சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே துலுக்கனூரைச் சேர்ந்த குமரேசன் தனது நிலத்தை அளவீடு செய்து, தனி பட்டா பெறுவதற்காக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தார்.
நீண்ட நாட்கள் கடந்தும் தனது கடமை செய்யாத நில அளவையரான , ஆத்தூர் பிர்க்கா சர்வேயர் ஜீவிதா (வயது 29), அவரது உதவியாளர் கண்ணதாசன் (வயது37) ஆகியோர், நிலம் அளவை செய்துதர 12 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளனர்.அதன் பின் ரூபாய்.10 ஆயிரம் லஞ்சம் தரும்படி பேரம் பேசியுள்ளனர். லஞ்சம் கொடுக்க விரும்பாத குமரேசன், ஊழல் நடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்தார்.
அவர்கள் ஆலோசனைப்படி, நேற்று செப்டம்பர்.,17 ஆம் தேதி மாலை 5 மணியளவில் ஆத்தூர் தாலுகா அலுவலகத்தில் ஜீவிதா மற்றும் கண்ணதாசன் ஆகியோரிடம் குமரேசன் ரூபாய். 10 ஆயிரம் லஞ்சப் பணத்தை அரசு சாட்சி முன்னிலையில் கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்து இருந்த சேலம் மாவட்ட ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இருவரையும் பணம் பெற்ற கையுடன் பிடித்துக்,கைது செய்தனர். பின்னர் சோதனைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் சேர்த்தனர்.
கருத்துகள்