முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

முருகப்பா குழுமத்தில் பதவிப் போட்டியில் திருமதி வள்ளி அருணாசலம்

          டேர் மாளிகை  சென்னையிலுள்ள ஓர் எழில்படுக் கட்டிடம் ஆகும். இதில் தற்போது முருகப்பா குழுமத்தின் அலுவலகங்கள் அமைந்துள்ளன. 1938க்கும் 1940க்கும் இடையில் கட்டப்பட்ட இந்தக் கட்டிடம் வில்லியம் டேர் என்ற ஆங்கிலேய அதிகாரியின் நினைவாக பெயரிடப்பட்டுள்ளது. வில்லியம் டேர் 1819-1838 காலகட்டத்தில் பாரி & கோ நிறுவனத்தின் ஒரு பங்காளியாக இருந்துள்ளார். இதனாலேயே இந்தக் கட்டிடம் அமைந்துள்ள ஜார்ஜ் டவுன் பகுதி பரவலாக பாரி முனை என வழங்கப்படுகின்றது. தற்போது ஈஐடி பாரி நிறுவனம் முருகப்பா குழுமத்தின் முதன்மை நிறுவனமாக விளங்குகின்றது.  இந்தக் கட்டிடம் உள்ள பகுதி முன்பு முத்தையால் பேட்டையின் பகுதியாக இருந்தது. 1758-59இல் கர்நாடகப் போரில் புனித ஜார்ஜ் கோட்டை முற்றுகையின்போது இங்குதான் பிரெஞ்சுப் படைகளின் பீரங்கிகள் வைக்கப்பட்டிருந்தன. போர் முடிவடைந்த பிறகு மீண்டும் இத்தகைய நிலை ஏற்படாதிருக்கும் பொருட்டு இங்கிருந்த கருப்பர் நகரம் முற்றிலுமாக தரை மட்டமாக்கப்பட்டு திறந்தவெளி உருவாக்கப்பட்டது. எஸ்பிளேடு என அழைக்கப்பட்ட இப்பகுதியை ஆறு எல்லைக் கம்பங்களைக் கொண்டு அடையாளமிட்டனர். இதில் தற்போது ஐந்து அழிந்துவிட்டன. எஞ்சிய ஒன்று டேர் மாளிகை வளாகத்தினுள் இன்றுமுள்ளது. பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின் முதன்மைப் பொறியாளராக இருந்த ஜான் கால் இங்கு பூங்கா மாளிகையைக் கட்டினார். இதுவே இங்கு கட்டப்பட்ட முதல் கட்டிடமாகும். இதனை பின்னர் ஆற்காட்டரசர் மொகமது அலி கானிற்கு விற்றார்.
முருகப்பாக் குழுமம் முருகப்பா குடும்பத்திற்கு பெருமளவில் உரிமையுடைய இந்த நிறுவனங்கள் 1900களில் நிறுவப்பட்டது. இந்தக் குழுமத்தில் இந்திய தேசிய பங்கு சந்தையிலும் மும்பை பங்குச் சந்தையிலும் பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் உட்பட 28 நிறுவனங்கள் அடங்கியுள்ளன. சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்குகின்றது. இதில் உள்ள முதன்மை நிறுவனங்கள்: கார்பொரண்டம் யூனிவர்சல், சோழமண்டலம் முதலீடு மற்றும் நிதி நிறுவனம், சோழமண்டலம் பொதுக் காப்பீடு நிறுவனம், கோரமண்டல் இன்டர்நேசனல், கோரமண்டல் பொறியியல் நிறுவனம், ஈஐடி நிறுவனம், பாரி அக்ரோ, டியூப் இன்வெஸ்ட்மென்ட் ஆகியன. கோவையிலுள்ள சாந்தி கியர்சு இந்தக் குழுமத்தினுடையதாகும்.
இக்குழுமத்தின் தற்போதைய செயல் தலைவராக காலம் சென்ற  எம்.எம்.முருகப்பன் செயல்பட்டுவந்தார்.  தேய்ப்புப் பொருட்கள், தானுந்து உதிரிபாகங்கள், மிதிவண்டிs, சீனி, வேளாண் கருவிகள், உரங்கள், பெருந்தோட்டங்கள், உயிரிப் பொருட்கள், ஊட்டச்சத்து மருந்துகள் என பல துறைகளிலும் விரிந்துள்ளனர். இத்துறைகளில் முன்னணி பன்னாட்டு நிறுவனங்களுடன் ஆழ்ந்த பிணைப்புகளைக் கொண்டுள்ளனர். இந்தியாவின் 13 மாநிலங்களிலும் உலகின் ஐந்து கண்டங்களிலும் பரந்துள்ளனர்.
இக்குழமத்தின் முன்னணி வணிகச் சின்னங்களாக பிஸ்ஏ, எர்குலிசு, பால்மாஸ்டர், அஜாக்சு, பாரிசு, சோழா, பரம்போசு ஆகியன உள்ளன. இதன் வருமானம் INR 300 பில்லியனாக உள்ளது;இதில் 35,000 பணியாளர்கள் வேலை பார்க்கின்றனர்.
இந்தக் குழுமத்தின் அடிக்கல் 1900இல் ஏ.எம்.எம்.முருகப்பா செட்டியாரால் நிதி நிறுவனமாக தொடங்கப்பட்டது.பர்மாவில் (தற்போது மியான்மர்) துவங்கப்பட்ட இந்த நிறுவனம் பின்னர் மலேசியா, இலங்கை, இந்தோனேசியா, வியட்நாம் நாடுகளில் விரிவடைந்து வளர்ந்த இந்த நிறுவனத்தின் தலைவர் வாரிசு தான் தற்போது            பங்கா பதவியா.. முருகப்பா குழுமத்தை விடாமல் விரட்டும் திருமதி வள்ளியாச்சி யாகிய வள்ளி அருணாசலம் முருகப்பா குழுமத்தில் தனக்கு பதவி வேண்டும் என்று, அந்த குழுமத்தின் மறைந்த தலைவரான எம்வி முருகப்பனின் மூத்த மகள் வள்ளி அருணாச்சலம் தொடர்ந்து நிர்வாகிகளிடம் கேட்டு வருகிறார். ஒரு கட்டத்தில் அவருக்கு பதவிகள் மறுக்கப்பட்டதாகவும், இதனால் கோபம் கொண்ட வள்ளி அருணாச்சலம், தனக்கு கண்டிப்பாக பதவி வேண்டும். இல்லையெனில் எனது பங்கினை வாங்கிக் கொள்ளுங்கள் என நெருக்கடி கொடுத்தும் வந்தார். அமெரிக்காவைச் சேர்ந்த வள்ளி அருணாச்சலத்தின் பெண்களுக்கு எதிரான போராட்டம் மற்றும் குடும்ப தொழில்களில் பாலினம் குறித்த உணர்வுகள் இருந்த நிலையில், இது தற்போது ஒரு பொது விவகாரமாக உருவெடுத்துள்ளது என்றே கூறலாம்.  சென்னையைத் தலைமையகமாகக் கொண்டு சுமார் 28 தொழில்களை நிர்வகித்து வரும் முருகப்பா குழுமத்தில், சுமார் 50,000 பேருக்கு மேல் பணி புரிந்து வருகிறார்கள். இதன் மதிப்பு பல ஆயிரம் கோடி என்றும் கூறப்படுகிறது. இப்படிப்பட்ட முருகப்பா குழுமத்தை சேர்ந்த முன்னாள் நிர்வாக தலைவரான எம்வி முருகப்பனின் மூத்த மகள் தான் வள்ளி அருணாச்சலம்.
முருகப்பா குழுமம் பங்கு வைத்திருக்கும் நிறுவனமான அம்பாடி இன்வெஸ்ட்மென்ட் லிமிடெட் நிறுவனத்தில் தான், வள்ளி அருணாச்சலத்திற்கு பதவி மறுக்கப்பட்டதாகவும், இவர்களுக்கு அந்த நிறுவனத்தில் 8.15% பங்குகள் இருப்பதாகவும் கூறப்பட்டது. பதவி மறுக்கப்பட்ட நிலையில் எனது பங்கினை முழுக்க வாங்கிக் கொள்ளுங்கள், இல்லையெனில் பதவியை கொடுங்கள் என்றும் நிபந்தனை விதித்தார்.
மேலும் முருகப்பா குழுமத்தினர் தனது பங்கினை வாங்காவிட்டால், தான் நீதிமன்றத்தை நாடாபோவதாகவும் எச்சரித்திருந்தார். இது குறித்து சட்ட ஆலோசனை நடத்தி வருவதாகவும் கூறப்பட்டது. எனினும் இவரது கோரிக்கைக்கு குடும்பத்தினரின் பதிலை கேட்ட பின்னரே நடவடிக்கை எடுக்க உள்ளதாக வள்ளி அருணாச்சலம் அப்போது கூறியிருந்தார். தற்போது எனது போராட்டங்களும் எனது கதையும் பொது விவாதத்தையும் தொடங்கவும், எங்கள் நிறுவன கலாச்சாரத்திலிருந்து பாலின சார்பு நீங்கும் வரை அதைத் தொடரவும் உதவும் என்றும் நான் நம்புகிறேன். மேலும் பெண்களின் வாழ்க்கையில் இது ஒரு மாற்றத்தை ஏற்படுத்தவும் உதவும் என்றும் வள்ளி அருணாச்சலம் கூறியுள்ளார்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த