முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தேர்தல் ஆணையத்தின் சார் முடிவை எதிர்த்து திமுக சார்ந்த அணைத்து கட்சிகள் கூட்டத்தில் வழக்குத் தொடுக்க முடிவு

தமிழ்நாடு மக்களின் வாக்குரிமையைப் பறித்து, ஜனநாயகத்தைப் படுகொலை செய்யும் நோக்கோடு அவசரகதியில் மேற்கொள்ளப்படும் SIR-க்கு எதிராக ஒன்றிணைந்து குரல் கொடுப்பது அனைத்துக் கட்சிகளின் கடமை! எனவும் 





வாக்காளர் பட்டியல் திருத்தத்தைக் குழப்பங்கள் - ஐயங்கள் இல்லாமல் போதிய கால அவகாசத்துடன், 2026 பொதுத் தேர்தலுக்குப் பின்பு நடத்த வேண்டும் என்ற நமது கோரிக்கையை ECI ஏற்காததால், உச்சநீதிமன்றத்தை நாட இன்று நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் எனறாலும் இந்தியா கூடடனிக் கட்சிகள் மட்டுமே தீர்மானம் நிறைவேற்றினர் பல முக்கியக் கட்சிகள் எதிர்கடசி அதிமுக மத்திய ஆளும் கட்சி பாஜக மற்றும் பாமக, தேமுதிக, புதிய தமிழகம், தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட கட்சிகள் கலந்து கொள்ளவில்லை

மேலம் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் பங்கேற்றுத் தங்களுடைய கருத்தை பதிவு செய்த 49 கட்சிகளின் என தகவல் தெரிவிக்கப்பட்ட அந்த அணைத்துக்கூட்டத்தில் பங்கேற்காதவர்களும் தங்களுடைய கட்சிகளில் SIR குறித்து விவாதித்து, ஜனநாயகத்தைக் காத்திடும் முன்னெடுப்பை மேற்கொள்ள வேண்டுமெனக் முதல்வர் கோரிக்கை வைத்துள்ளார்.SIR திருத்தத்திற்கு எதிர்ப்பு. குறித்து ஆலோசிக்க இன்று தமிழ்நாட்டில் அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தப்பட்டது. தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் நவம்பர் 4 ஆம் தேதி முதல் துவங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பால் இன்று தமிழ்நாட்டில் அனைத்துக்கட்சிக் கூட்டம் நடத்தப்பட்டதில் பின்வரும் கட்சிகள் அழைப்பு சென்ற போதும் பங்கேற்கவில்லை,

வாக்காளர் பட்டியல் திருத்தத்தைக் குழப்பங்கள், ஐயங்கள் இல்லாமல் போதிய கால அவகாசத்துடன், 2026 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்குப் பின்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை தேர்தல் ஆணையம் ஏற்காததால், கூட்டிய கட்சிகளின் கூட்டத்தில் வழக்குத் தொடுக்க முடிவு செய்யப்பட்டதாக முதல்வர் மு. க.ஸ்டாலின் தெரிவித்தார்  மேலும் அந்தக் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி, புதிய தமிழகம், தமிழ் மாநிலக் காங்கிரஸ் (மூப்பனார்), பாட்டாளி மக்கள் கட்சி, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், தமிழக வெற்றிக் கழகம், இந்திய ஜனநாயகக் கட்சி, பெருந்தலைவர் மக்கள் கட்சி, பாஜக, பிரதான எதிர்க் கட்சியான அதிமுக உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்கவில்லை,

இந்தியா கூட்டணி ஆதரவுக் கட்சிகள் மற்றும் சிறிய கட்சிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டன அதில் திராவிட முன்னேற்றக் கழகம், இந்திய தேசிய காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, புரட்சி பாரதம் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்), தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், புதிய நீதிக் கட்சி, ம.தி.மு.க, வி சி கட்சி, சோசியல் மெக்டின் பார்ட்டி ஆஃப் இந்தியா, மனிதநேய மக்கள் கட்சி, மனிதநேய ஜனநாயகக் கட்சி, அகில இந்திய பார்வர்டு பிளாக், இந்திய மக்கள் கல்வி.மு.க, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மக்கள் நீதி மய்யம், அனைத்திந்திய மூவேந்தர்.மு.கழகம், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, பசும்பொன் தேசிய கழகம், ஆதி தமிழர் பேரவை, மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீ, முக்குலத்தோர் புலிப்படை, தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சி, மூவேந்தர் முன்னேற்றக் கழகம், கலப்பை மக்கள் இயக்கம்,  மக்கள் விடுதலை சுட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, இந்திய குடியரசு கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் சித, ஆம் ஆத்மி கட்சி  சமதா கட்சி, தேசிய முற்போக்கு திராவிட கழகம், தமிழ்ப்புலிகள் கட்சி, கொங்கு இளைஞர் பேரவை,  ஆகும்.          தேர்தல் ஆணையம் பீகாரில் சிறப்பு தீவிர திருத்தப் பணியை அறிவித்து நடத்தியதிலிருந்தே எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. நவம்பர் மற்றும் பிப்ரவரி மாதங்களுக்கு இடையில் இந்த திருத்தப் பணி நடத்தப்படும் என்ற தேர்தல் ஆணையம் தற்போது அறிவிப்பு வெளியிட்டுள்ளது.






தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின், அக்டோபர் மாதம் 26,ஆம் தேதி 2025 அன்று, பாரதிய ஜனதா கட்சியும் (BJP) அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் (AIADMK) இணைந்து, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மாநில சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறும் நோக்கில், இந்திய தேர்தல் ஆணையத்தின் (ECI) சிறப்பு தீவிர திருத்தப் (Special Intensive Revision - SIR) பணிகளைப் பயன்படுத்தி, உழைக்கும் வர்க்கத்தினர், பட்டியல் சமூகத்தினர், சிறுபான்மையினர் மற்றும் பெண்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கத் திட்டமிட்டுள்ளதாக குற்றம் சாட்டினார். ஆனால் ஆணையம் உண்மையான நபர்களை எக்காரணம் கொண்டும் நீக்க முடியாது, அதில் இறந்து போனவர்கள், அகதிகளாக வந்து வாக்காளராகச் சேர்க்கப்பட்டவர்கள் அயல் நாடு சென்றவர்கள், மற்றும் குடியரிமை பெறாதவர்கள் என பலரும் வாக்காளர் பட்டியலில் இருப்பது நாட்டிற்கு  ஆபத்து என்ற நிலையில் தேர்தல் ஆணையம் இந்த சார் நடவடிக்கை எடுத்துள்ளது, 


   தேர்தல் ஆணையத்தை தடுப்பது என்பது சின்ன விஷயமல்ல.. தமிழ்நாடு காவல்துறையை தன் கையில் எடுத்து கொள்ளும். அதற்கு அளப்பறிய அதிகாரம் உள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...