முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

டெல்லியின் புதிய முதலமைச்சராக ரேகா குப்தா இன்று ராம்லீலா மைதானத்தில் பதவி ஏற்கிறார்

டெல்லியின்  புதிய முதலமைச்சராக ரேகா குப்தா ஆட்சி அமைக்க உரிமை கோரினார்,


துணைநிலை ஆளுநர் அதை ஏற்றுக்கொண்டார்.

டெல்லியின் அடுத்த முதலமைச்சராக திருமதி ரேகா குப்தா பிப்ரவரி மாதம் 20 ஆம் தேதியான இன்று பதவியேற்பார்.


பிப்ரவரி மாதம் 19, ஆம் தேதி 2025 நேற்று புது தில்லியிலுள்ள பாரதிய ஜனதா கட்சியின் மாநில அலுவலகத்தில், ரேகா குப்தா அடுத்த டெல்லி முதல்வராக அறிவிக்கப்பட்டார்.



பாரதிய ஜனதா கட்சி ரேகா குப்தாவை டெல்லி சட்டமன்றக் கட்சித் தலைவராக அறிவித்தது . பிப்ரவரி மாதம் 20 ஆம் தேதி இன்று பதவியேற்பு விழாவின் போது அவர் டெல்லியின் அடுத்த முதலமைச்சராகப் பொறுப்பேற்பார்.


டெல்லியின் அடுத்த முதல்வர், அமைச்சர்களை வரவேற்க ராம்லீலா மைதானத்தில் தளங்கள் சுத்தம் செய்யப்பட்டன.

டெல்லியின் நான்காவது பெண் முதல்வர் திருமதி ரேகா குப்தா ஆவார். சுஷ்மா ஸ்வராஜ், ஷீலா தீட்சித் மற்றும் அதிஷி ஆகியோர் இந்தப் பதவியை வகித்த மற்ற பெண்களாவார்கள்.


 பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள், தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் மற்றும் பிற முக்கியப் பிரமுகர்கள் இன்று வியாழக்கிழமை (பிப்ரவரி 20, 2025) நடைபெறும் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வார்கள் என கட்சியின் உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவித்துள்ளது .


விழாவிற்கு முன்னதாக இசை மற்றும் பாடல்கள் இடம்பெறும் கலாச்சார நிகழ்ச்சி நடைபெறும். விழாவிற்கு சுமார் 30,000 விருந்தினர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்காகப் பயன்படுத்தப்பட்ட பிற மாநிலங்களைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்கள் மற்றும் ஊழியர்களும் விழாவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.  டெல்லி முதல்வரின் 'வரலாற்றுச் சிறப்புமிக்க, பிரமாண்டமான' டெல்லி யூனியன் பிரதேச சட்டமன்றக் கட்சித் தலைவராக ரேகா குப்தாவை பாரதிய ஜனதா கட்சி அறிவித்தது. 

"ஒரு சாதாரண கட்சி ஊழியர் மீது பிரதமர் மோடி மற்றும் ஆர் எஸ் எஸ் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளார்": டெல்லி முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட ரேகா குப்தா கூறுகையில், "பிரதமர் நரேந்திர மோடி என்னைப் போன்ற ஒரு சாதாரண கட்சி ஊழியர் மற்றும் மகள் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளார். அவரது எதிர்பார்ப்புகளை நான் நிறைவேற்றுவேன்" என்றார்.


டெல்லி முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட ரேகா குப்தாவை ஏராளமான மக்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் வீட்டில் வரவேற்றனர். ஷாலிமார் பாக் இல்லத்தை அடைந்தபோது, ​​ஏராளமான ஆதரவாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களால் வரவேற்கப்பட்டார்.

இன்று ராம்லீலா மைதானத்தில் டெல்லி முதல்வராக அவர் பதவியேற்க உள்ளார்.டெல்லியில் ஆட்சி அமைக்க ரேகா குப்தாவுக்கு துணை நிலை ஆளுநர் சக்சேனா அழைப்பு

டெல்லி லெப்டினன்ட் கவர்னர் வி.கே. சக்சேனா, பாஜகவின் புதிய முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள ரேகா குப்தாவை புதிய அரசாங்கத்தை அமைக்க அழைப்பு விடுத்துள்ளார்.


பிப்ரவரி 19, 2025 அன்று நடைபெற்ற பாஜக சட்டமன்றக் கட்சிக் கூட்டத்தில், முதல் முறையாக உறுப்பினரான ரேகா குப்தா டெல்லி சட்டமன்றத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் 10 ஆண்டுகால ஆட்சி முடிவுக்கு வந்தது. டெல்லி சட்டமன்றத்தில் பாஜக சட்டமன்றக் கட்சித் தலைவர் ரேகா குப்தா, துணைநிலை ஆளுநர் வி.கே. சக்சேனாவை ராஜ் நிவாஸில் சந்தித்து, டெல்லியின் NCT ன் புதிய அரசாங்கத்தை அமைக்க தனது உரிமைகோரலை முன்வைத்த நிலையில் துணை நிலை ஆளுநர் அந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, புதிய அரசாங்கத்தை அமைக்க அவரை அழைத்தார்.  ரேகா குப்தாவின் தந்தை ஜெய் பகவான். இந்தியன் வங்கியில் பணிபுரிந்து. 1972-73 ஆம் ஆண்டில் அவர் மேலாளராக பொறுப்பேற்ற போது, ​ டெல்லிக்கு மாற்றப்பட்டார். அதன் பிறகு குடும்பம் டெல்லிக்கு குடிபெயர்ந்தது. இதன் காரணமாக, ரேகா குப்தாவின் பள்ளிக் கல்வி, பட்டப்படிப்பு மற்றும் எல்.எல்.பி படிப்புகள் டெல்லியில் மட்டுமே இருந்தன ரேகா குப்தா 1998 ஆம் ஆண்டு  தொழிலதிபர் மனிஷ் குப்தாவை மணந்தார். பார்க்கலாம் ஒன்று பட்ட இந்தியா உருவாகும் முன்னர் குப்தர்கள் காலம் பொற்காலம் தான் ஆனால் அந்த நிலை இப்போது வருமா ... காத்திருப்போம் கனவுகளுடன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...