்து என்ன செய்வதென்று தெரியாமல் நகராட்சி நிர்வாகத்தினர் இருந்த நிலையில்  நகராட்சி ஆணையாளர்  இலுப்பூரில் செயல்படும் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற நிறுவனம் தெருநாய்களை பராமரிப்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்படுவதாக அறிந்து பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் யக்குனர் ஆர்.வீர சரத்பவாரை அழைத்துப் பேசியதையடுத்து நாய்களை பராமரிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மூலம் தெருக்களில் சுற்றி திரிந்த 42 தெரு நாய்களை பத்திரமாகற பிடிக்கப் பட்டு இலுப்பூர் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட் டதைத் தொடர்ந்து அவர்...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...