முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தொழிலாளர்கள் வருங்கால வைப்புநிதி சந்தாதாரர்கள் கோரிக்கைகளுக்கு விரைவில் தீர்வு காணும் நடவடிக்கை

மத்திய தொழிலாளர் நலத்துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு, சந்தாதாரர்களின் கோரிக்கைகளுக்கு விரைவான தீர்வு காணும் விதமாக, எந்த இடத்திலும் விண்ணப்பிக்கும் வசதியைத் தொடங்கியுள்ளது. நாடு முழுவதும் ஒரே சீரான சேவைத் தரத்தை உறுதிசெய்யும் விதமாகவும், கோவிட் -19 பெருந்தொற்று காலத்தில் பணியாளர்களின் சேவையை முழுமையாக பயன்படுத்தவும்,  தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான   இ.பி.எஃப்.ஓ. ,  எந்த இடத்திலும் வைப்புநிதியை திரும்பப்பெற விண்ணப்பிக்கும் வசதியை அன்மையில் தொடங்கியது.   இந்த வசதி, வைப்புநிதி அமைப்பின் எந்தவொரு  மண்டல அலுவலகத்திலும், சந்தாதாரர்களின் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்க அனுமதித்திருப்பதன் மூலம்,  வைப்நி நிதி அலுவலக செயல்பாட்டில், பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.   வைப்புநிதி,  ஓய்வூதியம்,  பகுதி தொகையை திரும்பப்பெறுதல் மற்றும்  பணத்தை முழுமையாக திரும்பப்பெறுதல் மற்றும் கணக்கு மாற்றம் தொடர்பான  இணையவழி கோரிக்கைகளுக்கு,  இந்த புதிய வகை முன்முயற்சி மூலம் தீர்வு காணப்படும்.    கோவிட் -19 பெருந்தொற்று காரணமாக, தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பின் 135 மண்டல அலுவலகங்களின் செயல்பாடு, அவை செயல்படும் இடத்தில் நிலவும்  பாதிப்பு அடிப்படையில் பல்வேறு நெருக்கடிகளுக்கு ஆளாகியுள்ளது.   கோவிட் -19  பாதிப்பால்,  மும்பை,  தானே, ஹரியானா மற்றும் சென்னை மண்டலத்தின் பல்வேறு அலுவலககங்கள்,  மிக மிகக் குறைந்த அளவிலான பணியாளர்களுடன் செயல்பட்டு வருவது தெரியவந்துள்ளது.   அதேவேளையில், அன்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட  கோவிட் -19 முன்பணத் தொகையை பெற ஏராளமானோர் விண்ணப்பித்துள்ளனர்.     வைப்புநிதித் தொகையை திரும்பப்பெறக்கோரி வரப்பெற்ற விண்ணப்பங்களை  நாடுதழுவிய அளவில் பரிசீலிக்கும்போது,  பணிச்சுமை குறைவதோடு,    தற்போது செயல்பாட்டில் உள்ள அந்தந்தப் பகுதி சார்ந்த கோரிக்கைகளுக்கு மட்டும் தீர்வு காண்பதற்குப் பதிலாக,  பல்வேறு இடங்களில் இந்தக் கோரிக்கைகளுக்குத் தீர்வுகாண புதிய நடைமுறை வழிவகை செய்யும் என கருதப்படுகிறது.   மேலும்,  குறைவான பணிச்சுமை உள்ள வைப்புநிதி அலுவலகங்கள்,  கோவிட் -19 கட்டுப்பாடுகள் காரணமாக, மனுக்கள் அதிகளவில் தேக்கமடைந்துள்ள அலுவலகங்களின் பணிச்சுமையை பகிர்ந்துகொள்ளவும் புதிய நடைமுறை உதவும்.    அத்துடன், நாடு முழுவதும் உள்ள அனைத்து மண்டல அலுவலகங்களிலும்,  தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் பணியாளர்களை  தகுந்த முறையில் பயன்படுத்தி,  சந்தாதாரர்களின் கோரிக்கைகளக்கு விரைந்து தீர்வுகாணவும் இது உதவிகரமாக இருக்கும்.     வைப்புநிதி சந்தாதாரர்களின் வாழ்க்கை நடைமுறை அனுபவங்களை எளிதாக்குவதற்கான இந்த முன்முயற்சி,  குறிப்பிட்ட காலத்தில் சாதனை படைத்துள்ளது.   இந்தத் திட்டத்தின் கீழ்,  முதற்கட்டமாக, பல்வேறு மண்டல அலுவலகங்களுக்குட்பட்ட சந்ததாரர்களின் கோரிக்கை மனுக்கள் மீது,  குருகிராம் மண்டல அலுவலகத்தில் 10 ஜுன் 2020 அன்று தீர்வு காணப்பட்டுள்ளது.    வைப்புநிதி அமைப்பின் எந்தவொரு அலுவலகத்திலும்,  பிற  எந்தப்பகுதியையும் சேர்ந்த சந்தாதாரர்களின் கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வசதி,  தொழிலாளர்களுக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க ஒன்றாக கருதப்படுகிறது.   தொழிலாளர்கள் நேரில் வராமலேயே,  வெளிப்படைத்தன்மை, செயல்துடிப்பு, போன்றவற்றுடன் கோரிக்கை மனுக்களின் எண்ணிக்கையைக் குறைக்கக் கூடிய வகையிலான இந்த புதிய நடைமுறை, பிரதமரின் டிஜிட்டல் இந்தியா சிந்தனைக்கு செயல்வடிவம் அளித்து,  இணையவழி விண்ணப்பங்கள் மீது விரைவான நடவடிக்கை எடுக்கவும்  வகை செய்துள்ளது.    கோவிட் -19 பெருந்தொற்று கட்டுப்பாடுகள்,  தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அலுவலகங்களின் செயல்பாட்டில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள போதிலும்,  அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடிய கடமையாற்றுதல் மற்றும் பல்வேறு புதுமைகளை புகுத்தியதன் காரணமாக,   1 ஏப்ரல் 2020 முதல் இதுவரை,  80,000 கோரிக்கை மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு, ஒவ்வொரு வேலை நாளிலும்,  ரூ.270 கோடி அளவிற்கு வழங்கப்பட்டுள்ளது.    எந்தவொரு அலுவலகத்திலும் விண்ணப்பிக்கும் வசதியை ஏற்படுத்தியதன் மூலம், 6 கோடிக்கு மேற்பட்ட சந்தாதாரர்களைக் கொண்ட தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு, சமூக பாதுகாப்பை உறுதிசெய்வதற்கான சேவையில் புதிய சாதனையைப் படைக்க இருப்பது குறிப்பிடத்தக்கது. 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் பிடித்த தெரு நாய்கள் டிரஸ்டில் ஒப்படைக்கப்பட்டது

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தெரு நாய்களைப் பிடித்த பின் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட்டுக்குச் சொந்தமான பாதுகாப்புக் கூடத்தில் ஒப்படைப்பு புதுக்கோட்டையில் தெருக்களில் சுற்றித் திரித்த தெரு நாய்கள் நகராட்சி நிர்வாகம் மூலம் பிடிக்கப்பட்டு இலுப்பூர் பைரவர் சாரிடபிள் டிரஸ்ட் நாய்கள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை பூங்கா நகர், சாந்தநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை. அதிகமானதாக நகராட்சிக்கு புகார்கள் வந்ததையடுத்து நாய்களைப் பிடித்து என்ன செய்வதென்று தெரியாமல் நகராட்சி நிர்வாகத்தினர் இருந்த நிலையில்  நகராட்சி ஆணையாளர்  இலுப்பூரில் செயல்படும் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற நிறுவனம் தெருநாய்களை பராமரிப்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்படுவதாக அறிந்து பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் யக்குனர் ஆர்.வீர சரத்பவாரை அழைத்துப் பேசியதையடுத்து நாய்களை பராமரிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மூலம் தெருக்களில் சுற்றி திரிந்த 42 தெரு நாய்களை பத்திரமாகற பிடிக்கப் பட்டு இலுப்பூர் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட் டதைத் தொடர்ந்து அவர்...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...