முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நீதிபதி யஷ்வந்த் வர்மா விவகாரத்தில் இறுதி முடிவை தலைமை நீதிபதி எடுப்பார்

நீதிபதி யஷ்வந்த் வர்மா  விவகாரத்தில் இறுதி முடிவை தலைமை நீதிபதி எடுப்பார்

டெல்லி உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்து வந்த யஷ்வந்த் வர்மாவின் அரசு இல்லத்தில், பொருட்கள் வைக்கும் அறையில் மார்ச் மாதம் 14-ஆம் தேதி இரவு தீப்பிடித்து. எரிந்த நிலையில் பணக் கட்டுகள் சிக்கியது, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணாவுக்கு தெரிவிக்கப்பட்ட உடன் கொலீஜியத்தில் ஆலோசனை நடத்தி, யஷ்வந்த் வர்மாவை அலகாபாத் உயர்நீதிமன்றத்துக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டது.



விசாரணைக்கு டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி உபாத்யாய், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் அறிக்கை தாக்கல் செய்தார்.

எரிந்த நிலையில் மீட்கப்பட்டதாக கூறப்படும் பணத்துக்கும், தனது குடும்பத்தினருக்கும் சம்பந்தமும் இல்லை, தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்த நடந்த சதி என நீதிபதி யஷ்வந்த் வர்மா விளக்கம் அளித்தார். இதனிடையே, இந்த விவகாரம் குறித்து விசாரிக்க 3 நீதிபதிகள் அடங்கிய உள் விசாரணைக் குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்ததில் இமாச்சலப் பிரதேச உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சந்தவாலியா, பஞ்சாப் - ஹரியானா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஷீல்நாகு, கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி அனு சிவராமன்  இடம் பெற்றனர்.


நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட வேண்டும் என்றும், காவல் துறை விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் வலியுறுத்தி வழக்கறிஞர் நெடும்பாரா  உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது, தீ விபத்து குறித்தோ, நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் வீட்டில் பணம் கண்டுபிடிக்கப்பட்டது குறித்தோ என் எஃப்.ஐ.ஆர் பதிவு



செய்யப்படவில்லை எனக் கேள்வி எழுப்பினார்.

மேலும், நீதிபதி வர்மா மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த அமைக்கப்பட்ட மூன்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் கொண்ட குழுவின் அதிகார வரம்பு குறித்து அவர் கேள்வி எழுப்பினார்.

நீதிபதி யஷ்வந்த் வர்மா விசாரணைக் குழு முன் ஆஜராவதற்கு முன்பு வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

நீதிபதி வர்மாவோ, அல்லது அவரது குடும்ப உறுப்பினர்களோ தனது வீட்டின் சேமிப்பு அறையில் ஒருபோதும் பணத்தை வைத்ததில்லை என்று கூறினார். எரிந்த பணம் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படும் தனது இல்லத்திலிருந்து டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா, புதன்கிழமை உள் விசாரணைக் குழுவின் முன் ஆஜராவதற்கு முன்பு வழக்கறிஞர்கள் குழுவைச் சந்தித்தார்.


ஆதாரங்களின் படி, உயர் நீதிமன்ற நீதிபதி, மூத்த வழக்கறிஞர்களான சித்தார்த் அகர்வால், மேனகா குருசாமி, அருந்ததி கட்ஜு மற்றும் வழக்கறிஞர் தாரா நருலா ஆகியோரிடமிருந்து சட்டக் கருத்தைக் கேட்டார். அவர்கள் லுட்யன்ஸ் டெல்லி இல்லத்திற்குச் சென்றனர். உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட மூன்று பேர் கொண்ட குழு இந்த வாரம் நீதிபதி வர்மாவைச் சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நீதிபதி வர்மா மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தும் குழு, செவ்வாய்க்கிழமையன்று அவரது 30 வது துக்ளக் கிரசென்ட் இல்லத்திற்குச் சென்றது. பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி ஷீல் நாகு, ஹிமாச்சலப் பிரதேச உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி ஜி.எஸ். சந்தவாலியா மற்றும் கர்நாடக உயர் நீதிமன்றத்தின் நீதிபதி அனு சிவராமன் ஆகியோர் நீதிபதி வர்மாவின் இல்லத்தில் சுமார் 30 முதல் 35 நிமிடங்கள் பார்வைமிட்டு அங்கு இருந்தனர்.

நீதிபதி உஜ்ஜல் பூயானுடன் கூடிய அமர்வுக்கு தலைமை தாங்கும் நீதிபதி ஏ.எஸ்.ஓகா, “தற்போது, ​​உள் விசாரணை நடந்து வருகிறது. அறையில் கண்டெடுக்கப்பட்டதாகக் கூறப்படும் பணத்துக்கு நீதிபதி வர்மா எவ்வாறு கணக்கு காட்டுகிறார்; பணத்துக்கான ஆதாரங்கள் குறித்து மார்ச் மாதம் 15 ஆம் தேதி அன்று அறையிலிருந்து அதை யார் அகற்றினார்கள் எனும் மூன்று கேள்விகளை குழு ஆழமாக ஆராய்ந்து வருகிறது. குழு தனது அறிக்கையைச் சமர்ப்பித்தவுடன், இந்திய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு முன் அனைத்து கருத்துக்களும் உள்ளது. எஃப்.ஐ.ஆர். பதிவு செய்வதற்கு அவர் ஒப்புக் கொள்ளலாம் அல்லது நீதிபதியை நீக்குவதற்காக குழுவின் அறிக்கையை நாடாளுமன்றத்திற்கு அனுப்பலாம்” என வழக்கறிஞரும் மனுதாரருமான மேத்யூஸ் ஜே.நெடும்பராவிடம் கூறினார்.



யஷ்வந்த் வர்மாவின் வழக்கு தொடர்பாக உள் விசாரணை நடந்து வருவதால் இந்த மனுவை ஏற்றுக்கொள்வது பொருத்தமற்றது எனத் தீர்ப்பளித்துள்ள அமர்வு, மனுவில் முன்வக்கப்படும் கோரிக்கைகள் தற்போதைய கட்டத்தில் ஆராய வேண்டிய அவசியமில்லை எனத் தெரிவித்துள்ளது.உயர்நீதிமன்ற நீதிபதியை பதவி நீக்குவது என்பது இந்திய அரசியலமைப்பின் கீழ் ஒரு கடினமான நடைமுறையே.

Misconduct or Incapacity ஆகிய இரு காரணங்களுக்காகப் பதவி நீக்கம் செய்யலாம்.


C.ரவிச்சந்திரன் ஐயர் vs Justice A.M.பட்டாச்சாரியா& பலர்  வழக்கில் உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் மீதான தவறான நடத்தை தொடர்பான புகார்களை விசாரிக்க In-house Procedure முறையை உச்சநீதிமன்றம் உருவாக்கியது.

நீதிபதி மீது எழுத்துப்பூர்வமாக தலைமை நீதிபதிக்கு (CJI) புகார் அளிக்க வேண்டும்.

புகாரில் முகாந்திரம் இருந்தால் தலைமை நீதிபதி (CJI) மூன்று மூத்த நீதிபதிகள் கொண்ட குழுவினை அமைத்து நீதிபதியின் நடத்தை குறித்து விசாரிக்கப்படும்.

புகார் உறுதியானால், நீதிபதியை ராஜினாமா செய்ய அறிவுரை வழங்கப் படும். நீதிபதி ராஜினாமா செய்ய மறுத்தால், அந்த அறிக்கை பதவி நீக்க நடவடிக்கை வேண்டி குடியரசுத் தலைவருக்கு அனுப்பப் படும்.

பதவி நீக்க நடை முறை யாதெனில் 

1.நாடாளுமன்ற மக்களவை 100 உறுப்பினர்கள் அல்லது மாநிலங்களவை 50 உறுப்பினர்களின் கையொப்பங்களுடன் தீர்மானம் முன்வைக்கப்பட வேண்டும்.               2. ஒரு உச்ச நீதிமன்ற நீதிபதி, ஒரு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, மற்றும் ஒரு பிரபல சட்ட அறிஞர் அடங்கிய மூன்று உறுப்பினர் கொண்ட குழுவிற்கு சபாநாயகர் அல்லது தலைவர் விசாரணைக்கு பரிந்துரைப்பார்.    3. இந்தக் குழு குற்றச்சாட்டுகளை விசாரித்து, ஒரு அறிக்கையை சமர்ப்பிக்கும்.         4. குற்றச்சாட்டில் உண்மை இருந்தால் இரண்டு அவைகளிலும் (லோக்சபா மற்றும் ராஜ்யசபா) இந்தத் தீர்மானம், அவையின் மொத்த உறுப்பினர்களின் பெரும்பான்மையாலும், மற்றும் கலந்து கொண்ட மற்றும் வாக்களித்த உறுப்பினர்களின் 2/3 பகுதி பெரும்பான்மையாலும் நிறைவேற்றப்பட வேண்டும்.

5.இரண்டு அவைகளின் அங்கீகாரத்திற்குப் பிறகு, ஜனாதிபதி நீதிபதியை நீக்க உத்தரவு பிறப்பிக்க இயலும். 

இதே நடைமுறை தான் உச்சநீதிமன்ற நீதிபதிகள் பதவி நீக்கத்திற்கும் பின்பற்ற படும்.

இந்தியாவில் இதுவரை இந்த நடைமுறை மூலம் எந்தவொரு உச்சநீதிமன்றத்தின் நீதிபதியோ உயர்நீதிமன்ற நீதிபதியோ பதவி நீக்கம் செய்ய பட்டதில்லை. என்பது தான் உண்மை

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...