முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கோயம்புத்தூர் வாங்கிய லஞ்சதை கோவில் குளத்தில் வீசி தப்பிக்க முயன்ற கிராம நிர்வாக அலுவலர் கைது பணம் பறிமுதல்

கோயம்புத்தூர் தொம்பிலிபாளையம் கிருஷ்ணசாமி.


தனக்கு வாரிசு சான்றிதழ் வாங்குவதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்திருந்தார். 


சான்றிதழ் சட்டப்படி வரவேண்டிய நாட்கள் கடந்த நிலையில் வழங்குவதற்கு தாமதம் ஆன நிலையில் மத்வராயபுரம்  கிராம நிர்வாக அலுவலகத்திற்குச் சென்று அங்கு கிராம நிர்வாக அலுவலர் வெற்றிவேலை, கிருஷ்ணசாமி அணுகிய போது வெற்றி வேல், வாரிசு சான்றிதழ் தரவேண்டுமானால் ரூபாய் 3500 ஐ லஞ்சமாகத் தரவேண்டும் எனக் கேட்டதாகத் தெரிகிறது. அதனால் அதிர்ச்சியடைந்த கிருஷ்ணசாமி ரூபாய் 3500 லஞ்சத்தை கொடுக்க மறுத்தார்."வாரிசு சான்றிதழுக்காக எல்லா ஆவணங்களும் சரியாக இணைக்கப்பட்டிருக்கிறது. அப்படி இருக்கும் போது எதற்காக ரூபாய் 3500 தர வேண்டும்" என கிருஷ்ணசாமி, வெற்றிவேலிடம் கேட்ட நிலையில் 

அதில் கோபமான கிராம நிர்வாக அலுவலர் "பணம் கொடுக்காமல் நீ எப்படி சர்டிபிகேட் வாங்குறேனு பார்க்கிறேன்" என்ற படியே வெற்றிவேல், வாரிசு சான்றிதழைத் தராமல் காலம் தாழ்த்தி வந்ததாகத் தெரிகிறது. முறையான ஆவணங்கள் இருந்தும் சான்றிதழ் கேட்டு அலைந்து நடையாய் நடந்த கிருஷ்ணசாமி, இந்த விவகாரத்தை ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் தெரிவித்தார். அதையடுத்து கிருஷ்ணசாமி கொண்டு வந்த பணம் அரசு சாட்சிகள் முன்னிலையில் பினாப்தலின்  இரசாயனப் பொடி கலந்த ரூபாய் நோட்டுகளை திரும்ப கிருஷ்ணசாமியிடம் கொடுத்த ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்சஒழிப்புத் லஞ்ச ஒழிப்பு துறையினர், அதை லஞ்சம் கேட்ட கிராம நிர்வாக அலுவலர் வெற்றிவேலிடம் கொடுக்குமாறு கூறினர். அதையடுத்து இரவு, வெற்றிவேலுக்கு போன் செய்த கிருஷ்ணசாமி, "சார் நீங்கள் கேட்ட பணம் தரத்  தயாராக இருக்கிறது. எனக்கு வாரிசு சான்றிதழ் கொடுத்துடுங்க, பேரூர் கிட்ட இருக்கேன், வந்து பணத்தை வாங்கிக்கோங்க" எனக் கூறிய நிலையில்.



அதையடுத்து வெற்றிவேலும், "அப்படிவா வழிக்கு" எனக் கூறிய நிலையில் பேரூருக்கு சென்றார். அங்கு கிருஷ்ணசாமியிடம் ரூபாய் 3500 பணத்தை கிராம நிர்வாக அலுவலர் பெற்ற போது அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அவரை பிடிக்க முயன்றனர்.



அதனால் அதிர்ச்சியடைந்த வெற்றிவேல், தனது பைக்கில் தப்பிச்செல்ல முயன்ற நிலையில். சிறிது தூரத்தில் பேரூர் பெரியகுளத்திற்குள் பணத்துடன் கிராம நிர்வாக அலுவலர் வெற்றிவேல் குதித்தார். அவரை துரத்தி வந்த ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்சஒழிப்புத் லஞ்ச ஒழிப்புத் துறையினரும் குளத்தில் குதித்து வெற்றிவேலைப் பிடித்தனர்.  எனினும் இரசாயனம் தடவிக் கொடுத்த பணம் குளத்தில் விழுந்து விட்டது.


அதையடுத்து வெற்றிவேலை பேரூர் தாலுகா அலுவலகத்திற்கு கூட்டி வந்த  ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்சஒழிப்புத் துறையினர் அவரிடம் விசாரணை நடத்தினர். இதே வேளையில் குளத்தில் விழுந்த இரசாயனப் பொடி தடவிய பணத்தைத் தேடி எடுத்தனர். அதையடுத்து வெற்றிவேலை சோடியம் கார்பனேட்டு கரைசல் சோதனைக்கு உட்படுத்திய ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் சேர்த்தனர்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...

சோழப் பேரரசி வானதி எழுப்பிய மூவர் கோவில்

முதலாம் இராஜேந்திர சோழரின் தாய்  வானவன் மாதேவி எனும் அரசி வானதி, சோழர்களின் வரலாற்றில் பெரும் புகழ் மாமன்னர் அருள்மொழித் தேவன் எனும் இராஜராஜசோழச் சக்கரவர்த்தி மீது இணையில்லாத காதல் மங்கை கொடும்பாளூர் இளவரசி வானதியை "பொன்னியின் செல்வன்" கதை படித்த யாரும் மறக்க முடியாது. சோழர் கடற்படையின் பரப்பை இலங்கை வரை  சென்று வென்று வந்த வரலாற்று நிகழ்வுகளின் மூலம் குறுநில மன்னர்கள் அல்லது வேளிர்  துணை நின்றார்கள் அதில் ஈழத்துப் பட்டம்  வென்ற கொடும்பாளூர் வேளிர் மகளான வானதி இளம் வயதிலேயே தாய் தந்தையை இழந்தவர். கொடும்பாளூர் சிற்றரசன் அதாவது வேளிர் சோழ சாம்ராஜ்யத்தின் சேனாதிபதி யாகவும் இருந்த சிறிய தந்தை குறுநில மன்னர் பூதி விக்ரமகேசரியால் வளர்க்கப்பட்டவர் தான் வானவன் மாதேவி எனும் அரசி வானதி. கொடும்பாளூர் பிறந்து திருக்கோவிலூரை பின்னர் ஆண்ட மலையமானின் மகள்  “மேலும் வானவன்மாதேவி மன்னர் ராஜராஜ சோழர் மறைந்த உடன் பிரிவாற்றாமல் உடன்கட்டை ஏறி தன் உயிரை மாய்த்துக் கொண்டாள். இதை திருவாலங்காட்டுச் செப்பேடுகள் மூலம் அறியலாம் ஈழத்தில் நடைபெற்ற யுத்தத்திற்காக கொடும்பாளூர்  வேளிர் கடல...