முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழ்நாடு அரசு வழக்கில் இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு அரசியலமைப்பிற்கு எதிரானது- உச்சநீதிமன்றம்

சட்டமன்றப் பேரவை இயற்றிய மசோதக்கள் மீது முடிவெடுக்க குடியரசுத் தலைவர், மற்றும் ஆளுநர்களுக்கு கால நிர்ணயம் செய்த



உச்சநீதிமன்ற இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வு வழங்கிய தீர்ப்பின் மீது 14 கேள்விகளை எழுப்பிய குடியரசு தலைவர் தொடர்பான வழக்கில் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று 111 பக்கத் தீர்ப்பு வழங்கியுள்ளது




கடந்த 2023 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதாக்கள் மீது ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் வைத்துள்ளதாகக் கூறி உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் ஜே.பி பர்திவாலா,  ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணை நடத்தப்பட்டு  ஏப்ரல் மாதம் 8 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டதில் மாநில அரசின் மசோதாக்கள் குறித்து ஒரு மாதத்திற்குள் ஆளுநர் முடிவெடுக்க வேண்டும் அதேபோல் மாநில ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் குறித்து மூன்று மாதத்திற்குள் குடியரசுத் தலைவர் முடிவெடுக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கப்பட்டது. 





ஆனால் உச்சநீதிமன்றத்தின் இத்தகைய தீர்ப்பை கேள்வி கேட்கும் வகையில் மே மாதம் 13 ஆம் தேதியன்று இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 143வது பிரிவின் கீழ் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி உச்ச நீதிமன்றத்திற்கு ஜனாதிபதி 14 கேள்விகளை எழுப்பி இருந்தார். குடியரசுத் தலைவர் அனுப்பிய 14 கேள்விகளை வழக்காக எடுத்துக் கொண்ட உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வானது விரிவான விசாரணை நடத்தியது. 






10 நாட்கள்தொடர் விசாரணைக்கு பின்னர் செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதி வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு  தள்ளி வைத்த நிலையில், இன்று இவ்வழக்கில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர் கவாய் , நீதிபதிகள் சூர்யகாந்த் , விக்ரம் நாத் , பி.எஸ் நரசிம்மா , அதுல்.எஸ்.சந்தூர்கர் ஆகிய 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியது. 






அதில் முக்கிய அம்சங்களை வழங்குவதற்கு முன்பாக முன்பு வழக்கில் வைக்கப்பட்ட வாத, பிரதிவாதங்களைக் குறித்து கருத்து தெரிவித்ததில், ஆளுநருக்கு அரசியல் சாசனம் 200 மற்றும் 21 ல் இருக்கும் அதிகாரம் குறித்து வாதம் வைக்கப்பட்டது. இதே போல் மசோதாவுக்கு ஒப்புதல் எவ்வாறு அளிக்க வேண்டும் உள்ளிட்ட வழிமுறைகள் குறித்தும் விரிவாக வாதங்கள் கேட்கப்பட்டது என்றும், குடியரசுத் தலைவர் எழுப்பிய 14 கேள்விகள் மீதும் , மசோதாக்கள் மீது ஆளுநர் வசம் உள்ள அவகாசங்கள் என்ன என்பது குறித்தும் அனைத்து தரப்பிலிருந்தும் வாதங்கள் வழக்கில் முன்வைக்கப்பட்டது என்று நீதிபதிகள் தெரிவித்தனர். 




இவை தவிர அரசியல் சாசன பிரிவு 200 ன் கீழ் ஆளுநருக்கு உள்ள அதிகாரங்கள் மற்றும் மசோதா மீது முடிவெடுக்க ஆளுநருக்கு உள்ள உச்ச வரம்புகள் குறித்தும் வாதம் முன்வைக்கப்பட்டது என்றும் கூறினர். 

ஒரு ஆளுநர் அமைச்சரவை ஆலோசனை, அவர்களின் வழிகாட்டுதல் படி நடக்க வேண்டும் என அரசியல் சாசனம் தெளிவுபடுத்தி உள்ளது என்றதோடு ஒரு மசோதா அமைச்சரவை மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுடைய ஆதரவு இல்லாமல் சட்டமன்றத்தில் நிறைவேற்றி இருக்காது என்றும் வாதங்கள் வைக்கப்பட்டதாக நீதிபதிகள் தெரிவித்தனர். 




இந்த வழக்கில் முதல் பிரதான பிரச்சனையாக உள்ளது மசோதா மீது ஆளுநர் என்னென்ன நடவடிக்கைகளை எடுக்கப்பட வேண்டும்? என்பதுதான். 

அதன்படி ஒரு மசோதா மாநில சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டால் ஆளுநருக்கு நான்கு விருப்பங்கள் வழங்கப்படுகிறது என ஒரு தரப்பு வாதங்களை முன் வைத்ததாகவும், ஆனால் மற்றொரு தரப்பு மூன்று வாய்ப்புகள் மட்டும் தான் ஆளுநருக்கு உள்ளது என்றும் வாதங்களை முன் வைத்ததாக நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். 

தொடர்ந்து வழக்கில் முக்கியமான தீர்ப்பின் அம்சங்களை நீதிபதிகள் வாசித்தனர். 


அதன்படி, 

மாநில சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாவை நிறுத்தி வைக்கும் போது அதற்கான காரணத்தை தெரிவிக்காமல் இருந்தால் அது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானதாக இருக்கும்

மாநில சட்டமன்றங்களால் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர்கள் காலவரையின்றி ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைக்க முடியாது

நாட்டின் கூட்டாட்சியில் ஆளுநர்கள் ஒரு மசோதா தொடர்பாக அவை உடனான வேறுபாடுகளை தீர்க்க பேச்சுவார்த்தை செயல்முறையை மேற்கொள்ள வேண்டுமே தவிர, இடையூறு விளைவிக்கும் அணுகுமுறையை மேற்கொள்ளக் கூடாது

அரசியல் சாசனப் பிரிவு 200 ன் கீழ் மசோதாக்கள் மீது முடிவெடுக்க ஆளுநருக்கு மூன்று வாய்ப்புகள் தான் உள்ளது மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் சொல்வது போல 4வது வாய்ப்பு இல்லை

சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட மசோதாக்கள் மீது ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் அல்லது மாநில அரசுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் இல்லையென்றால் அதை நிராகரிக்க வேண்டும். இவைத்தவிர 4வது வாய்ப்புகள் ஆளுனருக்கு இல்லை

அரசியல் சாசனப் பிரிவு 200, 201-ன் படி ஆளுநர் மற்றும் குடியரசு தலைவர் மசூதாக்களுக்கு ஒப்புதல் வழங்க வேண்டும்

அரசியல் சாசன விதிகளின்படி மசோதாக்களை குடியரசு தலைவருக்கு அனுப்புவதற்கும் ,  மறுபரிசலனைக்காக  திருப்பி அனுப்புவதற்கோ ஆளுநர் அதிகாரத்தை பெறுகிறார்

ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மற்றும் அதன் அமைச்சரவை தான் முதன்மையாக இருக்க வேண்டுமே தவிர மாநிலத்தில் இரண்டு நிர்வாக அதிகாரங்கள் இருக்க முடியாது

மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்குவது தொடர்பாக ஒவ்வொரு முறையும் நீதிமன்றங்களின் கருத்தை கேட்க வேண்டிய அவசியம் இல்லை

மாநில மன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களை நிறுத்தி வைக்க ஆளுநர்களுக்கு அதிகாரம் இல்லை

சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்கள் மீது குறிப்பிட்ட கால அளவிற்கு ஆளுநர்கள் ஒப்புதல் வழங்க வேண்டும்

மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஒரு குறிப்பிட்ட கால வரம்பை நிர்ணயிப்பது என்பது அரசியல் சாசனம் வழங்கியுள்ள நெளிவு சுளிவுகளுக்கு முரணாக உள்ளது, அதேவேளையில்  ஏப்ரல் - 8ல் வழங்கப்பட்ட முந்தைய தீர்ப்புக்கு செல்ல விரும்பவில்லை

நீதிமன்றங்களால் மசோதக்கள் மீது முடிவெடுப்பதற்கு குடியரசு தலைவர் மற்றும் ஆளுநர்களுக்கு குறிப்பிட்ட காலக்கெடுவை விதிக்க முடியாது

தமிழ்நாடு அரசு தொடர்பான வழக்கில் ஏப்ரல் 8-ல் இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு அரசியலமைப்பிற்கு எதிரானது

மசோதாக்கள் மீது குறிப்பிட்ட காலம் நிர்ணயித்து முடிவெடுங்கள் என ஆளுநர்களுக்கு உச்சநீதிமன்றத்தால் உத்தரவிட முடியாது, வேண்டுமென்றால் மசோதாக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுங்கள் என்று அறிவுறுத்தல் மட்டுமே வழங்க முடியும்

ஆளுநர்களின் செயல்பாடுகளை நீதிமன்றங்கள் கேள்வி கேட்க முடியாது, இருப்பினும் ஒரு மசோதா காரணமே இல்லாமல் நீண்ட காலத்திற்கு எந்த முடிவும் எடுக்கப்படாமல் கிடப்பில் வைக்கப்பட்டிருந்தால் அதை நீதிமன்றங்கள் ஆய்வுக்கு உட்படுத்த முடியும்

ஆளுநர்கள் மசோதாக்கள் மீது முடிவெடுக்காமல் இருந்தால் நீதிமன்றங்கள் நீதித்துறை மறு ஆய்வு செய்ய முடியும் என்றதோடு, ஆளுநர்களுக்கு வரையறுக்கப்பட்ட உத்தரவையை பிறப்பிக்க முடியும்

என உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு தீர்ப்பை வழங்கியுள்ளது. தீர்ப்பு விபரம் :-1. இந்திய அரசியலமைப்புச் சட்டம், பிரிவு 200-ன் கீழ் ஆளுநரிடம் ஒரு மசோதா சமர்ப்பிக்கப்படும்போது அவருக்கு உள்ள அரசியலமைப்பு விருப்பங்கள் என்னென்ன?பதில்: சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு மசோதா அனுப்பிவைக்கப்படும் போது, அந்த மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கலாம், ஒப்புதலை நிறுத்திவைக்கலாம் அல்லது குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக ஒதுக்கலாம். ஒப்புதலை நிறுத்திவைப்பது என்பது, அரசியல் அமைப்பு பிரிவு 200-ன் முதல் நிபந்தனையின்படி மசோதாவைச் சட்டமன்றத்திற்குக் கட்டாயம் திருப்பி அனுப்புவதோடு இருக்க வேண்டும். (மசோதாவைச் சட்டமன்றத்திற்குக் திருப்பி அனுப்ப வேண்டும் என்பது) முதல் நிபந்தனை நான்காவது விருப்பம் இல்லை; மாறாக, இது ஒப்புதலை நிறுத்திவைக்கும் விருப்பத்திற்குத் தகுதி சேர்க்கிறது. எனவே, மசோதாவுக்கு ஒப்புதல் நிறுத்திவைக்கப்பட்டால், அது கட்டாயமாகச் சட்டமன்றத்திற்குக் திருப்பி அனுப்பப்பட வேண்டும். மசோதாவைச் சட்டசபைக்குத் திருப்பி அனுப்பாமல் ஆளுநரை நிறுத்திவைக்க அனுமதிப்பது கூட்டாட்சித் தத்துவத்தின் கொள்கையைப் பலவீனப்படுத்தும். மசோதாவைச் சட்டசபைக்குத் திருப்பி அனுப்பாமல் ஆளுநர் வெறுமனே நிறுத்திவைக்க முடியும் என்ற மத்திய அரசின் வாதத்தை நீதிமன்றம் நிராகரித்தது.2. இந்திய அரசியலமைப்புச் சட்டம், பிரிவு 200-ன் கீழ் ஒரு மசோதா ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்படும்போது அவருக்குக் கிடைக்கும் அனைத்து விருப்பங்களைப் பயன்படுத்தும்போதும், ஆளுநர் அமைச்சரவை அளிக்கும் உதவி மற்றும் ஆலோசனையால் கட்டுப்பட்டவரா?

பதில்: பொதுவாக, ஆளுநர் அமைச்சரவையின் உதவி மற்றும் ஆலோசனையின் கீழ் செயல்படுகிறார். ஆனால் பிரிவு 200-ல், ஆளுநர் தன் விருப்ப அதிகாரத்தைப் பயன்படுத்துகிறார். பிரிவு 200-ன் இரண்டாவது நிபந்தனையில் உள்ள "அவரது கருத்தில்" என்ற வார்த்தையின் பயன்பாட்டால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளபடி, ஆளுநர் பிரிவு 200-ன் கீழ் விருப்ப அதிகாரத்தைப் பெறுகிறார். மசோதாவைத் திருப்பி அனுப்பவோ அல்லது குடியரசுத் தலைவருக்காக ஒதுக்கவோ ஆளுநருக்கு விருப்ப அதிகாரம் இருக்கிறது.3. இந்திய அரசியலமைப்புச் சட்டம், பிரிவு 200-ன் கீழ் ஆளுநரால் விருப்ப அதிகாரத்தைப் பயன்படுத்துவது நீதி விசாரணைக்கு உட்பட்டதா ?

பதில்: பிரிவு 200-ன் கீழ் ஆளுநரின் செயல்பாடுகள் நீதி விசாரணைக்கு உட்பட்டவை கிடையாது. அவ்வாறு எடுக்கப்பட்ட முடிவின் தகுதி மறுஆய்வில் நீதிமன்றம் நுழைய முடியாது. இருப்பினும், நீண்ட, விளக்கம் அளிக்கப்படாத மற்றும் காலவரையற்ற செயலற்ற தன்மை நிலவும் வெளிப்படையான சூழ்நிலையின் போது, நீதிமன்றம் ஒரு வரையறுக்கப்பட்ட ஆணையை பிறப்பித்து, ஆளுநரை ஒரு நியாயமான காலத்திற்குள் பிரிவு 200-ன் கீழ் தனது செயல்பாடுகளைச் செய்யும்படி உத்தரவிடலாம், ஆனால் விருப்ப அதிகாரத்தின் தகுதியைப் பற்றி எந்தக் கருத்தையும் தெரிவிக்கக் கூடாது.4. இந்திய அரசியலமைப்புச் சட்டம், பிரிவு 361, அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 200-ன் கீழ் ஆளுநரின் செயல்கள் தொடர்பான நீதி மறுஆய்வுக்கு ஒரு முழுமையான தடையாக உள்ளதா?

பதில்: பிரிவு 361 நீதி மறுஆய்வுக்கு ஒரு முழுமையான தடை தான். இருப்பினும், பிரிவு 200-ன் கீழ் ஆளுநரின் நீடித்த செயலற்ற நிலையில் இருக்கும போது, இந்த நீதிமன்றம் பயன்படுத்த அதிகாரம் பெற்ற வரையறுக்கப்பட்ட நீதி மறுஆய்வு வரம்பை ரத்து செய்ய பிரிவு 361 ஐ பயன்படுத்த முடியாது. ஆளுநர் தனிப்பட்ட விலக்கைப் பெற்றிருந்தாலும், ஆளுநரின் பதவி உச்ச நீதிமன்றத்தின் அதிகார வரம்புக்கு உட்பட்டது 

பதில்: சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு மசோதா அனுப்பிவைக்கப்படும் போது, அந்த மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கலாம், ஒப்புதலை நிறுத்திவைக்கலாம் அல்லது குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக ஒதுக்கலாம். ஒப்புதலை நிறுத்திவைப்பது என்பது, அரசியல் அமைப்பு பிரிவு 200-ன் முதல் நிபந்தனையின்படி மசோதாவைச் சட்டமன்றத்திற்குக் கட்டாயம் திருப்பி அனுப்புவதோடு இருக்க வேண்டும். (மசோதாவைச் சட்டமன்றத்திற்குக் திருப்பி அனுப்ப வேண்டும் என்பது) முதல் நிபந்தனை நான்காவது விருப்பம் இல்லை; மாறாக, இது ஒப்புதலை நிறுத்திவைக்கும் விருப்பத்திற்குத் தகுதி சேர்க்கிறது. எனவே, மசோதாவுக்கு ஒப்புதல் நிறுத்திவைக்கப்பட்டால், அது கட்டாயமாகச் சட்டமன்றத்திற்குக் திருப்பி அனுப்பப்பட வேண்டும். மசோதாவைச் சட்டசபைக்குத் திருப்பி அனுப்பாமல் ஆளுநரை நிறுத்திவைக்க அனுமதிப்பது கூட்டாட்சித் தத்துவத்தின் கொள்கையைப் பலவீனப்படுத்தும். மசோதாவைச் சட்டசபைக்குத் திருப்பி அனுப்பாமல் ஆளுநர் வெறுமனே நிறுத்திவைக்க முடியும் என்ற மத்திய அரசின் வாதத்தை நீதிமன்றம் நிராகரித்தது.

பதில்: இல்லை. இந்திய அரசியலமைப்புச் சட்டம், பிரிவு 142-ன் கீழ் குடியரசுத் தலைவர்/ஆளுநர் ஆகியோரின் அரசியலமைப்பு அதிகாரங்களைப் பயன்படுத்துதல் மற்றும் உத்தரவுகளை இந்த நீதிமன்றத்தால் எந்த விதத்திலும் மாற்ற முடியாது. அரசியலமைப்புச் சட்டம், குறிப்பாகப் பிரிவு 142வின், "நடைமுறைப்படுத்தப்பட்ட ஒப்புதல்" என்ற கருத்தை அனுமதிக்கவில்லை என்பதை நாங்கள் தெளிவுபடுத்துகிறோம்.

11.இந்திய அரசியலமைப்புச் சட்டம், பிரிவு 200-ன் கீழ் ஆளுநர் அளித்த ஒப்புதல் இல்லாமல் மாநில சட்டமன்றத்தால் இயற்றப்பட்ட சட்டம் நடைமுறையில் உள்ள சட்டமாகுமா?

பதில்: கேள்வி 10-ன் பதிலின் அடிப்படையில் பதிலளிக்கப்படுகிறது. பிரிவு 200-ன் கீழ் ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் மாநில சட்டமன்றத்தால் இயற்றப்பட்ட சட்டம் நடைமுறைக்கு வரும் என்ற கேள்விக்கே இடமில்லை. பிரிவு 200-ன் கீழ் ஆளுநரின் சட்டமியற்றும் பங்கை மற்றொரு அரசியலமைப்பு அதிகார மையத்தால் மாற்ற முடியாது.

12.இந்திய அரசியலமைப்புச் சட்டம், பிரிவு 145(3)-ன் நிபந்தனையின் அடிப்படையில், அதற்கு முன்னுள்ள நடவடிக்கைகளில் உள்ள கேள்வி, அரசியலமைப்பின் விளக்கத்தைப் பொறுத்துச் சட்டத்தின் கணிசமான கேள்விகளை உள்ளடக்கியதா என்பதை முதலில் தீர்மானிக்கவும், குறைந்தபட்சம் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு அதைப் பரிந்துரைக்கவும், இந்த மாண்புமிகு நீதிமன்றத்தின் எந்த அமர்வுக்கும் இது கட்டாயமில்லையா?

பதில்: இந்தக் கேள்வி இந்தப் பரிந்துரையின் செயல்பாட்டுத் தன்மைக்குத் தொடர்பில்லாததால், இதற்குப் பதிலளிக்கப்படவில்லை.

13.இந்திய அரசியலமைப்புச் சட்டம், பிரிவு 142-ன் கீழ் உச்ச நீதிமன்றத்தின் அதிகாரங்கள் செயல்முறைச் சட்டம் தொடர்பான விஷயங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டதா அல்லது நடைமுறையில் உள்ள அரசியலமைப்புச் சட்டம் அல்லது சட்டத்தின் சாராம்ச அல்லது செயல்முறை விதிகளுக்கு முரணான அல்லது பொருந்தாத உத்தரவுகளை/வழிகாட்டுதல்களை வழங்குவதற்கு இந்திய அரசியலமைப்புச் சட்டம், பிரிவு 142 நீட்டிக்கப்படுகிறதா?

பதில்: கேள்வி 10-ன் ஒரு பகுதியாகப் பதிலளிக்கப்பட்டிருக்கிறது (விளக்கம் - அரசியலமைப்புச் சட்டம், குறிப்பாகப் பிரிவு 142வின், "நடைமுறைப்படுத்தப்பட்ட ஒப்புதல்" என்ற கருத்தை அனுமதிக்கவில்லை என்பதை என்று உச்ச நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது.

14.இந்திய அரசியலமைப்புச் சட்டம், பிரிவு 131-ன் கீழ் ஒரு வழக்கின் மூலமாகத் தவிர, மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையிலான சர்ச்சைகளைத் தீர்க்க உச்ச நீதிமன்றத்தின் வேறு எந்த அதிகார வரம்பையும் அரசியலமைப்புச் சட்டம் தடுக்கிறதா?

பதில்: இது சம்பந்தமே இல்லாதது எனக் கண்டறியப்பட்டதால் பதிலளிக்கப்படவில்லை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...