முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அதிமுக மாநிலங்களவை தேர்தலில் தேர்தல் நடைபெற்றால் நீக்கம் செய்தவர்களும் வாக்களித்தால் மட்டுமே வெற்றி

இரண்டு நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்களைத் தேர்வு செய்ய


அ.தி.மு.க-வுக்கு 68 சட்ட மன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவை. 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், கே.வி.குப்பத்தில் இரட்டை இலை சின்னம் மூலம் வெற்றி பெற்ற புரட்சி பாரதம் கட்சி உறுப்பினர் பூவை ஜெகன் மூர்த்தி யுடன் சேர்த்து 66 சட்ட மன்ற உறுப்பினர்கள் அ.தி.மு.க-வுக்கு உள்ளனர். இந்த எண்ணிக்கையுடன், கூட்டணிக் கட்சியான பாரதிய ஜனதா கட்சியின் நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு கிடைத்தால், எளிதாக

இரண்டு நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் வெற்றி பெற்று அ.தி.மு.க. மாநிலங்களவை பலம் கூடும் ஆனால், அதில் தான் சிக்கலும் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதால், அவர்களை அ.தி.மு.க. அங்கீகரிக்கக்கூடாதென சபாநாயகர் பி.எஸ்.அப்பாவுவிடம் கடிதம் கொடுத்திருந்தது அ.தி.மு.க. எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை விவகாரம் அரசியல் ரீதியாக சூடுபிடித்த நிலையில், நீதிமன்றத்திலும் 'ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் மூவரை கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களாக அங்கீகரிக்க முடியாது' என வாதிட்ட நிலையில்.



ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளரான உசிலம்பட்டி ஐயப்பன் அவர்கள் பக்கம் இல்லை என்றாலும், கட்சியிலிருந்து அவர் நீக்கப்படவில்லை என்பதால், சட்டமன்ற அ.தி.மு.க கொறடா உத்தரவை அவர் ஏற்றுத்தான் ஆக வேண்டும். ஆக, ஓ.பன்னீர் செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோரைக் கழித்தால், அ.தி.மு.க உறுப்பினர்களின் பலம் 63 ஆகிவிட்டது. அதோடு பாரதிய ஜனதா கட்சியின் நான்கு சட்டமன்ற உறுப்பினர்களையும் சேர்த்தால் கூட, இரண்டு மாநிலங்களவை உறுப்பினர்களை வெற்றிபெற வைக்கும் அளவுக்கு எண்ணிக்கையில்லை.





அதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம் சமீபத்தில் சேலத்தில் நடந்தது. சட்டரீதியாகவுள்ள இடர்பாடுகள் விவாதிக்கப்பட்டபோது, ​​''நாமளித்த கடிதத்தை சபாநாயகர் வாங்கி வைத்துக்கொண்டாரே தவிர, எந்த முடிவையும் இதுவரை எடுக்கவில்லை. ஓ.பன்னீர் செல்வம் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோரைக் கட்சி சாரா உறுப்பினர்களாக அறிவிக்கவில்லை. சட்டப்பேரவை விதிகளின்படி பார்த்தால், அவர்கள் மூவருமே இன்று வரை அதிமுக சட்ட மன்ற உறுப்பினர்களாகத்தான் தொடர்கிறார்கள்.

ஆகவே, அ.தி.மு.க கொறடா வேலுமணி இடும் உத்தரவுக்கு சட்ட மன்ற நடவடிக்கைகளில் அவர்கள் மூவரும் கட்டுப்பட்டுத்தான் ஆக வேண்டும். நமது சட்ட மன்ற உறுப்பினர்களின் பலம் 66 ஆகவே தொடர்கிறது" என வழக்கறிஞரணி நிர்வாகிகள் சிலர், எடப்பாடி கே.பழனிசாமியிடம் எடுத்துரைத்தனர்.  ஆனால் இதில் அந்த மூவருக்கும் கொரடா உத்தரவு பிரப்பித்தால் இனி நீதிமன்றத்தில் இவர்கள் அதிமுக இல்லை என்று வாதம் செய்தால் அது பொருந்தாது என்பது தான் அரசியல் அமைப்பு சட்டம் மற்றும் துணை விதி ஆகும். அதை அந்த வழக்கறிஞர்கள் சிந்தனை செய்தார்களா தெரியவில்லை, அதன் பின்னர் தான், இரண்டு மாநிலங்களவை வேட்பாளர்களுக்கான பரிசீலனையில் தீவிரமாக இறங்கினார் எடப்பாடி.கே.பழனிச்சாமி கடந்த முறை சி.வி.சண்முகத்திற்கு மாநிலங்களவை உறுப்பினராக பதவி வழங்கிய போதே, தனக்கும் அந்த வாய்ப்பை எதிர்பார்த்தார் முன்னாள் அமைச்சர்  டி.ஜெயக்குமார். ஆனால், குறுக்கே புகுந்து தன்னுடைய ஆதரவாளரான முதுகுளத்தூர் தர்மருக்குப் பெற்றுக் கொடுத்து விட்டார் ஓ.பன்னீர் செல்வம் அதன் தொடர்ச்சியாகவே பெரும் புகைச்சல் எழுந்தது, ஓ.பன்னீர் செல்வம் உட்பட பலரும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். இந்தமுறையும் தனக்கு சீட் எதிர்பார்த்திருக்கும் டி.ஜெயக்குமார், 'பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்துவிட்டதால் இராயபுரம் தொகுதியிலுள்ள சுமார் 40 ஆயிரம் சிறுபான்மையினர் சமூகத்தின் வாக்குகள் அ.தி.மு.க-வுக்கு விழாமல் போகலாம். ஆகவே, என்னை நாடாளுமன்ற உறுப்பினராக்கி விடுங்கள்' என கட்சி மேலிடத்திடம் கேட்டிருக்கிறார்.



அவர் எதிர்பார்த்த மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதியை முன்னாள் அமைச்சர் வளர்மதியும் எதிர்பார்ப்பதால், டி.ஜெயக்குமாரை நாடாளுமன்ற உறுப்பினராக்கி டெல்லிக்கு அனுப்ப கட்சி மேலிடமும் அவர்கள் ஆலோசனை கட்சியின் சம்மதம் பெற ஆலோசித்திருக்கிறது.இரண்டாவது நாடாளுமன்ற உறுப்பினர் தேர்வுக்கு அ.தி.மு.க-வின் உட்பிரிவான புரட்சித் தலைவி அம்மா பேரவை இணைச் செயலாளர் சதன் பிரபாகருக்கு வாய்ப்புகள் வழங்கப்படுவதாக தென்படுகின்றன. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நிறைகுளத்தானின் மகனான சதன் பிரபாகர், முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் தீவிரமான ஆதரவாளர். அந்த  ரூட்டில் தான், கட்சி மேலிடத்தையும் நெருங்கியிருக்கிறார் சதன் பிரபாகர். 'தென்மாவட்டங்களில், அவர் சார்ந்த சமூக வாக்குகளை ஒருங்கிணைப்பதற்கு சதன் பிரபாகரைப் பயன்படுத்திக் கொள்ளலாம்' என ஆர்.பி.உதயகுமார் கொடுத்த ஆலோசனை, தீவிரமாகவே பரிசீலித்து கடைசியாக நிராகரிக்கப்பட்டது எடப்பாடி கே. பழனிச்சாமி தரப்பில் மேலிடம் முடிவு. இதற்கிடையே, பா.ம.க., தே.மு.தி.க., பா.ஜ.க தரப்புகளிலிருந்து, 'எங்களுக்கு ஒரு உறுப்பினர் பதவி ஒதுக்க வேண்டும்' என ஆளாளுக்குப் பேச்சுவார்த்தை நடத்தினர். அதை எடப்பாடி கே.பழனிச்சாமி பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை" என்றனர் விரிவாகவே.

மே 29-ம் தேதி கட்சி நிர்வாகிகள் கூட்டத்தைக் கூட்டிய எடப்பாடி, கே.பழனிச்சாமி மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்கான வேட்பாளர்கள் குறித்து அவர்களுடன் ஆலோசித்திருக்கிறார். "ஜூன் மாதம் 2-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் துவங்கவிருப்பதால், இந்தக் கூட்டத்தின் முடிவில் வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என அக்கட்சி வட்டாரத்தில்.தகவல் அந்த இரண்டு மாநிலங்களவை இடங்களிலுமே தற்போது அதிமுக போட்டி வேட்பாளர்கள் அறிவிப்பு

தேமுதிகவிற்கு  2026-ஆம் ஆண்டு மாநிலங்களவைத் தேர்தலின் போது  வழங்கப்படும் என அதிமுக அறிவித்த நிலையில்  6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு ஜுன் மாதம் 16-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் தேர்தலில

தி.மு.க. சார்பில் வழக்கறிஞர் வில்சன், கவிஞர் சல்மா, சிவலிங்கம் ஆகிய மூவர் போட்டியிடுவார்கள் என்றும், மற்றொரு இடம் மக்கள் நீதி மய்யத்திற்கும் ஒதுக்கப்பட்டதில் நடிகர் கமல்ஹாசன் போட்டியிடுவார் என்றும் அக் கட்சி தெரிவித்துள்ளது. ஆனால், அதிமுக சார்பாக இறுதியில் போட்டியிடப் போவது யார்? என்பதில் பெரும் இழுபறியால் தேமுதிகவும் தங்களுக்கு ஒரு இடம் ஒதுக்க வேண்டும் என்றும், அதிமுக இது தொடர்பாக வாக்குறுதி அளித்ததாகவும் கூறியது. ஆனால், அதிமுக தரப்பில் அதை மறுத்து பேசப்பட்டது. 

இந்தச் சூழ்நிலையில் அ.தி.மு.க. சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளதன்படி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இன்பதுரை மற்றும் செங்கல்பட்டு மாவட்ட அவை தலைவர் தனபால் ஆகியோர் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேமுதிகவிற்கு வரும் 2026-ஆம் ஆண்டு ராஜ்யசபா சீட் வழங்கப்படும் என்றும் அதிமுக கூட்டணியில் தேமுதிக தொடரும் என்றும் அதிமுக தலைமை அறிவித்துள்ளது. அ.தி.மு.க-வின் அதிகாரப்பூர்வ அறிக்கையிலும், "அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியில் தே.மு.தி.க தொடரும்.


2026-ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் தே.மு.தி.க-வுக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை அ.தி.மு.க. வழங்கும்" என எடப்பாடி கே.பழனிசாமியின் ஒப்புதலோடு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அரசியல் என்பதே தேர்தலையொட்டி தான். அவர்களுடைய கடமை அ.தி.மு.க ஆற்றியிருக்கிறார்கள். தேர்தலையொட்டி எங்கள் கடமையை நாங்கள் ஆற்றுவோம்.

2024 தேர்தலின் போது வருடத்தைக் குறிப்பிட்டுத் தருங்கள் என்று சொன்னபோது, ​​வருடம் குறிப்பிட்டுத் தருவது வழக்கமல்ல. என்று எடப்பாடி சொன்னார் கே.பழனிசாமி. அது 2026 என்று இப்போது அறிவித்திருக்கிறார்கள். 2026 ஜனவரி மாதம் 9-ஆம் தேதி கடலூர் மாவட்டத்தில் எங்களுடைய கூட்டணி நிலையை அறிவிப்போம் என்று ஏற்கனவே கூறிவிட்டோம்.

அரசியலில் தேர்தலை நோக்கித் தான் எங்களின் பயணமும் இருக்கும்." என்று விஜயகாந்த் இல்லாமல் இயங்கும் தேமுதிக நிர்வாகி பிரேமலதா கூறினார். நின்று பலத்தை நிரூபிக்க வேண்டும் என்பதே அரசியல் பார்வையாளர்களின் கருத்து.அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை தேர்வு. என்பது திமுகவின் வழக்கறிஞர் வில்சன் தேர்வு போல கட்சியின் பலருக்கும் இப்போது மூத்த வழக்கறிஞர்கள் டெல்லியில் இருக்க வேண்டிய அவசியம் வருவதற்கு காரணம் கட்சி மீதான அமலாக்கத்துறை ஊழல் வழக்குகள் நிலைதான்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...