முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தங்கம் குவிக்கும் நாடுகளின் வர்த்தக நிலை டாலர் வர்த்தகம் குறையலாம்

உலகளவில் மத்திய வங்கிகள் வைத்திருக்கும் மொத்தத் தங்கம் 2009 ஆம் ஆண்டில் 26,000 டன்னாகும், 2024 ஆம் ஆண்டில் 32,000 டன்னாக அதிகரித்தது. கடந்த 4 மாதங்களில் மட்டும் இவர்கள் இரண்டரை டன்னுக்கு மேல் தங்கம் வாங்கினர்.

இந்தியா உட்பட உலகின் முன்னோடி 10 மத்திய வங்கிகள் இதில் பெரும்பகுதியை வைத்துள்ளன. அதாவது 76 சதவீதம் தங்கத்தை 10 நாடுகள் வைத்திருக்கின்றன. உலக தங்க கவுன்சில் தரவுகளின் அடிப்படையில் பார்த்தால் , 2009 ஆம் ஆண்டு முதல் 2024 வரை மத்திய வங்கிகளின் தங்க இருப்பு ஆண்டுதோறும் 4.1 சதவீதம் வளர்ந்ததாகக் கூறுகிறது. அமெரிக்கா, ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, ஜப்பான், நெதர்லாந்து, சீனா, ரஷ்யா மற்றும் இந்தியா ஆகியவை முதல் 10 இடங்களைப் பிடித்துள்ளன.


இந்திய ரிசர்வ் வங்கி (RBI) தங்கம் வாங்குவதை நாளுக்கு நாள் உயர்த்தத் தொடங்கியுள்ளது. தாறுமாறாக தங்கம் வாங்கிக் குவிக்க தொடங்கியுள்ளது. 2024-25 ஆம் நிதியாண்டில் மட்டும், அது 57.5 டன் தங்கத்தை இந்தியா வாங்கியது, இது 2017 ஆம் ஆண்டுக்குப் பிறகு இரண்டாவது அதிகபட்ச வருடாந்திரக் கொள்முதலாகும்.

இந்தியா கடந்த சில மாதங்களாக தங்கத்தை வாங்கிக் குவிக்கக் காரணம். உலக அளவில் பொருளாதாரம் மிகவும் மோசமாகி வருகிறது. சர்வதேச பொருளாதாரத்தில் அடுத்து என்ன நடக்கும் என்று தெரியாத மோசமான சூழல் நிலவி வருகிறது. பல நாடுகளும் தங்கத்தை இதனால் வாங்கிக் குவிக்க தொடங்கி உள்ளன. கடந்த ஐந்து ஆண்டுகளில், RBI-யின் தங்க இருப்பு 35 சதவீதம் அதிகரித்து, நிதியாண்டு 2020 ல் 653 டன்னிலிருந்து மார்ச் 2025 ல் 880 டன்னாக அது உயர்ந்துள்ளது.

உலகத் தங்க தரவரிசையில் இந்தியாவும் உயர்ந்துள்ளது - தங்க இருப்பு அடிப்படையில் உலகில் ஏழாவது இடத்தில் இந்தியா உள்ளது. 2015  ஆம் ஆண்டில் பத்தாவது இடத்தில் இருந்து. 10 வருடங்களில் 3 இடங்கள் மேலே வந்துள்ளது. உலக தங்க கவுன்சிலின் கூற்றுப்படி, இந்தியாவின் மொத்த அந்நியச் செலாவணி இருப்பில் தங்கம் இப்போது 11.35 சதவீதம் ஆகும், இது 2021 ஆம் ஆண்டில் 6.86 சதவீதமாக இருந்தது.


சீனாவின் மத்திய வங்கியும் தொடர்ந்து தங்கத்தை வாங்கிக் குவித்து வருகிறது. இடையில் கொஞ்சமாக தங்கத்தை மார்க்கெட்டில் விற்ற சீனா மீண்டும் தங்கத்தை வாங்கிக் குவிக்கத் தொடங்கி உள்ளது. சீனாவின் மத்திய வங்கி, மே மாதத்தில் தனது தங்க இருப்பை பல மடங்குக்கு அதிகரித்ததாக தகவல் வெளியிட்டது. இந்த நடவடிக்கை, தங்கத்தின் மீதான சீனாவின் ஆர்வத்தை வெளிப்படுத்துகிறது.

தங்க இருப்பு சேகரிப்பில் சீனாவின் வியூகம்  டந்த ஆண்டில் தங்கத்தை வாங்குவதை சீன மத்திய வங்கி தீவிரமாக கையாண்டுள்ளது. இதன் மூலம் தங்கத்தின் இருப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தங்கத்தின் இருப்பு அதிகரிப்பது உலகப் பொருளாதாரத்தில் சீனாவின் செல்வாக்கை பிரதிபலிக்கிறது. அதோடு சர்வதேச அளவில் தங்கத்தின் விலை உயரவும் காரணமாக அமைந்து விடுகிறது.

சீனா தங்கம் வாங்குவதால் தேவை அதிகரித்து, அதன் விலையும் உயருகிறது. உலக தங்க கவுன்சிலின் முதுநிலை ஆய்வாளர் கிரிஷன் கோபால், மே மாதத்தில் கிட்டத்தட்ட 2 டன் தங்கம் சீனாவால் வாங்கப்பட்டுள்ளது என்று கூறினார். இதன் மூலம் இந்த ஆண்டில் மட்டும் 17 டன் தங்கம் வாங்கப்பட்டுள்ளது. மொத்த தங்கத்தின் இருப்பு சீனாவில் 2,296 டன்னாக உயர்ந்துள்ளதாக கிரிஷன் கோபால் தெரிவித்தார்.

மே மாதம் இறுதியில் சீனாவின் தங்க இருப்பின் மதிப்பு 241.99 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. ஏப்ரல் மாத இறுதியில் இது 243.59 பில்லியன் டாலர்களாக இருந்தது. ஏப்ரல் மாதத்தில் தங்கத்தின் விலை உயர்ந்ததால் கையிருப்புகளின் மதிப்பும் அதிகரித்தது.

முன்னதாக, சீன மக்கள் வங்கி 18 மாதங்கள் தொடர்ந்து விடாமல் தங்கம் வாங்கியது. பின்பு ஆறு மாதங்கள் கொள்முதல் செய்வதை நிறுத்தியது. ஆனால் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்ற பிறகு நவம்பர் மாதம் மீண்டும் தங்கத்தை வாங்கத் தொடங்கியது.

தங்கச் சந்தையில் சீனாவின் புதிய நடவடிக்கைகள்


சீனா தனது உள்நாட்டு தங்கச் சந்தையை விரிவுபடுத்தும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சமீபத்தில் ஷாங்காய் ஃபியூச்சர்ஸ் எக்ஸ்சேஞ்ச் (SHFE), வெளிநாட்டு முதலீட்டாளர்களையும் தரகர்களையும் நேரடியாக சந்தையில் அனுமதிக்கும் என்று அறிவித்தது.

தற்போதைய விதிகளின்படி, வெளிநாட்டு தரகர்கள் மற்றும் பிற வர்த்தகர்கள் உள்நாட்டு இடைத்தரகர்கள் மூலம் வர்த்தகம் செய்ய வேண்டும். இனி, அவர்கள் நேரடியாக பரிவர்த்தனைகளில் ஈடுபட அனுமதிக்கப்படுவார்கள். மேலும், அமெரிக்க டாலர் மற்றும் பிற வெளிநாட்டு நாணயங்களில் மார்ஜினைப் பயன்படுத்தவும் அனுமதி வழங்கப்படும்.

ஷாங்காய் ஃபியூச்சர்ஸ் எக்ஸ்சேஞ்ச் கொண்டு வந்துள்ள இந்த விதிகள், தங்கம் மற்றும் வெள்ளி போன்ற பொருட்களின் வர்த்தகத்தில் சீனாவின் செல்வாக்கை அதிகரிக்கும். இதனால் சீனா இன்னும் அதிகமாக தங்கம் வாங்கும் சூழல் ஏற்படலாம்.

உலக அளவில் தங்கம் வாங்கும் நாடுகள்

சீனா மட்டுமன்றி உலகம் முழுக்க இருக்கும் மத்திய வங்கிகள் அடுத்தடுத்து தங்கத்தை வாங்கிக் குவிக்கத் தொடங்கி உள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

சர்வதேச அளவில் தங்கத்தின் விலை உயரவும் காரணமாக அமைந்து விடுகிறது.

மே மாதம் இறுதியில் சீனாவின் தங்க இருப்பின் மதிப்பு 241.99 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. ஏப்ரல் மாத இறுதியில் இது 243.59 பில்லியன் டாலர்களாக இருந்தது. ஏப்ரல் மாதத்தில் தங்கத்தின் விலை உயர்ந்ததால் கையிருப்புகளின் மதிப்பும் அதிகரித்தது    அமெரிக்காவில் நிலவும் சூழல், இன்னொரு பக்கம் ரஷ்யா மோதல் என எல்லா பக்கமும் தங்கம் ஏறவே வாய்ப்புகள் அதிகம்.. 10 முதல் 15% வரை உயரத் தங்கம் விலை உயர வாய்ப்புகள் அதிகம். அதாவது ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.11,500 போய்விடும். செய்கூலி, சேதாரம் சேர்த்தால் ரூ.14000 கிட்ட போய்விடும். அங்கிருந்து 40 சதவீதம் குறைந்தால் மட்டுமே ரூ.10,000க்கு வரும். அந்தளவுக்குக் குறையுமா என்றால் குறையாது" என்றார் அமெரிக்காவில் நிலவும் சூழல், இன்னொரு பக்கம் ரஷ்யா மோதல் என எல்லா பக்கமும் தங்கம் ஏறவே வாய்ப்புகள் அதிகம் அந்தளவுக்குக் குறையுமா என்றால் குறையாது" என்றார்

முதலீட்டாளர்கள் லாபம் பார்க்க விற்றால் ஒரு ரூ.200- ரூ.300 குறையலாம். 700 ரூபாய் கூட சரியலாம். இருப்பினும், அதையெல்லாம் பெரிதாகப் பார்க்கக்கூடாது. ரூ.9,500ஐ ஒரு பேஸ் போல எடுத்துக் கொள்ளலாம். அதைத் தாண்டி குறைவது கஷ்டம்.. தங்கம் விலை அடுத்த சில காலம் ரூ.9500 முதல் ரூ.10,200 என்ற ரேஞ்சில் இருக்கும்.

10 ஆண்டுகளுக்கு ஒரு கிராம் தங்கம் ரூ.2500 ரேஞ்சில் இருந்தது.  விலை ரூ.10,000க்கு  எல்லாம் உயராது என்றே சொன்னார்கள். ஆனால், இப்போதே தங்கம் விலை ரூ.10,000க்கு போய்விட்டது.

தங்கம் விலை! குறைய வாய்ப்பே இல்லை என ஆனந்த் சீனிவாசன் தகவல்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலபக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...