முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அனுமதி பெறாமல் கட்டிய கட்டிடங்கள் குறித்து ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை சார்பில் கடிதம்

மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் கடிதம்

உரிய அனுமதி இல்லாமல் கட்டப்படும் கட்டிடங்களை மூடி  முத்திரைமிட  வட்டார வளர்ச்சி அலுவலர் எனும் ஊராட்சி நிர்வாக சிறப்பு அலுவலர்களுக்கு அனுமதியளித்து  தமிழ்நாடு அரசின் மாவட்ட ஆட்சியர்களுக்கு  ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.;

கிராமப்புற ஊராட்சி மன்றங்களில் அனுமதி பெறாமல் கட்டப்படும் கட்டிடங்களை மூடி முத்திரை வைக்க ஊராட்சிகளின் நிர்வாக சிறபஙஅலுவலர்களுக்கு அனுமதி  உள்ளதாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.


கிராம ஊராட்சி நிர்வாக சிறப்பு அலுவலரின் அனுமதியின்றி கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளும் நபர்களிடமிருந்து உரிய நிலம் தொடர்பான ஆவணங்கள் மற்றும் கட்டிட வரைபட அனுமதிச் சான்றினைக் கோரி உரிய அறிவிப்பினை வழங்க வேண்டும். அனுமதி இன்றி கட்டப்படும் கட்டுமானங்களை நேரடியாக கள் ஆய்வு மற்றும் அளவு ஆய்வு செய்ய வேண்டும். அனுமதி பெறாமல் கட்டப்பட்ட கட்டடம் தொடர்ந்து கட்டப்பட்டுக் கொண்டிருந்தால் அதை பூட்டி முத்திரை இடும் அனுமதி ஊராட்சிகளின்  நிர்வாக அலுவலரான BDO   எனும் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு  உள்ளது என  ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை தெரிவித்துள்ளது. இந்த நிலையில் அடை​யாறு கடலில் கலக்​கும் கழி​முகப் பகுதி பட்​டினப்​பாக்கம் சீனி​வாசபுரத்​தில் சுமார் ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட வீடு​கள் கரையோரங்​களை ஆக்கிரமித்து அனுமதி இல்லாமல் கட்​டப்​பட்​டுள்​ளன.நீர்​நிலை ஆக்​கிரமிப்​பு​களை முழு​மை​யாக அகற்ற 8 வார காலத்​தில் சென்னை மாநக​ராட்​சி, பொதுப்​பணித்​துறை, வரு​வாய்​துறை, நீர் வள ஆதா​ரத்​துறை, குடிசை மாற்று வாரி​யத்​துறை என அனைத்து அலுவலர்களும் ஒருங்​கிணைந்து நடவடிக்கை எடுக்க வேண்​டும். இப்​பகு​தி​யில் வசிக்​கும் குடும்​பங்​களின் மறு​வாழ்​வுக்​கும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்​டும். இதுதொடர்​பாக தமிழ்நாடு அரசின் தலை​மைச் செயலாளர் 3 மாதங்​களில் அறிக்கை தாக்​கல் செய்ய வேண்​டும், என உத்​தர​விட்​டுள்​ளனர் உயர்நீதிமன்ற நீதிப​தி​கள் ஜி.ஆர்​.சு​வாமி​நாதன், மற்றும் வி. லட்​சுமி நாராயணன் ஆகியோர் அடங்​கிய அமர்வு பிறப்​பித்​துள்ள உத்​தர​வில், நீர்​நிலைகளில் ஒரு​போதும் ஆக்​கிரமிப்​பு​களுக்கு அனு​மதி வழங்​கக்​கூ​டாது என உச்ச நீதி​மன்​ற​மும், உயர் நீதி​மன்​ற​மும் பல்​வேறு தீர்ப்​பு​களில் தொடர்ச்​சி​யாக உத்​தர​வு​களைப் பிறப்​பித்து வரு​கிறது. சென்​னை​யில் உள்ள கூவம், அடை​யாறு மற்​றும் பக்​கிங்​ஹாம் கால்​வாய்​கள் முழு​மை​யாக ஆக்​கிரமிப்​பில் உள்​ளன.

கூவம் நதி சுற்​றுச்​சூழல் மறுசீரமைப்புத் திட்​டம், அடை​யாறு மற்​றும் பக்​கிங்​ஹாம் கால்​வாய் புனரமைப்பு போன்ற திட்​டங்​களின் மூல​மாக நீர்​நிலை ஆக்​கிரமிப்​பு​களை அகற்ற நடவடிக்கை எடுத்​தா​லும், மீண்​டும் புற்​றீசல் போல ஆக்​கிரமிப்​பு​கள் பெருகி வரு​கின்​றன. குறிப்​பாக, அடை​யாறு கடலில் கலக்​கும் கழி​முகம் உள்ள பட்​டினப்​பாக்கம் சீனி​வாசபுரத்​தில் சுமார் ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட வீடு​கள் கரையோரங்​களை ஆக்​கிரமித்து கட்​டப்​பட்​டுள்​ளன. இதை முதலில் இந்த சிறப்பு அலுவலர்கள் அரசியல் தலையீடு இல்லாமல் மூடி முத்திரை வைப்பார்களா என்பதும் அது போல ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள நீர்நிலைகளில் உள்ள கட்டிட ஆக்கிரமிப்புகள் மீது இந்த ஊராட்சி அலுவலர்கள் மூடி முத்திரை வைப்பார்களா அல்லது இந்த உத்தரவும் ஊழல் நாடகம் தானா என்பது இனிமேல் தான் தெரியும்.  ஊராட்சி சிறப்பு அலுவலர்கள் ஊராட்சி உதவியாளர்கள் என்ற செயலர்கள் அல்ல எக்ஸ்கியூட்டிவ் ஆன வட்டார வளர்ச்சி அலுவலர் மட்டுமே

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...

சோழப் பேரரசி வானதி எழுப்பிய மூவர் கோவில்

முதலாம் இராஜேந்திர சோழரின் தாய்  வானவன் மாதேவி எனும் அரசி வானதி, சோழர்களின் வரலாற்றில் பெரும் புகழ் மாமன்னர் அருள்மொழித் தேவன் எனும் இராஜராஜசோழச் சக்கரவர்த்தி மீது இணையில்லாத காதல் மங்கை கொடும்பாளூர் இளவரசி வானதியை "பொன்னியின் செல்வன்" கதை படித்த யாரும் மறக்க முடியாது. சோழர் கடற்படையின் பரப்பை இலங்கை வரை  சென்று வென்று வந்த வரலாற்று நிகழ்வுகளின் மூலம் குறுநில மன்னர்கள் அல்லது வேளிர்  துணை நின்றார்கள் அதில் ஈழத்துப் பட்டம்  வென்ற கொடும்பாளூர் வேளிர் மகளான வானதி இளம் வயதிலேயே தாய் தந்தையை இழந்தவர். கொடும்பாளூர் சிற்றரசன் அதாவது வேளிர் சோழ சாம்ராஜ்யத்தின் சேனாதிபதி யாகவும் இருந்த சிறிய தந்தை குறுநில மன்னர் பூதி விக்ரமகேசரியால் வளர்க்கப்பட்டவர் தான் வானவன் மாதேவி எனும் அரசி வானதி. கொடும்பாளூர் பிறந்து திருக்கோவிலூரை பின்னர் ஆண்ட மலையமானின் மகள்  “மேலும் வானவன்மாதேவி மன்னர் ராஜராஜ சோழர் மறைந்த உடன் பிரிவாற்றாமல் உடன்கட்டை ஏறி தன் உயிரை மாய்த்துக் கொண்டாள். இதை திருவாலங்காட்டுச் செப்பேடுகள் மூலம் அறியலாம் ஈழத்தில் நடைபெற்ற யுத்தத்திற்காக கொடும்பாளூர்  வேளிர் கடல...