முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பாமகவில் நடப்பது துரோகிகளை வெளியேற்ற தந்தை மகன் இணைந்து நடக்கும் அரசியல் வேள்வி

கடந்த 31 மே 2025 சனிக்கிழமை காலை 10 மணி சோழிங்கநல்லூர் கலைஞர் சாலையிலுள்ள மகாராஜா திருமண மண்டபத்தில் பாமக ஆலோசனைக் கூட்டம் 






பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் கட்சியின் வளர்ச்சிப்பணிகள் குறித்து ஆலோசனைகளை வழங்க உள்ளதாகவும் 

அதில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில,மாவட்ட,ஒன்றிய,பேரூர்,நகரத் தலைவர்கள்,செயலாளர்கள் மற்றும் மாவட்டத்திற்குட்பட்ட மாநில,மாவட்ட பொறுப்பாளர்கள். அனைத்து அணி சங்க பொறுப்பாளர்கள் அனைவரும்






 தவறாமல் கலந்து கொள்ளுமாறு அறிவிப்பு வந்த நிலையில் கட்சியின் சார்பில் பலமுறை சட்ட மன்ற உறுப்பினர் கௌரவத் தலைவராக பதவி இறக்கம் கட்சி மூலம் தலைவராக இருந்த ஜி.கே.மணி பல கோடி பணம் சம்பாதித்த நிலையில் மகன் லைகா மூலம் திரைப்படம் எடுக்கும் நிலைக்கு உயர்ந்த அவரது மகன் ஆனால் 1985 ஆம் ஆண்டு முதல் ஒரு தொடக்கப்பள்ளி ஆசிரியர் ஆன மணியின் கதறல் குரலை ஆஹா என பலரும் ரசித்தனர் அவர் "மனதுக்கு கஷ்டமாக இருக்கிறார்; எனக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை!' - காணாமல் போவதா அல்லது தற்கொலை செய்வதா தடுமாற்றம் என ஜி.கே மணி வேதனை ஒரு நெருக்கடியான சூழல் கட்சியில் உள்ளது. இந்த நெருக்கடியை பார்த்தால் ரொம்ப கஷ்டமாகவும் வேதனையாகவும் உள்ளது. இது மறுபடியும் சீராக வேண்டும் என்பதுதான் எங்களுடைய எண்ணம்.” என - ஜி.கே மணி பாமக-வில் தற்போது உச்சக்கட்ட உட்கட்சி மோதல் நடந்து வருகிறது. காரணம் அதற்கு இந்த ஜி.கே மணி தான் முழுமையாக காரணம் என பேசப்படுகிறது.





புதுச்சேரி அருகே நடைபெற்ற கட்சிக் கூட்ட மேடையில் அன்புமணி, ராமதாஸ் இடையே வாக்குவாதம் நடந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம், தைலாபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், பாமக தலைவரும், மகனுமான மருத்துவர் அன்புமணி குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கினார். இதனிடையே சென்னையில் அன்புமணி தனியாக ஆலோசனை கூட்டம் நடத்தினார். இதனிடையே, விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்துக்கு வந்த ஜி.கே மணி, ``நீங்கள் கேள்வி கேட்கிறீர்கள். எனக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை.. மன உளைச்சலாகவும், நெருக்கடியான சூழலில் இருக்கின்றேன்.






பாட்டாளி மக்கள் கட்சி ஒரு பலமான கட்சி, தனித்தன்மையோடு இருக்கக்கூடிய கட்சி. கொள்கையுடனும் லட்சியத்துடன் இருக்கக்கூடிய கட்சி நெருக்கடியான சூழ்நிலையில் இருக்கின்றது. ரொம்ப வேதனைப் படுகிறோம், கஷ்டப்படுகிறோம் நான் எதுவும் சொல்லக்கூடாது என்று நினைத்தேன் நீங்கள் கேள்வி கேட்கிறீர்கள் ஒரு நெருக்கடி சூழல் கட்சியில் உள்ளது!

நீங்க சொல்லி ஆக வேண்டும் என்று கேட்பதினால் சொல்ல வேண்டிய சூழல் உள்ளது. இல்லை என்றால் நான் ஓடி இருப்பேன். ஓடினாலும் `சொல்லாத ஓடினான்' என்று ஒரு செய்தியாக வருகிறது. மனதிற்கு கஷ்டமாக இருக்கிறது.



ஒரு நெருக்கடியான சூழல் கட்சியில் உள்ளது. இந்த நெருக்கடியை பார்த்தால் ரொம்ப கஷ்டமாகவும் வேதனையாகவும் உள்ளது. இது மறுபடியும் சீராக வேண்டும் என்பதுதான் எங்களுடைய எண்ணம்.மீண்டும் பழைய நிலைமைக்கு வர வேண்டும் என நினைக்கின்றோம். குடும்ப பாசத்தோடு இருக்கக்கூடிய கட்சி. வலிமையான கட்சியாக பலமான கட்சியா மீண்டும் வரணும்.








பெரிய மாநாட்டை சந்தித்த கட்சி. தேர்தல் வருகின்ற நேரத்தில் வலிமையாக இருக்க வேண்டும். அதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறோம். இதற்காக தான் நிறுவனரைச் சந்திப்பதற்காக வந்திருக்கிறோம். அதிகமாக கேள்வி கேட்டு பதில் சொல்லும் மனநிலையில் நான் இல்லை.” என்றார். பாமகவின் பொதுசெயலாளர் பசுபதி பாண்டியன் மற்றும் தலித் எழில் மலை, பாலசுந்தரி, அதன் பின் வடிவேல் இராவணன் என கடந்த 30 ஆம் ஆண்டு அரசியல் வாழ்வில் ஒரு அதிகார பதவி கூட பெறாமல் உழைப்பவர் தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த வடிவேல் இராவணன்..

ஆனால் அவரை கட்சிப் பதவியிலிருந்து நீக்கி.


அமைச்சர், எம்பி பதவி சுகத்தை அனுபவித்து விட்டு அதிமுகவிற்கு சென்று திரும்பிய பலரை முதுகில் குத்திய முன்னாள் அமைச்சர் பொன்னுசாமி போன்ற சில துரோகிகள் பழைய இரும்புக் கடையிலிருந்து எடுத்து பழைய ஓட்டை, உடைசால் பாத்திரங்களை தயார் செய்து அனுப்பும் நிலை போல இவர்களை வரவழைத்து அனுப்புகிறார் கௌரவத் ? தலைவரான ஜி.கே.மணி பா.ம.க வில் 


அதை மதிப்பீடு செய்கிறார் மருத்துவர் ராமதாஸ் தைலாபுரம் தோட்டத்திற்கு நேற்று மூத்த நிர்வாகிகள் பலர் பாமக நிறுவனர் ராமதாஸை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.பாமக நிறுவனர் ராமதாசூக்கும், அன்புமணிக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வரும் நிலையில், ராமதாஸ் கட்சியின் நிர்வாகிகளை நீக்குவது, புதிய நிர்வாகிகளை நியமித்தும் வருகிறார். மறுபுறத்தில் அன்புமணி, நீக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் பொறுப்பு வழங்குவது, அவர்களை நீக்கும் அதிகாரம் ராமதாசூக்கு இல்லை எனவும் அறிவித்தது வருகிறார்.அன்புமணி பக்கம் கட்சியினர் இருப்பது போன்ற தோற்றம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று தைலாபுரத்தில் உள்ள ராமதாஸ் இல்லத்திற்கு கட்சியின் கவுரவத் தலைவர் ஜி.கே.மணி, மாநில வன்னியர் சங்கத் தலைவர் பு.தா. அருள்மொழி, மகளிர் அணி நிர்வாகி சிலம்புச்செல்வி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பல்வேறு மாவட்டங்களுக்கு வந்திருந்தனர். ஆலோசனை நடத்தினார்.



இதற்கிடையே கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் சேர்ந்த பிறகு விலகி பாமக வந்த முன்னாள் பொதுச் செயலாளரும், முன்னாள் மத்திய இணையமைச்சருமான பொன்னுசாமி தைலாபுரம் வந்தார். அவரிடம், ராமதாஸ் அழைப்பு விடுத்து வந்தீர்களா என்றபோது, ​​என நீண்டகால நண்பர். அவரை சந்தித்ததாக தெரிவித்தார்.
முதல் தலைவர் பின்னர் சட்ட மன்ற உறுப்பினர் 
பேராசிரியர் தீரன் அடுத்த தலைவர் மற்றும் சட்ட மன்ற உறுப்பினர் 
எடப்பாடி கணேசன் அதற்கு அடுத்த தலைவர் மற்றும் சட்ட மன்ற உறுப்பினர் 
கோ. க. மணி (1998 முதல் 2022 வரை) அதன் பின்னர் தலைவர் 
அன்புமணி இராமதாஸ் (28 மே 2022 - 11 ஏப்ரல் 2025 வரை)
ச. இராமதாஸ் தற்போது வரை).  முதல் சட்ட மன்ற உறுப்பினர் பண்ருட்டி ராமச்சந்திரன் முதல் பொதுச் செயலாளர் பசுபதி பாண்டியன் அடுத்ததாக 
தலித் இரா.எழில்மலை அவரைத் தொடர்ந்து 
வடிவேல் இராவணன்
முக்கியத் தலைவர்களாக மருத்துவர் 
ச. இராமதாசு - பாமக நிறுவனர் மற்றும் மாநிலத் தலைவர் மருத்துவர் 
அன்புமணி ராமதாஸ் - பாமக மாநில செயல் தலைவர்
வடிவேல் இராவணன் - பாமக மாநிலப் பொதுச்செயலாளர்
திலகபாமா - பாமக மாநிலப் பொருளாளர்
கோ. க. மணி - முன்னாள் மாநிலத் தலைவர், முன்னாள் மத்திய உணவு பதப்படுத்துதல் துறை இணை அமைச்சர் வேலூர் 
என். டி. சண்முகம், அடுத்ததாக 
ஏ. கே. மூர்த்தி - பாமக துணைப் பொதுச்செயலாளர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் மத்திய இரயில்வே துறை இணை அமைச்சர்
அர. வேலு - முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் முன்னாள் இரயில்வே துறை இணை அமைச்சர்
கோ. க. ம. தமிழ்க்குமரன் - பா.ம.க முன்னாள் இளைஞரணித் தலைவர் நீக்கம் செய்யப்பட்டவர்  
வழக்கறிஞர் கே. பாலு - பாமக பேச்சாளர் என தேர்தல் ஆணையம் மற்றும் இணைய பதிவு உள்ளது அது பொதுக்குழு முடிவு செய்து திருத்தம் வெளியிட வேண்டும். பாமக வில் சட்டம் மற்றும் துணை விதி 10 A படி ஒரு மாவட்டத்தில் பொதுக்குழு கூடி முடிவு செய்து மாவட்டச் செயலாளரை தேர்வு செய்ய முடியும். ஆனால் அப்படி நடக்க அக் கட்சியின் தலைமை இடம் தராது.












கடந்த சில நாட்களாக கட்சியினர் வருகையின்றி வெறிச்சோடிக் காணப்பட்ட தைலாபு ரத்தில் நேற்று கட்சியினரின் வருகை ராமதாஸை சரிக்கட்ட ஜி.கே.மணி முயற்சி என கட்சி வட்டாரத்தில் தகவல்.



இதில் நடக்கும் உண்மை யாதெனில் நானும் அடிக்காமல் அடித்தேனே,! என்ற கணவர் போல நானும் அழுகாமல் அழுதேனே ! எந்த மனைவி கதை போல பாமக வில் தந்தை மகன் இருவரும் பேசிக்கொண்டு நடப்பது ஒரு வேள்வி அது ஜி.கே.மணியின் ஆதரவாளர்களை அடையாளம் கண்டு பிரித்து தனிமைப்படுத்தப்பட நடக்கும் வேள்வி ?! இது துரோகம் செய்த ஒரு தொடக்கப்பள்ளி பள்ளி ஆசிரியர் மணியானவரை வெளியேற்ற தந்தை மகன் இணைந்து நடத்தும் சண்டை போல ஒரு நாடகம் தான், இது மற்ற யாரும் அறியாதது அறிய வாய்ப்பில்லை. காரணம் கடந்த 40 ஆண்டு காலம் பாமகவை உள்ளும் வெளியும் பார்த்தவர்களின் பார்வை இது . அந்த கிச்சன் கேபினட் தான் இங்கு நடைபெறும் அரசியல் களம் காணும் அல்லது அறியும் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...