முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தனிப்படை துப்பாக்கிச் சூடு நடத்திப் பிடித்த பாலியல் குற்றவாளிகள் மூவர்

கோயம்பத்தூர் விமான நிலையமருகே நடந்த பாலியல் வன்கொடுமைக் குற்றத்தில் தொடர்புடையவர்களாகக் கருதப்படும் மூவரை, துப்பாக்கிச் சூடு நடத்தி தனிப்படைக் காவல்துறையினர் கைது செய்தனர்.


இந்த நிலையில் கோயம்பத்தூர் மாநகரக் காவல் ஆணையர் சரவண சுந்தர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது..:-

நேற்று முன்தினம் இரவு கோயமுத்தூர் விமான நிலையம் அருகே நடந்த சம்பவத்தில் குற்றவாளிகளைப் பிடிக்க ஏழு தனிப்படைகள் அமைக்கப்பட்டதில் அவர்கள் சேகரித்த தடயங்களின் அடிப்படையில் குற்றவாளிகள் துடியலூர் அருகே வெள்ளலூரில் பதுங்கி இருந்தது தெரியவந்தது.

அவர்களைக் கைது செய்ய முயன்ற போது, காவலரைத் தாக்கிவிட்டுத் தப்பிக்க முயன்றனர். இதையடுத்து காவல்துறையினர் தற்காப்புக்காக குறைந்தபட்ச ஆயுதமாக துப்பாக்கியைப் பயன்படுத்தி கால்களில் சுட்டனர். அதில் காளீஸ்வரன் மற்றும் கருப்பசாமி எனும் சதீஷ் இருவருக்கு தலா இரண்டு புல்லட்டுகளும் தவசிக்கு ஒரு புல்லட்டும் பாய்ந்து காயம் ஏற்பட்டது.




பின்னர் மூவரையும் போலீசார் கைது செய்தனர். விசாரணையில் கைது செய்யப்பட்டவர்கள் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சதீஷ் (30), அவரது தம்பி காளீஸ்வரன் (21) மற்றும் உறவினர் தவசி (20) என தெரியவந்தது. மூவரும் 10 வருடங்களுக்கு முன்பு கோவைக்கு வந்து இருகூரில் தங்கி கட்டடப்பணி மற்றும் மரம் வெட்டுதல் போன்ற வேலைகளில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இவர்கள் மீது முன்னதாகவே கொலை, திருட்டு, அடிதடி உள்ளிட்ட பல வழக்குகள் பதிவாகியுள்ளன. அண்மையில் சத்தியமங்கலத்தில் நடந்த திருட்டு வழக்கில் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.

சம்பவம் நடந்த இரவு மூவரும் இருகூரில் மது அருந்திய பின்னர் மீண்டும் மது வாங்கிக் கொண்டு சம்பவ இடத்திற்கு வந்து கல்லூரி மாணவியை பலாத்காரம் செய்துள்ளனர். ஆண் நண்பரை அரிவால் போன்ற ஆயுதத்தால் தாக்கி, காரின் கண்ணாடியையும் உடைத்துள்ளனர்.

போலீசார் நூற்றுக்கும் மேற்பட்ட சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்து, தடயங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் குற்றவாளிகளை மடக்கி பிடித்தனர்.

இவர்களுக்கும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் முன்பு எந்தவித தொடர்பும் இல்லையெனவும், திட்டமிட்டு தாக்கியதல்ல எனவும் விசாரணையில் தெரியவந்தது.

இவர்கள் மீது ஐந்து பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவித்தார்.

இந்த செய்தியாளர் சந்திப்பின் போது கோவை மாநகர துணை ஆணையர் கார்த்திகேயன் உடன் இருந்தார்.கோயம்பத்தூர் காவல் துறை ஆணையர் சரவண சுந்தர் விளக்கமளித்த போது 

கோயம்பத்தூர் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் குணா (வயது 30), சதீஷ் (வயது 20), கார்த்திக் (வயது 21) ஆகிய 3 பேரை குற்றவாளிகளாக அடையாளம் கண்டுபிடிச்சி சுட்டுப் பிடித்துள்ளோம்.

கைது செய்யப்பட்ட மூவர் மீதும் ஏற்கனவே கொலை, திருட்டு வழக்குகள் உள்ளன,

மது போதையில் திருட்டு வாகனத்தில் சென்று இந்த குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்

                                                                                                கோயமுத்தூர் ஒண்டிபுதுார் 25 வயது மெக்கானிக் மற்றும் பைக் விற்பனை ஏஜன்சி நடத்தும் நபருக்கு, கோயமுத்தூர் தனியார் சட்டக் கல்லுாரியில் பயிலும், மதுரையைச் சேர்த்த 20 வயது மாணவியுடன் பழக்கமாகி  இருவரும் மூன்று தினம் முன்பு இரவு 11:00 மணியளவில், கோயமுத்தூர் விமான நிலையம் பின்புறம், பிருந்தாவன் நகரில் ஆள் நடமாட்டமே இல்லாத பகுதியில் காரில் பேசிக் கொண்டிருந்தனர், அப்போது, மது குடி போதையில் வந்த மூவர், இளைஞரை தாக்கியதில் அவர் மயங்கினார்; உடன் இருந்த மாணவியை ஒன்றரை கிலோ மீட்டர் துாரம் இழுத்துச் சென்று, கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர் அந்த வழக்கில், சம்பவம் நடந்த 24 மணி நேரத்திற்குள் மூன்று குற்றவாளிகளை அடையாளம் கண்ட தனிப்படைக் காவல்துறையினர் காலில் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர் . இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இச் சம்பவத்தைத் தொடர்ந்து, குற்றவாளிகளை கைது செய்ய ஏழு தனிப்படைகள் அமைக்கப்பட்டன. காவல்துறை கண்காணிப்புக் கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்து, நேற்று முன்தினம் இரவே குற்றவாளிகளைக் கைது செய்தது குறித்து, கோயமுத்தூர் மாநகர காவல்துறை ஆணையர் சரவணசுந்தர் தகவலில்:  தனிப்படையினர், 300 கண்காணிப்புக் கேமராக்களை ஆய்வு செய்ததில், இந்தக் கொடூர செயலில் ஈடுபட்டது, சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி வட்டம் மு. கோவில்பட்டி யைச் சேர்ந்த சதீஸ், வயது 30, அவரது சகோதரர் கார்த்திக், வயது 21, அவனது உறவினர் மதுரை கருப்பாயூரணியைச் சேர்ந்த குணா, வயது 20, என்பதும் தெரிந்தது. மூவர் மீதும் பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் உள்ளதும் கண்டறியப்பட்டது. குற்றம் செய்த மூவரும், துடியலுார் வெள்ளக்கிணறு பட்டத்தரசி அம்மன் கோவில் அருகே பதுங்கி இருப்பதாக தனிப்படை காவல்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்து அங்கு சென்று பிடிக்க முயன்றபோது, அவர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் தாக்குதல் நடத்தியதில், தலைமைக் காவலர் சந்திரசேகர், வயது 47, என்பவருக்கு இடது கை மணிக்கட்டில் வெட்டு விழுந்தது. அங்கிருந்து தப்பி ஓடிய மூவரையும், காவல் துறையினர் துப்பாக்கியால் சுட்டனர். அதில் மூவர் காலிலும் குண்டுகள் பாய்ந்தது. இந்த நிலையில் கைதான மூவரும் கோயமுத்தூர் அரசு மருத்துவமனையில் கைதிக் கண்காணிப்புச் சிகிச்சை பெற அனுமதிக்கப்பட்டனர். வழக்கு நிலுவை இதில், சதீஸ், கார்த்திக் ஆகியோர், 15 ஆண்டுகளாக கோயமுத்தூர் பகுதியில் வசித்துள்ளனர். இவர்கள் மீது, கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் கொலை வழக்கு நிலுவையில் உள்ளது.க.க.சாவடி, துடியலுார், பீளமேடு உள்ளிட்ட காவல் நிலையங்களில் கொள்ளை, வழிப்பறி, அடிதடி உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளன. இவர்கள், மரம் வெட்டுதல், லேத் வேலை போன்ற கிடைக்கும் கூலி வேலைகளுக்குச் சென்றவர்கள். குற்றச் சம்பவத்திற்கு முன், இவர்கள் கோவில்பாளையம் பகுதியில் திருடிய இரண்டு சக்கர வாகனம் மூலம் இருகூர் வந்துள்ளனர். இவர்கள் தங்கியிருந்த இருகூர் வீட்டில் மது குடித்துள்ளனர். மதுவை வாங்கிக் கொண்டு, திருட்டு மொபட்டில் சம்பவம் நடந்த பகுதிக்குச் சென்றுள்ளனர். அங்கு இளைஞரைத் தாக்கிவிட்டு, கல்லுாரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். காயமடைந்த வாலிபர் இரவு 11:20 மணிக்கு காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். அங்கு, 10 நிமிடத்தில் சென்றதாகத் தெரிவித்துள்ள காவல்துறை மெக்கானிக் காதலர் இளைஞரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இருட்டில் ,மாணவியை தேடும் பணியில் 100 காவலர்கள் ஈடுபட்டனர். அதிகாலை 4:00 மணியளவில், அங்கிருந்த பெரிய மதில் சுவரின் அருகே மாணவி பலத்த சேதமாக மீட்கப்பட்டார். இந்த நிலையில் கைதான குற்றவாளிகள் மூவரின் மீதும், BNS சட்டம் 296(பி), 118, 324, 140, 309, 80 ஆகிய சட்டப் பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது. விசாரணையில், மூவரும் இச்சம்பவத்தை திட்டமிட்டுச் செய்யவில்லை எனத் தெரிய வந்துள்ளது. ரகசியத் தகவல் மற்றும் சம்பவம் நிகழ்விடத்தில் கிடைத்த தடயங்கள், கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகள் அடிப்படையில், இவர்கள் தான் குற்றவாளிகள் என தெரிய வந்துள்ளது. கைதானவர்களிடமிருந்து மாணவியின் மொபைல் போன், மோதிரம் மற்றுமொரு மொபைல் போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அடையாள அணிவகுப்பு நடத்த உள்ளதாகவும். தற்போது அந்த மெக்கானிக் காதல் வாலிபர் மற்றும் பாதிக்கப்பட்ட பெண்ணின் உடல்நிலை சீராக உள்ளது. இருவருக்கும் கவுன்சிலிங் கொடுக்கப்பட்டு வருகிறது. குற்றச் சம்பவங்களை தடுக்க, கோயமுத்தூர் மாநகரில் 1,400 கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆபத்தான காலத்தில் காவல்துறையினரைத் தொடர்பு கொள்ள, காவல் உதவி செயலி உள்ளது. இச்செயலியில் உள்ள எஸ்.ஓ.எஸ்., பட்டனை அழுத்தினாலோ அல்லது மூன்று முறை அசைத்தாலோ, காவல்துறைக்கூ உடனே புகார் செல்லும். பாதிக்கப்பட்ட நபரின் இருப்பிடத்தைக் கண்டறிந்து ஆபத்தில் சிக்கி இருந்தால் மீட்க முடியும். மாணவியரின் பாதுகாப்புக்கு, 'போலீஸ் அக்கா' மற்றும் மாணவர்களின் பாதுகாப்புக்கு, 'போலீஸ் புரோ' திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளலாகவும். சம்பவம் நிகழ்விடத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் இருந்த டாஸ்மாக் மதுபான கடையின் குடிப்பகம் மூடப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் தினமும், ஐந்து பீட் காவலர்கள், இரண்டு ரோந்து வாகனங்கள் மூலம் தினமும் ரோந்து செல்வது வழக்கம். சம்பவத்திற்கு சில மணி நேரத்திற்கு முன்பு, பிருந்தாவன் நகர் பிரதானச் சாலை வரை காவலர் ரோந்து சென்றுள்ளனர். எனக் கூறினார். இந்த நிலையில்கோயமுத்தூர் பாலியல் குற்றவாளிக்கும் எங்கள் ஊருக்கும் 50 ஆண்டுகளாக சம்பந்தமில்லை என முன்னால் ஊராட்சி மன்றத் தலைவரும், உள்ளூர் பிரமுகருமான பொன். சண்முகராஜா தகவல் பொய் பேசாத ஊருக்கு அவ்களால் களங்கம் என பகுதி மக்கள் வருத்தம்



கோயம்பத்தூர் மெக்கானிக் காதலனுடன் சட்டக்கல்லூரி மாணவி இரவு 11 மணிக்கு விமான நிலையம் பின்புறம் மூன்று நபர்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத் தில் அந்த மூவரையும் தனிப்படை  காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த நிலையில் அவர்கள் சிவகங்கை மாவட்டம் எஸ். கோவில் பட்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் என்றும் விசாரணையில் தெரிந்த நிலையில் 
தங்கள் கிராமத்து பெய ருக்கு களங்கம் ஏற்படுத்
தியவர்கள் மீது கடுமையான நட வடிக்கை எடுக்க வேண்டுமென்கிறார் மு.சூரக்குடி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் பொன்.      சண்முகராஜா. அவர் கூறிய தகவலாவது



கோயமுத்தூர் மாணவி பாலியல் வன் கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில், மு.சூரக்குடி ஊராட்சி எஸ். கோவில் பட்டியை சேர்ந்த 2 பேர்
ஈடுபட்டுள்ளதை காவல்துறை மூலம் தெரிந்து கொண்டோம். அந்த இருவரின் தந்தை தமிழ்மணிக்கு இந்த ஊர் தான். 30 ஆண் டுகளுக்கு முன்பே கோயமுத்தூரில்  வேலை பார்த்த போது கேரளாவை சேர்ந்த பெண்ணை இரண்டா வதாகத் திருமணம் செய்து அழைத்து வந்து விட்டார். அப்பெண்ணுக்கு பிறந்தவர்கள் தான் இந்தக் குற்றவாளிகளான காளீஸ்வரன், மற்றும் கருப்பசாமி. 25 ஆண்டுகளுக்கு முன்பே ஊரைக் காலி செய்துவிட்டு அவர்கள் தாத்தா சிறுவயது தந்தை உடன் கோயமுத்தூர் சென்று விட்டனர். சில காலம் முன் தமிழ்மணி இறந்து விட்டதாகத் தகவல் கிடைத்தது. அவர்களோடு எங்கள் கிராமத்திற்கு எந்தவிதமான தொடர்போ வரத்துப் போக்கோ இல்லை. எங்கள் கிராமம் ஸ்ரீ செகுட் டையனார் அருள்பாலிக்கும் புண்ணிய பூமி. இந்த ஊரைச் சேர்ந்தவர்கள் ஐயனாருக்காக குழந்தை
பிறந்ததும் காதில் துளை போட்டு கொள்பவர்கள்.  அணைவரும்  முத்தரையர் சமூகம் சார்ந்த மக்கள் பொய் சொல்லவோ, குற்றச்சம்பவங்களில் ஈடுபட மாட்டார்கள். சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் இந்த கிராமத் திலிருந்து வேலைக்குச் செல்பவர்களுக்கு எப்போதும் நற்பெயர் உண்டு. அப் படிப்பட்ட ஊரின் பெய ருக்கு இருவரும் களங்கம் விளைவித்திருப்பது மனவேதனை அளிக்கிறது. சட்டப்பட்டி அவர்களுக்கு அதிகதா தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும் என்கிறார். அதுபோல அங்கு பலர் இதுபோல கருத்து தெரிவித்தனர், செகுட்டு ஐயனார் கோயில் அமைந்திருக்கும் மு. சூரக்குடி கோவில்பட்டியில், ஏறத்தாழ 400 முத்தரையர் குடும்பங்களைச் சேர்ந்த 3000 பேர் வசிக்கும் ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களில் மேட்டுப்பட்டி,
மூக்கம்பட்டி, களஞ்சியம்பட்டி, சூடானிபட்டி,
பிள்ளையார்ஊரணிப்பட்டி, அண்ணாநகர் ,எம்.சூரக்குடி, கள்ளர்பட்டி,
எஸ்.கோவில்பட்டி, ஐயனார் செவிடான மரபு வழிக் கதையை நிரூபிக்கும் வகையில் இவ்வூரில் ஒரு வினோதமான பழக்கம் பல வருடங்களாகத் தொடர்கிறது. ஐயனார் செவிடானதால் தாங்கள் தெய்வக் குற்றம் செய்ததாக உணர்ந்த மக்கள், "உன் காதை ஊனமாக்கிய நாங்களும் எங்கள் சந்ததியினரும் காதை ஊனமாக்கிக் கொள்கிறோம்" என வேண்டியுள்ளனர். அதன்படி, அன்றிலிருந்து இன்று வரை இவ்வூர் மக்கள் காது வளர்ப்பதைப் பழக்கமாகக் கொண்டுள்ளனர். குழந்தை பிறந்த 3 மாதங்களில் காதில் கத்தியால் துளையிட்டு வளையத்தை மாட்டி தொங்க விடுவர். வளையத்தின் எடை தாங்காமல் காது சில நாட்களில் கீழ் நோக்கி இழுபடத் தொடங்கும். இவ்வாறு மக்கள் தங்களது காதை வளர்த்துக் கொள்கின்றனர். இதில் ஆண், பெண் என வேறுபாடில்லை. திருமண வயதிலுள்ள சில பெண்கள் வளர்ந்த தங்கள் காதை வெட்டி, மீண்டும் ஒட்ட வைத்துக் கொள்வதும் நடந்துள்ளது. நாகரீகம் கருதியும், திருமணம் தடைபடுவதைக் கருத்தில் கொண்டும் தற்போது பெண்களுக்கு மட்டும் காது வளர்ப்பதில் விதிவிலக்கு கொடுக்கப்பட்டுள்ளது. முன்னர், காது வளர்க்க மறுத்த சிலருக்கு காது செவிடாதல், உடல் ஊனமாதல் போன்ற குறைபாடுகள் ஏற்பட்டதாகவும் இவ்வூர் மக்கள் அதை தெய்வக் குற்றமாகக் கூறுகின்றனர்.




சுமார் 300 சிசிடிவி கணீகாணிப்புக் கேமரா ஆதாரங்களைக் கொண்டு தப்பிச் சென்றவர்களைப் பிடித்துள்ளோம். கைது செய்யப்பட்ட மூவரில் சதீஷ் மற்றும் கார்த்தி இருவரும் சகோதரர்கள். குணா அவனது உறவினர் ஆகவே மூன்று குற்றவாளிகள் கைது. கோயம்புத்தூர் பாலியல் கொடுமைக் குற்றம் விவகாரத்தில் அரசின்  மீது எவ்வளவு தவறு இருப்பதாகக் கூறுவதை விட அதிகமாகவே அந்தப் பெண் மீதும் தவறு உள்ளது சந்தித்த இடம் பாத்தால் புரியும் நேரம் இரவு 11 மணிக்கு அவங்க சந்திச்சு பேசின இடம்.

இங்கெல்லாம் வந்து காவல் பாதுகாப்பு தர முடியுமா? என்பது வாசகர்கள் பார்வைக்கு.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...