முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பாரதமாதா உருவம் கொண்ட RSS நூற்றாண்டு நிறைவு விழா தபால் தலை, நாணயம் வெளியீடு

பாரதமாதா உருவம் கொண்ட RSS நூற்றாண்டு தபால் தலை, நாணயம் வெளியீடு



டெல்லி, அம்பேத்கர் சர்வதேச மையத்தில் RSS நூற்றாண்டு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பு

தேசத்திற்கு RSS-ன் பங்களிப்புகளை சிறப்பிக்கும் வகையில் தபால்தலை, நாணயம் வெளியீடு



RSS நூற்றாண்டு தபால்தலை, நாணயத்தை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார்இந்திய நினைவு நாணயம் குறிப்பிட்ட நிகழ்வுகள் மற்றும் முக்கிய நபர்களின் நினைவாக இந்திய ரிசர்வ் வங்கியால் வெளியிடப்படும் நாணயங்கள் . இந்திய நினைவு நாணயங்கள் 1964 ஆம் ஆண்டில் முன்னால் பிரதமர் ஜவகர்லால் நேரு படத்துடன் ஒரு ரூபாய் மற்றும் ஐம்பது பைசா நாணயங்கள் வெளியாயின. இதுவே முதலாவது இந்திய நினைவு நாணயமாகும். இத்தகைய நாணயங்கள் ஒரு தனித்துவமான வடிவமைப்பிலோ அல்லது வழக்கமான வடிவமைப்பிலோ வெளியிடப்படுகின்றன. முக்கியமான நிகழ்வுகள் அல்லது முக்கிய நபர்களை பெருமைப்படுத்தும் விதமாக வழங்கப்படும் இவை இந்திய சுதந்திர போராட்டம், போர், சமாதானம், வனவிலங்குகள், தாவரங்கள், முக்கிய நபர்கள், முக்கிய நிகழ்வுகள் மற்றும் முக்கிய நிறுவனங்களின் நினைவாக வழங்கப்படுகின்றன. இந்நாணயங்கள், 5, 10, 20, 25, 50 பைசாக்களிலும், 1, 2, 5, 10, 50, 75, 100, 125, 1000 உள்ளிட்ட பல்வேறு விதமான ரூபாய் மதிப்புகளிலும் வெளியிடப்படுகின்றன. இவற்றுள் அதிகபட்சமாக ரூபாய் 1000 மதிப்புடைய நாணயம் தஞ்சாவூர் பிரகதீசுவரர் கோவில் கட்டி 1000 ஆண்டுகள் கடந்ததை நினைவுப்படுத்தும் விதமாக வெளியிடப்பட்டது. தற்போது ராஷ்டிரீய ஸ்வயம் சங்கம் 100 ஆண்டுகள் நிறைவைக் கொண்டாடும் விதமாக வெளியிடப்பட்டது.      பாரத மாதா  இந்தியாவைத் தாயின் வடிவமாக உருவகப்படுத்தும்  கருத்தாக்கம்.  19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இந்திய சுதந்திரப் போராட்டத்துடன் உருவானது. பங்கிம் சந்திர சட்டோபாத்யாயாவின் "ஆனந்தமத்" நாவலில் "வந்தே மாதரம்" பாடலில் முதன்முதலில் ஒரு உருவமாக முன்வைக்கப்பட்டது. இது தேசியவாதத்தின் குறியீடாகவும், தாய்நாட்டைப் போற்றுவதற்கும் பயன்படுத்தப்படுகிறது. 

தேசிய உணர்வைத் தூண்டுவதற்காக இது பயன்படுத்தப்பட்டது. 

பங்கிம் சந்திர சட்டோபாத்யாயா: இந்தி சுதந்திரப் போராட்டத்தின் போது, பங்கிம் சந்திர சட்டோபாத்யாயா தனது "ஆனந்தமத்" நாவலில் பாரத மாதாவை வழிபட அழைப்பு விடுத்து, "வந்தே மாதரம்" கீதத்தை தேசிய கீதமாக வழங்கினார். 

மதச்சார்பற்ற மற்றும் தேசியவாதம்: பாரத மாதாவின் கருத்து சுதந்திரத்தின் முன் வந்தாலும், இது ஹிந்து மத தேசியவாதத்துடன் இணைந்தது. இது இந்திய மதச்சார்பற்ற குடியரசில் ஆரியவர்த்தா அல்லது இந்து மதத்தின் தாய்நாட்டை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. 

தாயின் உருவம்: தேசத்தை கற்பனை செய்வதற்கான உலகளாவிய மற்றும் சக்திவாய்ந்த அடையாளமாக தாயின் உருவம் செயல்பட்டது. 

துர்க்கையின் வடிவம்: இந்திய பண்பாட்டின் பெண் கடவுளர்களின் பல குணங்களை ஒன்றிணைத்து, குறிப்பாக துர்க்கையின் வடிவத்தை ஒத்து உருவாக்கப்பட்டது. 

இந்திய தேசியக் கொடி: காவி நிற அல்லது மூவண்ண புடவை அணிந்து, இந்திய தேசியக் கொடியை ஏந்தியவாறு சித்தரிக்கப்படுகிறது1936 ஆம் ஆண்டில் மகாத்மா காந்தியால் திறக்கப்பட்ட பாரத மாதா கோவில் உள்ளது. 1983 ஆம் ஆண்டு இந்திரா காந்தியால் திறந்து வைக்கப்பட்ட பாரத மாதா கோவில் ஹரித்வாரில் உள்ளது. 

 வாரணாசியிலும் பாரத மாதா கோவில் உள்ளது.ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் நிகழ்ச்சியில், பாரத மாதாவின் உருவம் பதித்த நாணயம் வெளியிடுவது குறித்து பிரதமர் திரு. @narendramodi அவர்கள் பெருமிதம்.  என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலபக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...