முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

திருப்பூரில் பதவிப் போட்டி முன்பகை ஹிந்து முன்னணி நபர் படுகொலை

திருப்பூரில் பதவிப் போட்டி முன்பகை ஹிந்து முன்னணி நபர் இன்று அதிகாலை ஓடிய நிலையில் விரட்டிப் படுகொலை.


பதவி இழந்த முன்னாள் ஹிந்து முன்னணி நபர் இந்தக்கொலையை செய்திருப்பது காவல்துறை முதல்நிலை விசாரணையில் தெரியவந்தது. திருப்பூர் குமரானந்தபுரம் காமராஜர் வீதியில் வசித்தவர் பாலமுருகன் (வயது 30). இவர் ஹிந்து முன்னணி அமைப்பின் திருப்பூர் (வடக்குப் பகுதி) வழக்கறிஞர் பிரிவின் ஒன்றியத் தலைவரக உள்ள நிலையில், நேற்றிரவு 12 மணிக்கு வீட்டிலிருந்து வெளியில் சென்ற பிறகு மீண்டும் வீடு திரும்பவில்லை.


இரவு வெளியே சென்றவர் வீடு திரும்பாதது குறித்து குடும்பத்தினருக்குத் தெரியவரவே, இன்று அதிகாலையில் அவரைத் தேடிச் சென்றபோது பாலமுருகன் வசித்து வந்தார். காமராஜர் வீதியில், அவர் வெட்டுக் காயங்களுடன் இறந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

தாங்கள் வசித்து வந்த வீதியிலேயே பாலமுருகன் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது குறித்து அவரது குடும்பத்தினர் திருப்பூர் வடக்கு காவல் நிலையத்திற்கு தகவல் தந்தனர். சம்பவ நிகழ்விடத்திற்கு வந்த காவல்துறை சம்பவம் குறித்து விசாரணை நடத்திய போது, ​​அதிகாலை சுமார் 4 மணியளவில், 3 பேர் அங்கு நின்று கொண்டிருந்த பாலமுருகனை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றது காணொளிக் காட்சி மூலம் விபரம் தெரியவந்தது. அதிகாலை கொலை நடந்த நிலையில் இரவு முழுவதும் பால முருகன் எங்கு சென்றிருந்தார்? என்பது போன்ற பல கோணங்களில் காவல்துறை விசாரணையை முடுக்கிவிட்டனர்.


சம்பவம் நடந்த இடத்தில் திருப்பூர் மாநகரக் காவல் (வடக்கு) துணை ஆணையர் பிரவின் கௌதம் ஐபிஎஸ், வடக்கு காவல் உதவி ஆணையர் வசந்த் உள்ளிட்ட நிர்வாகிகள் நேரில் சென்று பார்வையிட்டதுடன் இச்சம்பவம் குறித்த விசாரணையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.தொடர்ந்து 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு மாநகரின் பல்வேறு இடங்களில் விசாரித்தது. கொலையின் போது உடனிருந்த நபர்கள் 3 பேரிடம் முதற்கட்டமாக விசாரித்து, தனிப்படை அமைத்து விசாரிக்கத் துவங்கினர். காவல்துறை தகவல் கூறும்போது, ​​“ஹிந்து முன்னணியில் ஏற்கனவே பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட குமாரனந்தபுரத்தைச் சேர்ந்த சுமன் (வயது 34) மற்றும் தற்போதைய பொறுப்பாளர் பாலமுருகனுக்கிடையே பொறுப்பு வகிப்பது தொடர்பாக முன்பகை எழுந்ததில் ஆத்திரத்தில் இருந்த சுமன், பாலமுருகனை கொலை செய்ய திட்டமிட்டிருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்ததையடுத்து தனிப்படை காவல்துறை சுமனை கேரளா மாநிலம் பாலக்காட்டில் வைத்து பிடித்து விசாரித்து வருகின்றனர். மேலும் இதில் சம்பந்தப்பட்ட நரசிம்ம பிரவின் (வயது 29) அவரைத் தேடி வருகிறோம்,” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலபக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...