முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நீதிமனற அவதூறு வழக்கால் டி ஆர் பாலு மீது ஊழல் வழக்காக மாறப் போகும் அணணாமலை நடத்திய குறுக்கு விசாரணை

ரூபாய் .10,841.10 கோடி வருமானத்திற்கு அதிகமாக திமுக பொருளாளர் முன்னால் மத்திய அமைச்சர் T.R.பாலு, (வயது 85)


சொத்து சேர்த்துள்ளதாக DMK Files-1 சொல்லியுள்ளது. அவர் மீது ஒரே ஒரு வருமானத்திற்க்கு அதிகமாக சொத்து சேர்த்தாக வழக்கு எங்கேயாவது பதியப்பட்டுள்ளதா?என்ளால் இல்லை ஏன்றே கூற வேண்டும், காரணம் யாரும் அந்த விவகாரத்தில் யாரும் போகவில்லை, ஆனால் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் ., முன்னாள் தலைவர் அண்ணாமலை மீது, தி.மு.க., நாடாளுமன்ற உறுப்பினர் , டி.ஆர்.பாலு தொடர்ந்த அவதுாறு வழக்கு, சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில், 17வது பெருநகரக் குற்றவியல் நீதித்துறை நடுவர் முன்னிலையில் , நேற்று விசாரணைக்கு வந்தது.தி.மு.க., உறுப்பினரான, முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, நான் மத்திய அமைச்சராக இருந்த போது, 10 பெரிய கப்பல்களை, நான் வாங்கியதாக பேட்டி அளித்துள்ளார்.



இது தொடர்பாக, கடந்த, 2014 ஆம் ஆண்டு , ஏப்ரல் மாதம் .,4 ஆம் தேதியில், பத்திரிகையில் செய்தி வெளியாகி "இருப்பதாக கேள்வி எழுப்புகிறீர்கள். இந்த வழக்கிற்கும், நீங்கள் கேட்கும் கேள்விக்கும் சம்மந்தம் இல்லை. என்னைப் பற்றி மு. க.அழகிரி அப்படிச் சொல்லி இருப்பதாக, நீங்கள் கூறுவது உள்நோக்கத்துடன் சொல்வதாகும்.



மேலும், மு. க.அழகிரி அளித்த பேட்டியில், நான் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, 10 மீன்பிடிக் கப்பல்கள் வாங்கியதாகவும், அதன் வாயிலாக, தொழில் செய்து, லாபம் ஈட்டுவதற்காக, என்ன விலை கொடுத்தாவது, சேது சமுத்திரக் கால்வாய் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதில், நான் உறுதியாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார் என, நீங்கள் குறிப்பிடுகிறீர்கள். எனக்கு 1.46 கோடி; என் மனைவி பெயரில், 6.60 கோடி ரூபாய் கடன் உள்ளது.



எனக்கு கடன் தந்த நிறுவனத்தின் உரிமையாளர் என் மகனா என்றால், அது எனக்குத் தெரியாது," என, தி.மு.க., நாடாளுமன்ற உறுப்பினர் டி. ஆர். பாலு, நீதிமன்றத்தில் தமிழ்நாடு பா.ஜ.க, முன்னாள் தலைவர் அண்ணாமலை நடத்திய குறுக்கு விசாரணையில் தெரிவித்தார். அப்படியானால், மு.க.அழகிரிக்கோ அல்லது உங்களுக்கோ, அந்தத் திட்டம் குறித்து எதுவும் தெரியவில்லை. கடந்த, 2014 ஆம் ஆண்டில், தேர்தல் நேரத்தில், முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா, நான். 10க்கும் மேற்பட்ட கப்பல்கள் வாங்கியதாக, பொய்யான தகவல்களை வெளியிட்டுப் பேசினார். அது போல், நீங்கள் குறிப்பிட்டுச் சொல்லும் செய்திகள் உள்ளன.



தஞ்சாவூர் மாவட்டம், வடசேரி கிராமத்தில், வடசேரி பாதுகாப்பு குழுவினர், என் குடும்பத்தினர் நடத்தும் சாராய ஆலையை கண்டித்து, ஆண்டுதோறும் கருப்பு தின அமைதி ஊர்வலத்தை நடத்துவதாக தெரிவிக்கிறீர்கள்.  அது பற்றி எனக்குத் தெரியாது.  அவ்வாறு சொல்லப்படுவது சாராய ஆலை அல்ல; அது ரசாயணத் தொழிற்சாலை. அதில் நான் ஒரு பங்குதாரர் மட்டுமே. (எத்தனை சதவீதம் பங்கு னக் கூறவில்லை) கடந்த 68 ஆண்டு காலமாக பொது வாழ்வில் இருக்கும் எனக்கு, சொந்த ஊரில் நடக்கும் போராட்டம் குறித்து தெரியாது என, சாட்சியம் அளிப்பதாக, நீங்கள் கூறுவதை ஏற்க முடியாது. அந்தப் போராட்டம், ஒரு நிறுவனத்திற்கு எதிரானது. தனிப்பட்ட முறையில், எனக்குச் சம்பந்தப்பட்டது அல்ல.நீங்கள், உங்கள் மனைவி பெயருக்கு, 12 ஏக்கர், 11 சென்ட் என, இரண்டு நிலத்தை, பிரதீப், பெருமாள் சாமி உட்பட, 14 பேரிடம் இருந்து, ஒவ்வொரு நிலத்திற்கும், தலா, 2.25 கோடி ரூபாய் கொடுத்து, 4.50 கோடி ரூபாய்க்கு கிரையம் பெற்றுள்ளீர்கள்.




சமீபத்தில் தான் நீங்கள் அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்றீர்கள். அப்படியானால் உங்களுக்கு நிலம் வாங்க ஏது பணம்?உங்கள் மைத்துனர் மற்றும் சிலர், செங்கல் தயாரிப்பு ஆலை நடத்துகின்றனர். அந்த ஆலையின் பங்குதாரர் ஒருவர் வீட்டில், சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதன் காரணமாகத்தான், உங்களை தமிழக பா.ஜ க ., தலைவர் பதவியில் இருந்து, பிரதமரும் உள்துறை அமைச்சரும் மாற்றி விட்டனர். எனக்கு 1.46 கோடி; என் மனைவி  கே பெயரில், 6.60 கோடி ரூபாய் கடன் இருப்பதாக குறிப்பிட்டு உள்ளேன்.       இக்கடனை, 'டிரையூன் இம்பெக்ஸ்' என்ற நிறுவனத்திடம் வாங்கி உள்ளேன். அந்த நிறுவனத்தை யார் நடத்துகின்றனர் எனக் கேட்டால் தெரியாது. என் மகன் ராஜ்குமார், அதன் உரிமையாளர் என்றால், அது குறித்து எனக்கு தெரியாது. அதை கவனிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. அந்த நிறுவனத்திற்கு ஜி.எஸ்.டி., வரி பதிவு ரத்து செய்யப்பட்ட நிலையில், தொழில் செய்யாத நிறுவனத்திடம் இருந்து, நான் கடன் பெற்றதாகச் சொல்வது, கருப்பு பணத்தை வெள்ளையாக்கும் முயற்சி என்றால், அது சரியல்ல. இவ்வாறு அவர் பதில் அளித்தார். ஆனால்   இக்கரை போளும்வாம்பட்டி 12.11 ஏக்கர் ரூ.4.5 கோடி எனில் ஏக்கர் 37.15 லட்சங்கள் மட்டுமே!




21 நிறுவனங்களில் ரூ.10,841.10 கோடியை திருடியவர் மீது ஊழல் வழக்கு அல்லது Disproportionate Asset(DA) வழக்கு யாருமே ஊழல் தடுப்புக் கண்காணிப்புத் துறையில் போடவில்லையா?  ஆக அணைவரும் இதுவரை கேட்கத்துணியாத முன்னால் மத்திய அமைச்சர் தற்போது நாடாளுமன்ற உறுப்பினர் திமுக மூத்த தலைவர் இந்த நிலையில் பாஜக முன்னால் மாநிலத் தலைவர் அண்ணாமலை கேட்டு குறுச்கு விசாரணை நடத்தினார்  இந்த நிலையில் புதிதாக அவதுாறு வழக்கு

சென்னை சைதாப்பேட்டை நீதிமன்ற வளாகத்தில், அண்ணாமலை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: தி.மு.க., வைச் சேர்ந்த டி.ஆர்.பாலு, என் மீது தொடர்ந்து அவதுாறு வழக்கில், அவரை, மூன்று மணி நேரம் குறுக்கு விசாரணை செய்யும் வாய்ப்புக் கிடைத்தது. இந்தியாவில் குறைந்த பட்ச வழக்கில் மட்டும் தான், அந்த வழக்கில் தொடர்புடையவர்கள், வாதாட முடியும்.  தி.மு.க.,வின் ஊழல்,அப்பலப்படுத்திய குறுக்கு விசாரணை வினா பாஜக அண்ணாமலை:



நீங்கள் மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது, இந்திய அரசு நிறுவனமான SCI க்கு கப்பல் வாங்கிய நேரத்தில், உங்களுக்கும் தனியாக பத்து கப்பல் வாங்கிவிட்டதாக அப்போது அமைச்சராக இருந்த முக அழகிரி கூறியிருக்கிறாரே?

திமுக டி ஆர் பாலு:

அவர் விஷயம் தெரியாமல் பேசியிருப்பார். 600 கோடி விலையில் ரெண்டே ரெண்டு கப்பல் மட்டும் தான் வாங்கினேன். ரேட் கம்மி இருந்தது, அதனால வாய்ப்பு வீணாகக்கூடாது என்று வாங்கினேன்.

பாஜக அண்ணாமலை: 

 2004 -2009 UPA 1 ஆட்சியில் நீங்கள் அடித்த ஊழல் காரணமாகத்தான் உங்களுக்கு UPA 2 அமைச்சரவையில் உங்களுக்கு இடம் கொடுக்கவில்லை என்று அழகிரி சொல்லி இருக்கிறாரே? 

திமுக டி ஆர் பாலு: 

அவர் அவ்வாறு சொல்லவில்லை, சொல்லவும் தகுதி இல்லை.

பாஜக அண்ணாமலை:

மீனம் ஃபிஷரீஸ், தேவி கிரானைட்ஸ், கிங்ஸ் இந்தியா கெமிக்கல்ஸ்  இந்த மூன்று நிறுவனங்களும் நீங்கள் மக்களவை நாடாளுமன்ற உறுப்பினர் ., மத்திய அமைச்சராக  இருந்த காலகட்டத்தில்  தொடங்கப்பட்டது தானே?

திமுக டி ஆர் பாலு:

ஆம், சரிதான். அந்தக் காலம் ஸ்டார்ட்அப் ஃபிரெண்ட்லி காலம் போல இருந்தது

பாஜக அண்ணாமலை:

உங்களுக்கு ரேனுகா தேவி மற்றும் பொற்கொடி என இரண்டு மனைவிகள், டி.ஆர்.பி. ராஜ்குமார், டி.ஆர்.பி. ராஜா, டி ஆர். பி.செல்வகுமார் என்று மூன்று மகன்கள், காஞ்சனாதேவி, மனோன்மணி என இரண்டு மகள்கள் உள்ளனர் என்பது? உண்மைதானே

திமுக டி ஆர் பாலு:

உண்மை தான். குடும்பம் பெரியது.

பாஜக அண்ணாமலை:

உங்கள் மனைவிகள் ரேனுகா தேவி, பொற்கொடி ஆகியோர் வருமானவரி தாக்கல் செய்கிறார்களா?

திமுக டி ஆர் பாலு:

தாக்கல் செய்கிறார்கள். ஆனால் எப்போதிருந்து என்று எனக்குத் தெரியாது. அவர்களது கல்வித் தகுதி கூட ஞாபகமில்லை. 

பாஜக அண்ணாமலை:

உங்கள் மூன்று மகன்கள், இரண்டு மகள்களும் தனித்தனியே தொழில் செய்து வருமானவரி தாக்கல் செய்கிறார்களா?

திமுக டி ஆர் பாலு:

ஆம், தாக்கல் செய்கிறார்கள். ஆனால் அதைப் பற்றி எனக்குத் தெரியாது. குடும்ப வாட்ஸ்அப் குழுவில் கூட அந்த அப்டேட் வராது.

பாஜக அண்ணாமலை:

மீனம் எக்ஸ்போர்ட்ஸ் உங்கள் மகளுடையது தானே?

திமுக டி ஆர் பாலு:

எனக்குத் தெரியாது. அது எப்போது ஆரம்பிக்கப்பட்டது என்றும் தெரியவில்லை.  ஓப்பனிங் செரிமனி நடந்தாலும் நான் ரிப்பன் கட் பண்ணாமல் போயிருக்கலாம்.

பாஜக அண்ணாமலை:

கிங்ஸ் இந்தியா பவர் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் டி.ஆர்.பி. ராஜ்குமார், உங்கள் மனைவி ரேனுகா தேவி ஆகியோருக்கு பங்கு இருக்கிறதே?

திமுக டி ஆர் பாலு:

எனக்கு பங்கு இருக்கிறது. அவர்களுக்கு பங்கு இருக்கிறதா என்று எனக்குத் தெரியவில்லை. பங்கு விஷயங்கள் எல்லாம் குடும்பத்தினர் தான் கவனிக்கின்றனர்.

பாஜக அண்ணாமலை:

ட்வைஸ் டிஜிட்டல் என்ற மலேசியா மற்றும் சிங்கப்பூரில் இயங்கும் நிறுவனம் 2003 ஆம் ஆணடில் உங்கள் மனைவி ரேனுகா தேவி, மருமகள் ஷர்மிளா ஆகியோரால் தொடங்கப்பட்டு தற்போது உங்கள் மகன் செல்வகுமார் நடத்தி வருகிறாரே?

திமுக டி ஆர் பாலு:

அதைப் பற்றி எனக்குத் தெரியாது. சிங்கப்பூருக்கு நான் வாழ்க்கையில் போனதே கிடையாது.

பாஜக அண்ணாமலை:

அதே நிறுவனம் நீங்கள் மத்திய அமைச்சராக இருந்தபோது தொடங்கப்பட்டதுதானே?

திமுக டி ஆர் பாலு:

அதைப் பற்றியும் எனக்குத் தெரியாது. 

பாஜக அண்ணாமலை:

மாயா மோட்டார்ஸ், கோல்டன் வாட்ஸ், ஜியோ ப்ராபர்டீஸ், லைவ் கார்ஸ், சக்ரா வுட்ஸ், அரிஸ்டோ டெலிமீடியா, ட்வைஸ் ஹோல்டிங், அரிஸ்டோ டெலினெட் இவை அனைத்தும் உங்கள் மகன்களால் தொடங்கப்பட்டதல்லவா?

திமுக டி ஆர் பாலு:

அதைப் பற்றி எனக்குத் தெரியாது… தெரியாது… தெரியாது. வீட்டில் நான் கேட்கும் போது கூட “அப்பா, அது டெக்னிக்கல்”ன்னு சொல்லி டாப்பிக் சேஞ்ச் பண்ணிடுவாங்க.

பாஜக அண்ணாமலை:

உங்கள் உறவினர்களில் யாராவது தற்போது அமைச்சர்களாக இருக்கிறார்களா?

திமுக டி ஆர் பாலு:

ஆம். என்னுடைய மகன் டி.ஆர்.பி. ராஜா மாநில அமைச்சராக இருந்து சிறப்பாக செயல்படுகிறார்.

பாஜக அண்ணாமலை:

அமைச்சராக இருக்கிறார் என்று மட்டும் சொல்லுங்கள். “சிறப்பாக செயல்படுகிறார்” என்பதை மக்கள் அவர்  வெள்ளை அறிக்கை கேட்டபோது  ஏ4 சைஸ் வெள்ள பேப்பர் தூக்கி காட்டிய போது பார்த்து முடிவு செய்து விட்டார்கள். இவ்வாறு நடந்தது 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...