முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தோகைமலை நீரேற்றுத் திட்டத்தை அரசு நிறைவேற்ற வலியுறுத்தி பாசன விவசாய சங்கங்களின் முயற்சி

கரூர் மாவட்டம் குளித்தலை, தோகைமலை, கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியங்களில் அமைந்துள்ள ஏரிகள் மற்றும் குளங்களுக்கு தண்ணீர் கொண்டு வரும் வகையில்,

காவிரியாற்றில் அமைந்துள்ள மாயனூர் அணைக்கட்டிலிருந்து நீரேற்றுத் திட்டம் (PUMPING SHEEM) மூலம் தண்ணீர் கொண்டு வரும்,

தோகைமலை நீரேற்றுத் திட்டத்தை அரசு நிறைவேற்ற வலியுறுத்தி.


ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி. தோகைமலையில் பத்தாயிரம் விவசாயிகளைத் திரட்டி. கவன ஈர்ப்பு மாநாடு நடத்துவது தொடர்பாக 

கரூர் மாவட்டம் தோகைமலையில்  நேற்று விவசாய சங்கங்களின் ஆலோசனைக் கூட்டம் காவிரி ஆற்றின் படுகை விவசாயிகள் கூட்டமைப்புத் தலைவரும்,

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழக முன்னாள் முதல்வருமான 

சீ. ஜெயராமன்  தலைமையில் 

காவிரி வைகை கிருதுமால் குண்டாறு பாசன விவசாயிகள் சங்கத்தின் கூட்டமைப்பு மாநிலத் துணைத் தலைவர் கார்ணாம்பட்டி ஆர் .முருகேசன் முன்னிலையில் நடைபெற்றது.





காவிரி வைகை கிருதுமால் குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பின் மாநிலப் பொதுச் செயலாளர் எம்.அர்ச்சுணன்,

மாநிலத் தலைவர் மிசா.மாரிமுத்து,

தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு நலச் சங்க தலைவர் கோயம்புத்தூர் சூலூர் கே. ஏ. சுப்பிரமணியம்,

கூட்டமைப்பு கரூர் மாவட்டத் தலைவர் பிரகாஷ் கண்ணா,

பில்லூர் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் வி.ராகவன்,

கரூர் மாவட்டச் செயலாளர் மகேந்திரன், சாந்தி வனம் அறக்கட்டளை எம். அரசப்பன், விவசாயிகள் மறுவாழ்வு அறக்கட்டளை  நாகராஜன், கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் 

சீத்தப்பட்டி ரமேஷ் புதுக்கோட்டை வடக்கு மாவட்டத் தலைவர் சுப. ராஜேந்திரன், வடக்கு மாவட்டச் செயலாளர் ஆர் வி முருகேசன், இயற்கை விவசாயப் பிரிவு மாநிலச் செயலாளர் கலியபெருமாள் ஆகியோருடன் பல விவசாயிகள் கலந்து கொண்ட. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில்.

கரூர் மாவட்டம் குளித்தலை சட்ட மன்றத் தொகுதியில் குளித்தலை தோகைமலை கிருஷ்ணராயபுரம் ஆகிய மூன்று ஒன்றியங்கள் அடங்கிய நிலையில்.


இப் பகுதி காவிரி ஆற்றின் கரையில் அமைந்திருந்தாலும் 

மேட்டுப் பாங்கான பகுதியாவதால் காவிரி ஆற்றுப் பாசனமில்லாமல் வறட்சியான பகுதியாக மழையை நம்பி வானம் பார்த்த பூமியாக மானாவாரி விவசாயம் தான் நடக்கிறது.

காலஞ்சென்ற முன்னாள் முதல்வர்  கலைஞர் மு.கருணாநிதி முதலில் (1952-1957) ஆண்டுகளில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற குளித்தலை தொகுதியின் தற்போதய நிலை .

நீண்ட காலமாகவே குளித்தலை தோகைமலை கிருஷ்ணராயபுரம் பகுதி விவசாயிகள் காவிரி ஆற்றில் பருவ மழை காலத்தில் வீணாகக் கடலில் கலக்கும் உபரி வெள்ளநீரை நீரேற்றுத் திட்டம் அமைத்து ஏரிகள் குளங்களுக்கு தண்ணீர் கொண்டு வந்து பாசன வசதி செய்து தரவேண்டும் என விவசாய மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

ஒவ்வொரு ஆட்சியிலும் தொடர்ந்து வலியுறுத்தியும் கூட இன்று வரை நிறைவேற்றப்படவில்லை என்பது தான் உண்மை. 

காவிரி ஆற்றின் கரையிலிருந்தும் வறட்சியில் வானம் பார்த்த பூமியில் வாடி வதங்கியுள்ளார்கள்.

தோகைமலை ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டத்தில் இத்திட்டத்தை நிறைவேற்ற அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தோகைமலை நீரேற்றுத் திட்டம் நீறைவேற்றப் பட்டால்  கரூர் மாவட்ட மூன்று ஒன்றியங்களில் உள்ள 15 பொதுப்பணித்துறை ஏரிகளும், 46 ஊராட்சி ஒன்றியக் குளங்களும், 117 கிராம பஞ்சாயத்து  குளங்களும் தண்ணீர் பெறும். சுமார் 25 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறும். பகுதி நிலத்தடி நீர் மட்டமும் உயரும். கிணறு மற்றும் ஆழ்குழாய் கிணறு பாசனப் பரப்பும் அதிகரிக்கும். கால்நடை வளர்ப்பு மற்றும் கிராமப் புறங்களில் வாழ்வாதாரம் மேம்படும்.


கடந்த ஆட்சி காலத்தில் 2019 ஆம் ஆண்டில்  மேட்டூர் அணையிலிருந்து சேலம் மாவட்டத்தில் மேட்டுப் பாங்கான 100 ஏரிகள் குளங்களுக்கு நீரேற்று நிலையம் அமைத்து தண்ணீர் கொண்டு செல்லும் சரபங்கா நீரேற்றுத் 

திட்டம் 545 கோடி ரூபாய் செலவில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதேபோல் கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் 60 ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருந்த அத்திக்கடவு- அவிநாசி நீரேற்றுத் திட்டம் 2016 ஆம் ஆண்டில்  துவங்கி 1916 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறைவேற்றப்பட்டு தண்ணீர் கொண்டு சென்ற நிலையில் விவசாயிகள் தற்போது பயன் பெற்று வருகின்றனர்.

மேட்டூர் சரபங்கா திட்டத்தைப் போல,

அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தைப் போல,

தோகைமலை நீரேற்றுத் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி. தோகைமலையில்

பத்தாயிரம் விவசாயிகளைத் திரட்டி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில்.

கவன ஈர்ப்பு மாநாடு நடத்த முடிவு செய்யப்பட்டது. கரூர் மாவட்டம் தோகைமலையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று முடிந்த பிறகு. அந்த திட்டம் இதுவரை நிறைவேற்ற எந்த முயற்சியும் எடுக்காமல் கடமை செய்ய இதுவரை மறந்த குளித்தலை சட்ட மன்ற உறுப்பினர் R. மாணிக்கத்தை நினைவு படுத்தும் நிலையில் இக் குழுவின் பிரதிநிதிகள் சந்தித்தனர். 

தோகைமலை நீரேற்றுத் திட்டம் குறித்து எடுத்துக் கூறி அவர்கள் ஆதரவு கேட்டதை அறிந்து மக்கள் வியப்படைந்தனர்.  சட்ட மன்ற, நாடாளுமன்ற மக்கள் பிரதிநிதிகள் செய்ய வேண்டிய பணிகளை விவசாய சங்கங்களின் தலைவர்கள் பிரதிநிதிகள் செய்வது சிறப்பு.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலபக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...