முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கோயமுத்தூர் சட்டக் கல்லூரி மாணவிக்கு நிகழ்ந்த கொடுமை பல தலைவர்கள் கண்டனம்.

கோயமுத்தூர் சட்டக் கல்லூரி மாணவிக்கு நிகழ்ந்த கொடுமை பல தலைவர்கள் கண்டனம். கூட்டுப் பாலியல் வன்கொடுமை: 7 தனிப்படைகள் அமைத்து கோயமுத்தூர் சட்டக் கல்லூரி மாணவிக்கு நிகழ்ந்த கொடுமை பல தலைவர்கள் கண்டனம்.  விசாரணை.

கோயமுத்தூர் பீளமேடு பகுதியில் விமான நிலையம் அருகே நண்பருடன் காரில் பேசிக்கொண்டிருந்தநிலையில் நண்பரைத் தாக்கிவிட்டு கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தொடர்பாக 7 தனிப்படைகள் விசாரித்து வருகின்றனர்.

 தனியார் கல்லூரியில் 19 வயது மாணவி ஒருவர் சட்டம் படித்து வருகிறார். கோயமுத்தூர் ஒண்டிப்புதூர் பகுதியைச் சேர்ந்த 25 வயது இளைஞர் ஒருவர் மெக்கானிக்காக பணியாற்றி வருகிறார், இவரும் அந்த மாணவியும் நண்பர்கள்.



இந்த நிலையில், அந்த இளைஞரும் மாணவியும் நேற்று முன்தினம் நவம்பர்.2 ஆம் தேதி இரவு பீளமேடு விமான நிலையம் பின்புறமுள்ள காலி இடத்தில் காரில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்பொழுது அங்கு மூன்று இளைஞர்கள் வந்தனர். அவர்கள் தங்கள் கையில் இருந்த கத்தியால் காரின் கண்ணாடியை உடைத்தனர். தொடர்ந்து, கண்ணாடி வழியாகவே கதவைத் திறந்து, காருக்குள் இருந்த இளைஞரை கத்தியால் சரமாரியாக தாக்கினார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கினார் . தொடர்ந்து அந்த மாணவியை வலுக்கட்டாயமாக மூன்று பேர் கும்பல் வெளியே இழுத்தனர். கார் அருகே உள்ள ஒரு புதர் பகுதி அருகே அந்தப் பெண்ணை இழுத்துச் சென்று மூவரும் பாலியல் வன்கொடுமை செய்த பின்னர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.அதிகாலை சுயநினைவு திரும்பிய அந்த இளைஞர் கோயமுத்தூர் மாநகரக் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். பீளமேடு காவலர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரித்தனர். காவலரும் அந்த இளைஞரும் அந்த இளம்பெண்ணை தேடினர்




.அப்பொழுது அருகே உள்ள புதர்ச் செடி அருகே உடலில் ஆடைகளின்றி இருந்த மாணவியை மீட்டு சிகிச்சைக்காக அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதேபோல் அந்த இளைஞரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பகுதி மக்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது . இத்  தகவல் அறிந்த மாநகரக் காவல் ஆணையர் சரவணசுந்தர், துணை ஆணையர் தேவநாதன் உள்ளிட்ட காவல்துறையினர் சம்பவ நிகழ்விடத்துக்கு வந்து விசாரித்தனர்.



இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய மூன்று பேர் கொண்ட கும்பலைப் பிடிக்க துணை ஆணையர் தலைமையில் ஏழு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதுகுறித்து காவல் துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்துகின்றனர். மூன்று இளைஞர்களும் கஞ்சா போதையில் இருந்திருக்கலாம் எனத் தெரிகிறது. இதனைத் தொடர்ந்து காவலர்கள் தீவிரமாக பல கோணங்களில் விசாரிணையை நடத்துகின்றனர்.19 வயது சட்டக் கல்லுாரி மாணவி பாலியல் வன்கொடுமைச் சம்பவத்தைக் கண்டித்து பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் இன்று நவம்பர் மாதம்., 3 ஆம் தேதி மாலை கோயமுத்தூரிலும், நாளை மறுதினம் பிற மாவட்டங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுமென மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவித்துள்ளார்.   



அதேபோல் அதிமுக தற்காலிகப் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி மற்றும் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் பலத்த கண்டனம் தெரிவித்துள்ளனர். இது குறித்து செய்தியாளர்களிடம் நயினார் நாகேந்திரன் கூறியதாவது: கோயம்பத்தூர் விமான நிலையம் பின்புறம் 19 வயது முதலாம் ஆண்டு படிக்கிற பெண், அவர் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த போது, 3 பேர் அந்தப் பெண்ணை இழுத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.



கோயமுத்தூரில் மாணவிக்கு கொடூர சம்பவம் அரங்கேறியிருக்கிறது. இது, எல்லா பெற்றோர்களையும் கண்கலங்க வைப்பதோடு, பதைபதைக்கவும் வைக்கிறது. இதனைக் கண்டித்து, சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தலைமையில் இன்று மாலை கோயம்பத்தூரில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தை நடத்த உள்ளனர்.


பெண்களுக்கு எதிரான இண்டி திமுக கூட்டணியை கண்டிக்கிற ஆர்ப்பாட்டத்தை நடத்த இருக்கிறார். நாளை மறுதினம் பிற மாவட்டங்களிலும் இதனை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப் போகிறோம். பாரதிய ஜனதா கட்சி என்றைக்கும், பெண்களுக்கு ஆதரவாக இருக்கிறது.எல்லா விஷயங்களிலும் நாங்கள் பெண்களுக்கும், பொதுமக்களுக்கும் ஆதரவாகவும் இருப்போம். என்றார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...