முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சேலம் காவல் நிலையத்தில் எலுமிச்சை வியாபாரியின் தாயார் மயங்கி விழுந்து மரணம்

சேலம் காவல் நிலையத்தில் எலுமிச்சை வியாபாரியின் தாயார் மரணம். காவல்துறையினர் ஊரடங்கைச் சிறப்பாக நடைமுறைப்படுத்தி வருகிறார்கள். அதே வேளையில் அரசின் உத்தரவை விழிப்புணர்வு இல்லாமல் பொதுமக்கள் சிலர் அலட்சியம் செய்வதாலும், சில காவலர்களின் அலட்சிய நடவடிக்கைகளாலும் பல துயரச் சம்பவங்களும் நடைபெறுகின்றன.
சேலம் டவுன் பட்டக்கோயில் பகுதியில் எலுமிச்சை வியாபாரி  கடையைத் திறந்துள்ளார். அவரை விடியற்காலை டவுன் போலீஸார் பிடித்து வந்து காவல்நிலையத்தில் வைத்து வழக்கு போட்டு மதியம் ஆகியும் விடவில்லை. காவல்நிலையத்துக்கு வெளியே அந்த வியாபாரியின் தாயார் மகனை விடும்படி காவலர்களிடம் காலில் விழாத குறையாகக் கண்ணீர் விட்டுக் கதறி அழுது கெஞ்சி இருக்கிறார். இரக்கப்படாத அந்தக் காவலர் கண்டுகொள்ளாததால் அதிர்ச்சியில் அந்தப் பெண் மயங்கி விழுந்து மரணமடைந்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுபற்றி அந்த எலுமிச்சை வியாபாரி  வேலுமணி என்பவர் எனக்கு 35 வயது. எங்கம்மா பாலமணிக்கு 70 வயது. நாங்கள் பட்டக்கோயில் அருகே சத்தியமூர்த்தி தெருவில் 30 ஆண்டுகளாக எலுமிச்சைக்  கடை நடத்தி வருகிறோம். நேற்று முன்தினம் 24 ஆம் தேதி காலை 8.30 மணிக்கு குடோனைத் திறந்து நானும்  அம்மாவும் வியாபாரம் செய்துகொண்டிருந்தோம்.
சேலம் டவுன் காவல் நிலைய வந்த தலைமை காவலர் முத்துசாமி குடோனை மூடச் சொல்லி என்னை லத்தியில் அடித்தார். எங்கம்மா அதற்காக என் பையனை அடிக்கறீங்க'னு கேட்டாங்க. அதனால் அம்மாவுக்கும் காவலருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே குடோனை சாத்திவிட்டு வீட்டுக்குப் போயிட்டோம்.
குடோனில் இருக்கும் எலும்பிச்சைப் பழங்களெல்லாம் வீணாகிடும். வீட்டுக்குக் கொண்டு பாதுகாப்பாக வைத்துக் கொள்ளலாமென்று நானும் அம்மாவும் அடுத்த நாள் 25 ஆம் தேதி விடியற்காலையிலஹ குடோனுக்குச் சென்று பழங்களை மூட்டை கட்டிக்கொண்டிருந்தோம்.  முத்துசாமியும், அவரோடு ஒரு காவலரும் வந்து என்னை ஸ்டேஷனுக்குக் கூட்டிப்போய் கடுமையாக அடித்து வழக்கு போட்டு ஸ்டேஷனில் உக்கார வச்சதாகவும் எங்கம்மா ஸ்டேஷனுக்கு வெளியே அழுதுகொண்டிருந்தார்.
நானும்  அம்மாவும் காலையிலிருந்து சாப்பிடவில்லை. மதியம் 2 மணி ஆகியும் என்னை விடவில்லை. அதனால் எங்கம்மா கதறி அழுது கெஞ்சிக் கேட்டார். `போலீஸையே எதிர்த்து பேசுறீங்களா.ஏனக் கேட்க பதற்றம் அடைந்த எங்கம்மா காவல் நிலையத்திலேயே மயங்கி கீழே விழுந்தார். பேச்சு மூச்சு இல்லை. அரசு மருத்துவமனைக்குக் கொண்டு போனோம். இறந்துவிட்டதாகச் சொன்னாங்க. காவல்துறையின் இரக்கமற்ற செயலால் எங்கம்மா இறந்துட்டாங்க. எங்கம்மா இறப்பிபுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார் சேலம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமாரி தகவலில் சேலத்தில் தடை செய்யப்பட்ட சின்னக்கடை வீதியில் வேலுமணி என்பவர் காய்கறி கடை திறந்து வைத்திருந்தார். ஏற்கெனவே அவரிடம் கடையை மூடச் சொல்லியும் கேட்காமல் தொடர்ந்து கடையைத் திறந்துள்ளார். அதனால், வேலுமணியைக் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து வழக்கு போட்டோம். மதியம் பெயில் கிடைத்து வீட்டுக்குச் செல்ல இருந்த நிலையில், அவருடைய அம்மா மயங்கி கீழே விழுந்து இறந்துவிட்டார்'' என்றார். நோய் பரவாமல் தடுப்பதே மக்கள் உயிர்வாழத்தான்  காருண்யமாக சில நடவடிக்கைகளை எல்லோரும் கடைபிடித்தால் இதுபோன்ற சம்பவம் நிகழாது தானே.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...