முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இங்கிலாந்தை இசையால் ஆட்சி செய்த இசைஞானி

ஒருங்கிணைந்த மதுரை ஜில்லா தற்போது தேனி மாவட்டத்தில்


உத்தமபாளையம் தாலுகா, பண்ணைப்புரத்தில் கரியமனம்பட்டி பாவலர் வரதராஜனின் தம்பிகள் ஒரே தந்தையின் இரு தாய் மக்கள்

எஸ்டேட் கங்காணியாக பட்டியல் ஜாதி மக்கள் பகுதியில் பிறந்தாலும் அணைத்து மக்கள் வாழ்வில் கலந்து கம்யூனிஸ சித்தாந்தம் கொண்ட பாடல்கள் மூலமாக அழகிய இசைப்பயணம் வந்தவர்கள். வரதராஜனின் தம்பி இராஜையாவாக தெருக் கச்சேரி கடந்து அண்ணக்கிளி திரைப்படத்தில் தூயவன் மூலம் பஞ்சு அருணாசலம் அறிமுகம் செய்து பிரபலமான இசைஞானியாக இந்தியத் தெருக்களில் வலம் வந்த செல்லப்பிள்ளை நமது இளையராஜா ஆனால்  இன்று உலகில் யாராலும் நினைத்துப் பார்க்காத ஒரு சாதனை!


பல ஆண்டுக்கணக்கில் யோசித்து எழுதப்படும் இசைக் குறிப்பு சிம்பொனியை  34 நாட்களில் எழுதி முடித்துள்ளார், இசையமைப்பாளர் இளையராஜா!

மார்ச் மாதம் 8- ஆம் தேதி இங்கிலாந்தின் தலைநகர் லண்டனில் ஈவெண்டிம் அப்பல்லோ அரங்கில் வேலியன்ட் (Valiant) பெயரில், இளையராஜா உருவாக்கிய முதல் சிம்ஃபொனி வெளியிடப்பட்டது இலண்டன் செல்வதற்கு விமான நிலையத்திற்கு வந்த இசையமைப்பாளர் இளையராஜாவை அங்கிருந்த செய்தியாளர்கள் மறித்துக்  கேட்க

அவர் மகிழ்ச்சியோடு பேட்டி தருகிறார். மகிழ்வில் திளைத்த அவரது முகம் சட்டென்று அதிர்ந்து மாறும்படி, அந்தச் சூழலுக்கு தேவையற்ற கேள்விகளும்  வீசப்படுகிறது!


முக்கிய இசைக்  கலைஞானியுமான பிரமுகரிடம் எந்தத் தருணத்தில் பேட்டி எடுக்கிறோமோ, அது தொடர்பான கூடுதல் விபரம் தெரிந்தது கொண்ட பின்னர் விளக்கத்தையோ, தகவல்களையோ பெறுவதற்காக கேள்விகள் கேட்டிருந்தால், அது மிகவும் பயனுள்ளதாக அமையும்.

ஆனால், அந்தச் சூழலுக்கு முற்றிலும் பொருத்தமற்ற ஒரு கேள்வியை, பரபரப்புக்காக கேட்பது கண்டிப்பாகத் தவிர்க்கப்பட வேண்டும். அவர் முகம் வாடியதையும், மகிழ்வான தருணம் மாறி உள்ளத்தில் கொந்தளிப்பை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அவர் மேலும் பேசியதையும் பார்த்த போது  மனம் பதைத்தது, அவரை மிகத் தீவிரமாக நேசிக்கும் பல கோடி ரசிகர்கள் மனம் துடித்திருக்கும். இது ஊடகத்தினர் மீதுள்ள மரியாதையைத் தகர்த்துவிடும் என்பதை அறியாத அறிவிலிகள் வந்த நிலையில். 

இளையராஜா மீது நமக்கு ஆயிரம் தனித்த விமர்சனங்கள் இருந்தாலும், ஒரு மாபெரும் சாதனையை நிகழ்த்தும் சமயத்தில் – அந்தச் சாதனையில் ஒட்டுமொத்த இந்தியாவும், தமிழ் மொழி சார்ந்த சமூகமும் பெருமைப்படலாம். சமயத்தில்  இவற்றையெல்லாம் புறந்தள்ளி அவரைக் கொண்டாடி மகிழ வேண்டியது  ஊடகத்தின் கடமை.

தமிழ் அச்சு மற்றும் காட்சி ஊடகங்களின் தலைமைப் பொறுப்பிலுள்ளவர்கள் இந்த இளம் பத்திரிகையாளர்களை சரியாக வழி நடத்த வேண்டும் என்பதே நமது அவா.. இசைஞானி இளையராஜா நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் வருத்தப்பட்ட நிகழ்வையே பிரேக்கிங் செய்தியாக்கி, பார்வையாளர்கள் கவனத்தை ஈர்க்கும் முன்னெடுப்புகள் கவலையளிக்கிறது. இந்த அளவுக்கு விவஸ்தையில்லாமல்  ஊடகங்கள் வேகமாக பயணிப்பதிலிருந்து எப்போது விடுபடுவார்களோ..? தெரியவில்லை.



கடந்த அரை நூற்றாண்டாக நம்  வாழ்வில் இன்ப, துன்பங்களில் இணைந்து பயணிக்கும் அவரது இசைச் சேவைக்கு அவரை வாழ்நாளில் மரியாதையோடு மகிழ்விக்க வேண்டும்.



கட்சி சார்ந்து, அரசியல் சார்ந்து, அதிகார மையங்கள் சார்ந்து..அவர் இயங்கும் தருணங்களில் நாம் அவரோடு முரண்படலாம். அது அந்தத் தருணத்தின் வெளிப்பாடு தானேயன்றி, அதுவே நிரந்தரமானதல்ல!



இசைஞானி இளையராஜா தமிழ் சமூகத்தின் மாபெரும் பொக்கிஷம்! அதே சமயம் நாம் மட்டுமே அவரைக் கொண்டாட முடியாத அளவுக்கு இன்று அவர் சர்வதேசங்களின் பொதுச் சொத்தாகி விட்டார். உலகில் மொழி புரியாதவர்கள் கூட இளையராஜாவின் இசையில் மயங்குகிறார்கள்!



அந்த வகையில்  நம்மை 400 ஆண்டுகள் ஆண்ட ஆங்கிலத்தை நமது இசை நேற்று ஆள்வது  தான் அந்த மகிழ்ச்சி. காதுள்ள அனைத்து இசை ரசிகர்களுக்குமே அவர் காதலராகத் திகழ்கிறார்.  பப்ளிக் ஜஸ்டிஸ் சார்பில் நாமும் வாழ்த்துவோம்..

அவர் கடந்து வந்த பாதையிலிருந்து... இசைஞானி இளையராஜாவை!   முதலில் சிம்பொனி என்றால் என்ன? என்பது அணைவரும் அறிய வேண்டும்.

ஒரு கதை அல்லது ஒரு சம்பவம் அல்லது ஒரு நிகழ்ச்சியை இசை வடிவத்தில் நான்கு பகுதிகளாகச் சொல்வதற்குப் பெயர் தான் சிம்பொனி எளிமையாகச் சொல்ல வேண்டுமென்றால் சிம்பொனி என்பது ஒரு ஆர்கஸ்ட்ரா (Orchestra) அவ்வளவு தான். 


உலகில் பல வகையான ஆர்கஸ்ட்ராக்கள் உள்ளது. அதில் முக்கியமானவை:

1.சேம்பர் ஆர்கஸ்ட்ரா (Chamber Orchestra)

2.சிம்பொனி ஆர்கஸ்ட்ரா (Symphony Orchestra).

16 ஆம் நூற்றாண்டு வரை இசையும் பாடலும் ஒன்றாகக் கலந்தே இருந்த காலம். இசையை மட்டும் தனியாகக் கேட்க முடியவில்லை. அதனால் இசையின் ஆழத்தை அறிந்து கொள்வதற்காக பாடல் இல்லாமல் இசையை மட்டும் கேட்பதற்காக உருவாக்கப்பட்டது தான் சிம்பொனி! இதற்கு சரியான வடிவத்தைக் கொண்டு வந்து இதை புகழ் பெற வைத்தவர் Father of Symphony என்று அழைக்கப்படும் ஜோசப் ஹைடன் (1732 ஆம் ஆண்டு முதல் 1809 ஆம் ஆண்டு வரை). உள்ள காலத்தில் வாழ்ந்தவர் மொசாட் மற்றும் பீத்தோவன் இருவருக்கும் இவர் தான் குருநாதர்.




மீண்டும் சிம்பொனிக்கு வருவோம்.

ஒரு இசை வடிவம் எப்பொழுது சிம்பொனி என்று அழைக்கப்படுகிறது? ஒரு சிம்பொனி எவ்வளவு நேரம் இசைக்கப்பட வேண்டும்? எத்தனை இசைக் கருவிகள் பயன்படுத்த வேண்டும்? எவ்வளவு இசைக் கலைஞர்கள் பங்குபெற வேண்டும்? என்பது முக்கியம்.

ஒரு சிம்பொனி குறைந்தபட்சம் இருபது நிமிடங்கள் இருக்க வேண்டும். 18 முதல் 24 வகையான இசைக் கருவிகள் பயன்படுத்தப்பட வேண்டும். 80 முதல் 120 இசைக் கலைஞர்கள் வரை ஒரு அரங்கத்தில் இதை இசைக்க வேண்டும். 

இந்த எண்ணிக்கையில் ஒன்று குறைந்தால் கூட அது சிம்பொனி ஆர்கஸ்ட்ரா என்று அழைக்கப்படமாட்டாது. மாறாக அது சேம்பர் ஆர்கஸ்ட்ரா என்று தான் அழைக்கப்படும்.

ஏன் இதற்கு இவ்வளவு கட்டுபாடுகள்? எனப் பார்த்தால்.



இதற்கு சிம்பொனி எப்படி உருவாகிறது என்பதை தெரிந்து கொண்டால் இதற்கான காரணத்தைத் தெரிந்து கொள்ளலாம்.

சிம்பொனி நான்கு பகுதிகளாக இசைக்கப்பட வேண்டும் என்பதை முதலில் பார்த்தோம். இப்போது அந்த நான்கு பகுதிகள் எவை? அது எப்படி இருக்க வேண்டும்?

இதை விளக்குவதற்கு இங்கிலாந்து இளவரசியின் திருமணத்தை ஒரு உதாரணமாக எடுத்துக் கொள்வோம்.                1. The Fast Movement: 

காலையில் திருமண நிகழ்ச்சி ஆரம்பிக்கிறது. இது துவக்க நிலை உறவினர்கள், நண்பர்கள், முக்கியப் பிரமுகர்கள்  போன்ற அணைவரும் அங்கு வருகை தர ஆரம்பிப்பார்கள். இப்போது அந்த இடம் கோலாகலமாக இருக்கும். இதை குறிப்பதற்கு இசைத் துள்ளலாக, கொஞ்சம் அதிரடியாக இருக்க வேண்டும்.                                                         -விளம்பரம்-                                

                         -விளம்பரம்-                          
 2.The Slow Movement: 

இப்போது அரண்மனைக்குள் அனைவரும் செட்டில் ஆகியிருப்பார்கள். மணமகன், மணமகள் அங்கு தோன்றுவார்கள்.‌ இப்போது துவக்க நிலை இசையை நன்றாக விரிவுபடுத்தி இசையின் ஆழத்திற்குச் செல்ல வேண்டும். இந்த பகுதி அமைதியானதாக இருக்க வேண்டும். மெலடி டியூன்ஸ் இங்கு அதிகம் வாசிக்கப்படும்.       



     3. The Dance Number:

திருமணம் முடிந்து கேளிக்கை நிகழ்ச்சிகள் ஆரம்பிக்கிறது. இப்போது அந்த இடம் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமாக இருக்கும். இதை குறிக்கும் வகையில் இசை என்பது நடனம் ஆடுவதற்கு ஏற்ற வகையில் இருக்க வேண்டும்.                      4. An Impressive Fast Movement: 

இப்போது அரண்மனைக்குள் தீ பிடித்து விடுகிறது. அனைவரும் அலறி அடித்துக் கொண்டு ஓட ஆரம்பிப்பார்கள். இப்போது அந்த இடம் பதட்டமாக இருக்கும். இதுதான் சிம்பொனியின் உச்சகட்டம். இங்கு இசையில் நிறைய பரிசோதனைகள் செய்து பார்க்கப்படும். இங்கு இசையமைப்பாளர் தன் முழு திறமையையும் காண்பித்து சிம்பொனியை நிறைவு செய்வார்.


இந்த நான்கு பகுதிகளையும் உருவாக்குவதற்கு தான் இருபது நிமிடங்களுக்கு மேல் இசை தேவைப்படுகிறது. இதற்குத்தான் எண்பதுக்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்கள் தேவைப்படுகிறார்கள்.

மிக முக்கியமாக, சிம்பொனி இசையை ஸ்டுடியோவுக்கு உள்ளே உருவாக்கி பின்னர் அதை வெளியிடக் கூடாது. ஒரு பெரிய அரங்கத்தில் 80 க்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்களோடு, ஒவ்வொரு இசையையும் இருபது நிமிடங்களுக்கு மேல் பார்வையாளர்களுக்கு முன்னிலையில் இசைக்கப்பட வேண்டும். அப்பொழுதுதான் அது சிம்பொனியாகக் கருதப்படும்.       


 "
நேற்று இல்லே நாளை இல்லே.     எப்பவும் நான் ராஜா.           கோட்டையில்லே. கொடியுமில்லே.      அப்பவும் நான் ராஜா......  ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா." இளையராஜா.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் பிடித்த தெரு நாய்கள் டிரஸ்டில் ஒப்படைக்கப்பட்டது

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தெரு நாய்களைப் பிடித்த பின் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட்டுக்குச் சொந்தமான பாதுகாப்புக் கூடத்தில் ஒப்படைப்பு புதுக்கோட்டையில் தெருக்களில் சுற்றித் திரித்த தெரு நாய்கள் நகராட்சி நிர்வாகம் மூலம் பிடிக்கப்பட்டு இலுப்பூர் பைரவர் சாரிடபிள் டிரஸ்ட் நாய்கள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை பூங்கா நகர், சாந்தநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை. அதிகமானதாக நகராட்சிக்கு புகார்கள் வந்ததையடுத்து நாய்களைப் பிடித்து என்ன செய்வதென்று தெரியாமல் நகராட்சி நிர்வாகத்தினர் இருந்த நிலையில்  நகராட்சி ஆணையாளர்  இலுப்பூரில் செயல்படும் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற நிறுவனம் தெருநாய்களை பராமரிப்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்படுவதாக அறிந்து பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் யக்குனர் ஆர்.வீர சரத்பவாரை அழைத்துப் பேசியதையடுத்து நாய்களை பராமரிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மூலம் தெருக்களில் சுற்றி திரிந்த 42 தெரு நாய்களை பத்திரமாகற பிடிக்கப் பட்டு இலுப்பூர் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட் டதைத் தொடர்ந்து அவர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...