முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கீழடி அகழாய்வுப் பணிகளை மத்திய அரசின் சார்பில் திட்ட இயக்குனராக மேற்கொண்ட அமர்நாத் ராமகிருஷ்ணா இயக்குனர் பணி உயர்வு

கீழடி அகழாய்வுப் பணிகளை மத்திய அரசின் சார்பில் மேற்கொண்ட அமர்நாத் ராமகிருஷ்ணா பணி உயர்வு காரணமாக 


தேசிய தொல்லியல் மற்றும் நினைவுச் சின்னங்கள் அமைப்பின் இயக்குநராக இருந்தவர் நொய்டாவுக்கு மாற்றமானார்.

அமர்நாத் ராமகிருஷ்ணன் தாக்கல் செய்த கீழடி  அகழ்வாராய்ச்சி அறிக்கையை மத்திய அரசு ஏற்பதில் பல சந்தேகங்கள் கேட்டு திருத்தம் கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது.    திருநெல்வேலி மாவட்டம் ஆதிச்சநல்லூர் அகழாய்வு தான் தமிழ்நாட்டிலேயே முதன்மையான அகழ்வாராய்ச்சியாகும்.  அதை சத்தியமூர்த்தி குழுவினர் தீவிரமாகச் செயல்பட்டு ஆதிச்சநல்லூரில் கிடைத்த முதுமக்கள் தாழி மற்றும் ஆபரணங்கள், நாணயங்கள் உள்ளிட்ட யாவற்றையும் முழுமையாகப் பல்வேறு இடங்களில் சேகரித்துத் தொகுத்து மத்திய அரசில் மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது அனுப்பி வைத்தார்கள்.


மத்திய அரசு காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் 10 முதல் 15 ஆண்டுகள் வரை அதை வெளியிடாமலேயே காலம் கடத்தி தாமதித்து  வைத்திருந்த உண்மை யாவரும் அறிந்ததே !.


கீழடி அகழ்வாராய்ச்சியும் மிகவும் முக்கியமானது தான். தமிழரின் பயன்பாட்டுத் தொன்மையைச் மற்றும் கடந்து போன வாழ்வியல் வரலாற்றைச் சொல்லுகிற அந்த ஆய்வு இன்னும் விரிவாக எடுத்தாளப் பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருந்தால் அவர்கள் வரலாறு அறியாதவர்கள். சின்னமனூர் செப்பேடு கூறும் சங்கம் வளர்த்த   மாமதுரை தமிழ்க் கலாச்சாரங்களின் நகரம் என்பதும் உண்மை தான்.     தமிழ்நாட்டில் எங்கெங்கெல்லாம் அகழ்வாராய்ச்சி நடக்கிறதோ அவை அனைத்தும் மிகவும் முக்கியமானதும் வரலாற்றுப் பூர்வமானதும் மனித நாகரிகங்கள் பற்றிய கூடுதல் அறிவுப் பெருக்கம் காண ஏதுவானது தான்! அவை அனைத்தும் தமிழ் மண்ணுக்கான பெருமை தான் அதை யாரும் மறுக்கவில்லை! 




வரலாற்று அறிஞர்கள் சத்தியநாத ஐயர், ரங்கசாமி ஐயங்கார், கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி, வையாபுரி பிள்ளை, சேதுப்பிள்ளை தெ பொ மீனாட்சி சுந்தரனார், கள்ளர் வழி வந்த சதாசிவப் பண்டாரத்தார்,  போன்றவர்கள் ஆதிச்சநல்லூர் ஆய்வு தான் மிக முக்கியமானது அது சீரிய முறையில் தமிழர் பண்பாட்டையும் அவர்கள் தொன்மத்தையும் விளக்கும் வகையில் இருக்கிறது எனக்  கூறிய பின்னும் இன்று அந்த ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி  மிகவும் மந்தமாக அல்லது கவனிப்பாரற்று  நடந்து வருகிறது. இது திருநெல்வேலியில் வாழ்பவர்களுக்கு சற்று வேதனை தரக்கூடியது தான் பலரும் இது பற்றி பேசியும் எழுதியும் வருகிறார்கள்! அதற்கு அடுத்ததாக கொடுமணல் சிவகங்கை சமஸ்தானத்தின் ஜமீன் பாரம்பரிய அழகன்குளம், கொற்கை, சிவகளை,, மயிலாடும்பாறை, கங்கைகொண்ட சோழபுரம், பொற்பனைக்கோட்டை  ஆகிய இடங்களிலும் கீழடியைப் போலவே அகழாய்வுகள் தற்போது திமுக ஆட்சியில் முதல்வர் ஸ்டாலின் காலத்தில் தொடர்ந்து ஏன் நடைபெறவில்லை அல்லது ஏன் மந்தமாக இருக்கிறது. கொடுமணல் பழைய காலத்தில் கிரேக்கர்கள் கடாரத்தார் சாவகர்கள் எனப் பலரும் வந்து போன வணிகம் நிகழ்ந்த இடம்.

ஆதிச்சநல்லூர் அகழாய்வு மீண்டும் சிறப்பான முறையில் நடக்க வேண்டும் என்பது  தான் தற்போது திருநெல்வேலி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது! கீழடி அகழ்வாய்வு எவ்வளவு முக்கியமோ அதை விடவும் முக்கியமானது ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வுகள்!. சமீபத்தில்  மத்திய அரசும் ஆதிச்சநல்லூர் ஆய்விற்கு ரூபாய் 55 கோடிகளை ஒதுக்கியது பலருக்கும் தெரிந்திருக்கும்.


அந்த வகையில் எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும் ஆதிச்சநல்லூர் ஆய்வைத் தொடர்ந்து நடத்திக் கொண்டு தான் இருந்தது என்பது ஒரு முக்கியமான விஷயம் !ஏனெனில் இது உண்மையான வரலாற்று பூர்வமான தகவல்களையும் மிக சிறந்த ஆய்வு உண்மைகளையும் கொண்டுள்ளது!.

இதை நான் குற்றச்சாட்டாகச் சொல்லவில்லை ஒரு உண்மையான பணியிலிருக்கும் ஆட்சியாளர்களும் அதிகாரங்களும்  இவற்றின் மீது கவனம் கொள்ள வேண்டும் எனும் அக்கறையில் பல வரலாற்று ஆசிரியர்கள் கோரிக்கை வைக்கின்றனர்!

கீழடி அகழ்வாய்வில் வழக்கறிஞரான கனிமொழி மதி என்பவர் உயர்நீதிமன்றத்தில் கொடுத்த வழக்கு மீதுதான் இன்று வரைக்கும் முன்னெடுக்கப்பட்டுப் பொது வெளியில் பேசப்படுகிறது! அதை யாரும் வெளியில் சொல்வதில்லை! பிறகு அதைப் பயன்படுத்திக் கொண்டு மேடைகளில் பல்வேறு அலங்கார பூச்சுகளைப் பூசி வேடிக்கை காட்டிக் கொண்டு அதைத் தாங்களே கண்டுபிடித்ததாக பலவாறு வகையில் சிலரும் கற்பனை கதைகள் எழுதி அதையே ஆய்வுகள் செய்யாமல் வரலாறு எனக் கூறி புத்தகமாக அச்சிட்டு விற்பனை நடத்தி வரலாறு தெரியாத நபர்களிடம் சம்பாதிக்க ஒரு பிரச்சாரம் செய்கிறார்கள்.

அதை ஒட்டி கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்த நாடாளுமன்ற மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினர் தான்  கீழடி ஆய்வின் மொத்தக் குத்தகைதாரர் போலப் பேசப்பட்டு வருகிறார்!

கீழடி -மனலூர், கொந்தகை  அகழ்வாய்வில் உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர் அதற்கான அனுமதியையும் அதைத் தொடர்ந்து அகழ்வாய்வு சொய்ய  வேண்டியதன்   முக்கியம் என்பதைத் தீர்ப்பாக சொல்லிய பின்னர் தான் கீழடி அகழ்வாய்வுப் பணிகள் வேகம் எடுத்தது!

இவை அணைத்தும் ஒருபுறம் இருக்கட்டும்! மீண்டும் உலகின் கவனத்தைக் கவர்ந்த ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது தான் இந்தச் செய்தியின்  நோக்கம். எந்த அறிவும் இல்லாததாக சில பெயர் சொல்லி விரும்பாத பத்திரிகைகள்  செயலாற்றுகின்றன. அதோடு பல விஷயங்கள் உள்வாங்காத அங்கீகாரம் பெறாத சமூக ஊடகங்கள்  வேறு 

என்ன செய்தி எழுதுகிறார்கள் உண்மை அறியாமல் ?!

மற்றொரு விடையம் இதில் அமர்நாத் ராமகிருஷ்ணன் கீழடியில் பணி புரிந்தது 2014 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை மட்டுமே. 

அதற்குப் பிறகு அவர், அதிலிருந்து பணி மாறுதல் செய்யப்பட்டு விட்டார். அதன் பிறகு கீழடி தொடர்பாக எந்தப் பொறுப்பிலும் அவர் இல்லை.

கோவில் கணக்கெடுப்புப் பணி அதற்குப் பிறகு தேசிய நினைவுச் சின்னங்கள் பிரிவு இயக்குநராக அமர்த்தப்பட்டார் அவரிடம் பழமையான பொருட்கள் பிரிவும் கூடுதலாக அளிக்கப்பட்டது.

இப்போது புதிய மற்றொருவரும் இயக்குநராக ஆகியுள்ள நிலையில், அமர்நாத் ராமகிருஷ்ணன் பார்த்து வந்த அந்தக் கூடுதல் பழமையான பொருட்கள் துறையை புதிய இயக்குநருக்கு அளித்துள்ளார்கள்.

டெல்லி அலுவலகத்திலிருந்து நொய்டா என்பது 15 கிலோ மீட்டர் தொலைவில் தான் உள்ளது.

அமர்நாத் ராமகிருஷ்ணா ஊடக வெளிச்சம் பழகிவிட்டார். 

இதற்கும் அவரது அறிக்கைக் குளறுபடிக்கும் தொடர்பு படுத்தி மதுரை நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் கம்யூனிஸ்ட் கட்சியின் சு.வெங்டேசனும் ஒரு விளம்பரப் பிரியர் இதை வைத்துத் தான் மோகனுக்குப் பின்னர் கூட்டணி மூலம் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார் .

இவர்களின் இந்த விளம்பர வெறிக்குப் பத்திரிகை ஊடகங்கள் பலிகடா ஆகலாமா என்பது தான் எழுவினா ?!

ஒருவேளை, பத்திரிகை ஊடகத்தில் பணி புரிபவர்கள சிலர் வரலாறு அறிந்து கொள்ள வேண்டும் என அவர்கள் பணி செய்துவரும் நிறுவனம் சொல்லி விட்டதோ என்னவொ தெரியவில்லை ?!  

அமர்நாத் ராமகிருஷ்ணா கீழடி அகழ்வாய்வு இயக்குநராகவா இருந்தார் ? இதையெல்லாம் பத்திரிகையாளர் தர்மம் கேட்பதில்லையா என்ன ?ASI திட்ட இயக்குநருக்கும் துறை இயக்குநருக்கும் வேறுபாடு தெரியாத சில செய்தி ஊடகங்கள்

அமர்நாத் ராமகிருஷ்ணா ASI தேசிய நினைவுச் சின்னம் துறை இயக்குநராகப் பதவி உயர்வு 2024 ம் ஆண்டே பெற்றார்

கீழடி அகழ்வாய்வு மேற்கொண்ட 2014-16 ல் அமர்நாத் ASI திட்ட இயக்குநர் மட்டுமே

அதன் பிறகு ASI கோவில் ஆய்வுத் திட்ட இயக்குநர் மட்டுமே

17 ஜூன் 2025 அன்று அவரிடமிருந்த இரு துறைகளில் ஒரு துறை மட்டுமே புதிய இயக்குநருக்கு அளிக்கப்பட்டது

ஒரு வருடம் கழித்து இப்போது அது குறித்து பேசுவது ஏன் என்பது தான் நம் வினா ?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...