சமூக வலைத்தளங்களில் போர் குறித்து பதிவுகளைப் பகிரும்போது, பொறுப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
போர் பற்றிய தவறான தகவல்களைப் பரப்பாமல், உண்மையான செய்திகளைப் பார்க்கலாம் பகிரவது தவறு . மேலும், மற்றவர்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் பதிவுகளைப் பகிராமலும், அமைதியான முறையில் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளளாம். மேலும் இப்போது சமூகத்தின் பலரும் தங்களை செய்திப் பத்திரிகை தொலைக்காட்சி போலவே மாறி அனுமதியற்ற செய்தி வெளியிடும் பலர் அதை தவறு குற்றம் என உணர்வதில்லை.
Operation Sindoor மூலம் பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு எதிரான இந்திய அரசின் நடவடிக்கைகளை விமர்சித்து சமூகவலைதளங்களில் பதிவிட்ட லாரா என்ற பெண் பேராசிரியரை SRM பல்கலைக்கழக நிர்வாகம் இடைநீக்கம் செய்திருப்பது வரவேற்கத்தக்கது.தேசவிரோத விமர்சனங்களை எந்த வகையிலும் பொறுத்துக் கொள்ளக் கூடாது! அதே சூழலில் அவர் பேசிய பின்னணி குறித்து தேசவிரோத சட்டத்தின் படி கைது செய்து விசாரணை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுக்கிறதுஇந்தியச் சட்டப் பிரிவு 469-ன் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும் சட்டமானது ஒருவர் அல்லது நாட்டின் நற்பெயரைக் கெடுக்கும் நோக்கத்தில் அவதூறு பரப்பியவர் மீது எடுக்கப்படும் நடவடிக்கை.
இதில் தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000-ன் கீழ் போலியான மின்னணு பதிவும் (electronic record forged) சேர்க்கப்பட்டுள்ளது. இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டம் 19 (1)-ன் படி ஒருவருடைய பேச்சுரிமை மற்றும் உணர்ச்சியை வெளிப்படுத்துதல் என்பது அடிப்படை உரிமையாகும். அது பத்திரிகையாக பதிவு சட்ட விதி படி நடந்தும் செய்திகள் மட்டுமே அடங்கும் ஆனால், ஒருவரின் நற்பெயரைக் கெடுக்கும் வகையில் போலியான கருத்துகளையும் அவதூறுகளையும் தனி நபர்கள் பரப்புவது குற்றம். இரண்டாவதாக எந்த சமூக வலைதளம் வாயிலாக அல்லது சேவை வழங்குநரின் மூலமாக அவதூறு பரப்பப்பட்டதோ அதிலிருந்து அந்தக் கருத்துக்களை நீக்க நடவடிக்கை எடுக்கலாம். இதில் வெளியீட்டு ஊடகங்களுக்கு (சமூக வலைதளம்) தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000-ல் பிரிவு 79-ன் கீழ் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், இவர்கள் மத்திய அரசாங்கம் வெளியிட்ட வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். மேலும், அரசின் சார்பில் போலியான அவதூறு நிரூபிக்கப்பட்டால் அதை உடனடியாக தங்களது வலைதளங்களிலிருந்து நீக்க வேண்டும். சமூக வலைதளங்களில் தவறான அல்லது சட்ட விரோத பதிவுகளை பொழுது போக்கு காரணமாக பதிவிடும் நபர்கள் மீது, பாரதிய நியாய சன்ஹிதா (BNS) சட்டப் பிரிவுகளின் கீழ் குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்கப்படலாம். பொதுவாக, அவதூறு, மிரட்டல், வெறுப்புப் பேச்சு போன்ற செயல்கள் பிரிவு 499 மற்றும் 500 இன் கீழ் குற்றமாக கருதப்படலாம். மேலும், தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000 மற்றும் பிற சட்டங்களும் இதில் சம்பந்தப்படலாம் நாட்டின் மீது அவதூறு செய்யும் நபர்கள் மீது தேசவிரோதக் குற்றமும் சேரும் ஆகவே இனி வரும் நாள்களில் உங்கள் சமூக ஊடகங்களில் பாகிஸ்தான் ஆதரவுப் பிரச்சாரங்கள் பெருமளவில் பரவக்கூடும்.
இந்திய ஆயுதப்படைகள் குறித்தும், தற்போதைய நிலையைப் பற்றியும் சந்தேகத்திற்கிடமான தகவல்கள் எதையும் நீங்கள் பார்க்கும் நிலை வந்தால், உடனடியாக PIB FactCheck- ல் புகாரளிக்கவும்.
WhatsApp: +91 8799711259
Email: factcheck@pib.gov.in
மத்திய அரசின் பத்திரிகை தகவல் அமைச்சகம் அறிவுறுத்தல்.
கருத்துகள்