முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஔரங்கசீப்பின் கல்லறையை அகற்றக் கோரி நாக்பூரில் வலதுசாரி அமைப்பு நடத்திய போராட்டம் 144 தடை உத்தரவு

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில்  திங்கள்கிழமை முதல் ஔரங்கசீப்பின் கல்லறையை


அகற்றக் கோரி வலதுசாரி அமைப்பு நடத்திய போராட்டத்தின் போது இரு குழுக்களிடையே ஏற்பட்ட தகராறில் பதற்றம் அதிகரித்தது, இது நாசவேலை மற்றும் தீ வைப்புக்கு வழிவகுத்தது. 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது 

நாக்பூரின் மஹால் பகுதியில் பல வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன, கற்கள் வீசப்பட்டன. கூடுதலாக, தீக்கிரையாக்கப்பட்ட வாகனங்களில் வெடிச்சத்தங்கள் கேட்டன. இரண்டு ஜேசிபிகள் தீப்பிடித்து எரிந்ததாகவும், ஒரு தீயணைப்பு வீரர் காயமடைந்ததாகவும் தீயணைப்பு படை அலுவலர் ஒருவர் தெரிவித்தார்.  அவுரங்கசீப் விவகாரத்தில் நாக்பூரில் அமைதி மார்கத்தினர் வன்முறை. தேவேந்திர பட்னவிஸ் ஆட்டத்தைத் தொடங்கினர். கலவரம் செய்த ஒருவரையும் விடப்போவதில்லையாம்.   குல்டாபாத் நகர், சத்ரபதி சம்பாஜி நகரிலிருந்து முன்னதாக ஒளரங்காபாத் 25 கிலோமீட்டர் தொலைவிலுள்ளது.

ஒளரங்கசீப்பின் கல்லறை இந்த நகரில் அமைந்துள்ளது. ஒளரங்கசீப்பின் கல்லறையை இடிக்க வேண்டும் என்ற கோரிக்கை தற்போது வலுப்பெற்று வருகிறது. ஒளரங்கசீப் கல்லறையின் நுழைவாயிலில் ஓர் அறிவிப்பு வைக்கப்பட்டிருந்தது.

இது பாதுகாக்கப்பட்ட சின்னம். இதைச் சேதப்படுத்துவோருக்கு இந்திய தொல்லியல் ஆய்வுச் சட்டத்தின் கீழ் 3 மாத சிறை அல்லது 5000 ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. 300 ஆண்டுகளுக்கு முன் என்ன நடந்தது என்பது குறித்து வரலாறு அறிந்தவர்களுக்கு நன்கு தெரியும். அஃப்சல் கானின் கல்லறை சத்ரபதி சிவாஜி மகராஜ் மற்றும் அவரது சந்ததியினரால் இன்று வரை பாதுகாக்கப்படுகிறது.


அப்படி, முகலாய கடைசி பேரரசர் ஒளரங்கசீப்பின் கல்லறையும் கடந்த 300 ஆண்டுகளாகப் பாதுகாக்கப்பட்டுள்ளது குல்டாபாத் மத மற்றும் வரலாற்றுப் பாரம்பரியம் கொண்டது. குல்டாபாத் பழங்காலத்தில் 'பூமியிலுள்ள சொர்க்கம்' எனறழைக்கப்பட்டது. பத்ர மாருதி இங்குள்ள புகழ்பெற்ற இஸ்லாமிய மதத் தலமாகும். குல்டாபாத் பகுதியில் கிரிஜி கோவில், தத் கோவில் ஆகியவையும் அமைந்துள்ளன.குல்டாபாத்தில் 52 பகுதிகள் உள்ளன. பிராமின் வாடா, பில் வாஜா, கும்பர் வாடா, சம்பர் வாடா, டோபி வாடா, சாலி வாடா, இமாம் வாடா ஆகியவை இதில் அடங்கும்.குல்டாபாத்தின் மக்கள் தொகை ஒரு லட்சத்து 40 ஆயிரம். வெருல் குகை முதல் ஒளரங்கசீப் கல்லறை வரை பார்ப்பதற்காக சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகின்றனர். உலகப் புகழ் பெற்ற வெருல் குகை குல்டாபாத்தில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.டெல்லியின் பேரரசராக சகோதர்களைப் படுகொலை செய்து ஆட்சியில் இருந்த ஒளரங்கசீப், அகில்யாநகரில் (அப்போது அஹமத்நகர்) உயிரிழந்தார். அவரது உடல் அதன் பிறகு குல்டாபாத்திற்கு கொண்டு வரப்பட்டது.


தனது மரணத்திற்குப் பிறகு தனது தர்ஹா அல்லது சமாதி, ஆன்மீக ஆசான் சையத் ஜைனூதீன் சிராஜியின் சமாதிக்கு அருகிலிருக்க வேண்டும் என்று மன்னர் ஒளரங்கசீப் தனது உயிலில் எழுதியிருந்தார்.





ஒளரங்கசீப் படிக்கும் பழக்கம் கொண்டவர். இதில் அவர் சிராஜியை தொடர்ந்தார். அதன் பின்னர், சிராஜியின் அருகே கல்லறை கட்டப்பட வேண்டும் என ஒளரங்கசீப் தனது உயிலில் எழுதியிருந்ததாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.


ஒளரங்கசீப்பின் இறப்புக்குப் பிறகு, அவரது மகன் அஷம் ஷா அவரது கல்லறையை குல்டாபாத்தில் கட்டினார். ஒளரங்கசீப்பின் கல்லறை அவர் குருவாகக் கருதிய ஜைனுதீன் சிராஜியின் கல்லறைக்கு அருகே அமைந்துள்ளது.

அந்த நேரத்தில் இந்தக் கல்லறையைக் கட்ட 14 ரூபாய் 12 அணா செலவானதாகச் சொல்லப்படுகிறது.கடந்த கால வரலாற்றின் கசப்பான பக்கங்களை எடுத்து  மத அரசியலுக்கு தீனி போட்டுள்ளது, சாவா (chavva) திரைப்படம்.  இது சத்ரபதி சிவாஜியின் மகன் சம்பாஜியின் வரலாறு சம்பந்தப்பட்டதாகும். மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ள இந்தப் படத்தை லக்ஷமன் உடேகர் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் விக்கி கவுஷால் மராத்திய மன்னர் சம்பாஜி மகாராஜாவாகவும், அக்ஷய் கண்ணா ஔரங்கசீப்பாகவும் நடித்திருந்தனர். 



இந்தத்  திரைப்படம் முகலாயர்களுக்கு எதிரான மராத்திய மன்னனின் வீரஞ்செறிந்த போராட்டத்தையும்,இறுதியில் அவர் கைது செய்யப்பட்டு கொல்லப்பட்டதையும் கொடூரமாக சித்தரிக்கிறது. 




எனவே, இந்தப் படம்  ஹிந்துத்துவ உணர்வையும், மராத்திய இன உணர்வையும் ஒருசேர உசுப்பி இஸ்லாமியர்களுக்கு எதிரான சிந்தனையோட்டத்தை ஏற்படுத்தக் கூடியது என்பதை திரைப்பட தணிக்கை துறை உணர்ந்து கைவைக்க வேண்டிய இடங்களில் கை வைத்திருக்கலாம் ஆனால் தவற விட்டு விட்டு


இன்றைக்கு மகாராஷ்டிராவில் நாக்பூர் தீ பிடித்து எரிகிறது.  பாபர் மசூதி பிரச்சினைகள் போல ஔரங்கசீப்  சமாதியை இடிக்க ஒரு வலதுசாரிக் கூட்டம் கிளம்பியது. நாக்பூரில் விஸ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங்தளம் நடத்திய போராட்டத்தில் மதச் சண்டைக்கு அம்சங்கள் தூக்கலாக வெளிப்பட்டது. இதற்கு உத்தவ் தாக்கரே, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவின் இரு பிரிவுகளும், ராஜ் தாக்கரேவின் எம்என்எஸ் கட்சி போன்ற அரசியல் கட்சிகளின் ஆதரவும் கிடைத்துள்ளது.



இந்தப் படத்தை குறித்து மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ்  பேசியுள்ளது இதன் ஒப்புதல் வாக்குமூலமாகிறது.

"சத்ரபதி சம்பாஜி மகாராஜாவின் வரலாற்றை ‘சாவா’ திரைப்படம் மக்களுக்கு எடுத்துச் சொன்னதன் மூலம் அவர்களின் உணர்ச்சிகளைத் துண்டிவிட்டுள்ளது. அத்துடன், முகலாய மன்னர் ஔரங்கசீப் மீதான பொதுமக்களின் கோபத்தையும் அந்தப் படமே தூண்டிவிட்டுள்ளது’’ எனக் கூறியுள்ளார், தேவேந்திர பட்னாவிஸ்.



இது ஒருபுறமிருக்க, மராட்டிய மாநிலத்தில் சட்டப் பேரவையின் தற்போதைய பட்ஜெட் கூட்டத் தொடரில் பேசிய சமாஜ்வாதி கட்சி சட்ட மன்ற உறுப்பினர் அபு ஹாஸ்மி, ‘’ஔரங்கசீப் நடவடிக்கையை பாராட்டியதுடன், அவரது புகழ் வாழ்க’’ என கோஷமிட்டு எரியும் நெருப்பில் எண்ணெய் வார்த்துள்ளார். இந்த வார்த்தை ஹிந்துக்களை உசுப்பிவிட்டு, இஸ்லாமியர்களின் இயல்பு வாழ்க்கைக்கு உலை வைக்கும் என்ற அடிப்படை சிந்தனை கூட அவருக்கு இருக்காதா? அல்லது அரசியல் ஆதாயத்திற்காக இஸ்லாமியர்களின் வாழ்வை பணயம் வைத்தாரா? என்பது தெரியவில்லை.



வாழ்ந்து முடிந்தவர்களின் வரலாற்றை தோண்டி எடுத்து பார்ப்பதன் மூலம் நிகழ்கால வாழ்வை நரகமாக்கிக் கொள்வதற்கான புரிதலை தருவது நல்ல படைப்பாகாது. மாறாக, கடந்த கால தவறுகளை மீண்டும் யாரும் செய்துவிடாதபடிக்கு  சகோதர இணக்கத்தையும், சகிப்புத் தன்மையையும் ஏற்படுத்துவதே ஆகச் சிறந்த படைப்பாகக் கருத முடியும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...