முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

1240 பிறை கண்ட நாயகன் முன்னால் அமைச்சர் வி. வி. எஸ்

முன்னால் அமைச்சர் வி.வே.சுவாமிநாதன் நூற்றாண்டு  பிறந்தநாள் விழா. வாழ்க நலமுடன் இன்னும் பல்லாண்டு வளமாய் நலமாய் 

இந்திய அரசியல் மீது பற்றுக்கொண்டவர், முன்னால் முதல்வர் எம் ஜிஆர் காலத்தில் புத்திசாலி அமைச்சர் என்றால் வி.வி.எஸ் இவரும் செ.மாதவன் ஆகிய இருவர் என மாபெரும் அரசியல் செய்தவர்.

அதிமுக அரசு கலைக்கப்பட்ட போது  அமைச்சர் வி. வி.சுவாமிநாதன் புவகிரியில் மக்கள் ஆதரவு பலமாக நின்று வெற்றிபெற்றார் 

சிதம்பரம் தொகுதியில் 1971 ஆம் ஆண்டிலும்,1984 ஆம் ஆண்டில் புவனகிரி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர்.

சிதம்பரம் சுற்றிய ஒருங்கிணைந்த பழைய தஞ்சாவூர் மாவட்டத்தில் மீனவக் கிராமங்களின் நலனுக்காக செயலாற்றியவர்.

சிதம்பரம் நகராட்சியின் முதல் திமுக நகராட்சித் தலைவர் என்ற பெருமைக்குரியவர்.

ஒரே நேரத்தில் 14 துறைகளைக் கவனித்து சாதனை படைத்த அமைச்சர். மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை, கைத்தறி, தகவல் தொழில்நுட்பம், சுற்றுலா மற்றும் மின்சாரம், அறநிலையத்துறை என பல துறைகளைக் கவனித்தவர்.

சிறந்த வழக்கறிஞர், சட்டமன்ற உறுப்பினர்,  நாடாளுமன்ற உறுப்பினர், மற்றும் முன்னாள் அமைச்சர் எனப் பன்முகத் திறன் கொண்டவர்.

சர்க்கரை ஆலை, கூட்டுறவு முகமை மற்றும் கம்பளம் தயாரிக்கும் தொழிற்சாலைகளைக் கொண்டு வந்தவர். நாம் 2013 ஆம் ஆணடு  சென்னையில் துவங்கிய பப்ளிக் ஜஸ்டிஸ்  செய்தி இதழ் அச்சு புலனாய்வு ஊடகமாக மாதமிருமுறை வெளிவந்த நிலையில் இரணடாவது இதழில் அண்ணாரிடம் கடடுரை வாங்கச் சென்ற போது இன்முகத்துடன் உபசரித்தார், வாழ்த்தினார்  அவரது கடடுரை வெளிவந்த இதழ் நம் வாசகர்கள் பார்வைக்கு


வயதால் 100 ஐ கடந்த வி. வி.சுவாமிநாதன், அறிவார்ந்த தமிழர் பொதுவாக "தமிழ் மறுமலர்ச்சி" என்று அழைக்கப்படும் தமிழ் செம்மொழி மரபின் மறுகண்டுபிடிப்புக்குக் காரணமானவர், V.V. சுவாமிநாதன் அவர்களின்

100-வது பிறந்தநாள் நிறைவு பாராட்டு விழா  அவர் சார்ந்த பார்கவ உடையார் சமூகம் 100 ஆண்டு துவக்கத்தில் நடத்தியது 

: டாக்டர் T.P. கணேசன் கலையரங்கம் ,SRM பல்கலைக்கழக வளாகம், காட்டாங்குளத்தூரில்

வரவேற்று வாழ்த்துரை  வழங்கிய மூத்த வழக்கறிஞர். G. ராஜன் 

முன்னிலை வகித்த : பச்சைமுத்து உடையார்  எனும் டாக்டர் T.R. பாரிவேந்தர்

தலைமை :கலைமாமணி திரைபடத் தயாரிப்பாளர் கோவைத் தம்பி (Ex. M.L.A.)

சிறப்புரை : முன்னால் அமைச்சர்கள்  G.K. வாசன், M.P., C. பொன்னையன், டாக்டர் H.V. ஹண்டே  ஓய்வு பெற்ற நீதிபதி C.T. செல்வம், 

ஏற்புரை :விழா நாயகரும் தமிழ்நாடு அரசின் முன்னாள் அமைச்சர் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்

டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் நம்பிக்கை நாயகர் V.V. சுவாமிநாதன் தற்போது 101 வயதில் 

சுயமரியாதை, பகுத்தறிவு, சமத்துவம், சமூக நீதி போன்ற உயர் கொள்கைகளை வழிகாட்டுதலாகக் கொண்டவர், தனது பேராற்றல், பக்தி, விடாமுயற்சி, மக்கள் பணி ஆகியவற்றின் மூலம் தமிழ்நாட்டு அரசியலில் அழியாத முத்திரையைப் பதித்தவர். தமிழ் மொழி, தமிழ் பண்பாடு ஆகியவற்றில் ஆழ்ந்த பற்று கொண்ட பெருமகனும் ஆவார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...