முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சபரிமலை தங்கத் திருட்டில் சிக்கிய திருடன் உன்னியும் சிக்கப்போகும் ஊழல் பெருச்சாளிகளும்

கேரளா மாநிலம்  சபரிமலை ஆலயத்தில் துவார பாலகர் தங்கக் கதவை தாமிரம் என வெளியே கொண்டு சென்றது தற்போது அம்பலமானது- 




தங்கத்தகடுகள் மாயமான சம்பவத்தில் திருவிதாங்கூர் தேவசம் போர்டு துணை ஆணையர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

சபரிமலையில் தங்கத் தகடுகள் பதிக்க 1998-ஆம் ஆண்டு பெங்களூர்  தொழிலதிபர் விஜய் மல்லையா 30.300 கிலோ தங்கமும், 1900 கிலோ பித்தளையும் வழங்கினார்.



கோவிலின் மேற்கூரை, பக்கச் சுவர்களில் சில பகுதிகள், வாசல், நிலை, படிகள் மற்றும் முன்புறமுள்ள துவார பாலகர் சிலைகள் ஆகியவற்றில் தங்கத் தகடுகள் பதிக்கப்பட்ட நிலையில், 2019-ஆம் ஆண்டு துவார பாலகர் சிலைகள், முன்பக்கத்தில் உள்ள கதவு, நிலை பராமரிப்பு மற்றும் புதுப்பிக்கும் பணிகளுக்காக சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டது.



பின்னர் பராமரிப்பு பணி முடிந்த நிலையில் புதிய வாசல், நிலை ஆகியவற்றுடன் பொருத்தப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் இந்த சிலைகள் பராமரிப்புப் பணிக்கு இந்த ஆண்டு சென்னை நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது, இந்த நிலையில், அதில் தங்க முலாம் பூசப்பட்ட தகடுகள் மாயமானது தற்போது  தெரியவந்தது.









ஆனால் 2019-ஆம் ஆண்டு 40 கிலோவுக்கு அதிகமான எடையுள்ள வாசல் மற்றும் நிலை ஆகியவை பராமரிப்பு பணிகளுக்காக பெங்களூருவை சேர்ந்த உண்ணிகிருஷ்ணன் போற்றி என்பவரிடம் கேரளா தேவசம் போர்டு வழங்கிய போது இவை அனைத்தும் தாமிரத்தகடுகள் என அப்போதைய சபரிமலை கோவில் திருவிதாங்கூர் தேவசம் போர்டு நிர்வாக அலுவலரும், இப்போது துணை ஆணையருமான முராரி பாபு சான்றிதழ் அளித்த  நிலையில் சபரிமலையில் புதிய நிலை மற்றும் வாசல் பொருத்தப்பட்டதாகவும்,







அதில் 4 கிலோ தங்கத் தகடுகள் பதிக்கப்பட்டுள்ளதாகவும் உண்ணி கிருஷ்ணன் போற்றி கூறியுள்ளார். பெங்களூருவில் வைத்து நிலம்பூர் தேக்கை பயன்படுத்தி புதிய வாசலை தயாரித்து அதை ஹைதராபாத் கொண்டு சென்று தாமிரத்தகடுகளை பதித்து, பின்னர் சென்னைக்கு கொண்டு வந்து தங்கமுலாம் பூசி சபரிமலைக்கு கொண்டு வந்து அவற்றைப் பொருத்தியதாக உண்ணிகிருஷ்ணன் போத்தி தெரிவித்துள்ளார். அப்படியானால் சபரிமலையிலிருந்து ஏற்கனவே கொண்டு சென்ற தங்கத் தகடுகள் பதிக்கப் பட்ட வாசல் கதவும், நிலையும் எங்கே போனது என்பதில் தான் மர்மம்.





விஜய் மல்லையா அளித்த தங்கத்தால் தான் சபரிமலை கோவிலின் வாசல் மற்றும் நிலை ஆகியவற்றில் தகடுகள் பதிக்கப்பட்டன என்பதற்கான ஆதாரங்கள் வலுவாக உள்ளது. இதை அப்போது சபரிமலையில் தங்கத்தகடுகள் பதிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த சுவாமிநாதன் என்பவரும் உறுதி செய்துள்ளார். 27 வருடங்களில் தங்கத் தகடுகள் தாமிரமாக எப்படி மாறியது  அதற்கு காரணமான ஊழல் பெருச்சாளிகள் யார் என அவர் கேள்வி எழுப்பினார்?,





ஆனால் இவை தாமிரத்தகடுகள் என அப்போதைய நிர்வாக அலுவலர் முராரி பாபு எப்படி சான்றிதழ் கொடுத்தார் எனும் கேள்வி எழுந்து சர்ச்சையை ஏற்படுத்தியது,  தற்போது துணை ஆணையரான முராரி பாபு பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பது




குறிப்பிடத்தக்கது.கேரளா உயர் நீதிமன்ற உத்தரவில் இடைத்தரகராகச் செயல்பட்ட உன்னிகிருஷ்ணன் போத்தி மற்றும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு துணை ஆணையர் முராரி பாபு, திருவிதாங்கூர் தேவசம் வாரிய செயலாளர் ஜெயஸ்ரீ, செயல் அலுவலர் சதீஷ், நிர்வாக அலுவலர் ஸ்ரீகுமார், முன்னாள் திருவாபரணம் ஆணையர் கே.எஸ்.பைஜு உள்ளிட்ட 9 அலுவலர்கள் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது. திருவிதாங்கூர் தேவசம் போர்டு அலுவலர்களே இந்த கூட்டுத் திருட்டுக் கொள்ளையில் ஈடுபட்டு இருப்பது விசாரணையில் தெரியவந்த நிலையில்,  இந்த வழக்கில் நன்கொடையாளர் உன்னிகிருஷ்ணன் போத்தி மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளார்.










திருவிதாங்கூர் தேவசம் போர்டு  கேரளாவிலுள்ள கோவில்களை நிர்வகிக்கும்  தன்னாட்சி அமைப்பு, இது 1950 ஆம் ஆண்டில் திருவாங்கூர் சமஸ்தானத்தில் இருந்து கொச்சின் இந்து சமய நிறுவனங்கள் சட்டம் XV இன் கீழ் நிறுவப்பட்ட கேரளாவிலுள்ள பல்வேறு ஹிந்து கோவில்களின் நிர்வாகம் மற்றும் விழாக்கள்,பராமரிப்பு, சடங்குகள், யாத்ரீகர்களின் வசதிகளைக் கவனிக்கிறது.  ஆனால் அலுவலர்கள் கைது செய்யப்படாமல் கேரளா மாநிலத்தில் ஆளும் மார்க்ஸிய கம்யூனிஸ்ட் கட்சியின் முதல்வர் பினரயி விஜயன் அலுவலகத்தை மாநில பாஜகவினர் முற்றுகையிட்ட்டு அக்டோபர் மாதம் பத்தாம் தேதி போராட்டம் நடத்தினர் இந்த நிலையில் உன்னிகிருஷ்ணன் போத்தியை திருவனந்தபுரம் அருகிலுள்ள அவருடைய வீட்டில் கைது செய்த புலனாய்வுக் குழுவினர், பத்தனம்திட்டா அழைத்து வந்து 10 மணி நேரம் விசாரணையும் நடத்தினர். தொடர்ந்து அவரை, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்து,பின் காவலில் எடுத்து விசாரிக்கவும் முடிவு செய்துள்ளனர். 




சபரிமலை தங்க திருட்டு வழக்கில் முக்கிய நபராகக் கைது செய்யப்பட்டுள்ள உன்னிகிருஷ்ணன் போத்தி, திருவனந்தபுரம் கிளிமானூர் அருகில் புலிமாத்தைச் சேர்ந்தவர் இவர், சில காலம் முன் சபரிமலை கோவிலில் இளைய பூசாரியாக சேருவதற்கு முன்பு தனது தந்தைக்கு புலிமாத் தேவி கோவிலில் உதவியாக இருந்தார். மேலும் பெங்களூருவிலுள்ள ஸ்ரீராமபுர ஐயப்பன் கோவில் உள்ளிட்ட பல கோவில்களில் பணியாற்றி தற்போது பெங்களூருவில் குடியேறியவர், கோவிலுக்கு காணிக்கை செலுத்தும் பணக்கார தொழிலதிபர்களுக்கு இடைத்தரகராக அதாவது புரோக்கராகச் செயல்பட்டதாகத் தெரிகிறது. ஸ்ரீராம்புரா கோவிலில் உதவி பூசாரியாக பணியாற்றிய பின்னர், 2004 ஆம் ஆண்டு அவர் பூசாரி பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்,  வருமானம் இல்லாத போத்திக்கு கணிசமான நிதி மற்றும் சொத்துகள் எவ்வாறு கிடைத்தன என்பதை அலுவலர்கள் இப்போது ஆய்வு செய்கின்றனர். 2017 ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு வரை அவரது வருமான வரிப் பதிவுகளில் நிலையான வணிக வருவாய் இல்லை என்பதைத் தரவுகள் காட்டுகின்றன. திருவிதாங்கூர் தேவசம் போர்டு புலனாய்வு அறிக்கை, போத்தி தனிப்பட்ட முறையில் நிதியளித்ததாகக் கூறும் செலவுகள் உண்மையில் மற்றவர்களால் செலுத்தப்பட்டவை என்பதை வெளிப்படுத்துகிறது. தங்க முலாம் பூசப்பட்ட கதவிற்கு, கர்நாடகாவின் பல்லாரியைச் சேர்ந்த தொழிலதிபர் கோவர்தன் நிதியளித்ததாகவும், கோவிலின் செப்புப் பாயின் தங்க முலாம் பூசுவதற்கு பெங்களூருவைச் சேர்ந்த மலையாளி தொழிலதிபர் அஜிகுமார் நிதியளித்ததாகவும் கூறப்படுகிறது. இனி விசாரணை உரிய அலுவலர்களை கைது செய்து விசாரணை நடத்தி ஆலயக் கொள்ளைக் கும்பல் கைதாக வேண்டும் திருடிய ஆலய தங்கம் மீட்க வேணடும் இதை கடவுள் மறுப்பு கொள்கை கொண்ட மாநில கம்யூனிஸ்ட் அரசு சார்ந்த காவல்துறை செய்ய வேண்டும் என்பதே பலரது எதிர்பார்ப்புகளாகும்,

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...