முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

முருகப்பா குழுமத்தில் பதவிப் போட்டியில் திருமதி வள்ளி அருணாசலம்

          டேர் மாளிகை  சென்னையிலுள்ள ஓர் எழில்படுக் கட்டிடம் ஆகும். இதில் தற்போது முருகப்பா குழுமத்தின் அலுவலகங்கள் அமைந்துள்ளன. 1938க்கும் 1940க்கும் இடையில் கட்டப்பட்ட இந்தக் கட்டிடம் வில்லியம் டேர் என்ற ஆங்கிலேய அதிகாரியின் நினைவாக பெயரிடப்பட்டுள்ளது. வில்லியம் டேர் 1819-1838 காலகட்டத்தில் பாரி & கோ நிறுவனத்தின் ஒரு பங்காளியாக இருந்துள்ளார். இதனாலேயே இந்தக் கட்டிடம் அமைந்துள்ள ஜார்ஜ் டவுன் பகுதி பரவலாக பாரி முனை என வழங்கப்படுகின்றது. தற்போது ஈஐடி பாரி நிறுவனம் முருகப்பா குழுமத்தின் முதன்மை நிறுவனமாக விளங்குகின்றது.  இந்தக் கட்டிடம் உள்ள பகுதி முன்பு முத்தையால் பேட்டையின் பகுதியாக இருந்தது. 1758-59இல் கர்நாடகப் போரில் புனித ஜார்ஜ் கோட்டை முற்றுகையின்போது இங்குதான் பிரெஞ்சுப் படைகளின் பீரங்கிகள் வைக்கப்பட்டிருந்தன. போர் முடிவடைந்த பிறகு மீண்டும் இத்தகைய நிலை ஏற்படாதிருக்கும் பொருட்டு இங்கிருந்த கருப்பர் நகரம் முற்றிலுமாக தரை மட்டமாக்கப்பட்டு திறந்தவெளி உருவாக்கப்பட்டது. எஸ்பிளேடு என அழைக்கப்பட்ட இப்பகுதியை ஆறு எல்லைக் கம்பங்களைக் கொண்டு அடையாளமிட்டனர். இதில் தற்போது ஐந்து அழிந்துவிட்டன. எஞ்சிய ஒன்று டேர் மாளிகை வளாகத்தினுள் இன்றுமுள்ளது. பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின் முதன்மைப் பொறியாளராக இருந்த ஜான் கால் இங்கு பூங்கா மாளிகையைக் கட்டினார். இதுவே இங்கு கட்டப்பட்ட முதல் கட்டிடமாகும். இதனை பின்னர் ஆற்காட்டரசர் மொகமது அலி கானிற்கு விற்றார்.
முருகப்பாக் குழுமம் முருகப்பா குடும்பத்திற்கு பெருமளவில் உரிமையுடைய இந்த நிறுவனங்கள் 1900களில் நிறுவப்பட்டது. இந்தக் குழுமத்தில் இந்திய தேசிய பங்கு சந்தையிலும் மும்பை பங்குச் சந்தையிலும் பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் உட்பட 28 நிறுவனங்கள் அடங்கியுள்ளன. சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்குகின்றது. இதில் உள்ள முதன்மை நிறுவனங்கள்: கார்பொரண்டம் யூனிவர்சல், சோழமண்டலம் முதலீடு மற்றும் நிதி நிறுவனம், சோழமண்டலம் பொதுக் காப்பீடு நிறுவனம், கோரமண்டல் இன்டர்நேசனல், கோரமண்டல் பொறியியல் நிறுவனம், ஈஐடி நிறுவனம், பாரி அக்ரோ, டியூப் இன்வெஸ்ட்மென்ட் ஆகியன. கோவையிலுள்ள சாந்தி கியர்சு இந்தக் குழுமத்தினுடையதாகும்.
இக்குழுமத்தின் தற்போதைய செயல் தலைவராக காலம் சென்ற  எம்.எம்.முருகப்பன் செயல்பட்டுவந்தார்.  தேய்ப்புப் பொருட்கள், தானுந்து உதிரிபாகங்கள், மிதிவண்டிs, சீனி, வேளாண் கருவிகள், உரங்கள், பெருந்தோட்டங்கள், உயிரிப் பொருட்கள், ஊட்டச்சத்து மருந்துகள் என பல துறைகளிலும் விரிந்துள்ளனர். இத்துறைகளில் முன்னணி பன்னாட்டு நிறுவனங்களுடன் ஆழ்ந்த பிணைப்புகளைக் கொண்டுள்ளனர். இந்தியாவின் 13 மாநிலங்களிலும் உலகின் ஐந்து கண்டங்களிலும் பரந்துள்ளனர்.
இக்குழமத்தின் முன்னணி வணிகச் சின்னங்களாக பிஸ்ஏ, எர்குலிசு, பால்மாஸ்டர், அஜாக்சு, பாரிசு, சோழா, பரம்போசு ஆகியன உள்ளன. இதன் வருமானம் INR 300 பில்லியனாக உள்ளது;இதில் 35,000 பணியாளர்கள் வேலை பார்க்கின்றனர்.
இந்தக் குழுமத்தின் அடிக்கல் 1900இல் ஏ.எம்.எம்.முருகப்பா செட்டியாரால் நிதி நிறுவனமாக தொடங்கப்பட்டது.பர்மாவில் (தற்போது மியான்மர்) துவங்கப்பட்ட இந்த நிறுவனம் பின்னர் மலேசியா, இலங்கை, இந்தோனேசியா, வியட்நாம் நாடுகளில் விரிவடைந்து வளர்ந்த இந்த நிறுவனத்தின் தலைவர் வாரிசு தான் தற்போது            பங்கா பதவியா.. முருகப்பா குழுமத்தை விடாமல் விரட்டும் திருமதி வள்ளியாச்சி யாகிய வள்ளி அருணாசலம் முருகப்பா குழுமத்தில் தனக்கு பதவி வேண்டும் என்று, அந்த குழுமத்தின் மறைந்த தலைவரான எம்வி முருகப்பனின் மூத்த மகள் வள்ளி அருணாச்சலம் தொடர்ந்து நிர்வாகிகளிடம் கேட்டு வருகிறார். ஒரு கட்டத்தில் அவருக்கு பதவிகள் மறுக்கப்பட்டதாகவும், இதனால் கோபம் கொண்ட வள்ளி அருணாச்சலம், தனக்கு கண்டிப்பாக பதவி வேண்டும். இல்லையெனில் எனது பங்கினை வாங்கிக் கொள்ளுங்கள் என நெருக்கடி கொடுத்தும் வந்தார். அமெரிக்காவைச் சேர்ந்த வள்ளி அருணாச்சலத்தின் பெண்களுக்கு எதிரான போராட்டம் மற்றும் குடும்ப தொழில்களில் பாலினம் குறித்த உணர்வுகள் இருந்த நிலையில், இது தற்போது ஒரு பொது விவகாரமாக உருவெடுத்துள்ளது என்றே கூறலாம்.  சென்னையைத் தலைமையகமாகக் கொண்டு சுமார் 28 தொழில்களை நிர்வகித்து வரும் முருகப்பா குழுமத்தில், சுமார் 50,000 பேருக்கு மேல் பணி புரிந்து வருகிறார்கள். இதன் மதிப்பு பல ஆயிரம் கோடி என்றும் கூறப்படுகிறது. இப்படிப்பட்ட முருகப்பா குழுமத்தை சேர்ந்த முன்னாள் நிர்வாக தலைவரான எம்வி முருகப்பனின் மூத்த மகள் தான் வள்ளி அருணாச்சலம்.
முருகப்பா குழுமம் பங்கு வைத்திருக்கும் நிறுவனமான அம்பாடி இன்வெஸ்ட்மென்ட் லிமிடெட் நிறுவனத்தில் தான், வள்ளி அருணாச்சலத்திற்கு பதவி மறுக்கப்பட்டதாகவும், இவர்களுக்கு அந்த நிறுவனத்தில் 8.15% பங்குகள் இருப்பதாகவும் கூறப்பட்டது. பதவி மறுக்கப்பட்ட நிலையில் எனது பங்கினை முழுக்க வாங்கிக் கொள்ளுங்கள், இல்லையெனில் பதவியை கொடுங்கள் என்றும் நிபந்தனை விதித்தார்.
மேலும் முருகப்பா குழுமத்தினர் தனது பங்கினை வாங்காவிட்டால், தான் நீதிமன்றத்தை நாடாபோவதாகவும் எச்சரித்திருந்தார். இது குறித்து சட்ட ஆலோசனை நடத்தி வருவதாகவும் கூறப்பட்டது. எனினும் இவரது கோரிக்கைக்கு குடும்பத்தினரின் பதிலை கேட்ட பின்னரே நடவடிக்கை எடுக்க உள்ளதாக வள்ளி அருணாச்சலம் அப்போது கூறியிருந்தார். தற்போது எனது போராட்டங்களும் எனது கதையும் பொது விவாதத்தையும் தொடங்கவும், எங்கள் நிறுவன கலாச்சாரத்திலிருந்து பாலின சார்பு நீங்கும் வரை அதைத் தொடரவும் உதவும் என்றும் நான் நம்புகிறேன். மேலும் பெண்களின் வாழ்க்கையில் இது ஒரு மாற்றத்தை ஏற்படுத்தவும் உதவும் என்றும் வள்ளி அருணாச்சலம் கூறியுள்ளார்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...