தலைமைச் செயலகத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில்
அனைத்துக்கட்சி நடந்தது. கூட்டத்தில் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக தீர்மானம் கொண்டுவரப்
பட்டு நிறைவேற்றப்பட்டது நாடு முழுதும், நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகள், 2026 ஆம் ஆண்டு மறுவரையறை செய்யப்பட உள்ளது. மக்கள் தொகை அடிப்படையில், இந்தப்பணிகள் நடந்தால், தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில், எட்டு தொகுதிகள் குறைய வாய்ப்புள்ளதென, முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை வகித்தார். ஏற்கனவே, கூட்டத்தில் பங்கேற்குமாறு தமிழ்நாட்டில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது அ.தி.மு.க., த.வெ.க., அ.ம.மு.க., என மொத்தம் 58 கட்சிகள் பங்கேற்றுள்ளன. அனைத்துக்கட்சி கூட்டத்தில் 5 கட்சிகள் மட்டும் புறக்கணித்து பங்கேற்கவில்லை
அதில் பாரதிய ஜனதா கட்சி, நாம் தமிழர், தமிழ் மாநில காங்கிரஸ், புதிய தமிழகம், புதிய நீதி கட்சி ஆகியவை புறக்கணிப்பு செய்தனர். கூட்டத்தில் அ.தி.மு.க., சார்பில் டி. ஜெயக்குமார், மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் மதிமுக சார்பில் வைகோ தவெக சார்பில் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.தொகுதி மறுசீரமைப்பு குறித்து அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களது கருத்துகளைத் தெரிவித்தனர். நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகள் மறுசீரமைப்புக்கு எதிராக, தென் மாநில நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டுக் குழு அமைக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்த முக்கியத் தீர்மானங்கள்:
மக்கள் தொகையின் அடிப்படையில் நாடாளுமன்ற மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பை இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒரு மனதாக கடுமையாக எதிர்க்கிறது. நாட்டின் நலனுக்காக மக்கள் தொகைக் கட்டுப்பாட்டை முனைப்பாகச் செயல்படுத்திய ஒரே காரணத்திற்காக தமிழ்நாடு உட்பட தென் மாநிலங்களில் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் குறைக்கப்படுவது முற்றிலும் நியாயமற்றது.
தொகுதி மறுசீரமைப்பை 30 ஆண்டுகள் ஒத்திவைக்கப்படும் என்று நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி உறுதியளிக்க வேண்டும். மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்பை தமிழ்நாடு கடுமையாக எதிர்க்கிறது.
தென் மாநில நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட கூட்டு நடவடிக்கைக் குழுவை அமைக்க வேண்டும். தொகுதி மறு சீரமைப்புக் குறித்து விழிப்புணர்வு இந்தக் கூட்டு நடவடிக்கைக் குழு முன்னெடுக்கும். தொகுதி சீரமைப்பு குறித்து அவை சார்ந்த போராட்டங்களை இந்தக் குழு முன்னெடுக்கும். இவ்வாறு முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார். பின்னர் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கருத்துகள்