முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் நகைகளை இரண்டாம் தரப்பு வாரிசான தீபாவிடம் ஒப்படைக்க உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்

வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்கள் குவிப்புக்காகத் தொடரப்பட்டு தண்டனை பெற்ற வழக்கில் கடந்த 2014 ஆம் ஆண்டு குற்றவாளி என அறிவிக்கப்பட்டவுடன் நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 100 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது


முன்னாள் முதல்வர் தமிழ்நாடு செல்வி ஜெ.ஜெயலலிதவுக்கு.

தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் தண்டனை வழங்கப்பட்டது மிக முக்கியமான தீர்ப்பாக தனி நீதிமன்றத்தின் நீதிபதி மைக்கேல் டி குன்ஹா வழங்கிய தீர்ப்பு அமைந்த நிலையில், 2015 ஆம் ஆண்டு ஜெயலலிதாவிற்கு எதிரான அந்தத் தீர்ப்பை கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி தள்ளுபடி செய்தார்.


ஆதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடுகள் செய்யப்பட்ட நிலையில், 2016 ஆம் ஆண்டு ஜெ.ஜெயலலிதா உயிரிழந்த நிலையில் தண்டனையில் இருந்து மட்டும் அவர் நீக்கம் செய்து அபராதம் விதிக்கப்பட்டது பின்பு, 2017 ஆம் ஆண்டு இந்த வழக்கில் வழங்கிய தீர்ப்பிலிருந்து வி.கே.சசிகலா நடராஜன், ஜெ.இளவரசி. வி.என்.சுதாகரன்  உள்ளிட்டோரை குற்றவாளிகளாக அறிவித்ததோடு தண்டனையையும் உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.   இந்த நிலையில் நகைகள் மீது உரிமை கொண்டாடிய ஜெ.ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமார் மகன் தீபக் மற்றும் மகள் தீபா ஆகியோரின் மனுக்களை பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் மற்றும் கர்நாடகா உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்த நிலையில், அதற்கெதிராக தீபா சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.


தில் சட்டப்படி எங்கள் அத்தைக்கு நாங்கள் தான் வாரிசு. எனவே அவருடைய சொத்துக்கள் மீது எங்களுக்கு முழு உரிமை உள்ளது. எனவே அரசின் கருவூலத்தில் உள்ள நகைகள் உள்ளிட்டவற்றை எங்களிடமே ஒப்படைக்க வேண்டுமென தீபா அந்த தாக்கல் செய்த மனுவில் கேட்டுக் கொண்டுள்ள நிலையில் இதில் பொது நீதி யாதெனில்:- இவர் தான் செல்வி ஜெ.ஜெயலலிதாவின் உண்மையான வாரிசு எனில் ஜெ.ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட அபராதம் 100 கோடியை இவரிடமிருந்தது வசூல் செய்யவும் நடவடிக்கைகள் தேவை தான். தீர்ப்பு வந்த பின்னர் இதுவே விவாதமாக மாறும்  சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு பெங்களூரு தனிக்கோர்ட்டு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. மேலும்  முதல் குற்றவாளி ஜெ.ஜெயலலிதாவுக்கு ரூபாய்.100 கோடியும், மற்ற மூன்று பேருக்கும் தலா ரூபாய்.10 கோடியும் அபராதம் விதித்து  தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ரத்து செய்து, அவர்கள் 4 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டது. ஆனால் மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் தனி நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்து உத்தரவிட்டது.

இந்தத் தீர்ப்பு வந்தபோது, ஜெ.ஜெயலலிதா மரணம் அடைந்த காரணத்தால், அவரது பெயர் மட்டும் தீர்ப்பில் தண்டனையிலிருந்து கைவிடப்பட்டது. ஆனால் அபராதம் விதிக்கப்பட்டது சசிகலா உள்பட மற்ற 3 பேரும் பெங்களூரு பிரப்பனஅக்ரஹாரா சிறையில் தண்டனையை அனுபவித்தனர். சசிகலாவும், இளவரசியும் அபராதத் தொகையைச் செலுத்தினர். ஆனால் சுதாகரன் அபராத் தொகையைச் செலுத்தாததால் கூடுதலாக ஓராண்டு காலம் சிறைத் தண்டனையை அனுபவித்த நிலையில் பெங்களூருவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்தி, பெங்களூரு நகரத்தின் சிவில் நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்தார். சொத்து குவிப்பு வழக்கில் ஜெ.ஜெயலலிதா உள்பட 4 பேரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 29 வகையான பொருட்களை ஏலம் விட கர்நாடக மாநிலத்தில் உள்ள அரசுக்கு உத்தரவிடக் கோரினார். இந்த மனு மீது நீதிபதி மோகன் முன்னிலையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

அதற்கிடையே தாங்கள் ஜெ.ஜெயலலிதாவின் வாரிசுகள் என்பதால் அவரது சொத்துகளை எங்களிடம் ஒப்படைக்க வேண்டுமென்று கோரி தனி நீதிமன்றத்தில் ஜெ.தீபா, ஜெ.தீபக் ஆகியோர் தாக்கல் செய்த மனு சமீபத்தில் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் பொருட்களை ஏலம் விடக்கோரி தாக்கல் செய்த வழக்கு விசாரணை பெங்களூரு நகரத்தின் சிவில் நீதிமன்றத்தில் நீதிபதி மோகன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

கர்நாடக அரசு சிறப்பு வக்கீல் கிரண் ஜவளி சார்பில் அவரது இளநிலை வக்கீலும், தமிழ்நாடு ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்சஒழிப்புத் துறை அலுவலரும் ஆஜரானார்கள். வழக்கு விசாரணையின் போது, கர்நாடக அரசு வக்கீல், இந்த வழக்கில் சோ்க்கப்பட்டுள்ள நிறுவனங்கள் மற்றும் ஏலம் விடப்படக்கூடிய சொத்துகள் குறித்த பட்டியலை மூடிய கவரில் தாக்கல் செய்தார்.

அதைத்தொடர்ந்து நீதிபதி மோகன், சொத்து குவிப்பு வழக்கில் தொடர்புடைய சொத்துகளை மட்டுமே ஏலம் விட முடியும் என்றும், புடவைகள், செருப்புகள் உள்ளிட்ட 28 வகையான பொருட்களை ஏலம் விட முடியாதென்றும் கூறினார்.

மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய முடக்கப்பட்டுள்ள வங்கிக் கணக்குகளில் உள்ள டெபாசிட் தொகை குறித்த விவரங்களை சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு கடிதம் எழுதி அதன் டெபாசிட் விவரங்களைப் பெற வேண்டும் என்று நீதிமன்றத்தின் அலுவலருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் அந்த 27 கிலோ தங்க, வைர நகைகள் உள்ளிட்ட நிறுவனங்களின் சொத்துகளின் இன்றைய மதிப்பு குறித்தும் தெரிவிக்கும் படி அரசு வக்கீலுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

தீர்ப்பில் கூறியுள்ளபடி 27 கிலோ தங்க, வைர நகைகள் உள்ளிட்ட பொருட்களை ஏலம் விட்டு அதில் கிடைக்கும் தொகையில் ரூபாய்.100 கோடியை அபராதமாகச் செலுத்த வேண்டும் என்றும், மீதமுள்ள தொகையில் ரூபாய்.5 கோடியை கர்நாடக மாநிலத்தில் அரசுக்கு தமிழ்நாடு அரசு வழக்கு செலவு தொகையாக வழங்க வேண்டும் என்றும் நீதிபதி கூறினார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் பிடித்த தெரு நாய்கள் டிரஸ்டில் ஒப்படைக்கப்பட்டது

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தெரு நாய்களைப் பிடித்த பின் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட்டுக்குச் சொந்தமான பாதுகாப்புக் கூடத்தில் ஒப்படைப்பு புதுக்கோட்டையில் தெருக்களில் சுற்றித் திரித்த தெரு நாய்கள் நகராட்சி நிர்வாகம் மூலம் பிடிக்கப்பட்டு இலுப்பூர் பைரவர் சாரிடபிள் டிரஸ்ட் நாய்கள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை பூங்கா நகர், சாந்தநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை. அதிகமானதாக நகராட்சிக்கு புகார்கள் வந்ததையடுத்து நாய்களைப் பிடித்து என்ன செய்வதென்று தெரியாமல் நகராட்சி நிர்வாகத்தினர் இருந்த நிலையில்  நகராட்சி ஆணையாளர்  இலுப்பூரில் செயல்படும் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற நிறுவனம் தெருநாய்களை பராமரிப்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்படுவதாக அறிந்து பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் யக்குனர் ஆர்.வீர சரத்பவாரை அழைத்துப் பேசியதையடுத்து நாய்களை பராமரிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மூலம் தெருக்களில் சுற்றி திரிந்த 42 தெரு நாய்களை பத்திரமாகற பிடிக்கப் பட்டு இலுப்பூர் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட் டதைத் தொடர்ந்து அவர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...