தமிழ்நாட்டில் கிராம, நகர்ப்புறங்களில் உள்ள நிலங்களின் ஆவணங்கள் கணினிமயமாக்கப்பட்டு,
இணையவழியில் எளிதாகப் பார்வையிடும் வகையிலும், அச்சிட்டு பயன்படுத்தும் வகையிலும் இணையதளம் (https://eservices.tn.gov.in) வாயிலாக மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. ஆனால் ஏற்கனவே இருந்த நடைமுறையில் அச்சிடப்பட்ட 'அ' பதிவேடுகள் 19 பி நோட்டிபிகேசன் 13 பப்ளிக்கேசன் செய்த நிலையில் தவறுகள் மற்றும் ஊழல்கள் செய்தால் எளிதாகக் கண்டறிய வழி உண்டு ஆனால் தற்போது அந்த நிலை இல்லை இதில் அரசு பணி செய்யும்
அலுவலர்கள் செய்யும் தவறுகளை யாரும் அறிய முடியாது காரணம் பழைய நிலை அதில் மக்கள் அறிய வழி இல்லை, அதனால் ஊழல் செய்த அரசு ஊழியர்கள் தப்பி விடலாம் அதன் காரணமாக நீதிமன்றத்தில் வழக்குகள் வரும் முன்பிருந்த ரயத்துவாரி நில உரிமையாளர்களுக்கான ஜமாபந்தி முறை குறையுள்ள நிலையில் தொடரும் மேலும் நீதிமன்றத்தில் சிவில் வழக்குகள் அதிகரிக்கும். தனியார் நிலங்களில் வரிவிதிப்பு செய்யும் பட்டா மாறுதல் ஊழல் வியாபாரம் பெருகும் என்பதே பொதுவான கணிப்பாக உள்ளது. இருப்பினும், பல கணிணி அடங்கல் மற்றும் சிட்டாவில் உள்ள பட்டாதாரர்களில் இதுவரை காலமான உயிரிழந்தவர்கள் பெயர்கள் நீக்கப்படாமலும், அவர்கள் வாரிசுதாரர்கள் அல்லது அவர்கள் விற்பனை செய்து உரிமை அடைந்து அனுபவம் பெற்ற தற்போதைய உரிமையாளர்கள் பெயர்கள் சேர்க்கப்படாமல் இருந்தால்
இந்தத் திருத்தங்களை மேற்கொள்ள மக்கள் உரிய ஆதார ஆவணங்களுடன் இ-சேவை மையங்கள் அல்லது ‘citizen portal’ தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். டைட்டில் உள்ள நபர்கள் அதற்கு, இறப்பு சான்றிதழ், வாரிசு சான்றிதழ், வாரிசுகளில் எவரேனும் இறந்திருந்தால் அவர்களின் இறப்பு மற்றும் வாரிசுச் சான்று, பட்டா மாறுதல் கோரும் புலம் தொடர்பான பதிவுத்துறை வழங்கும் வில்லங்க சான்றிதழ், பதிவு செய்யப்பட்ட பாகப்பிரிவினை ஆவணம், தான செட்டில்மென்ட் பதிவு ஆவணம் அல்லது உயில் சாசன ஆவண நகல், நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் பட்டா மாறுதல் கோரப்பட்டால் உரிமையியல் நீதிமன்றத் தீர்ப்பின் நகல் ஆகியவற்றை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். கிரையம் பெற்றவர்களாக இருந்தால், இறப்புச் சான்று, வாரிசுச் சான்று, வாரிசுகளில் எவரேனும் இறந்திருந்தால் அவரது இறப்பு மற்றும் வாரிசுச் சான்று, பட்டா மாறுதல் கோரும் புலம் தொடர்பான வில்லங்கச் சான்றிதழ், பதிவு செய்யப்பட்ட கிரைய ஆவணத்தின் நகல் ஆகியவற்றை இணைத்து விண்ணப்பிக்கலாம். அடுத்து வரும் ஜமாபந்தியில் இவை பரிசீலிக்கப்பட்டு, பட்டாதார்கள் பெயர் மாற்றம் தொடர்பான உரிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு, நில ஆவணங்களில் உரிய மாற்றங்கள் செய்யப்படும். உட்பிரிவு இல்லாத பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்கும்போது, கிராம நிர்வாக அலுவலர் அவற்றை சரிபார்த்து, இணைய வழியில் மண்டலத் துணை வட்டாட்சியருக்கு அனுப்புவார். அவர் அந்த விண்ணப்பத்தை சரிபார்த்து நீதிமன்ற வழக்குகள் ஏதும் நிலுவையில் இல்லை என்பதை உறுதி செய்த பிறகு, ஒப்புதல் அளிப்பார். உட்பிரிவுடன் கூடிய பட்டா மாறுதலை, நில அளவர் ஆவணங்களை சரிபார்த்து, நிலத்தை அளவீடு செய்து, வட்டாட்சியர் ஒப்புதலுக்கு அனுப்புவார்.
காலமானவர் பெயரை நீக்கி, வாரிசுகளின் பெயர் சேர்க்க பட்டா மாற்றத்துக்கு ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்
பட்டாவில் மறைந்த நில உரிமையாளர்களின் பெயர்களை நீக்கி, வாரிசுகள் மற்றும் தற்போதைய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க இ-சேவை மையங்கள் அல்லது ‘சிட்டிசன் போர்ட்டல்’ வாயிலாக ஆன்லைனில் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் என நில நிர்வாக ஆணையர் கே.எஸ்.பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு முழுவதும் கிராம நகர்ப்புறங்களில் உள்ள நிலங்களின் ஆவணங்கள் கணினிமயம் ஆக்கப்பட்டு, இணையவழியில் அனைவரும் எளிதாக பார்வையிடும் வகையிலும், அச்சிட்டு பயன்படுத்தும் வகையிலும் இணையதளம் (https://eservices.tn.gov.in) வாயிலாக மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. . பட்டா மாறுதல் தொடர்பாக இணையவழியில் பெறப்படும் விண்ணப்பங்கள் மீது வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தாமதமின்றி உரிய உத்தரவுகள் பிறப்பிக்க வட்டாட்சியர்களுக்கு மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்த வேண்டும். எனக் கூறப்பட்டுள்ளது.இது தொடர்பாக வரும் மனுக்களை தேக்கம் செய்து லஞ்சம் வாங்குவதற்காக தாமதம் செய்தால் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்சஒழிப்புத் துறைக்கு பாதிக்கப்பட்ட நபர்கள் தகவல் மற்றும் புகார் தரலாம் என்று ஆலோசனை ஏற்கனவே உள்ளது.
”கையூட்டு பெறுவது சட்டத்திற்கு எதிரானது. கையூட்டு தொடர்பான புகார்கள் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை இயக்குநரகத்திற்கு அனுப்பப்படலாம்.”
ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை இயக்குநரகம் இரண்டு கட்டணமில்லா தொலைபேசி எண்களைக் கொண்டுள்ளது. ஊழல் எதிர்ப்பிற்கான உதவி அழைப்பு எண் 1064 மற்றும் விழிப்புப் பணி அழைப்பு எண் - 1965, இதன் வாயிலாகப் புகார்தாரர்கள் புகார் செய்யலாம்.
ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை இயக்குநரகம் எண்.293, எம்.கே.என். சாலை, ஆலந்தூர் , சென்னை- 600016 என்ற முகவரியில் உள்ள அரசு கட்டடத்தில் மே மாதம் 2016 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.
கருத்துகள்