முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

குழந்தைகளைப் படுகொலை செயத குற்றவாளிகள் குன்றத்தூர் அபிராமி மற்றும் சுந்தரத்துக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது

டிக் டாக்கில் வீடியோ பதிவிட்டு அபிராமிக்கு அப்பகுதியில் பிரியாணி கடையில் பணியாற்றிய சுந்தரம் பழக்கம் .



பெற்ற குழந்தைகளைக் கொன்ற தா(பே)ய் அபிராமி தண்டிக்கப்பட வேண்டிய குற்றவாளி தான். 201 பக்கம் உள்ள தீர்ப்பு பலரும் வரவேற்பு.

சென்னை புறநகர் காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அடுத்த மூன்றாம் கட்டளை பகுதியைச் சேர்ந்தவர் விஜய். தனியார் வங்கியில் பணியாற்றியர். இவரது மனைவி அபிராமி. இவர்களுக்கு அஜய் (வயது 6) என்ற மகனும் கார்னிகா (வயது 4) என்ற மகளும் இருந்தனர்.




டிக் டாக்கில் வீடியோ பதிவிட்டு பிரபலமானதாக நினைத்த அபிராமிக்கு அந்தப்பகுதியில் பிரியாணிக் கடையில் பணியாற்றிய சர்வர் சுந்தரம் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது. இவர்களது விவகாரம் அபிராமி கணவரான விஜய்க்கு தெரியவர அவர் கண்டித்த நிலையில் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டதனால் ஆத்திரமடைந்து அபிராமி சுந்தரத்துடன் சேர்ந்து வாழ முடிவெடுத்து இதற்குத் தடையாக உள்ள கணவன் மற்றும் குழந்தைகளைக் கொலை செய்ய முடிவு செய்தார்.







2018-ஆம் ஆண்டு அவரது 2 குழந்தைகள் மற்றும் கணவருக்கு பாலில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்துள்ளார். அதில் விஜய் உயிர் தப்பினார். இருப்பினும் 2 குழந்தைகளும் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  அது தொடர்பாக அபிராமி கணவர் விஜய் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அபிராமியைத் தேடினர் அப்போது கள்ளக்காதலன் சர்வர் சுந்தரத்துடன் தப்பிச் செல்ல முயன்ற அபிராமியை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பிடித்துக் கைது செய்து விசாரணை நடத்தி புழல் சிறையில் அடைத்தனர்.







இந்தச்சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இவ்வழக்கு தொடர்பாக இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது, பெற்ற குழந்தைகளைக் கொன்ற தா(பே)ய் அபிராமி தண்டிக்கப்பட வேண்டிய குற்றவாளி என்றும் கொலைக்கு உடந்தையான கள்ளக்காதலன் சர்வர் சுந்தரமும் குற்றவாளி எனத் தீர்ப்பு வழங்கப்பட்டது. தொடர்ந்து, அபிராமி மற்றும் அவரது கள்ளக்காதலன் சுந்தரத்துக்கு தண்டனை விவரங்களை சற்று நேரத்தில் அறிவிப்பதாக கூறிய நீதிபதி, இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவு பிறப்பித்தார்.நமது மரபுவழி திருமணச்  சடங்குகளும் உணவு உடை கலாச்சாரம் தற்போது மாற்றம் கண்டுள்ள நிலையில், திருமணத்திற்கு பிறகான வாழ்க்கை முறையும் மாற்றத்தை கண்டுள்ளது. அப்படியிருக்க, இன்றைய காலகட்டத்தில் திருமணத்தை தாண்டிய உறவு அதிகமாகியிருப்பதை  கவனித்திருப்பீர்கள். செய்திகளில், உங்களின் பார்வைக்கு இந்தியாவில் ஒவ்வொரு பகுதிகளின் திருமணத்தை தாண்டிய உறவின் எண்ணிக்கையும் பெரியளவில் வேறுபடுகிறது. இது சமீபத்தில் வெளியான தரவுகள் மூலம் தெரியவந்தது.







Ashley Madison என திருமண டேட்டிங் செயலி ஜூன் மாதம் ஒரு புள்ளிவிவரத்தை வெளியிட்டது. அதன் தரவுகளின்படி, சிறு சிறு நகரங்களில் இருந்தும் கூட புதிய பயனர்களின் வருகை அதிகரித்திருப்பதால் இந்தியாவில் தங்கள் செயலி மிக வேகமாக வளர்ச்சி கண்டு வருவதாக அந்த நிறுவனம் தெரிவிக்கிறது.







அதில்  முதலிடத்தில் காஞ்சிபுரம்

அந்த வகையில், Ashley Madison's வெளியிட்ட சமீபத்திய டேட்டாவின் படி, இந்தியாவிலேயே தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து தான்  அதிகமான பயனர்கள் இந்த செயலியில் பதிவு செய்துள்ளனர். அதாவது, டெல்லி மற்றும் மும்பை ஆகிய மெட்ரோ நகரங்களைக் காட்டிலும் காஞ்சிபுரம் முதலிடத்தில் உள்ளது. 2024 ஆம் ஆண்டில் இதே பட்டியலில் காஞ்சிபுரம் 17 ஆவது இடத்தில் இருந்த நிலையில், ஒரே ஆண்டில் முதலிடத்திற்கு வந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. 







ஆனால், ஏன் இந்தளவிற்கு அந்த பகுதிகளில் அதிக பயனர்கள் பதிவு செய்திருக்கின்றனர் என்பதை இந்தத் தரவுகள் வெளிப்படுத்தவில்லை. காஞ்சிபுரத்தில் இந்த செயலியின் வளர்ச்சி காணும்போது இரண்டாம் தர, 3ம் தர நகரங்களிலும் இந்த செயலி, முதல் தர நகரங்களை விட வேகமாக வளர்ச்சி காண்கிறது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.Extramarital Affairs In India: டெல்லி பகுதிகளும் ரொம்ப மோசம் 

Ashley Madison செயலியில் திருமணத்தை தாண்டிய உறவில் அதிகம் செயல்படும் முதல் 20 நகரங்களின் பட்டியலை வெளியிட்ட நிலையில், அதில் டெல்லி - தேசிய தலைநகர் பகுதி ஆதிக்கம் செலுத்துவதை பார்க்க முடிகிறது. 20 நகரங்களில் 6 நகரங்கள் டெல்லியை சுற்றியது. மத்திய டெல்லி இந்த பட்டியலில் 2வது இடத்தை பிடிக்கிறது. தென்மேற்கு டெல்லி, கிழக்கு, தெற்கு டெல்லி, மேற்கு டெல்லி, வடமேற்கு டெல்லி ஆகியவையும் இந்த பட்டியலில் உள்ளன. மேலும் டெல்லி அருகே உள்ள கொரேகான், காசியாபாத், நொய்டாவின் கௌதம் புத்தா நகர் ஆகிய பகுதிகளிலும் இந்த செயலிக்கு அதிக பயனர்கள் இருப்பதை பார்க்க முடிகிறது.




, இங்கு அதன் அதிகாரப்பூர்வ இணையப் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது..இருவருக்கும் தூக்கு தண்டனை தான் கொடுத்திருக்க வேண்டும்..?! குற்றவாளி 

 அபிராமியை பார்த்து நீதிபதி சொன்னது இது

தனது குழந்தைகளை கொலை செய்த வழக்கில் முதல் குற்றவாளி அபிராமி, 2 வது குற்றவாளி மீனாட்சி சுந்தரம் என்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி உணவு இடைவேளைக்குப் பின் தண்டனை குறித்த விவரங்களை வாசிப்பதாக கூறிச்சென்றார்

ஆனால் அடுத்த 10 வது நிமிடமே நீதிபதி செம்மல், நீதிமன்றத்துக்குத் திரும்பினார், இப்படி ஒரு குற்றவாளிகளுக்கு தண்டனை அறிவிக்காமல் எப்படி என்னால் சாப்பிட முடியும்?

அதனால் தண்டனை விவரங்களை வாசித்த பின்னரே சாப்பிட இருப்பதாக கூறி தீர்ப்பை வாசித்தார்

இந்த வழக்கில் குற்றவாளிகள் அபிராமிக்கும் மீனாட்சி சுந்தரத்துக்கும் தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என்பது தான் எனது விருப்பம்

இருந்தாலும் நான் வாழ்வது காந்தி தேசம், கண்ணுக்கு கண், பல்லுக்கு பல், உயிருக்கு உயிர் என்று தண்டனை வழங்க முடியாமல் சூழ்நிலை தடுக்கின்றது

ஒரு தாயே தான் பெற்ற இரு குழந்தைகளை, தன்னுடைய காம இச்சைக்காக கொலை செய்திருப்பது என்பது ஏற்றுக் கொள்ள முடியாது

நம் நாட்டில் பிள்ளை பாக்கியம் இல்லாமல் எத்தனை பெண்கள் தவமிருக்கிறார்கள்? அப்படி இருக்க இது மன்னிக்க இயலாத குற்றம்

முதல் குற்றவாளியான அபிராமிக்கும், அவருக்கு இணையாக மீனாட்சி சுந்தரத்திற்கும் வாழ் நாள் முழுவதும் சிறை தண்டனை விதித்து உத்தரவிடுகிறேன்

நான் ஏற்கனவே 7 வருடம் சிறையில் இருந்து விட்டேன்; எனது தாய் தந்தை இருவரும் 70 வயதை கடந்தவர்கள் அவர்களை பார்த்துக் கொள்ள இருப்பதால் கருணை காட்டவேண்டும் என மீனாட்சி சுந்தரம் கோரிக்கை விடுத்து 

நானும் எனது பெற்றோரை கவனித்துக் கொண்டு மீதி காலத்தை கழிக்க வேண்டும் அதனால் எனது தண்டனையை குறைக்க வேண்டுமென அபிராமியும் கோரிக்கை விடுத்த நிலையில்,

இந்த பொறுப்புணர்வு காம இச்சைக்காக இரு குழந்தைகளை கொலை செய்வதற்கு முன்பு இருந்திருக்க வேண்டும் இரக்கம் காட்ட இயலாது " என நீதிபதி செம்மல் நல்ல தீர்ப்பை வழங்கியது சிறப்பு இந்த 201 பக்கங்கள் கொண்ட முழுமையான தீர்ப்பை நாம் படித்த போதும் வாசகர்கள் அறிய சில பக்கங்கள் மட்டுமே இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...

சோழப் பேரரசி வானதி எழுப்பிய மூவர் கோவில்

முதலாம் இராஜேந்திர சோழரின் தாய்  வானவன் மாதேவி எனும் அரசி வானதி, சோழர்களின் வரலாற்றில் பெரும் புகழ் மாமன்னர் அருள்மொழித் தேவன் எனும் இராஜராஜசோழச் சக்கரவர்த்தி மீது இணையில்லாத காதல் மங்கை கொடும்பாளூர் இளவரசி வானதியை "பொன்னியின் செல்வன்" கதை படித்த யாரும் மறக்க முடியாது. சோழர் கடற்படையின் பரப்பை இலங்கை வரை  சென்று வென்று வந்த வரலாற்று நிகழ்வுகளின் மூலம் குறுநில மன்னர்கள் அல்லது வேளிர்  துணை நின்றார்கள் அதில் ஈழத்துப் பட்டம்  வென்ற கொடும்பாளூர் வேளிர் மகளான வானதி இளம் வயதிலேயே தாய் தந்தையை இழந்தவர். கொடும்பாளூர் சிற்றரசன் அதாவது வேளிர் சோழ சாம்ராஜ்யத்தின் சேனாதிபதி யாகவும் இருந்த சிறிய தந்தை குறுநில மன்னர் பூதி விக்ரமகேசரியால் வளர்க்கப்பட்டவர் தான் வானவன் மாதேவி எனும் அரசி வானதி. கொடும்பாளூர் பிறந்து திருக்கோவிலூரை பின்னர் ஆண்ட மலையமானின் மகள்  “மேலும் வானவன்மாதேவி மன்னர் ராஜராஜ சோழர் மறைந்த உடன் பிரிவாற்றாமல் உடன்கட்டை ஏறி தன் உயிரை மாய்த்துக் கொண்டாள். இதை திருவாலங்காட்டுச் செப்பேடுகள் மூலம் அறியலாம் ஈழத்தில் நடைபெற்ற யுத்தத்திற்காக கொடும்பாளூர்  வேளிர் கடல...